Jump to content

சொர்க்கத்தின் பாவிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கத்தின் பாவிகள்

-நிரூபா நாகலிங்கம்

 

உயிரைக் கையில் ஏந்தியவாறு மண்டியிட்டிருந்தான் அந்தோணியோ. அவன் உடல்
நடுங்கிக்கொண்டிருந்தது. அவனுக்கு முன்னால் அளவிடமுடியாத உயரத்திலும் அகலத்திலும்
எழுந்து நின்றது அந்த சுவர். அவன் மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்த சுவரைப்
பார்த்தவாறு இருந்தனர். அந்த சுவருக்கு ஒரு கதவும் இருந்தது. அது எப்போது
திறக்குமென்றுதான் அவர்கள் காத்திருந்தனர். அந்தோணியோ வருடக் கணக்கில் இங்கு
காத்திருக்கின்றான். சுவருக்கு மறுபக்கம் சொர்க்க பூமி இருக்கின்றதென்று அந்தோணியோவும்
பல ஏழை மக்களும், யுத்தநாடுகளின் பல அப்பாவி மக்களும் நம்பிக்கொண்டிருந்தனர்.
அந்தோனியோவைப்பொறுத்தவரையில் அவன் தாங்கிப் பிடித்திருக்கும் அவன் நேசிக்கும்
உயிரைப் பிழைக்க வைத்தால் மட்டுமே இப்போது போதுமானது. அதுவே அவனுக்குச்
சொர்க்கம்தான். அவனுக்கென்றே பரிசளிக்கப்பட்டது ஒரு வாழ்வு. அந்த வாழ்வை அவன் அழகு
குலையாமல் வாழ ஆசைப்பட்டான். அது ஒன்றும் பேராசையில்லையே?


அந்தச் சுவரின் கதவு இரும்பால் செய்யப்பட்டிருந்தது. அதில் தொங்கும் பென்னாம் பெரிய பூட்டு
பொன்னாலானது. திறப்பை பல நாட்டு அதிகாரிகள் பராமரித்து வந்தார்கள். எப்பவாவது ஒரு
முறைதான் அந்தக் கதவு திறபடும். அவ்வேளையில் அங்கே காத்திருந்த பல்லாயிரக்கணக்கான
மக்கள் அடிபட்டு, நெரிபட்டு உள்நுளைய எத்தணித்தார்கள். திடீரெனக் கதவு மூடப்படும்போது
அதற்குள் நசிபட்டும் பலர் இறந்துபோனார்கள்.


காத்திருந்து காத்திருந்து காலத்தை வீணாக்கி வெறுப்படைந்த சிலர் அந்தச் சுவரில் ஏறி அதன்
உச்சி தெரியாது வழுக்கி விழுந்து அங்கங்கள் சிதைப்பட்டோ அல்லது மரணித்தோ போனார்கள்.
அந்தோனியோ அப்படியொரு வழியை இறுதியாகத் தேர்ந்தெடுக்கலாமென்று
எண்ணியிருந்தவேளை அங்கு மீண்டும் ஒரு உயிர் சுவரிலிருந்து உதிர்ந்து விழுந்து சிதறியதை
அவன் அருகில் இருந்தே கண்டான். அது அவனது நெருங்கிய நண்பன். அலறியடித்து ஓடினான்
நண்பனை நோக்கி. அந்த வேளையில் கதவு திறபட்டது. இயக்கமற்று நண்பனின் பிணத்தருகில்
வீழ்ந்தான்.


அந்தோனியோ விழித்துக்கொண்டான்!

