Jump to content

Facebook Metaverse: மெய்நிகர் உலகில் வாழ்க்கை - இது எப்படி சாத்தியம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Facebook Metaverse: மெய்நிகர் உலகில் வாழ்க்கை - இது எப்படி சாத்தியம்?

9 மணி நேரங்களுக்கு முன்னர்
மார்க் சக்கர்பெர்க்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன் நிறுவனத்தை ஒரு மெடாவெர்ஸ் (Metaverse) நிறுவனமாக மாற்றும் திட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மெடாவெர்ஸ் என்பது ஒரு ஆன்லைன் உலகம். அங்கு பயனர்களால் விளையாடவோ, வேலை பார்க்கவோ, ஒருவரோடு ஒருவர் நேரடியாக தொடர்பு கொள்ளவோ முடியும். இவை அனைத்து ஒரு மெய்நிகர் சூழலில் வி.ஆர் ஹெட்செட் பயன்படுத்தி செய்யலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம்.

நீங்கள் ஒரு விஷயத்தை இணையத்தில் பார்ப்பதை விட, அதிலேயே நீங்கள் இருக்கலாம் என மெடாவர்ஸை விவரிக்கிறார் மார்க்.

மக்கள் தொடர்ந்து ஜொலிக்கும் செவ்வக வடிவ எலெக்ட்ரானிக் சாதனங்கள் வழியாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடாது என 'தி வெர்ஜ்' என்கிற பத்திரிகையிடம் கூறியிருக்கிறார் மார்க்.

"மனிதர்கள் அப்படிப் பேசிப் பழகும் விதத்தில் பழக்கப்படவில்லை" என மொபைல் ஃபோன்களைச் சார்ந்திருப்பது குறித்தும் அவர் பேசினார்.

"இன்று நடக்கும் பல கூட்டங்களில், நீங்கள் ஒரு திரையில் பல முகங்களை காண்கிறீர்கள். அப்படியும் நாம் இதை முன்னெடுத்துச் செல்லக் கூடாது"

இன்ஃபினிட் ஆஃபிஸ்

ஒகொலஸ் வி ஆர் ஹெட்செட்

பட மூலாதாரம்,FACEBOOK

அவர் கொடுத்த ஒரு மெடாவெர்ஸ் செயலி மூலம் முதலில் ஒரு 3டி கச்சேரியை மொபைல் ஃபோனில் கண்டுவிட்டு, பிறகு மெய்நிகர் மூலம் அதற்குள்ளேயே செல்ல முடிந்தது.

"பல மக்கள் பல்வேறு இடங்களில் இருந்தாலும், எல்லா மக்களும் ஒரே இடத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. மேலும் நடனமாடுவது, உடற்பயிற்சி செய்வது என... 2டி செயலி அல்லது வலைதள பக்கங்களால் கொடுக்க முடியாது பல்வேறு புதிய அனுபவங்களை அந்த 3டி செயலி கொடுத்தது". என்கிறார் அவர்.

ஃபேஸ்புக் 'இன்ஃபினிட் ஆஃபிஸ்' என்கிற புதிய வசதி ஒன்றை தயாரித்து வருகிறது. அதில், பயனர்கள் தங்களுக்குத் தேவையானது போல, நல்ல வேலை பார்க்கும் சூழலை உருவாக்கிக் கொள்ளலாம்.

"எதிர்காலத்தில் வெறுமனே ஒருவரை அழைத்து பேசுவதற்கு பதிலாக, நீங்கள் ஒரு ஹாலோகிராமாக அவரது வீட்டு நாற்காலியிலோ அல்லது நான் ஒரு ஹாலோகிராமாக உங்கள் வீட்டு நாற்காலியிலோ வந்து அமரலாம். இது நாம் இருவரும் எந்த மாகாணத்தில் இருந்தாலும் சரி, எத்தனை கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் சரி, ஒரே இடத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும்." என்கிறார் அவர். "அது உண்மையில் சக்தி வாய்ந்ததாக இருக்கும்"

ஃபேஸ்புக் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து அதிகமாக முதலீடு செய்து வருகிறது. சமீபத்தில் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலரைச் செலவழித்து ஒகொலஸ் (Oculus) என்கிற மெய்நிகர் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை வாங்கியது ஃபேஸ்புக்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் ஹாரிசான் (Horizon) என்கிற ஒரு ஆன்லைன் மெய்நிகர் தளத்தை உருவாக்கியது. அத்தளத்தில் ஒகொலஸ் ஹெட்செட்டைப் பயன்படுத்தி பயனர்கள் கார்ட்டூன்களோடு பேசலாம்.

