Jump to content

யாழ்ப்பாணத்தில் இரு கைகளிலும் தடுப்பூசி குத்திய தாதிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு இன்று (29) இரு கையிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

யாழ், மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முன்னெடுக்கப்பட்டது. 

இந்த செயற்றிட்டத்தில் யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில்  அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில், கொழும்புத்துறை, J/61 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. 

இதே பிரிவைச் சேர்ந்த  66 வயது வயோதிப பெண்ணுக்கு இரு கையிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் ஒரு கையில் தாதி ஒருவர் ஊசி போட்டு விட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட  இது தெரியாமல் இன்னொரு தாதி அங்கு வந்து மற்ற கையை காட்டுமாறு கூறி ஊசி போட்டுள்ளார்.

தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாகவும் உடலில் உபாதை ஏற்பட்டால் அறிவிக்குமாறும் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

Tamilmirror Online || இரு கைகளிலும் தடுப்பூசி குத்திய தாதிகள்

Link to comment
Share on other sites

தாதி தான் தவறு செய்தார் என்றால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஏன் இரண்டாம் தடவை குத்தும் போது மெளனமாக இருந்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

தாதி தான் தவறு செய்தார் என்றால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஏன் இரண்டாம் தடவை குத்தும் போது மெளனமாக இருந்தார்?

போய் இருந்தால் ஊசி போடுவதே தெரியவில்லை என்று ஊசி போட்ட நண்பர்கள் கூறினார்கள். வயதும் 66, முதுமையோ அல்லது போதிய விளக்கம் இல்லாமலும் இருந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

தாதி தான் தவறு செய்தார் என்றால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஏன் இரண்டாம் தடவை குத்தும் போது மெளனமாக இருந்தார்?

எங்கடை குணம் தெரியும்தானே, free யா இன்னொரு ஊசி கிடைக்குது ஏன் விடுவான் என யோச்சிருப்பா அன்ரி🤣

சும்மா பகிடிக்கு. சில வேளை அப்படி அடிப்பதுதான் வழமுறை என நினைத்திருக்ககூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

எங்கடை குணம் தெரியும்தானே, free யா இன்னொரு ஊசி கிடைக்குது ஏன் விடுவான் என யோச்சிருப்பா அன்ரி🤣

சும்மா பகிடிக்கு. சில வேளை அப்படி அடிப்பதுதான் வழமுறை என நினைத்திருக்ககூடும்.

இரண்டு தரம் போடவேண்டும் இரண்டு தரம் போடவேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்திருப்பார். ஒரேநாளில் போட்டதால் சந்தோஷமாக அனுமதித்திருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இரண்டு தரம் போடவேண்டும் இரண்டு தரம் போடவேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்திருப்பார். ஒரேநாளில் போட்டதால் சந்தோஷமாக அனுமதித்திருக்கலாம்

கொரோனா பதட்டம், சம்பந்தப்பட்ட இருவரின் யோசிக்கும் தன்மையை பாதித்து விட்டது. சரியான திட்டமிடல் இல்லாமல் செய்யும் வேலை எதுவும் இப்படித்தான் முடியும். வேலை ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொருவரின் வேலை பொறுப்பு பற்றி கலந்துரையாடி, ஒவ்வொருவரும் தமக்குரிய வழிநடத்தல் முறையை பின்பற்றியிருந்தால் இப்படியான அனாவசிய தவறுகளை தடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

    அண்மையில் வாசித்த செய்தி(இடம் காலம் நினைவில் இல்லை.
    கொரோனா ஊசி போட்ட தாதி வெறும் ஊசியை குத்தி குத்தி அனுப்பி சேமிக்கும் மருந்தை தனியாருக்கு விற்றுள்ளார்.
     ஆனபடியால் எந்தக் கையில் குத்தினாலும் மருந்து போகுதா என்பதை அவதானிக் வேண்டும்.
      பொதுவாக ஊசி குத்தும் போது மற்றப் பக்கம் திரும்பிவிடுவார்கள்.
       இதுவே கையாடலுக்கு வசதியாக போய்விடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

எங்கடை குணம் தெரியும்தானே, free யா இன்னொரு ஊசி கிடைக்குது ஏன் விடுவான் என யோச்சிருப்பா அன்ரி🤣

சும்மா பகிடிக்கு. சில வேளை அப்படி அடிப்பதுதான் வழமுறை என நினைத்திருக்ககூடும்.

ஊரில் பென்சிலின் க்கு முன் ஒவ்வாமை ஊசி போடுவது வழமை தானே அப்பத்தா அப்படி நினைத்து இருக்கும் .

