Jump to content

பச்சை மிளகாய் - ஜூட் பிரகாஷ்


Recommended Posts

பச்சை மிளகாய்
 
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே போல தான் , சில உணவுப் பண்டங்களிற்குப் பச்சை மிளகாய் சேர்க்காவிட்டால் அந்தப் பண்டத்தையும் குப்பையில் தான் போட வேண்டும்.
 
பச்சை மிளகாய் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது CIMA காலத்தில் நண்பனான ரஜீவ் தான்.
 
சொன்னா நம்பமாட்டீங்க, கொஞ்சமாக பச்சை மிளகாய் வாங்கிட்டு வாடா என்று ரஜீவின் அம்மா சொன்னதைக் கேட்டுக் கொண்டு விடு விடுவென கடைக்குப் போன ரஜீவ் வாங்கி வந்தது இரண்டு கிலோ பச்சை மிளகாய்.
 
என்னுடைய வாழ்க்கையில் மட்டும் இல்லை, உங்கள் வாழ்க்கையிலும் வீட்டுத் தேவைக்கு இரண்டு கிலோ பச்சை மிளகாய் வாங்கிக் கொண்டு வந்த ஒரே விண்ணன் இவராகத்தான் இருப்பார்.
 
பச்சை மிளகாயின் அருமை எங்களில் பலருக்கு தெரிவதில்லை. அதனால் பச்சை மிளகாயை எங்கள் சாப்பாடுகளில் நாங்கள் சேர்ப்பது மிகவும் குறைவாக இருக்கிறது.
 
டின் மீன் சம்பலுக்கு பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டும். சிரிலங்காவில் இ்ருந்து வரும் Jack Mackarel டின் மீனை, அப்படியே பச்சையாக கொட்டி, பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் நறு நறுவென நறுக்கிப் போட்டு குழைத்து, பாணோடோ ரொட்டியோடோ சாப்பிட்டால் சும்மா அந்த மாதிரி இருக்கும்.
 
முட்டை பொரியலிற்கும் பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டும். என்னதான் முட்டையோடு இணைந்து வதங்கும் வெங்காயம், முட்டைப் பொரியலைத் தூக்கி தந்தாலும், பச்சை மிளகாய் கடி படாத முட்டைப் பொரியல் கடைசி வரை திறமான முட்டைப் பொரியலாக இருக்கவே முடியாது.
 
பச்சை மிளகாய் எங்கட பண்டைய தமிழர் சமையலில் பயன்படுத்தப்படாத ஒரு திரவியம் என்று அண்ணர் ஒருத்தர் கூறினார்.
 
"அதடாப்பா.. பச்சை மிளகாய் அந்தக் காலத்துல மெக்சிகோவில் இருந்து மொரோக்கோவுக்கால மதுரைக்கு வந்து இங்கால மாந்தோட்டத்தில இறங்கினது” இன்று தென் அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பச்சை மிளகாய் பயணித்த கதையின் வரலாற்றை அண்ணர் சுருக்கமாக கூறினார்.
 
சீனர்களின் பட்டுப் பாதைக்கு (silk road) எதிர்த் திசையில் நடந்து கொண்டிருந்த பண்டைய உலக வர்த்தகப் பாதையைப் பற்றி அறியும் ஆவலையும் பச்சை மிளகாய் கதை சொன்ன அண்ணர் தூண்டி விட்டார்.
பால் சொதிக்கும் பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டும். வெள்ளை வெளீரென்ற சொதியில், பச்சை மிளகாய் மிதக்கும் அழகே தனி அழகுதான்.
 
பச்சை மிளகாய் போட்ட சொதியோடு, இடியப்பத்தைக் குழைத்துச் சாப்பிடும் போது, வாய்க்குள் வெடிக்கும் பச்சை மிளகாய்க் காரம் தரும் கிக்கை அனுபவியாதவன் எல்லாம் மனிசனே இல்லை.
 