தற்போது இருக்கும் ஹெட்செட்டுகள் கணமானதாகவும், பழைமையானதாகவும் இருப்பதாக மார்க் சக்கர்பெர்க்கே ஒப்புக் கொள்கிறார். ஒரு நாள் முழுக்க அதில் மக்கள் பணியாற்றும் அளவுக்கு அதை மேம்படுத்த வேண்டும்.

ஃபேஸ்புக்கின் மெடாவெர்ஸ் செயலியை மெய்நிகர் வசதியிலோ, ஏ ஆர் என்கிற ஆக்மென்டட் ரியாலிட்டியிலோ, சாதாரண கணினியிலோ, மொபைல் ஃபோன்களிலோ, வீடியோ கேம் கன்சோல்கள் மூலமாகவோ பயன்படுத்தலாம்.

மெடாவெர்ஸ் தொடக்கம்

மெய்நிகர் தொழில்நுட்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மெடாவெர்ஸ் ஒரு புதிய முப்பரிமாண இணையமாக இருக்கும் என தொழில்நுட்ப நிறுவனங்கள் நம்புகின்றன. டிஜிட்டல் உலகத்தை இணைக்கும் இத்தளத்தில் மக்கள் மெய்நிகர் வழியாக சுற்றித் திரிவார்கள் என நிறுவனங்கள் நம்புகின்றன.

நீல் ஸ்டீஃபென்சனின் 1992ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைவுப் புதினமான ஸ்னோ க்ராஷில் இந்த மெடாவெர்ஸ் பற்றி முதன்முதலில் கூறப்பட்டு இருந்தது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் மெடாவெர்ஸ் சாதனத்தை அனிமல் க்ராசிங், ஃபோர்ட்னைட், ரோப்லாக்ஸ் போன்ற வீடியோ கேம்களில் கொண்டு வர முயற்சித்தன.

இதில் நூற்றுக்கணக்கான கச்சேரிகள், போட்டிகள் நேரலை நிகழ்ச்சிகளாக நடத்த திட்டமிடப்பட்டன. இதில் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக் கணக்கான பயனர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளலாம்.

நடத்தை தரவுகள்

மெய்நிகர் தொழில்நுட்பம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இத்தளத்தை ஒரு பயனர் பயன்படுத்தும் போது கிடைக்கும் அளப்பரிய நுணுக்கமான தரவுகள் தான், ஃபேஸ்புக் வி ஆர் அல்லது ஏ ஆர் போன்ற சாதனங்களில் அதிகம் முதலீடு செய்வதற்கான காரணம்" என்கிறார் வி ஆர் நிபுணர் மற்றும் மேற்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெரிடி மெகின்டாஷ்.

"இப்போது வெறுமனே நான் எதை சொடுக்குவேன், எதைப் பகிர்வேன் என்பது மட்டுமல்ல, நான் எங்கு செல்ல விரும்புகிறேன், நான் எப்படி நிற்பேன், நான் எதை நீண்ட நேரம் பார்க்கிறேன், மிக சிறிய அளவில் செய்யப்படும் என் உடல் அசைவுகள், என நன் ஆழ் மனத்துக்கான நேரடிப் பாதை அது. இப்படிப்பட்ட தரவுகள் ஒரு தரவுகளை சேகரிக்கும் முதலாளிக்கு தங்கம் போன்றது"

ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் விண்வெளியையே தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாரம்பரிய பழமைவாத அரசாங்கங்களோ மாறி வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதற்கே திணறிக் கொண்டிருக்கிறார்கள். இது எதிர்காலத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

காணொளிக் குறிப்பு,

சென்னையில் ஒரு மெய்நிகர் உலகம் (காணொளி)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

AI இன் ஆபத்துக்கள் பற்றி Elon Musk விபரிக்கும் யூரியூப் வீடியோ ஒன்று அண்மையில் பார்த்தேன். அணுகுண்டு ஆபத்தை விட AIஇன் ஆபத்துக்கள் பாரதூரமானவை என அவர் விபரித்தார். வியாபாரத்தை மையப்படுத்தி கட்டி அமைக்கப்படும் தொழில்நுட்பங்கள் எல்லாம் மனித குலத்தின் சீரழிவுக்கு பாதை அமைத்து கொடுக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே மெய் நிகர் உலகில் தான் வாழ்கிறோம் என்று சொல்கிறார்கள் மாட்ரிக்ஸ் பட வரிசை வந்தபின் அப்படி நம்புவோர் தொகை பெருகிவிட்டது இன்னும் இந்த தொழில் நுட்ப உலகில் வரும் பத்தாண்டுகால காலம்களில் வேற்று உலகத்தினர் கண்டுபிடிக்க படவில்லை என்றால் இந்த பிரபஞ்சத்தில் எமது பூமியில் மட்டும் உயிர்  வாழ்கிறோம் இருக்கின்றது  எனும் வாதம் ஏற்புடையதாக இருக்காது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.