நாங்கல்லாம் ஒவ்வாமை ஊசிக்கே ஜன்னலால் பாய்ந்து வேப்ப மரத்தில் ஏறுகிற  கூட்டம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

நாங்கல்லாம் ஒவ்வாமை ஊசிக்கே ஜன்னலால் பாய்ந்து வேப்ப மரத்தில் ஏறுகிற  கூட்டம்

வாலை மட்டும் ஆண்டவன் தங்களுக்கு வைக்கேலை என்று சொல்ல வாறியள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

ஊரில் பென்சிலின் க்கு முன் ஒவ்வாமை ஊசி போடுவது வழமை தானே அப்பத்தா அப்படி நினைத்து இருக்கும் .

நாங்கல்லாம் ஒவ்வாமை ஊசிக்கே ஜன்னலால் பாய்ந்து வேப்ப மரத்தில் ஏறுகிற  கூட்டம் 🤣

பத்து வயதிற்குள் பாடசாலையில் வைத்து போடும் ஊசிக்கு பயத்தில ஒளிச்சிருக்க சக மாணவர்கள் தேடிப்பிடிச்சு இழுத்து வந்து ஊசி போட வைச்சவங்கள். இப்ப பயமில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

ஊசிக்கு பயத்தில ஒளிச்சிருக்க சக மாணவர்கள் தேடிப்பிடிச்சு இழுத்து வந்து ஊசி போட வைச்சவங்கள். இப்ப பயமில்ல.

இப்ப பயம் தெளிஞ்சிட்டுது நல்ல விடயம். அப்போ அவர்கள் மேல் எவ்வளவு கோபமாய் இருந்திருப்பீர்கள்?  அந்த பயத்தைபோக்கிய  சக மாணவர்களுக்குத்தான் நன்றி சொல்லோணும் நீங்கள். இல்லாவிடில் ரதியக்கா மாதிரி இப்பவும் கூச்சல் போட்டிருப்பீங்களோ இல்லையோ? இருந்தாலும் இங்குள்ள சக உறவுகள் தைரியம், ஆலோசனை தந்திருப்பார்கள் பாருங்கோ. நம்ம புலவர் நல்ல மருந்து வைத்திருக்கிறார். பயந்த ஆக்கள் யாரவது இருந்தால் அவரை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 
நாளைந்து நாளுக்கு முதல் நான் வேலை முடித்து சுப்பர் மாக்கெட்டில் சாமான் வேண்டிக் கொண்டு வெளியால் வரும் போது நாளைந்து  பேர் கடைக்கு வெளியால ஏதோ கொடுத்து கொண்டு இருந்தவை...சனம் எல்லாம் அள்ளுப்பட்டு 5, 6 என்டு வேண்டிக்  கொண்டு போய்ச்சு ...நானும் ஏதோ ஓசியில்😂 கிடைக்குது நோட் புக் போல என்று கையை நீட்டினால் 3😉 கிடைச்சுது ....பார்த்தால் கொரோனா கிட்🤣🤣🤣 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2021 at 03:15, satan said:

வாலை மட்டும் ஆண்டவன் தங்களுக்கு வைக்கேலை என்று சொல்ல வாறியள்!

மழைக்காலம் வந்தால் ஒரு குளம் குட்டை விடுவதில்லை காய்ச்சல் வரும் அங்கு காய்ச்சல் என்று போனால் பென்சிலின் தான் இப்போதுள்ளது போல் ஒருமுறை பாவித்து எறியும் ஊசிகள் கிடையாது ஊசியை பாவித்த பின் சுடுதண்ணி கேத்திலில் போட்டு அவிப்பார்கள் மீண்டும் அதையே பாவிப்பார்கள் சிலரின் உடலில் புகுந்து மொட்டையான ஊசியால் குத்துவதால் நோ வந்தால் மாறாது எனும் நம்பிக்கையை வகுப்பு தோழன் எங்கள்  அனைவருக்கும் விதைத்தன் பயன் அந்த மரம் ஏறும்  விளையாட்டு .🤣

பிற்பாடு இந்தியன் ஆமி போட்டு கும்மியதில் ஊசி என்ற பயமே மறந்து போனது அதிசயம் .🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 
நாளைந்து நாளுக்கு முதல் நான் வேலை முடித்து சுப்பர் மாக்கெட்டில் சாமான் வேண்டிக் கொண்டு வெளியால் வரும் போது நாளைந்து  பேர் கடைக்கு வெளியால ஏதோ கொடுத்து கொண்டு இருந்தவை...சனம் எல்லாம் அள்ளுப்பட்டு 5, 6 என்டு வேண்டிக்  கொண்டு போய்ச்சு ...நானும் ஏதோ ஓசியில்😂 கிடைக்குது நோட் புக் போல என்று கையை நீட்டினால் 3😉 கிடைச்சுது ....பார்த்தால் கொரோனா கிட்🤣🤣🤣 
 