***

அந்தோணியோவின் உடலின் இரத்த நாளங்கள் அனைத்தும் அவன் கடந்து வந்த நாட்டு
எல்லைகளைப் போன்று இறுகிப்போய் இருந்தன. அந்த நாளங்களினுள் ஆயிரம் கதைகள்
வாய்விட்டு அழமுடியாமல் முனகிக்கொண்டிருந்தன. வைக்கோலுக்குள் அசையமுடியாமல்
கிடந்த அந்தோணியோ தனது மனத்தை மெதுவாக அசைத்து தன் உயிரைத் தொட்டுப்
பார்த்தான். உயிர்! அவள் இறுதியாகக்கொடுத்த முத்தத்தால் இயங்கிக்கொண்டிருந்தது.
அவன் அசைந்தால் எந்த வேளையிலும் எல்லைக் கரங்கள் அவனை பற்றி இழுத்துச் சிறைக்குள்
அடைக்கலாம். மீண்டும் அவன் வந்த வழி திருப்பி துரத்திவிடலாம். திசையறியா ஒரு அகதியாக பசி உயிருக்குத் தீத்தி வாழ வேண்டியிருக்கும். அந்த உயிரும் அவளுடைய முத்தமும் அனாதையாகி போலந்து காட்டுக்குள் கிடக்க நேரிடலாம்.

வேண்டாம்!


அவன் தன்னை இன்னும் இறுக்கமாக்கி அசைவின்மையை ஒத்துழைத்தான். அவன் நெஞ்சுக்கு
அருகே அவனது காதலி இறுதியாக எழுதிய கடிதம் தன்னை மடக்கி வைத்துக்கொண்டு
உறங்கிக்கொண்டிருந்தது.


அவன் தாய் மண்ணைப் பிரிந்து எழுபத்தி மூன்று திங்கள் கழிந்திருந்தன. மாதங்களாகி…
வருடங்களாகி… இன்னும் எல்லைகளுக்குள் அலைந்துதிரிந்தனர் சொர்க்க பூமிகளைக்
கண்டடையாத பலர்.


அந்தோணியோ ‘ஏஜென்ரால்’ கைவிடப்பட்டு ஒட்டிய குடலுக்குப் பாண்துண்டு தேடி
மொஸ்கோவின் தெருக்களில் திரிந்த ஒரு கணத்தில்தான் ஒரு மனிதாபிமானமுடைய கொம்யூனிச
அம்மாவைக் கண்டான். ஒட்டிய குடல்களை விரியச் செய்து நீர் வார்த்தவரும், சில்லறைகள்
கொடுத்தவரும் அவரே.


அங்கே அவன் காதலியின் மடல் நேசம் மணக்க மணக்க வந்திறங்கியது. எல்லைகளைக் கடந்து
எப்படியாவது அந்த சொர்க்கபூமியை அடைந்துவிடவேண்டுமென உத்வேகத்துடன் அவன் புதிய
ஏஜென்ரைப் பிடித்தான். ஊரில் அக்காளின் நகைகளும், அம்மாவின் சீதண வீடும் பறிபோனது.
அவன் இன்னொரு எல்லை கடந்தான்.


அவன் உறங்கிக்கொண்டிருந்த மாட்டுக்கொட்டிலில் மாடுகள் அமைதியின்றி எழுந்து
நடமாடிக்கொண்டிருந்தன. அங்கே ஒரு சாக்கில் மூன்று கொடுத்துவைக்காத ஈழத்துத் தமிழர்கள்
உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் வயிறுகள் ஆகாரமற்று வெறுமைக்குள் குமிழிகளை
உற்பத்திசெய்துகொண்டும் அட்டகாசப்படுத்திக்கொண்டுமிருந்ததை அந்தோணியோ வயிற்று
குமிழிகள் கேட்டுக்கொண்டிருந்தன. அடுத்த தொழுவத்தில் ஏழுபேர். அந்த ஏஜென்ற் தொலைவில்
ஒரு விடுதியில் தங்கியிருந்தான்.


வயிற்றுப் பசியை அவர்களால் தாங்கிக்கொள்ள முடிந்தது. இன்னும் ஒரே ஒரு எல்லை. அதைக்
கடந்துவிட்டால் நிரந்தரமாக அவர்கள் உயிர்கள் வாழ அந்த சொர்க்க பூமி இடம்கொடுக்துவிடும்.
நேற்றுச் சூரியன் தன்னைக் கருகிக்கொண்ட பொழுதினில் ஏஜென்ற் வந்தான். ஹிந்தி மொழியில் பேசினான். இரண்டொரு ஆங்கிலச் சொற்கள் கலந்து.


