Jump to content

பண்டைய தமிழர்களிடம் இருந்த பன்வகையான படைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழர்களிடம் அக்காலத்தில் பல்வகையான படைகள் இருந்ததாக அறியக் கிடைக்கின்றது.

→ சேனையின் உட்பிரிவே ஒவ்வொரு விதமான படைகளாகும். ஆனால் பொதுவாக சொல்லும்போது படையென்னும் பெயரே ஆய்தம் தாங்கிய அரச ஆணைபெற்ற படைகளைக் குறிக்கின்றன..

main-qimg-8b1d820f99b905570fa7a4159f85fd8e

 

முதலில் படைகளை அதன் நிலை அடிப்படையைக் கொண்டு

  1. அகப்படை - Internal Defensive Force
  2. மறப்படை - Expeditionary Force

- என்று இரண்டு படைகளாகப் பகுத்துள்ளனர்.

 


கோட்டைப் போரின் போது பொருதும் படைகள்

  1. உழிஞைப்படை - பகை அரசனுடைய கோட்டையைத் தாக்கும் படை.
  2. நொச்சிப்படை - தங்கள் கோட்டையைக் காத்துக் கொள்ளப் போரிடும் படை.

என்று அழைக்கபட்டன.

 


இப்படைகள், அவை பெற்ற பயிற்சியின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கப்படும்:

  1. பயிற்சிப் படை = போர்ப் பயிற்சி கற்ற சேனை.
  2. பயிற்சியிலாப் படை = பயிற்சி பெறாத-உணர்ச்சியுள்ள மைந்தர் கூட்டம்.

 


அடுத்து, கருவிகள் அடிப்படையில் படைகள் இவ்வாறு பிரிக்கப்படும்:

  1. கரணப்பல்படை - பல்வகையான படைக்கலங்களைத் தாங்கிய படை
  2. கருவிபெறு படை = அரசனால் வழங்கப்படும் போர்க்கருவிகளைப் பெற்று விளங்கும் சேனை.
  3. தற்கருவிப் படை = தத்தம் போர்க்கருவிகளைக் கொண்டு பொருதும் சேனை.

 

அடுத்து, நகர்திறன் அடிப்படையில் இவ்வாறு பிரிக்கப்படும்:

  • தானே செல்வது - காலாட்படை/தானை
    • தானாகச் செல்லும் படையாகிய காலாட்படையினை தானை என்றனர் பண்டைத்தமிழர். இதை தற்காலத்தில் சேனைக்கு ஒத்த சொல்லாக சிலர் கருதுகின்றனர், அது தவறு. சேனை என்பது மொத்தமானது.
      • [அறுவகைத் 'தானை' என்பது முதன்மையான அறுவகை படைக்கலங்களைக் குறிப்பவையே (வில், வேல், வாள், குதிரை, யானை, தேர்).. இவை அறுவகைப் படைகள்(~சேனை) அன்று. தானை என்றால் தமிழில் ஆய்தம் என்றும் ஒரு பொருள் உண்டு என்பதை அறிக. ]
    • தேரும் குதிரை மூலம் இயங்குவதால் அதுவும் குதிரையினுள் அடங்கிவிடும்.
    • ஆதாரம்:

'தானை, யானை, குதிரை

நோனார் உட்கும் மூவகைந் நிலையும்

→ (தொல்.பொருள்.புறத். 14:1,2)'

  • பிறவாற் செல்வது - குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை

 


அடுத்து, தேர்ப்படையானது ஊர்திகள் அடிப்படையில் படைகள் இவ்வாறு பிரிக்கப்படும்:

  1. ஊர்திபெறுபடை = காவலனால் தரப்பட்ட ஊர்திகளில் ஏறிப் போர் புரியும் சேனை.
  2. தன்னூர்திப்படை = தத்தம் ஊர்திகளில் ஏறிப் போர் புரியும் சேனை.

 

பின்னர் எல்லாப்படையும் நால்வகையாக ஒட்டுமொத்தமாகப் பிரித்தனர். இவற்றினை நாற்படைகள் என்று கூறூவார்கள்.

