Jump to content

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

July 30, 2021

spacer.png

யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30.07.21) யாழ்ப்பானம் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை ஐ நா பெற்றுத்தர வேண்டும் எனவும் நீண்ட காலமாக தமது உறவுகளை தேடிய வண்ணம் வீதிகளிலும் மழை,வெயில்களிலும் போராடி வருவதாகவும்
எனினும் தற்போது உள்ள கொரோனா நிலை காரணமாக தாம் போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும், எனினும் தமது பிள்ளைகள் கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சங்கத்தின் தலைவி பூங்கோதை தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் பெற்றோர் கலந்து கொண்டு தமது பிள்ளைகளை பெற்றுத் தாருங்கள் என கோஷம் எழுப்பினர்.


https://globaltamilnews.net/2021/164024

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்று  தீரும்  இவர்களது கவலைகளும் தேடுதல்களும்????😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்தால் மட்டுமே எமக்கானத் தீர்வை வழங்க முடியும்’- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

IMG 20210730 095223 1 1 'சர்வதேசத்தால் மட்டுமே எமக்கானத் தீர்வை வழங்க முடியும்'- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

 

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துவதனூடாகவே எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கு மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் நீதி வேண்டி அவர்களின் உறவினர்களால் இன்று  வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில் வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன.

இதில் வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் போராட்டத்தை முன்னெடுத்த உறவுகள்,   ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

received 533519981101521 'சர்வதேசத்தால் மட்டுமே எமக்கானத் தீர்வை வழங்க முடியும்'- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

அதில் வவுனியா மாவட்டத்தில் போராட்டத்தை முன்னெடுத்த உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

 “எமக்கு சர்வதேச நீதி கிடைப்பதற்காக நாம் போராடி வருகின்றோம். இன்று பல்வேறு அமைப்புகளையும், கட்சிகளையும் சார்ந்தவர்கள் சர்வதேச நீதி கிடைப்பதற்கு தடையாக இருந்து அரசை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு எம்மை அழைத்து செல்வதற்கான நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை வருடங்களாக வெயிலிலும் , மழையிலும் நாம் போராடி கொண்டிருந்த போது அவர்களது அக்கறை எங்கே போனது.

 எமதுபோராட்டம் வியாபார நோக்கத்திற்கானதல்ல சுயநலத்திற்கானதல்ல. எமது அன்பான உறவுகளின் உயிருடன் தொடர்புபட்டது.

எமக்கான நீதி விரைவில் கிடைக்கும் என்பதற்காகவே தொடர்ச்சியாக போராடுகிறோம். எமக்கு வாழ்வாதாரம்  கிடைக்க வேண்டும் என்பதற்காக இல்லை” என்றனர்.

அதே நேரம் மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

 2009ம் ஆண்டு போர் நடைபெற்ற இறுதிப் பத்து நாட்களில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். சர்வதேச விசாரணை ஒன்று மட்டுமே எமது பிள்ளைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வழிசெய்யும்  என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

ஆனால் இந்த சர்வதேசம் மௌனமாக இருக்கின்றது ஏன் என்று எமக்கு தெரியவில்லை.

இலங்கை அரசை நாங்கள் நம்பவில்லை காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு முடிவு என்ன? ஏனெனில் எமக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறதுது. எமது பிள்ளைகளுக்காக போராடுவதற்கு எமது உடம்பில் தெம்பு இல்லை .நாங்கள் தொலைத்தது   நாங்கள் 10 மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளை.   அந்த பிள்ளைகளுக்காக இன்று நாங்கள் ரோட்டில் நின்று போராடிக் கொண்டிருக்கின்றோம். இதனை அனைத்து சர்வதேச அரசாங்கங்களும் கவனத்தில் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

 

https://www.ilakku.org/we-can-only-get-a-solution-from-the-international-community/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2021 at 21:22, விசுகு said:

என்று  தீரும்  இவர்களது கவலைகளும் தேடுதல்களும்????😭

தீர்வை தேடி, தேடி காணாமலே முடிந்து போனவர்கள் எத்தனையோ பேர். இவர்கள் உயிரோடு இருக்கும்வரை அந்த வலிகளும், தேடுதல்களும் தொடரும்.இவர்களை வைத்து வியாபாரம் செய்வோருமுண்டு என்பதே வேதனையான விடயம்.                          

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.