எல்லோரும் ஓடர் நதியைநோக்கி அவனுக்கு பின்னே நடந்தனர். அந்த நதி சலனமுற்றிருந்தது.
தாறுமாறாக ஓடியது. சைகை மொழி பேசி அவர்களை கரையிலேயே நிறுத்தித் தான் ஆற்றுக்குள்
இறங்கினான். மறு கரை வரை சென்று மீண்டான். அவன் இடுப்புவரையில்
நனைத்துவிட்டிருந்தது ஆறு. அதன் சலனம் அடங்கும்வரையில்.….


இவ்வாறுதான் நாளை அவர்கள் எல்லோரும் இந்த நதியைக் கடக்கவேண்டும். இன்று ஒரு
ஒத்திகை!
ஏன் இன்றே தாம் நதியைக் கடக்க முடியாதென்கின்ற கேள்வி அனைவருக்குள்ளும்
ஊர்ந்துகொண்டிருந்தது.

அவன் சுட்டுக்காட்டினான்.
“பொலீஸ்! பொஸீஸ்!” என்றான்.
முன்னொருநாள் அந்தோணியோ அவனருகில் நடந்துவரும் சந்தர்ப்பம் கிடைத்தபோது
“சுக்கிரியா! சுக்கிரியா!” என்றான்.
ஏஜென்ரின் சிடுசிடுக்கும் முகம் மலர்ந்தது. தனது சொந்த மொழியில் ஒருவர் நன்றி சொல்வது
யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் அங்கு ஒரு சுக்கிரியா பெயருடன் ஒரு பெண் இருந்தாள்.
அவள் தன்னைத்தான் அவன் அழைக்கிறானெற்றெண்ணி ஓடிவந்தாள். ஏமாற்றமடைந்தாள்.

***

சுக்கிரியாவை அந்தோணியோ முன்னர் எல்லைகள் கடந்து வரும் வழியில் சந்தித்தான். அவள்
தனது சொந்த நாட்டை விட்டுக் கிளம்பி ஏழு மாதங்கள் என்றாள். அவளுடன் அன்று மூன்று
மாதங்கள் நிறைவுற்ற அவள் குழந்தையையும் எடுத்துவந்திருந்தாள். இப்போது குழந்தை
வளர்ந்திருந்தது.


பனிபொழியும் நாடொன்றின் எல்லை கடக்கும் முன் அவர்கள் பாத அணிகளைக் களற்றி
எறியவேண்டும். இல்லையென்றால் கடக்கவே முடியாது. சத்தம் காட்டிக்கொடுக்கும் என்ற
உத்தரவில் அனைவரும் களற்றி எறிந்துவிட்டு பனிக்குள் வெறும் பாதங்கள் புதைத்து
ஓடிவந்தார்கள். சுக்கிரியா மகளைத் தூக்கிக்கொண்டு நடந்தாள். அவளால் விரைவாக
நடக்கமுடியவில்லை. அந்தோணியோ அவள் மகளைத் தூக்கினான். அவனாலும் நீண்ட நேரம்
விரைவாக நடக்கமுடியவில்லை. இருவரையும் ஏஜென்ற் ஏசினான். சுக்கிரியாவின் மகள் பசியில்
அழுது சோர்ந்துபோனள். பின் அவள் மூச்சு அடங்கிப்போனது. மகளைப் பனியில் கிடத்தி
அழுதாள். அவளும் மயங்கி விழும் தருணத்தில் அந்தோணியோ அவளை இழுத்துக்கொண்டு
ஓடினான். சிறுமியின் முகத்தைக்கூட அவனால் பார்க்க முடியவில்லை. குழந்தையை பனிமூடி
மறைத்துக்கொண்டது.