பச்சை மிளகாய் கடிபட வேண்டிய இன்னொரு திரவம் மோர். வெக்கை நாட்களில் உடம்பிற்கு இதமாக மட மடவென மோர் குடிக்கும் போது, மோரோடு சேர்த்து வாய்க்குள் விழும் பச்சை மிளகாய்க்கும் தனிப் பெறுமதி இருக்கும்.
மரவெள்ளிக் கிழங்கை அடுப்பில் வேக வைத்து, கொஞ்சமாக தேங்காய்ப் பாலும் விட்டு, கட்டிக் கறியாக வைக்கும் போது, கடைசியில் உஞ்சூண்டு பச்சை மிளகாய் சேர்த்து விட்டால், மரவெள்ளியின் சுவை வேற.. வேற… வேற ரேஞ்சிற்கு போய் விடும்.
பழஞ் சோறு சாப்பிடுவதென்றால் கட்டாயம் கடிப்பதற்கு பச்சை மிளகாய் இருந்தே ஆக வேண்டும். ஒரு கையில் பச்சை மிளகாயை கடித்துக் கொண்டு, மறுகையில பழஞ் சோற்று உருண்டையை எடுத்து சாப்பிட்ட யுத்த கால நினைவுகளை யாராலும் மறக்கவே முடியாது.
 
பச்சை மிளகாய்க்கு மகுடம் சூட்டுவது அரைத்த பச்சை மிளகாய் சம்பல் தான். பச்சை மிளகாய் சம்பல் என்றால் கட்டாயம் அரைத்த சம்பலாகவே இருக்க வேண்டும், இடிக்கிற வேலைக்கு எல்லாம் போகக் கூடாது.
ஊரில் ஆட்டுக்கல்லில் அரைத்த பச்சை மிளகாய் சம்பலின் சுவையே ஒரு தனி சுவை தான். ஆட்டுக்கல் சம்பலின் தனித்துவமான சுவையை எந்த திறமான கிரைன்டரோ மிக்ஸியோ தரவே முடியாது.
சுடச்சுட சுட்ட உளுந்து வடை யோடு அரைத்த பச்சை மிளகாய் சம்பலைத் தொட்டுச் சாப்பிட்டால், சொர்க்கம் பக்கத்தில் வந்து இருந்து இளையராஜா பாட்டு பாடிக் கொண்டிருக்கும்.
 
பச்சை மிளகாய் ஒரு சுவையூட்டி மட்டுமல்ல, அதனுள் நிறைய ஊட்டச்சத்துக்களும் இருப்பதாக கிட்டடியில் எங்கோ வாசித்தேன்.
 
உடல் எடையைக் குறைக்கவல்ல சமாச்சாரங்கள் எல்லாம் இந்த உறைப்பான பச்சை மிளகாய்க்குள் இருப்பது, உடல் எடையை குறைக்க விரும்பும் அன்பர்களிற்கு நிட்சயம் இனிப்பான செய்தியாகவே இருக்கும்.
பச்சை மிளகாய்: உறைப்பு உணவு விரும்பிகளின் உண்மையான உறவுக்காரன்.
 
Jude Prakash

https://www.facebook.com/jude.prakash.92

 


<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fjude.prakash.92%2Fposts%2F10159646412284136&show_text=true&width=500" width="500" height="275" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

 

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் கெனியக்காரனின்  சிறிய சைஸ் பச்சை மிளகாய் இல்லாவிட்டால் சாப்பாடு இறங்காது டொமினிக்கன் பச்சைமிளகாய் என்ற பெயரில் வரும் வஸ்துவை அண்டுவதேயில்லை .

இப்ப இங்கு UK சூப்பர் மார்க்கெட் எல்லாம் ஆப்ரிக்காவில் கெனியா போன்ற இடங்களில்  சொந்த நிலத்தில் விளைவித்த பொருள்கள் சென்ஸ்பரியில் தான் பச்சை மிளகாய் வேறு எங்கும் வாங்குவது கிடையாது பருப்பு பால்கறிக்கு நான்குக்கு மேல் போட்டால் உறைப்பு தாங்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நிழலி said:
பச்சை மிளகாய்
 
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே போல தான் , சில உணவுப் பண்டங்களிற்குப் பச்சை மிளகாய் சேர்க்காவிட்டால் அந்தப் பண்டத்தையும் குப்பையில் தான் போட வேண்டும்.
 
பச்சை மிளகாய் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது CIMA காலத்தில் நண்பனான ரஜீவ் தான்.
 
சொன்னா நம்பமாட்டீங்க, கொஞ்சமாக பச்சை மிளகாய் வாங்கிட்டு வாடா என்று ரஜீவின் அம்மா சொன்னதைக் கேட்டுக் கொண்டு விடு விடுவென கடைக்குப் போன ரஜீவ் வாங்கி வந்தது இரண்டு கிலோ பச்சை மிளகாய்.
 