கொரனோ  வந்த புதிதில் இதன் விலை £100க்கு மேல் இப்ப இலவசமாக தருகிறார்கள் நல்ல விடயம்தானே . மொபைலில் கொரனோ ட்ரக்கர்  அப்ஸ் நிறுவியிருந்தேன் சூப்பர்மார்க்கெட்டுக்குள் அருகால் யாரும் பாதிக்கப்படடவர்கள்  போனாலும் SMS வருது சுய தனிமைப்படுத்த சொல்லி வந்த கடுப்புக்கு அழித்து  விட்டேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் நோயாளிகள் தான் மருத்துவ அறிவோடு மருத்துவரை சந்திக்கப் போக வேண்டிய நிலை இப்போ. தாதியர் அதை விட மோசம்.

எல்லா மக்களும் தற்போதைய நடைமுறைகளை அறிஞ்சு வைச்சிருக்கினம் என்றில்லை. ஒரு மருத்துவ உத்தியோகத்தர் தான் மக்களை சரியாக வழிநடத்தனும்.. வழிகாட்டனும். அதைவிட்டிட்டு.. இப்படி தவறுகளை சர்வசாதாரணமாக விடுவதும்.. அதன் பின் நோயாளிகளை.. அல்லது பயனாளிகளை கேள்வி கேட்பதும் அல்ல.. மருத்துவ நடைமுறை. 

இப்படி தவறு விடுபவர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மேலும் தவறு நடக்காமல் இருக்க தகுந்த பயிற்சியும் கண்காணிப்பும் அவசியம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

 
நாளைந்து நாளுக்கு முதல் நான் வேலை முடித்து சுப்பர் மாக்கெட்டில் சாமான் வேண்டிக் கொண்டு வெளியால் வரும் போது நாளைந்து  பேர் கடைக்கு வெளியால ஏதோ கொடுத்து கொண்டு இருந்தவை...சனம் எல்லாம் அள்ளுப்பட்டு 5, 6 என்டு வேண்டிக்  கொண்டு போய்ச்சு ...நானும் ஏதோ ஓசியில்😂 கிடைக்குது நோட் புக் போல என்று கையை நீட்டினால் 3😉 கிடைச்சுது ....பார்த்தால் கொரோனா கிட்🤣🤣🤣 
 

ஹா.... ஹா.... அக்கா மாட்டுபட்டாடோய்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/7/2021 at 18:23, நிழலி said:

தாதி தான் தவறு செய்தார் என்றால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஏன் இரண்டாம் தடவை குத்தும் போது மெளனமாக இருந்தார்?

 

13 hours ago, nedukkalapoovan said:

இப்படி தவறு விடுபவர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மேலும் தவறு நடக்காமல் இருக்க தகுந்த பயிற்சியும் கண்காணிப்பும் அவசியம். 

 

ஆனால், விடயம் தெரிந்து, அதை பிழையான விளக்கம் இருந்து இருக்கலாம். பொதுவாக 2 ஊசிகள் என்றே வெளியில் பேசிக் கொள்ளப்படுகிறது. கால இடைவெளி பற்றி சொல்லப்படுவது மிக குறைவு.

ஆனால், இது அந்த பெண்மணியின் தவறு அல்ல.

இரண்டாம் தடவை ஊசி ஏற்றிய தாதியின் தவறும் அல்ல.

அந்த ஊசி போட்ட இடத்தின் ஒழுங்கு முறை மிகவும் தவறாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில்,  குறிப்பிட்ட cabin (மறைப்பிற்குள்) ஒரு பொறுப்பானவர், அவரின் பிரசன்னம் மட்டுமே   இருக்க வேண்டும். 

வேறு ஒருவர் பொறுப்பு எடுத்து வருவது என்றால், cabin (மறைப்பு) வெறுமையானதாக இருக்க வேண்டும். 

ஒழுங்கு படுத்தியவர்களின் தவறு இது, ஒன்றுக்கு மேற்ட்த பொறுப்பானவர்களை, ஒரு  cabin    (மறைப்பு) பொறுப்பாக நியமித்தது.

நான் அவதானித்ததில் இருந்து, இங்கு UK இல் இது (குறிப்பிட்ட நேரத்தில்  - குறிப்பிட்ட cabin - ஒருவர் பொறுப்பு- அவரின் பிரசன்னம் மட்டுமே இருக்கும்) மிகவும் கட்டுப்பாடாகவும், ஒழுங்கவும் கையாளப்படுகிறது. 

இதை சொன்னால், இலங்கையில் உள்ளவர்களை ஒன்றும் தெரியாதவர்கள் என்று குட்டுவதாக  சிலர் இங்கு துள்ளி குதித்து வரக்  கூடும். 

இது சாதாரண common சென்ஸ்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.