உக்கிரெயின் நாட்டுக்குள் வந்தடைந்தபோது பலருடைய பாதங்கள் அவர்கள் வயிற்றுக்
குமிழிகளைவிட பெரிய கொப்பளங்களைப் போட்டிருந்தன. தாங்கொணா வலிகளுடன்
மருத்துவம் இன்றி இருந்தார்கள் பல நாட்கள் ஒரு அறைக்குள் பதின்மூன்று பேர்கள்.
சுக்கிரியா அங்கிருந்து மறைக்கப்பட்டிருந்தாள். அத்தனை ஆண்களுடனும் அவள் தங்குவது
அவளுக்கு ஏற்புடையதல்லவென்று ஏஜென்ற் தனதிடம் எடுத்துச்சென்றான். மகளின் இறப்பின்
வலியிலிரந்து மீளமுடியாதவள் அழுது அழுது நொந்துபோன நிலையில் என்ன
செய்யவதென்றறியாது அவனுடன் கூடச் சென்றாள்.


ஏஜென்ரைப்பொறுத்தவரையில் சுக்கிரியா மார்புகளும் யோனியும் கொண்ட ஒரு பெண்ணாக
மட்டும்தான் தெரிந்தாள். உடன்பட்டால் உடனடியாக அனுப்புவதாகவும் மறுத்தால் அவளுடைய
மகளின் நிலைதானென்றும் வெருட்டினான். அவள் மார்புகள் கசக்கப்பட்டன.


மீண்டும் அந்த அறைக்கு கொண்டுவரப்பட்டாள். அழுகை ஆறாக ஓடிக்கொண்டிருக்க
அர்த்தங்களை அந்தோணியோ உணர்ந்தான். அவனிடம் அவள் தோள்ப் பையைக் கொடுத்தாள்.
அதனுள் சிறுமியின் உடுப்புகள்!.

சுக்கிரியா சொர்க்கம் நோக்கிப் புறப்பட்டாள்.

***
கொட்டிலுக்குள் படுத்திருந்த அந்தோணியோவின் மனம் கசங்கிப் பிழிந்த நீர் வக்கோல்களைக்
கழுவிச்சென்றது.


காத்திருந்த அந்தத் தருணம் இவர்களைக் கை நீட்டி அழைத்தது.
எல்லோரையும் ஏஜென்ரின் கை நள்ளிரவில் தட்டியெழுப்பியது. இருளின் அகோரம் கண்டும்
அச்சமின்றி அனைவுரும் உற்சாகமாக எழுந்து அவன் பின் நடந்தனர்.


ஒரே ஒரு எல்லை!


இந்த எல்லையைத் தாண்டினால் சொர்க்கம் நிட்டசயம். அந்தோணியோ பேரன்புகொண்ட
தனதுயிரை அங்கே அமைதியாகச் சாய்திடலாம். அவன் முதுகுப் பையுடன் புறப்பட்டான்.
சிறுமியின் குலைந்த அழுக்கு உடைகள் சில அதனுள் கலவரப்பட்டுக் கிடந்தன.


“உஷ்”
“மெதுவாக நடக்கட்டாம்.”


ஒருவர் பின் ஒருவராக நடந்து நதிக்கரையை அடைந்தனர். யேர்மனியையும் போலந்தையும்
அரவணைத்து ஓடர் நதி அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தது.
“யேர்மன் காவல்துறையினர் மறுபக்கத்தில் காவல்காக்கின்றனர். வெளிச்சம் இத்திசைக்கு
அடிக்கும்போது புற்களில் அனைவரும் படுத்துக்கொள்ளவேண்டும். பிறகு அங்த வெளிச்சம்
திரும்பி மற்றத் திசைக்குச் செல்லும் தருணத்தில்தான் நாங்கள் நதிக்குள் இறங்கவேண்டுமாம்.”
ஒவ்வொருத்தராக இறங்கினார்கள்.