என்னுடைய வாழ்க்கையில் மட்டும் இல்லை, உங்கள் வாழ்க்கையிலும் வீட்டுத் தேவைக்கு இரண்டு கிலோ பச்சை மிளகாய் வாங்கிக் கொண்டு வந்த ஒரே விண்ணன் இவராகத்தான் இருப்பார்.
 
பச்சை மிளகாயின் அருமை எங்களில் பலருக்கு தெரிவதில்லை. அதனால் பச்சை மிளகாயை எங்கள் சாப்பாடுகளில் நாங்கள் சேர்ப்பது மிகவும் குறைவாக இருக்கிறது.
 
டின் மீன் சம்பலுக்கு பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டும். சிரிலங்காவில் இ்ருந்து வரும் Jack Mackarel டின் மீனை, அப்படியே பச்சையாக கொட்டி, பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் நறு நறுவென நறுக்கிப் போட்டு குழைத்து, பாணோடோ ரொட்டியோடோ சாப்பிட்டால் சும்மா அந்த மாதிரி இருக்கும்.
 
முட்டை பொரியலிற்கும் பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டும். என்னதான் முட்டையோடு இணைந்து வதங்கும் வெங்காயம், முட்டைப் பொரியலைத் தூக்கி தந்தாலும், பச்சை மிளகாய் கடி படாத முட்டைப் பொரியல் கடைசி வரை திறமான முட்டைப் பொரியலாக இருக்கவே முடியாது.
 
பச்சை மிளகாய் எங்கட பண்டைய தமிழர் சமையலில் பயன்படுத்தப்படாத ஒரு திரவியம் என்று அண்ணர் ஒருத்தர் கூறினார்.
 
"அதடாப்பா.. பச்சை மிளகாய் அந்தக் காலத்துல மெக்சிகோவில் இருந்து மொரோக்கோவுக்கால மதுரைக்கு வந்து இங்கால மாந்தோட்டத்தில இறங்கினது” இன்று தென் அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பச்சை மிளகாய் பயணித்த கதையின் வரலாற்றை அண்ணர் சுருக்கமாக கூறினார்.
 
சீனர்களின் பட்டுப் பாதைக்கு (silk road) எதிர்த் திசையில் நடந்து கொண்டிருந்த பண்டைய உலக வர்த்தகப் பாதையைப் பற்றி அறியும் ஆவலையும் பச்சை மிளகாய் கதை சொன்ன அண்ணர் தூண்டி விட்டார்.
பால் சொதிக்கும் பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டும். வெள்ளை வெளீரென்ற சொதியில், பச்சை மிளகாய் மிதக்கும் அழகே தனி அழகுதான்.
 
பச்சை மிளகாய் போட்ட சொதியோடு, இடியப்பத்தைக் குழைத்துச் சாப்பிடும் போது, வாய்க்குள் வெடிக்கும் பச்சை மிளகாய்க் காரம் தரும் கிக்கை அனுபவியாதவன் எல்லாம் மனிசனே இல்லை.
 
பச்சை மிளகாய் கடிபட வேண்டிய இன்னொரு திரவம் மோர். வெக்கை நாட்களில் உடம்பிற்கு இதமாக மட மடவென மோர் குடிக்கும் போது, மோரோடு சேர்த்து வாய்க்குள் விழும் பச்சை மிளகாய்க்கும் தனிப் பெறுமதி இருக்கும்.
மரவெள்ளிக் கிழங்கை அடுப்பில் வேக வைத்து, கொஞ்சமாக தேங்காய்ப் பாலும் விட்டு, கட்டிக் கறியாக வைக்கும் போது, கடைசியில் உஞ்சூண்டு பச்சை மிளகாய் சேர்த்து விட்டால், மரவெள்ளியின் சுவை வேற.. வேற… வேற ரேஞ்சிற்கு போய் விடும்.
பழஞ் சோறு சாப்பிடுவதென்றால் கட்டாயம் கடிப்பதற்கு பச்சை மிளகாய் இருந்தே ஆக வேண்டும். ஒரு கையில் பச்சை மிளகாயை கடித்துக் கொண்டு, மறுகையில பழஞ் சோற்று உருண்டையை எடுத்து சாப்பிட்ட யுத்த கால நினைவுகளை யாராலும் மறக்கவே முடியாது.
 
