Jump to content

டோக்யோ ஒலிம்பிக்: லவ்லீனா போர்ஹோகெய்னின் சார்பட்டா வெற்றி சாத்தியமானது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டோக்யோ ஒலிம்பிக்: லவ்லீனா போர்ஹோகெய்னின் சார்பட்டா வெற்றி சாத்தியமானது எப்படி?

  • வந்தனா
  • பிபிசி இந்தி
4 மணி நேரங்களுக்கு முன்னர்
லவ்லீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

லவ்லீனா

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்தார் குத்துச் சண்டை வீராங்கனை லவ்லீனா போர்ஹோகெய்ன்.

69 கிலோ வெல்டர்வெயிட் பிரிவின் காலிறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனை சென்-நீன் சென்னை அவர் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக்கிற்குச் சென்ற முதல் இந்திய மகளிர் குத்துச்சண்டை வீரர் அவர்.

லவ்லீனா தோற்கடித்த சென், முன்னாள் உலக சாம்பியனாவார். லவ்லீனா இதுவரை பல போட்டிகளில் அவரிடம் தோல்வி அடைந்துள்ளார்.

 

2018ஆம் ஆண்டில், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் லவ்லீனா அவரிடம் தோற்றுப்போனார். இந்தத் தோல்விகளில் இருந்து அவர் இப்போது மீண்டு வந்து வெற்றி பெற்றிருக்கிறார்.

மைக் டைசன், முகமது அலி பாணியை விரும்புவர்

மைக் டைசனின் பாணியை விரும்பும் லவ்லீனாவுக்கு முகமது அலியையும் பிடிக்கும். ஆனால் இது தவிர அவர் தனது சொந்த அடையாளத்தையும் உருவாக்க வேண்டியிருந்தது.

இந்தியாவின் சிறிய கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வரும் பல வீரர்களைப் போலவே, 23 வயதான லவ்லீனாவும், பல நிதி நெருக்கடிகளை தாண்டி ஒலிம்பிக்கிற்கு முன்னேறியுள்ளார்.

அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாரோ முகியா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் அவர். தந்தை ஒரு சிறு வியாபாரி. தாய் ஒரு இல்லத்தரசி. தந்தையின் மாத வருமானம் மிகவும் குறைவாகவே இருந்தது.

லவ்லீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

லவ்லீனா

லவ்லீனாவுக்கு இரண்டு மூத்த சகோதரிகள் உள்ளனர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூறுவதை புறக்கணித்த இந்த இரட்டை சகோதரிகள் கிக் பாக்ஸிங்கைத் தொடங்கினர். பின்னர் லவ்லீனாவும் கிக் பாக்ஸிங்கில் ஈடுபட்டார்.

கிக் பாக்ஸிங்கில் இரட்டை சகோதரிகள் தேசிய சாம்பியனானார்கள். ஆனால் லவ்லீனா தனக்கென ஒரு வித்தியாசமான யோசனையைக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் செய்தித்தாளில் கட்டப்பட்ட இனிப்புகளை அவரது தந்தை கொண்டுவந்தபோது, அதில் முகமது அலியின் புகைப்படத்தை லவ்லீனா பார்த்தார் .தந்தை முகமது அலியின் கதையை மகளுக்கு விவரித்தார். அப்போதிலிருந்து லவ்லீனாவின் குத்துச்சண்டை பயணம் தொடங்கியது.

தொடக்கப்பள்ளியில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேர்வுப்போட்டிகள் நடைபெற்றபோது, பயிற்சியாளர் பதும் போரோவின் 'திறமையை கண்டறியும் பார்வை' லவ்லீனாவின் மீது பட்டது. லவ்லீனாவின் குத்துச்சண்டை பயணம் 2012 ல் தொடங்கியது.

ஐந்து ஆண்டுகளில் அவர் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கத்தை வென்றார்.