அந்தோணியோவும் துணிச்சலுடன் இறங்கினான். முதுகுப் பையைக் கெட்டியாகப்
பிடித்துக்கொண்டான். காதலியின் கடிதம் மேலும் மேலும் தன்னை மடித்துக்கொண்டு அவன்
நெஞ்சைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. நீருக்குள் அவன் நனைய நனைய அது அவனை
தன்னும் இழுத்துக்கொண்டேயிருந்தது. அந்தோணியோவின் கால்கள் நிலத்தைத்தேடி அலைந்து
தோற்றுக்கொண்டிருந்தன. அமைதியான நீர் இன்று ஆழம்கொண்டிருந்ததை யாரும்
அறிந்திருந்கவில்லை.


அவன் தலைவரை தண்ணீர். ஏனையவர்களின் கூச்சல் சத்தங்கள். ஒருமுறை உன்னிப் பார்த்தான்.
சூப்பி எறிந்த பனங்கொட்டைகள் போல் தலைகள் நீருள் மிதந்துகொண்டிருந்தன. அந்தப்
பனங்கொட்டைகளை நீர் தன்னோடு இழுத்துச் சென்றுகொண்டிருந்தது.


அந்தோணியோவை நீர் முழுமையாகக் குடித்துக்கொண்டது மட்டுமின்றி தன் போக்கில் இழுத்துச்
செல்வதை அவனால் உணரமுடியவில்லை. கற்களில் மோதி அவன் கனவுகள் நீருக்குள்
சிதறிக்கொண்டிருந்தன…..

***
“என்னுடைய மகனைக் காணவில்லை. அவன் வெளிக்கிட்டு கனநாள். ஐந்து நாளுக்கு முன்னம்
இங்க வந்து சேர்துவிடுவதாக போனில் சொன்னான். ஆனால் அவனைப் பற்றி ஒரு செய்தியும்
இதுவரை இல்லை. தயவு செய்து என்னுடைய மகனைக் கண்டு பிடித்துத் தாருங்கள்.”
தந்தை பதற்றத்துடன் பேசினார்.


“எங்கையிருந்து கடைசியா போன் எடுத்தவர்?”
“போலந்து. நதியாலை கடந்து வரப்போறதாகச் சொன்னவர்.”
“நாங்கள் தேடிப் பார்க்கிறம். யோசிக்காதேங்கோ. உங்க மகன் கிடைப்பார்.”
“உங்க மகனின் பெயர் என்ன?”
“மோகன்.”

***

கசன்றாவும் எமிலும் கைகோர்த்தவாறு ஓடர் நதிக்கரையில் ஒய்யாரமாக
நடந்துவந்துகொண்டிருந்தனர். அவர்களை வருடிச் சென்ற தென்றல் இப்போது ஒரு
துர்நாற்றத்தை கொண்டுவந்திருந்தது. அவர்கள் அதிர்ந்துபோனார்கள். அங்கே நதிக்கரையில்
பூதம்போல் கறுத்த மனித உடல் ஒன்று கிடந்தது.


அந்தோணியோ!


அலறியடித்தவாறு ஓடிச் சென்று அவர்கள் பொலிஸிடம் தெரிவித்தார்கள். போலந்து பொலிஸின்
உத்தரவின்படி அந்த நதி அலசி ஆரயப்பட்டதில் பன்னிரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கபட்டன.
அனைத்தும் பெரும் பூதங்களாகியிருந்தன.


ஒவ்வொரு உடலிலிருந்தும் உருவி எடுத்தார்கள். அந்தோணியோவின் சேர்ட்டுப் பொக்கற்றில்
அந்தக் கடிதம் உயிரோடுதானிருந்தது. நதி கடக்க முன்னர் அந்தோணியோ நேசம் பொங்கிச்
சுரந்த அவள் வார்த்தைகளை பொலித்தின் உறைபோட்டு பக்குவப்படுத்தியிருந்தான்.
திருமணத்தின் அடையாளமாயிருந்த ஒருவரின் மோதிரம் உருவி எடுக்கமுடியாமல் வெட்டி
எடுக்கப்பட்டது.

***

நாங்கள் ஓடர் நதிக்கரையின் எல்லைப் புற அகதிமுகாமிற்குச் செல்வதற்கான வழியை கிழக்கு
யெர்மனியைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்க முயன்றபோது அவர் எங்களைக் கண்டு முகத்தைத்
திருப்பினார்.