பச்சை மிளகாய்க்கு மகுடம் சூட்டுவது அரைத்த பச்சை மிளகாய் சம்பல் தான். பச்சை மிளகாய் சம்பல் என்றால் கட்டாயம் அரைத்த சம்பலாகவே இருக்க வேண்டும், இடிக்கிற வேலைக்கு எல்லாம் போகக் கூடாது.
ஊரில் ஆட்டுக்கல்லில் அரைத்த பச்சை மிளகாய் சம்பலின் சுவையே ஒரு தனி சுவை தான். ஆட்டுக்கல் சம்பலின் தனித்துவமான சுவையை எந்த திறமான கிரைன்டரோ மிக்ஸியோ தரவே முடியாது.
சுடச்சுட சுட்ட உளுந்து வடை யோடு அரைத்த பச்சை மிளகாய் சம்பலைத் தொட்டுச் சாப்பிட்டால், சொர்க்கம் பக்கத்தில் வந்து இருந்து இளையராஜா பாட்டு பாடிக் கொண்டிருக்கும்.
 
பச்சை மிளகாய் ஒரு சுவையூட்டி மட்டுமல்ல, அதனுள் நிறைய ஊட்டச்சத்துக்களும் இருப்பதாக கிட்டடியில் எங்கோ வாசித்தேன்.
 
உடல் எடையைக் குறைக்கவல்ல சமாச்சாரங்கள் எல்லாம் இந்த உறைப்பான பச்சை மிளகாய்க்குள் இருப்பது, உடல் எடையை குறைக்க விரும்பும் அன்பர்களிற்கு நிட்சயம் இனிப்பான செய்தியாகவே இருக்கும்.
பச்சை மிளகாய்: உறைப்பு உணவு விரும்பிகளின் உண்மையான உறவுக்காரன்.
 
Jude Prakash

https://www.facebook.com/jude.prakash.92

 


<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fjude.prakash.92%2Fposts%2F10159646412284136&show_text=true&width=500" width="500" height="275" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

 

 
 

இப்பயும் கிலோகணக்கில்தானோ ?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இங்கும் கெனியக்காரனின்  சிறிய சைஸ் பச்சை மிளகாய் இல்லாவிட்டால் சாப்பாடு இறங்காது டொமினிக்கன் பச்சைமிளகாய் என்ற பெயரில் வரும் வஸ்துவை அண்டுவதேயில்லை .

இப்ப இங்கு UK சூப்பர் மார்க்கெட் எல்லாம் ஆப்ரிக்காவில் கெனியா போன்ற இடங்களில்  சொந்த நிலத்தில் விளைவித்த பொருள்கள் சென்ஸ்பரியில் தான் பச்சை மிளகாய் வேறு எங்கும் வாங்குவது கிடையாது பருப்பு பால்கறிக்கு நான்குக்கு மேல் போட்டால் உறைப்பு தாங்க முடியாது. 

பச்சை மிளகாயில், இத்தனை விதமா?
நாங்கள் எல்லாம்... தமிழ் கடைகளில் வாங்கும்,
சிலோன் பச்சை  மிளகாயை.. பருப்பு கறிக்குள்  போட்டும்,
உறைப்பு... காணாது என்று, ஏங்கும் ஆட்கள்.

கெனியாக் காரனின்... பச்சை  மிளகாய்  படம் இருந்தால், இணைத்து விடுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

இங்கும் கெனியக்காரனின்  சிறிய சைஸ் பச்சை மிளகாய் இல்லாவிட்டால் சாப்பாடு இறங்காது

இதென்ன புதுக்கதையாய் கிடக்கு.....கெனியன் பச்சை மிளகாய்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

கெனியாக் காரனின்... பச்சை  மிளகாய்  படம் இருந்தால், இணைத்து விடுங்களேன்.

Sainsbury&#39;s Finger Chillies 80g | Sainsbury&#39;s

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

Sainsbury&#39;s Finger Chillies 80g | Sainsbury&#39;s

பட இணைப்பிற்கு.... நன்றி பெருமாள். :)
இங்கு... இப்படியான படங்களைப் போட்டு,
மிகக் கடுமையான உறைப்பு... என்று போட்டிருப்பார்கள்.
அதை.. வாங்கி, கறிக்குள்  போட்டால்... இனிக்குது. :grin:

ஒவ்வொரு நாட்டிலும்,  
சமைக்கிற தண்ணியிலும்... வித்தியாசம் இருக்கும் போலை கிடக்குது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

பட இணைப்பிற்கு.... நன்றி பெருமாள். :)
இங்கு... இப்படியான படங்களைப் போட்டு,
மிகக் கடுமையான உறைப்பு... என்று போட்டிருப்பார்கள்.
அதை.. வாங்கி, கறிக்குள்  போட்டால்... இனிக்குது. :grin:

