Jump to content

வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி-பா.உதயன் 

சென்ற இடம் எல்லாம் தமிழன் சிறப்பும் பெருமையும் அடைகிறான். டாக்டராக பொறியியளாளராக சட்டவாளராக பாராளுமன்ற உறுப்பினங்களாக பெரும் வியாபார உரிமையாளராகவெல்லாம். புலம் பெயர் தமிழர்கள் குறுகிய காலத்தில் தமது கடின உழைப்பால் கல்வியால் முன்னேற்றம் அடைந்து வரும் இனமாக பார்கப்படுகிறார்கள். ஒரு காலம் நாகரீகங்களோடு இராட்சியங்களையும்  தேசங்களையும் கட்டி ஆண்டவர்களின் வேர்களில் இருந்து வந்தவர்கள் நாங்கள். இன்று ஒரு நாடு மட்டும் இவனுக்கு இல்லாது இருப்பது தான் பெரும் துன்பம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று இருப்பதனாலோ என்னவோ தெரியவில்லை. 

இம் முறையும் உயர் கல்வி படிப்பதற்கு ஐரோப்பா நாடுகள் பூராகவும் இருந்து தமிழ்ப் பிள்ளைகள் தெரிவாகி இருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆற்றலும் கல்வி அறிவும் கொண்ட தமிழ் சமூகமாக நாம் வளர்ந்து வருவது அதை விட மகிழ்ச்சியும் பெருமையும். அரசியலில் கூட இப்போ படிப் படியாக வளர்ந்து வருகிறார்கள். 

சர்வதேச தொடர்பு (International relations), பொருளாதாரம், (Economics) சமூகவியல், (Sociology) ஐரோப்பிய தத்துவம், (European Philosophy) உலக சரித்திரம், (World History) அரசியல் விஞ்ஞானம், (Political Science) உளவியல் , (psychology) ஊடகத் துறை, (journalism ) மானிடவியல்(Social Anthropology) போன்ற கற்கை நெறிகளிலும் கூடிய கவனம் செலுத்தி அதில் ஆழமான தேடலோடு ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன் போன்ற பெரும் பெரும் உலகக் கூட்டு ஸ்தாபானங்களில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களாக நாம் மாற முயற்சிக்க வேண்டும். இது புலம் பெயர் சமூகத்தில் சாத்தியப்படாத தொன்றல்ல. புதுமை புது உலகம் செய்பவர்களாகவும் மாற வேண்டும். இந்தத் துறைகளை நீங்கள் ஆழமாக கற்றுக் கொள்ளும் பொழுது தான் எதையும் ஆளமாக பேசவும் எழுதவும் விவாதம் செய்யவும் முடியும். எதையும் தேடாமல் விளங்காமல் எதையும் கடக்க முடியாது.

நாங்கள் விழுந்து விட்டோம் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் நாங்கள் மெல்ல எழுந்து வருவோம் என்று சொல்பவர்களாக இருக்க வேண்டும். வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி (Rise and fall are part of life) புதைத்து விட்டோம் என்று தான் நினைத்தார்கள் ஆனால் அவர்கள் புதைத்ததெல்லாம் விதை என்பதை மறந்து விட்டார்கள். ( “They tried to bury us, they didn’t know we were seeds.” ).

புலம் பெயர் தமிழர் வாழும் நோர்வே நாட்டிலும் எம் தமிழ் பிள்ளைகள் கல்வியில் காட்டி வரும் ஊக்கத்தால் இம் முறையும் பலர் உயர் கல்வி படிப்புக்கு தெரிவாகியுள்ளார்கள். இதனால் நோர்வீய சமூகத்தினரால் பெரிதும் மதிக்கத் தக்கவர்களாகவும் போற்றத் தக்கவர்களாகவும் பார்க்கப் படுகின்றோம். அத்தோடு கடினமான உழைப்பாளிகளாகவும் எந்த வித அரச சமூகக் கொடுப்பனவுகளிலும் தங்கி  இல்லாதவர்களாகவும் வாழ்ந்து வருவது பெருமை தான். இதே போலவே பல ஐரோப்பிய நாடுகளிலும் தமிழன் பெருமை சேர்த்து வருகிறான். அந்த நாடுகளின் அரச தலைவர்கள் கூட தமிழர் கலாச்சார விழாக்களில் பங்கு பெறுவதும் தமிழர் பெருமை பற்றி அவர்கள் பேசுவதும் பெருமை தான். 