அகதிகள் முகாமில் பேச ஒருவரும் தயாரற்றிருந்தவேளை ஒருவர் மனமுறுத்த வாயைத் திறந்தார்.

“இங்க நீங்கள் சொன்ன திகதியிலை ஒரு பெடியன் வந்திருக்கிறான்.” அவர் ஒரு திசையைக்
காட்டினார். அங்கு யசி நின்றிருந்தான். ஆனால் அவனை அங்குள்ள முகாம் பொறுப்பாளர்
“மோகன்” என்றார்.


மோகன் குளறிக் குளறி அந்தக் கதையைச் சொன்னான். தனக்கு உதவியது தான் ஊரில் ஆற்றில்
பழகிய நீச்சலும் ஓடர் கரையில் இருந்த ஒரு பலமான புல்லும்தான். அந்தக் புல்லை இறுகப்
பிடித்தே அவன் கரையேறினான்.


“நாங்கள் என்னவோ நினைச்சுக்கொண்டு வந்தம். ஆனால் என்ன இது நாடு?” என்று விரக்தியுறக்
கூறினான்.
ஓடர் எங்களை மறுகரைக்கு அனுமதித்தது. அங்கே போலந்து பொலிஸ் வரவேற்றது.
பன்னிரண்டு சடலங்களும் பெயர் தெரியாதவர்கள் என்று எழுதப்பட்டு தனித்தனியே
அடக்கம்செய்யப்பட்டிருந்தன அனாதைப் பிணங்களாக.


மோதிரங்கள், உடைகள், கடிதம் எங்களிடம் தரப்பட்டது. உயிரோடிருந்தது கடிதம் மாத்திரமே!


“அப்புள்ள அத்தானுக்கு…..
விரைவாய் போய்ச்சேர்ந்து என்னையும் எடுங்கோ…
உங்களுக்காகக் காத்திருக்கின்றேன்….”


முடிவில் அவள் பெயர். அவள் இதழ்பூச்சு முத்தத் தோட்டம்…….
மீண்டும் அவளை முடக்கிக் கைப்பையுள் வைத்துக்கொண்டு திரும்பினோம்.
முகாமில் மோகனையும் அழைத்து வந்தோம் அனுமதியுடன். மோகம் அமைதியின் ஆழத்தில்
இருப்பதாகக் காட்டிக்கொண்டான். அவன் உள்ளுக்குள் அமுதுகொண்டும்
போராடிக்கொண்டுமிருந்தான்.


மோகனின் தந்தை அவனைக் கண்டதும் கதறி அழுதார்.
“இது என் மோகனில்லை.
என் மகன் எங்கே?”
மோகனை அதட்டியும் அடித்தும் கேட்டார். இறுதியில் வெருட்டினார்.


“உக்ரெயின் காட்டுக்குள் மோகன் செத்துப்போனான். எங்களைப்போல அவனாலை பசிதாங்க
முடியாது. நான் அவன்ரை ஐடி கார்ட்டுகள் துணியளை எடுத்துக்கொண்டு வந்திட்டன். இந்த
நாட்டுக்குள்ள வரேக்க என்ர எல்லாம் துலைஞ்சுபோச்சு. யேர்மன் பொலிஸ்காரர் நான்
மோகனெண்டு பதிஞ்சு வைச்சிருக்கிறாங்கள்.”


மோகனின் தந்தை தனது வயிற்றைப் பிடித்துக்கொண்டு கதறினார். மோகனாகி நின்ற யசியும்
அழுதான். நாங்களும் அழுதோம்.

***

ஓடர் நதி இன்றும் அமைதியாக இருந்தது என்று நீங்கள் நினைக்கலாம். அதன் அடியில்
சிதறிக்கிடந்த சிறுமியின் ஆடைகள் அதனோடு உரச உரச ஓடர் நதியும் அழுதுகொண்டிருந்ததை
யார் அறிவார்?

***

 

https://vanemmagazine.com/சொர்க்கத்தின்-பாவிகள்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.