ஒவ்வொரு நாட்டிலும்,  
சமைக்கிற தண்ணியிலும்... வித்தியாசம் இருக்கும் போலை கிடக்குது. 🤣

Sainsbury&#39;s Finger Chillies 80g | Sainsbury&#39;s

உது எங்கடை ஊர் கொச்சிக்காய் சிறித்தம்பி...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

பட இணைப்பிற்கு.... நன்றி பெருமாள். :)
இங்கு... இப்படியான படங்களைப் போட்டு,
மிகக் கடுமையான உறைப்பு... என்று போட்டிருப்பார்கள்.
அதை.. வாங்கி, கறிக்குள்  போட்டால்... இனிக்குது. :grin:

ஒவ்வொரு நாட்டிலும்,  
சமைக்கிற தண்ணியிலும்... வித்தியாசம் இருக்கும் போலை கிடக்குது. 🤣

இங்கிலாந்தில் ஆசியர்  அதிகம் அதனால் சந்தையும் பெரியது பாரிய சூப்பர்மார்கெட்களில் நம்ம ஊர் மிளகாய்த்தூள் தொடக்கம் மைசூர் பருப்பு வரை அடுக்கி வைத்து இருப்பார்கள் அதே போல் நம்ம ஊர் வட்டகத்தரி முதல் கொண்டு பச்சை மிளகாய் வரை தங்களின் சொந்த பார்ம்களில் விளைவித்து இங்கு கொண்டுவந்து விற்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

Sainsbury&#39;s Finger Chillies 80g | Sainsbury&#39;s

உது எங்கடை ஊர் கொச்சிக்காய் சிறித்தம்பி...:grin:

போனவருடம்  கலர் மிளகாயே  இருக்கு என்று கொரனோ  நேரம் தலையில் கட்டி விட்டவர்களும் உண்டு .

சாமி உங்கள் அளவுக்கு அனுபவசாலி அல்ல நீங்க எல்லாம் மிளகாய் தோட்டத்தில் டிகிரி முடித்தவர்கள் கொசுறு இலங்கை விற்பனை அம்பாந்தோட்டைக்கு முதலே உள்ளது இங்குள்ள பேமஸ் மிளகாய் தூள் க்கு உரிய மல்லி கூட பல்கெரியாவில் இருந்துதான் போகுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

Jude Prakash

அட இந்த மனுசனும் எழுதுறாரோ, அது சரி அந்த ரெண்டு கிலோ வெங்காயம்  சாரி மிளகாய் வாங்கியது.எங்கட ரசீவனோ 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லா சப்பலில் எல்லாவிதமான ப. மிளகாயும் வாங்கலாம்......எனக்கும் எந்த உணவோடும் ப . மிளகாய் வேணும்.......!

 

http://cdn.shopify.com/s/files/1/1270/2601/products/Glen_Seeds_Heirloom_Chillies_-_Jamaican_Red_1_grande.jpg?v=1481104470

மேலும் இந்த ஆபிரிக்கன் மிளகாய் சரியான உறைப்பு......இதில் இரண்டு மிளகாயோடு உள்ளி 5 பல்லு, 3 மே . கரண்டி ஒலிவ் ஒயில் ,புளி ஒரு சிறு நெல்லிக்காய் அளவு (கரைக்கக் கூடாது), அளவான உப்பும்  சேர்த்து மைய அரைத்து ஒரு சிறிய போத்தலில் வைத்து இருக்கிறேன். தேவையான போது ஒரு அரை தே .கரண்டி  எடுத்து தொட்டுக்கொண்டு சாப்பிட காரம் சிரசில் அடிக்கும்.....!

இந்த மிளகாய் வெட்டும்போது கவனம் நாலு நாகம் கொத்தினதுபோல் கை எரியும் நாள் முழுதும்........!  😎

Jamaican Red Scotch Bonnet - Capsicum Chinense - Chilli Pepper - 10 Se –  Seeds for Africa

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

இந்த ஆபிரிக்கன் மிளகாய் சரியான உறைப்பு......

இந்த மிளகாய் வெட்டும்போது கவனம் நாலு நாகம் கொத்தினதுபோல் கை எரியும் நாள் முழுதும்........!  😎

Jamaican Red Scotch Bonnet - Capsicum Chinense - Chilli Pepper - 10 Se –  Seeds for Africa

இதனை ஜமேக்கன் மிளகாய்- jamaican chilli என்பார்கள்.இதை அரைத்தாலே மூக்கு வாயெல்லாம் எமக்கு மட்டுமல்ல பக்கத்தில் நிற்பவர்களுகும் ஒழுகும்.