 நாம் தமிழர் என்ற பெருமையுடனும் எமது உரிமையை வென்றெடுக்க புலம் பெயர் அடுத்த தலை முறையும் உழைக்க வேண்டும். உங்கள் சேவையை செய்யும் அதே வேளை தன்னலனும் சுய நலனும் மட்டுமே கருத்தில் கொள்ளாமல் உங்கள் குரல் உங்கள் மக்களுக்காகவும் ஒலிக்க வேண்டும். கனடிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கனேடிய தமிழர்கள் தமிழின் வளம் வளர்ச்சி கருதி தமிழுக்காக ஒரு சில முக்கிய சட்டங்களை  அப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். உங்கள் அறிவு ஆற்றல் ஒரு பக்கத்தோடு இருக்க உங்கள் முன்னேற்றதிற்காக  பாடுபட்டு சரியான பாதையை காட்டிய  பெற்றோர்கள் நண்பர்ககளுக்கு நன்றியுடையவர்களா  இருங்கள்.

ஒரு காலம் யூதர்கள் வாழ்ந்து வந்த யுடைய(Judea) என்ற நிலப்பரப்பில் ரோமானியப் பேராசின் ஆதிக்கத்தின் பின் தாம் வாழ்ந்த நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட யூத மக்கள் புலம் பெயர்ந்து ஐரோப்பா முழுவதும் வாழ்ந்து வந்தார்கள். அங்கு கூட  அவர்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை எத்தனையோ துன்பங்களையும் அழிவுகளையும் சந்தித்தபோதும் தமது அடையாளம் உரிமைகளை இழக்காமல் ஒன்றாகப் போராடினார்கள். ஒரே சிந்தனை சித்தாந்ததுடன் இறுதியில் ஒரு நாட்டை தமக்காக உருவாக்கினார்கள். 

நான் நோர்வீயன் என்றும், நான் ஆங்கிலேயன், என்றும் நான் கனேடியன், நான் பிரான்ஸின் பிரஜை, என்று அவர் அவர் தம் அடையாளத்தை தேசிய உணர்வை தொலைக்காமல் சொல்லி வருவது போல் நாம் தமிழர் என்ற அடையாளத்தையும் தொலைக்காமல் வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஆற்றலும் அறிவும் ஆளுமையும் கொண்டு இனி வரும் நூற்றாண்டு களையும் உமதாக்கி உங்கள் வரலாறுகளை உங்கள் கதைகளை நீங்கள் எழுத வேண்டும் பேச வேண்டும். எழுத்தும், பேச்சும், கூத்தும், இசையும், கவியும், பாட்டும் இல்லாத உலகம் மூச்சிழந்து நிற்பது போலாகிவிடும். வாழ்ந்து போகு மட்டும் நீ இருந்தாய் என்பதை இந்த உலகு நினைக்க வேண்டும்.

✍️பா.உதயன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக சகோ

நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/7/2021 at 14:21, uthayakumar said:

வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி-பா.உதயன் 

சென்ற இடம் எல்லாம் தமிழன் சிறப்பும் பெருமையும் அடைகிறான். டாக்டராக பொறியியளாளராக சட்டவாளராக பாராளுமன்ற உறுப்பினங்களாக பெரும் வியாபார உரிமையாளராகவெல்லாம். புலம் பெயர் தமிழர்கள் குறுகிய காலத்தில் தமது கடின உழைப்பால் கல்வியால் முன்னேற்றம் அடைந்து வரும் இனமாக பார்கப்படுகிறார்கள். ஒரு காலம் நாகரீகங்களோடு இராட்சியங்களையும்  தேசங்களையும் கட்டி ஆண்டவர்களின் வேர்களில் இருந்து வந்தவர்கள் நாங்கள். இன்று ஒரு நாடு மட்டும் இவனுக்கு இல்லாது இருப்பது தான் பெரும் துன்பம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று இருப்பதனாலோ என்னவோ தெரியவில்லை. 

