Jump to content

சம்பந்தருடைய மரணத்திற்குப் பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை – பிள்ளையான்​​​​​​​


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருடைய மரணத்திற்குப் பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை – பிள்ளையான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராவதற்கான பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன தெரிவித்துள்ளார்.எங்களுடைய மக்களோடு உறுதியாக இருந்து பணி செய்து அவர்களுடைய தலைவர்கள் அவர்களுடைய கடந்தகால தலைவர்கள் விட்ட பிழைகளை சரி செய்து இந்த மண்ணிலே வாழக்கூடிய நம்பிக்கையை கட்டியெழுப்ப கூடிய மக்கள் கூட்டத்தை நாங்கள் உருவாக்குவதற்கு பாடுபடுகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எங்களுக்கு ஒரு பார்வை இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் அரசியல் தலைவிதி எப்படி நிர்ணயிக்க வேண்டும், கிழக்கு மாகாணத்தில் மக்களை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும்,கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற மக்களுக்கான கல்வி அமைய என்ன செய்ய வேண்டும் என்பதும் எங்கே குளம் கட்ட வேண்டும் எந்த அபிவிருத்தியை கூட்டினால் மக்கள் நன்மை அடைவார்கள் என்பது குறித்து எங்களுக்கு திட்டம் இருக்கின்றது.திட்டம் இல்லாமல் அரசியலுக்காக அல்லது சம்பந்தருடைய மரணத்திற்குப் பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை என மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/சம்பந்தருடைய-மரணத்திற்க/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட்றா சக்கை…. அம்மன் கோயில் புக்கை… எண்டானாம். 😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சம்பந்தருடைய மரணத்திற்குப் பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை – பிள்ளையான்

ஓ.....அந்த நினைப்பு வேறை இருக்கோ???? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

ஓ.....அந்த நினைப்பு வேறை இருக்கோ???? 😂

நினைப்புத்தான்… பிழைப்பை கெடுக்குது.

சம்பந்தனுடன்… பிள்ளையான் தன்னை ஒப்பிட்டதன் மூலம்,

சம்பந்தனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும்…. “ரிப்பேர்” பண்ண முடியாத அளவுக்கு… “சப்பளிஞ்சு” போச்சு. 😂 🤣

Link to comment
Share on other sites

15 minutes ago, குமாரசாமி said:

ஓ.....அந்த நினைப்பு வேறை இருக்கோ???? 😂

 

8 minutes ago, தமிழ் சிறி said:

நினைப்புத்தான்… பிழைப்பை கெடுக்குது.

நினைப்பும் அதற்கான பழமொழியும் சரிதான், ஆனால் பிள்ளையான் பிரமாதமாகப் பிளைக்கிறாரே.???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Paanch said:

 

நினைப்பும் அதற்கான பழமொழியும் சரிதான், ஆனால் பிள்ளையான் பிரமாதமாகப் பிளைக்கிறாரே.???

இப்ப… பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு.

போன வருசம்…   இந்தப் பாம்பு, கோடு போட்ட சட்டையுடன் மறியலுக்குள் இருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன் நண்பனாக இருந்தாலும் சரி எதிரியாக இருந்தாலும் சரி அவர் வாழும்போதே அவர் மரணம் பற்றி பேசகூடாது என்ற அடிப்படை மனித நாகரிகம்கூட தெரியாத காட்டுயல் கிழக்குக்கு விடிவு தரபோறாராம்,  இந்த எகத்தாளம் எல்லாம் எங்களோடதான், முஸ்லீம்கள் முன்னாடி போய் நின்று மூச்சுகூட விடமாட்டார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அவசரம்.? பேருந்து நின்டவுடன் சீற் போடுங்கப்பா..

CreamyFlickeringBlackandtancoonhound-siz

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரராஜசிங்கத்தை ஆலயத்திற்குள்ளேயே வைத்துச் சுட்டது போல, சம்பந்தரையும் எங்காவது வைச்சுப்போடுவாங்கள் என்று நினைக்கிறேன். கடத்துவதும்  கொல்வதும் அவர்களது தொழில் அல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சீட்டில் அமர்வதற்காய் சம்மந்தரின் இறப்பை அவரது கட்சிக்காரர் தான் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கினம் 😉


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரஞ்சித் said:

பரராஜசிங்கத்தை ஆலயத்திற்குள்ளேயே வைத்துச் சுட்டது போல, சம்பந்தரையும் எங்காவது வைச்சுப்போடுவாங்கள் என்று நினைக்கிறேன். கடத்துவதும்  கொல்வதும் அவர்களது தொழில் அல்லவா? 

நீங்கள் எப்படித்தான் எழுதினாலும் ஒரு சிலருக்கு உறைக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான், கருணா ஏன் டக்கிளசும் தமது மாற்றுக்கருத்தாளர்களையும், அரசியல் எதிராளிகளையும் சிண்டுமுடிந்து தங்கள் காலத்தை ஓட்டுபவர்கள். அந்தக் கோணத்தில் பார்க்கும்போது இங்கு ஒரு சொல் தொக்கி நிற்பதாகவே எனக்குப் படுகிறது.

அதாவது பிள்ளையான் சொல்வது "திட்டம் இல்லாமல்.....தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மற்றையவர்கள்போல் மேற்கொள்ளவில்லை" என்பதாகவும் இருக்கக்கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவருடன் தலைமைச் சண்டை போட்டு முடிஞ்சுது எனி சம்பந்தனுடன். இவங்களுக்கு நோகாமல் நொங்கு குடிக்கனும் என்றதே கனவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

நீங்கள் எப்படித்தான் எழுதினாலும் ஒரு சிலருக்கு உறைக்காது.

ஓம் அண்ணே இந்த வயசிலையும், இனி மேலும் அவரை சுட்டுத் தான் கொல்லோணுமாக்கும்  ....பிள்ளையானும் என்ன செய்வார் அவருக்கு தலைமை என்ன சொல்லிக் கொடுத்ததோ அதைத் தானே செய்வார் ....அதெல்லாம் இரத்தத்தில் ஊறியது புலியை விட்டுப் போனாலும் புலிக்  குணம் மாறாது ...சரியா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

ஓம் அண்ணே இந்த வயசிலையும், இனி மேலும் அவரை சுட்டுத் தான் கொல்லோணுமாக்கும்  ....பிள்ளையானும் என்ன செய்வார் அவருக்கு தலைமை என்ன சொல்லிக் கொடுத்ததோ அதைத் தானே செய்வார் ....அதெல்லாம் இரத்தத்தில் ஊறியது புலியை விட்டுப் போனாலும் புலிக்  குணம் மாறாது ...சரியா 

🤣😂😁

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

🤣😂😁

Bild

பதிலுக்கு பதிலாய் இப்படி ஏதாவது வருமென்று தெரிந்தது தான் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.