உலகத்திலேயே அதிக உறைப்பு தின்பவர்கள் நாங்கள்தான் என்று ஒருகாலம் நினைத்து கொண்டிருந்தேன். ஜமேக்கன் காரர் மேலே சுவியண்ணா சொன்ன மிளகாயுடன் தாய்லாந்து பச்சை மிளகாயையும் கலந்து..

x8400000120-jpg-pagespeed-ic-vk3h-CFFj9-

 

இடித்து சம்பலாக்கி அதில் உப்பு மிளகு எல்லாம் சேர்த்து  சோஸ் ஒன்று செய்வார்கள் , பொதுவாக தாய்லாந்து மிளகாயே உறைப்பு எண்டால் உறைப்பு உங்கவீட்டு எங்க வீட்டு உறைப்பு இல்ல தாங்க முடியாது,

அதை சிக்கன் விங்சுடன் தொட்டுக்கொள்வது மட்டுமல்லாமல் அள்ளி அள்ளி வேறு தின்பார்கள், ரெஸ்ரோரண்டில் வேலை பார்த்தபோது கண்ணால் கண்ட அனுபவம், அந்த சோசுக்கு பெயரே சூசைட் சோஸ்.suicide sauce.

நம்மில் யாரும் அதில் ஒரு கரண்டி சாப்பிட்டாலே எத்தனை வயசு காரராக இருந்தாலும் ஒரு கிழமைக்கு டயப்பர்-diappers கட்டிக்கொண்டுதான் அலையவேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

இதனை ஜமேக்கன் மிளகாய்- jamaican chilli என்பார்கள்.இதை அரைத்தாலே மூக்கு வாயெல்லாம் எமக்கு மட்டுமல்ல பக்கத்தில் நிற்பவர்களுகும் ஒழுகும்.

உலகத்திலேயே அதிக உறைப்பு தின்பவர்கள் நாங்கள்தான் என்று ஒருகாலம் நினைத்து கொண்டிருந்தேன். ஜமேக்கன் காரர் மேலே சுவியண்ணா சொன்ன மிளகாயுடன் தாய்லாந்து பச்சை மிளகாயையும் கலந்து..

x8400000120-jpg-pagespeed-ic-vk3h-CFFj9-

 

இடித்து சம்பலாக்கி அதில் உப்பு மிளகு எல்லாம் சேர்த்து  சோஸ் ஒன்று செய்வார்கள் , பொதுவாக தாய்லாந்து மிளகாயே உறைப்பு எண்டால் உறைப்பு உங்கவீட்டு எங்க வீட்டு உறைப்பு இல்ல தாங்க முடியாது,

அதை சிக்கன் விங்சுடன் தொட்டுக்கொள்வது மட்டுமல்லாமல் அள்ளி அள்ளி வேறு தின்பார்கள், ரெஸ்ரோரண்டில் வேலை பார்த்தபோது கண்ணால் கண்ட அனுபவம், அந்த சோசுக்கு பெயரே சூசைட் சோஸ்.suicide sauce.

நம்மில் யாரும் அதில் ஒரு கரண்டி சாப்பிட்டாலே எத்தனை வயசு காரராக இருந்தாலும் ஒரு கிழமைக்கு டயப்பர்-diappers கட்டிக்கொண்டுதான் அலையவேண்டி வரும்.

 

உண்மைதான்

தற்பொழுது எமது இளைய தலைமுறையிடம்  இதை  சாப்பிட்டு காட்டுவதனூடாக 

எங்களைவிட தாங்கள்  உறைப்பை  சாப்பிடுவதாக  காட்டமுனைகிறார்கள்

தாய்லாந்து  உணவகத்தில்  இவ்வாறு ஒருவர் அள்ளி  வாயில்  போட்டு சாப்பிட்டு காட்டியபோது

நான்  வரல  இந்த  வயித்துவெடி  விளையாட்டுக்கு என்று விட்டேன்🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய் இல்லாத கறிகள், சம்பல் எல்லாம் குப்பைக்குள்தான் போடவேண்டும்.

மிளகாய் அனுபவங்கள் சில இருக்கு.