இந்தியாவில் வேறு வகையான ஒரு பிரச்னையை லவ்லீனா எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அவரது பிரிவில் மிகக் குறைவான பெண் வீரர்களே உள்ளனர். எனவே அவர் பயிற்சி செய்ய 'சண்டையிடும் கூட்டாளர்கள்' கிடைப்பது கஷ்டமாக இருந்தது. பலமுறை 69 கிலோ பிரிவில் இல்லாதவர்களுடன் பயிற்சி செய்யவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

லவ்லீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

லவ்லீனா

ஒலிம்பிக்கிற்கு முந்தைய சில மாதங்கள் அவருக்கு எளிதானதாக இருக்கவில்லை. மற்ற வீரர்கள் பயிற்சியில் மும்முரமாக இருந்தபோது, லவ்லீனாவின் தாயாருக்கு சிறுநீரக மாற்று அறுவை செய்யவேண்டியிருந்தது. எனவே அவர் குத்துச்சண்டையில் இருந்து விலகி தனது தாயுடன் நேரம் செலவிட வேண்டியிருந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகுதான், லவ்லீனா மீண்டும் பயிற்சிக்குச் சென்றார்.

இதன் பின்னர், கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அவர் தனது அறையிலே நீண்ட காலம் பயிற்சி பெற வேண்டியிருந்தது. ஏனெனில் பயிற்சி ஊழியர்களில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த நேரத்தில் அவர் வீடியோ மூலம் தொடர்ந்து பயிற்சி பெற்றார்.

அவரது பாதையில் பல்வேறு வகையான சிரமங்கள் இருந்தன. ஆனால் லவ்லீனா அவற்றை ஒவ்வொன்றாகக் கடந்துவிட்டார்.

2018ஆம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது லவ்லீனாவின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. இது குறித்து ஒரு சர்ச்சையும் அப்போது இருந்தது.

காமன்வெல்துக்கு தெரிவு செய்யப்பட்ட விவரம் லவ்லீனாவுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை என்றும் அவர் செய்தித்தாள்களிலிருந்து தெரிந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

அவரால் காமன்வெல்த் பதக்கத்தை வெல்ல முடியவில்லை. ஆனால் இங்கிருந்து அவர் தனது விளையாட்டின் நுட்பம் பற்றி மட்டுமல்லாமல், மன மற்றும் உளவியல் மீதும் கவனம் செலுத்தத்தொடங்கினார்.

லவ்லீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

லவ்லீனா

இதன் விளைவை பார்க்க முடிந்தது. 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவர் தொடர்ந்து இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்றார்.

டோக்யோ ஒலிம்பிக்கில் சில நாட்களுக்கு முன்பு, மணிப்பூரின் மீராபாய் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெர்றுத்தந்தார். இப்போது வடகிழக்கின் மற்றொரு வீராங்கனையான லவ்லீனா பதக்கம் பெற்றும் வாய்ப்பிற்கு அருகில் உள்ளார்.

அசாமில் லவ்லீனா பற்றிய பெரும்உற்சாகம் நிலவுகிறது. அசாம் முதல்வரும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களும் இணைந்து லவ்லீனாவுக்கு ஆதரவாக சில நாட்களுக்கு முன்பு ஒரு சைக்கிள் பேரணி நடத்தினர்.

குறைந்தது இரண்டு முறையாவது ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும், அதன்பின்னர் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் ஆகும் விருப்பம் உள்ளது என்று இந்திய விளையாட்டு ஆணையத்தின் வீடியோவில் லவ்லீனா தெரிவித்திருந்தார். அதாவது, குறைந்தது ஒரு ஒலிம்பிக் பயணமும் பதக்கக் கனவும் அவரிடம் மீதமிருந்தது

ஒலிம்பிக்கில், காலிறுதிக்கு முந்தைய போட்டியில் அவர் ஒரு 'பை ' பெற்றார். பின்னர் அவர் ஜெர்மன் வீராங்கனை நதின் அப்டிஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

இப்போது தன்னால் தோற்கடிக்க முடியாமல் இருந்த சீன தைபே வீராங்கனையைத் தோற்கடித்து பதக்கக் கனவை நிறைவேற்றியிருக்கிறார். அவரது அடுத்த இலக்கு தங்கம்தான்.

https://www.bbc.com/tamil/sport-58022412

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.