இம் முறையும் உயர் கல்வி படிப்பதற்கு ஐரோப்பா நாடுகள் பூராகவும் இருந்து தமிழ்ப் பிள்ளைகள் தெரிவாகி இருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆற்றலும் கல்வி அறிவும் கொண்ட தமிழ் சமூகமாக நாம் வளர்ந்து வருவது அதை விட மகிழ்ச்சியும் பெருமையும். அரசியலில் கூட இப்போ படிப் படியாக வளர்ந்து வருகிறார்கள். 

சர்வதேச தொடர்பு (International relations), பொருளாதாரம், (Economics) சமூகவியல், (Sociology) ஐரோப்பிய தத்துவம், (European Philosophy) உலக சரித்திரம், (World History) அரசியல் விஞ்ஞானம், (Political Science) உளவியல் , (psychology) ஊடகத் துறை, (journalism ) மானிடவியல்(Social Anthropology) போன்ற கற்கை நெறிகளிலும் கூடிய கவனம் செலுத்தி அதில் ஆழமான தேடலோடு ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய யூனியன் போன்ற பெரும் பெரும் உலகக் கூட்டு ஸ்தாபானங்களில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களாக நாம் மாற முயற்சிக்க வேண்டும். இது புலம் பெயர் சமூகத்தில் சாத்தியப்படாத தொன்றல்ல. புதுமை புது உலகம் செய்பவர்களாகவும் மாற வேண்டும். இந்தத் துறைகளை நீங்கள் ஆழமாக கற்றுக் கொள்ளும் பொழுது தான் எதையும் ஆளமாக பேசவும் எழுதவும் விவாதம் செய்யவும் முடியும். எதையும் தேடாமல் விளங்காமல் எதையும் கடக்க முடியாது.

நாங்கள் விழுந்து விட்டோம் என்று நினைப்பவர்களுக்கு எல்லாம் நாங்கள் மெல்ல எழுந்து வருவோம் என்று சொல்பவர்களாக இருக்க வேண்டும். வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி (Rise and fall are part of life) புதைத்து விட்டோம் என்று தான் நினைத்தார்கள் ஆனால் அவர்கள் புதைத்ததெல்லாம் விதை என்பதை மறந்து விட்டார்கள். ( “They tried to bury us, they didn’t know we were seeds.” ).

புலம் பெயர் தமிழர் வாழும் நோர்வே நாட்டிலும் எம் தமிழ் பிள்ளைகள் கல்வியில் காட்டி வரும் ஊக்கத்தால் இம் முறையும் பலர் உயர் கல்வி படிப்புக்கு தெரிவாகியுள்ளார்கள். இதனால் நோர்வீய சமூகத்தினரால் பெரிதும் மதிக்கத் தக்கவர்களாகவும் போற்றத் தக்கவர்களாகவும் பார்க்கப் படுகின்றோம். அத்தோடு கடினமான உழைப்பாளிகளாகவும் எந்த வித அரச சமூகக் கொடுப்பனவுகளிலும் தங்கி  இல்லாதவர்களாகவும் வாழ்ந்து வருவது பெருமை தான். இதே போலவே பல ஐரோப்பிய நாடுகளிலும் தமிழன் பெருமை சேர்த்து வருகிறான். அந்த நாடுகளின் அரச தலைவர்கள் கூட தமிழர் கலாச்சார விழாக்களில் பங்கு பெறுவதும் தமிழர் பெருமை பற்றி அவர்கள் பேசுவதும் பெருமை தான். 