சின்ன வயதில் எங்கள் மிளகாய்த் தோட்டத்திற்குள்தான் ஒளித்துவிளையாடுவது. பொயிலைத் தோட்டங்களில் ஒளித்துவிளையாடி இலை ஒடிந்து, முதுகு ஒடிய அடிவாங்கியதால் அந்தப் பக்கம் போவதில்லை. மிளகாய்ச் செடியில் இருக்கும் பச்சை மிளகாய் கடித்துச் சாப்பிட்டுப் பழகிவிட்டது. அது “பாலுடன்” இருப்பதால் அதிகம் உறைக்காது.

12 hours ago, நிழலி said:

கொஞ்சமாக பச்சை மிளகாய் வாங்கிட்டு வாடா என்று ரஜீவின் அம்மா சொன்னதைக் கேட்டுக் கொண்டு விடு விடுவென கடைக்குப் போன ரஜீவ் வாங்கி வந்தது இரண்டு கிலோ பச்சை மிளகாய்.

என்னுடைய அனுபவம் இதுக்கு எதிர்.  ஒருநாள் அம்மா மத்தியானச் சமையலில் இருந்தபோது பச்சை மிளகாய் இல்லை என்று என்னை தோட்டத்திற்கு ஓடிப்போய் நாலு பச்சை மிளகாய் ஆய்ந்து வா என்று சொன்னார். நானும் ஓடிப்போய் ஆய்ந்து வந்தேன். எண்ணி நாலு மிளகாய் மட்டும்தான்.😃  சொன்னதைச் செம்மையாகச் செய்ததற்கு பாராட்டு கிடைக்கும் என்று பார்த்தால் திட்டுத்தான் கிடைத்தது!☹️

-

நாங்கள் மிளகாய் சாப்பிடுவதில் சூரர் என்று வேலைத்தளத்தில் தெரியும். என்னுடன் வேலை செய்த ஐரிஸ்காரன் தனது மாமியார் ரினிடாட் நாகா சில்லி வீட்டில் வளர்க்கின்றார், வேண்டுமா என்று கேட்டான். நானும் சரி ரினிடாட் நாகாவையும் ரேஸ்ற் பண்ணிப் பார்ப்போம், கொண்டுவா என்றேன்.  மத்தியானம் லஞ்ச்சுக்கு போனவன் பத்து மிளகாய் கொண்டுவந்தான். நானும் எனது சூரத்தனத்தைக் காட்ட ஒன்றை கடித்து விழுங்காமல் வாயில் கொஞ்ச நேரம் வைத்திருந்தேன். சில நிமிடங்களில் இருதயம் வேகமாக அடித்து, கண்ணில் இருந்து கண்ணீர் வரத்தொடங்கியது. இன்னும் நின்றால் மானம் போய்விடும் என்று கார்ப் பார்க்கிற்கு போனேன். ஆனால் எச்சில் கூட அடுத்த அரை மணிநேரம் விழுங்கமுடியவில்லை. வாய், நாக்கு, தொண்டை எல்லாம் நெருப்பாக எரிந்தது. ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர்தான் ஓரளவு நிலைகொள்ளக்கூடியதாக இருந்தது. அந்த நாகா சில்லி (சுவி ஐயா சொன்னமாதிரி அவை கொத்தும் நாகங்கள்தான்) சமைக்கும்போது பாதி பாதியகாத்தான் பல நாட்கள் பாவித்தேன்!

spacer.png

-

வெஸ்ற் இண்டியன் சில்லி நம்ம கறிகளுக்கு ஒத்துவராது என்பதுதான் எனது பார்வை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூத் ஜோலோகியா: உணவாக சமைத்து சாப்பிட்டால் 'பேய் பிடித்ததை போல' உணர வைக்கும் இந்திய மிளகாய்

  • சரோஜ் சிங்
  • பிபிசி இந்தி செய்தியாளர்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
மிளகாய் சாபிடுவது போன்ற மாதிரிப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த சம்பவம் 2016 அக்டோபர் மாதம், அதாவது சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது.

அமெரிக்காவில் 47 வயதான ஒருவர் பர்கர் சாப்பிட்டார். பர்கரின் சிறப்பு என்னவென்றால், அதில் 'பூத் ஜோலோகியா' என்கிற மிளகாயின் அரவை பூசப்பட்டிருந்தது.

அவர் பர்கரை சாப்பிட்டவுடன், வயிறு மற்றும் மார்பில் ஏற்பட்ட வலியால் தரையில் உருள ஆரம்பித்தார். அவருக்கு வாந்தியும் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உணவுக் குழாயில் ஓர் அங்குலம் அளவுக்கு துளை இருப்பதை மருத்துவர்கள் கண்டனர்.