  • காலாட் படை / ஆட்படை
  • தேர்ப்படை/ சகடப்படை
  • குதிரைப்படை / புரவிப்படை/ பரிப்படை
  • யானைப்படை/ கடகப்படை/ கரிப்படை

இவற்றுடன் வேவுப்படை என்றும் ஒன்றிருந்தது. அதன் சேவை யாதெனில் எதிரியின் இடத்திற்குச் சென்று தகவல் திரட்டும் படை. இது ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்பதால் 'ஐந்தாம்படை' என்றும் அழைப்பர்.

இவை தவிர, கடற்படையும் இருந்தது - இது கடலில் நடைபெறும் கடற்சமர்களில் ஈடுபடுவதற்காக வைத்திருந்த படையாகும்.

 


  1. வன்படை - நாட்டுப்பற்றால் ஏற்பட்ட மனவெழுச்சி காரணமாக எழுந்த படை
  2. மென்படை - இலகுவான படை - Light army

 

பேந்து, அறுவகைப்படையாகப் பிரிக்கப்பட்டன. அவையாவன,

  • ஊழியக் கால அளவு பற்றி:-
    • கூலிப்படை/ படிப்படை - கூலிக்கு அமர்த்தும் படை.
    • மூலப்படை/ தொல்படை/ நிலைப்படை- பயிற்சிசெய்து நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் படை.
      • இந்த மூலப்படையினால் ஏற்படும் பலத்தின் பெயர் மூலபலம் என்பதாகும்.
  • தொகுக்கும் இடம்பற்றி:-
    • நாட்டுப்படை/ அமையப்படை - போர்க்கலங்களில் மன எழுச்சி மிக்கு உருவாகும் படை. மனையிலும் மன்றிலும் மரபுவழி பயிற்ச்கி பெற்றவர். இவர்கள் மூப்படைக்கு துணையாவ்ர் ; அவர் செல்லும் வழி காப்பார்; எல்லைகளை காப்பார்; மனைகளை, நீர்நிலைகள் போன்றவற்றை காப்பார்
    • காட்டுப்படை - கானக மக்களால் ஆன படை
  • சேர்ந்துள்ள பக்கம்பற்றி:-
    • துணைப்படை - நட்பரசரதாய்த் தனக்கு உதவுஞ் சேனை.
    • பகைப்படை - பகைவர் படையிலிருந்து விலக்குண்டு அடைந்தோராலேனும் அப்படையினின்றும் வேறுபடுத்து வசமாக்கிக் கொள்ளப்பட்டோராலேனும் அமைந்த படை.

 


அதன் பின்னர் அவற்றினுள் கீழ்கண்ட சேனைகள் பிரிவுகளாக இருக்கும்:

  1. குடிப்படை/ வன்படை - போர்வேளையில் நாட்டுப்பற்று அரசபற்று காரணமாக பொருள் பற்றின்றி எழுந்த முறையான பயிற்சி பெறாது மரபுவழி மனையில் மறப்படை பயிற்சி பெற்றவர்
  2. பாசிப்படை - திடீரென்று தாக்கும் படை
  3. செருப்படை - சிறந்த வீரர்களைக் கொண்ட படை
  4. பதிபடை/ ஒளிபடை- பதுங்கித் தாக்கும் படை - Ambush army
  5. கைக்கொளவர் படை/ கைக்கோளப்படை/ வேளைக்காரர் படை - அரசனிற்கு அவ்வப்போது வேண்டும் பணிகளை தப்பாது செய்ய வேண்டும் என்றும், தப்பின் உயிர் துறப்பது என்றும், சூளிட்டுக் கொண்ட பணியாளர். கைக்கோளர் என்பவரே வேளைக்காரர் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப் பவாணர் அவர்கள். இவர்கள் இரு பிரிவாக இருந்தனர்:
    1. அத்திகோசம் - ஆனையைக் கொல்வோர்
    2. வீரகோசம் - வீரரைக் கொல்வோர்
    3. ஆபத்துதவிகள் - பாண்டிய தேசத்து வேளைக்காரர்.
      1. ஆபத்து - சமற்கிருதம்
  6. ஊசிப்படை - தாக்குதல் படை
  7. உரிமைப்படை - மானியம், உண்பளம் பெற்று அதன் காரணமாகப் போர் நேர்ந்த காலத்து அரசனுக்காகப் போரிடும் சேனை.
  8. புதுப்படை - அவசர நிலையில் புதிதாய்ச் சேர்க்கப்படும் படை
  9. பங்களப்படை - newly enlisted army useless as chaff
  10. தனிப்படை - தலைவனை இன்றித் தாமாகவே இயங்கும் சேனை.
  11. குழுப்படை - மன்னன் அமைத்த தலைவனையுடைய சேனை.
  12. அங்கபடை - மெய்க்காவல் படை
    1. [இச்சொல் பொற்பனைக் கோட்டையில் கி.மு. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் கல்வெட்டில் இருந்து கிடைக்கப்பெற்றது... எனவே தமிழ்ச்சொல் என்று நினைக்கின்றேன்.]
  13. நிழற்படை- "அரசனைப் பாதுகாக்க இப்படை பயன்படுத்தப்பெற்றது. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று பெருவழியைக் கண்காணித்தனர்" என்பதாகப் முனைவர் பூங்குன்றன் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.
    1. நிழல் - சுருக்கமாக
  14. மாப்படை - கரி, பரி மற்றும் சிறந்த வில் வீரர்களைக் கொண்ட படை
  15. தளப்படை - காலாட்படையும் குதிரைப்படையும் கலந்த படை. இவர்கள் கூழைப்படையாகவும் கரந்தடிப்படையாகவும் பின்வாங்கும்போது பாவிக்கப்படுவர்.
  16. சாவேறு - பகையரசனைச் சூழ்ந்து காக்கும் படை மீது ஊடறுத்துச் செல்ல முயன்று அந்நிலையில் உயிர் துறத்தலையே நோன்பாகக்கொண்ட வீரர்கள்
  17. முனைமோகர், முனையெதிர் மோகர் - என்னவகைப் படைப் பிரிவு என்று அறிய முடியவில்லை!
  18. மற்படை - ஆய்தம் இன்றி போரிடுவோர் - வர்ம வீரர், மற்போராளர்
  19. கள்ளர் படை - போர் தொடங்குவதற்கு முன்னரே பகைவரின் ஆநிரைகளை கவர்ந்து வருவதற்காக அமைக்கப்பட்ட படை.

 


செயல்களின் அடிப்படையில் எழுந்த அடைமொழி போன்ற சொற்கள்

  1. உடைப்படை - எப்பொழுதும் தன்னுடனே வைத்துக்கொள்ளும் படை
  2. கூளப்படை - பல வகைப் படைகள் கலந்த படை
  3. குமரிப்படை - அழியாப்படை
  4. தடுபடை - மாற்றுப்படை
  5. புடைப்படை - சூழந்து செல்லும் படை
  6. துறுபடை - நெருக்கமாக ஓரிடத்தில் நிற்கும் படை
  7. வென்படை/வாகைப்படை - வென்ற படை
  8. அளவுபடை - மிகச்சிறிய படை
  9. பெரும்படை - பெரிய படை
  10. அடும்படை, வியன்படை, வெம்படை, வருபடை, பொருபடை, பெயர்படை, அழிபடை, வெல்படை, நெடும்படை - - விதப்பான பொருள் என்னவென்று தெரியவில்லை

 


கூடுதல் செய்திகள்:


 

உசாத்துணை:

 

தொகுப்பு & வெளியீடு :

நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to பண்டைய தமிழர்களிடம் இருந்த பல் வகையான படைகள்
  • நன்னிச் சோழன் changed the title to பண்டைய தமிழர்களிடம் இருந்த பன்வகையான படைகள்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.