 நாம் தமிழர் என்ற பெருமையுடனும் எமது உரிமையை வென்றெடுக்க புலம் பெயர் அடுத்த தலை முறையும் உழைக்க வேண்டும். உங்கள் சேவையை செய்யும் அதே வேளை தன்னலனும் சுய நலனும் மட்டுமே கருத்தில் கொள்ளாமல் உங்கள் குரல் உங்கள் மக்களுக்காகவும் ஒலிக்க வேண்டும். கனடிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கனேடிய தமிழர்கள் தமிழின் வளம் வளர்ச்சி கருதி தமிழுக்காக ஒரு சில முக்கிய சட்டங்களை  அப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். உங்கள் அறிவு ஆற்றல் ஒரு பக்கத்தோடு இருக்க உங்கள் முன்னேற்றதிற்காக  பாடுபட்டு சரியான பாதையை காட்டிய  பெற்றோர்கள் நண்பர்ககளுக்கு நன்றியுடையவர்களா  இருங்கள்.

ஒரு காலம் யூதர்கள் வாழ்ந்து வந்த யுடைய(Judea) என்ற நிலப்பரப்பில் ரோமானியப் பேராசின் ஆதிக்கத்தின் பின் தாம் வாழ்ந்த நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட யூத மக்கள் புலம் பெயர்ந்து ஐரோப்பா முழுவதும் வாழ்ந்து வந்தார்கள். அங்கு கூட  அவர்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை எத்தனையோ துன்பங்களையும் அழிவுகளையும் சந்தித்தபோதும் தமது அடையாளம் உரிமைகளை இழக்காமல் ஒன்றாகப் போராடினார்கள். ஒரே சிந்தனை சித்தாந்ததுடன் இறுதியில் ஒரு நாட்டை தமக்காக உருவாக்கினார்கள். 

நான் நோர்வீயன் என்றும், நான் ஆங்கிலேயன், என்றும் நான் கனேடியன், நான் பிரான்ஸின் பிரஜை, என்று அவர் அவர் தம் அடையாளத்தை தேசிய உணர்வை தொலைக்காமல் சொல்லி வருவது போல் நாம் தமிழர் என்ற அடையாளத்தையும் தொலைக்காமல் வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஆற்றலும் அறிவும் ஆளுமையும் கொண்டு இனி வரும் நூற்றாண்டு களையும் உமதாக்கி உங்கள் வரலாறுகளை உங்கள் கதைகளை நீங்கள் எழுத வேண்டும் பேச வேண்டும். எழுத்தும், பேச்சும், கூத்தும், இசையும், கவியும், பாட்டும் இல்லாத உலகம் மூச்சிழந்து நிற்பது போலாகிவிடும். வாழ்ந்து போகு மட்டும் நீ இருந்தாய் என்பதை இந்த உலகு நினைக்க வேண்டும்.

✍️பா.உதயன் 

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

Link to comment
Share on other sites

On 30/7/2021 at 10:51, uthayakumar said:

நாம் தமிழர் என்ற அடையாளத்தையும் தொலைக்காமல் வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஆற்றலும் அறிவும் ஆளுமையும் கொண்டு இனி வரும் நூற்றாண்டு களையும் உமதாக்கி உங்கள் வரலாறுகளை உங்கள் கதைகளை நீங்கள் எழுத வேண்டும் பேச வேண்டும்.

விரக்தியடையும் மனங்கள் மேலும் விரக்தியடையாமல் உறுதிப்படவைக்கும் ஒரு பதிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்களை நீங்கள் விதைத்துள்ளீர்கள் உதயன்........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

 

13 hours ago, suvy said:

நல்ல கருத்துக்களை நீங்கள் விதைத்துள்ளீர்கள் உதயன்........!  👍

 

13 hours ago, Paanch said:

விரக்தியடையும் மனங்கள் மேலும் விரக்தியடையாமல் உறுதிப்படவைக்கும் ஒரு பதிவு.

 

On 30/7/2021 at 13:31, விசுகு said:

நிச்சயமாக சகோ

நன்றி 

விசுகு,சுவே,புரட்சிகர தமிழன் ,Paanch உங்கள் கருத்துக்கு நன்றிகள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.