இந்த சம்பவம் 'தி ஜர்னல் ஆஃப் எமஜென்சி மெடிசின்' என்ற அவசர சிகிச்சை தொடர்பான மருத்துவ சஞ்சிகையிலும், மற்ற ஊடகங்களிலும் வெளியானது.

'பூத் ஜோலோகியா' என்பது ஒரு வகையான மிளகாய். இது வடகிழக்கு இந்தியாவில் விளைகிறது.

இது கிங் மிர்ச்சா (மிளகாய்), ராஜா மிர்ச்சா, நாகா மிர்ச்சா, கோஸ்ட் பெப்பர் (Ghost Pepper) என பல பெயர்களால் அறியப்படுகிறது.

காரத்தில் இதற்கு நிகர் வேறு எதுவுமே இல்லை என்பதால், இது கிங் மிர்ச்சா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதுதான் மிளகாயின் ராஜா.

இப்போது நாகாலாந்தில் இது அதிக அளவில் பயிரிடப்படுவதால் நாகா மிர்ச்சா என்றும் அழைக்கப்படுகிறது.

பூத் ஜோலோகியா

பட மூலாதாரம்,TWITTER/PIYUSH GOYAL

கோஸ்ட் பெப்பர் அல்லது பூத் ஜோலோகியா என்கிற பெயர் எதற்காக அளிக்கப்பட்டுள்ளது என்றால், அதை சாப்பிட்ட பிறகு, உங்கள் உடலில் பேய் நுழைந்தது போல் கிறுகிறுத்துப்போகுமாம். ஆகையால்தான் இந்த பெயராம்.

இந்த மிளகாயின் பெயர்கள் தொடர்பாக உள்ளூர் மக்கள் சொன்ன விவரங்கள் இவை.

ஆனால் 47 வயதான அமெரிக்கருக்கு என்ன நேர்ந்தது என்பதிலிருந்து , இந்த மிளகாயின் காரத்தன்மைக்கு நிகரில்லை என்று நீங்கள் யூகித்திருக்க முடியும்.

உலகின் மிகவும் காரமான ஐந்து மிளகாய்களில் பூத் ஜோலோகியாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவத்தை இப்போது ஏன் குறிப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

முதன்முறையாக, நாகாலாந்தில் இருந்து (பறிக்கப்பட்ட நிலையில்) இந்த மிளகாய் இப்போது லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் முதல் தொகுப்பு புதன்கிழமை இந்திய அரசால் அனுப்பப்பட்டது. வெளிநாடுகளுக்கு இது தூள் வடிவில் மட்டுமே முன்பு அனுப்பப்பட்டது.

இந்தத் தகவலை பிரதமர் நரேந்திர மோதியே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்ந்துகொண்ட பிரதமர், 'பூத் ஜோலோகியா'வை ருசித்தவர்களுக்கு மட்டுமே அதன் காரம் பற்றித்தெரியும்.'என்று குறிப்பிட்டுள்ளார்.

பூத் ஜோலோகியாவின் வரலாறு

பூத் ஜோலோகியா

பட மூலாதாரம்,TWITTER/PIYUSH GOYAL

போர்ச்சுகீசியர்கள் தென் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு மிளகாய் கொண்டு வந்ததாக பொதுவாக நம்பப்படுகிறது.

ஆனால் அவர்கள் வருகைக்கு முன்பிருந்தே நாகாலாந்தில் இந்த மிளகாய் இருப்பதால், அது கட்டுக்கதை என நிரூபணமாகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் புஷ்பேஷ் பந்த், உணவு குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

"போர்ச்சுகீசியர்கள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1498இல் இந்தியாவில் கேரளாவை அடைந்து பின்னர் கோவாவில் குடியேறினர்.

பின்னர் இந்தியாவில் அவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அந்தப் பகுதிகளுக்கெல்லாம் மிளகாய் பரவியது. ஆனால் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை சென்றடைவது அந்த நேரத்தில் மிகவும் கடினமாக ஒன்றாக இருந்தது. ஆகவே அவர்கள் இந்த மிளகாயுடன் அங்கு சென்றிருக்க வாய்ப்பில்லை."

"போர்ச்சுகீசியர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவில் காட்டுமிளகாய் அதாவது ராஜா மிர்ச்சா வளர்ந்திருக்கும் என தாவரவியல் வல்லுநர்கள் இன்று ஒருமனதாக தெரிவிக்கின்றனர்," என பிபிசியுடனான உரையாடலில் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், 'பூத் ஜோலோகியா' அதாவது 'கிங் மிர்ச்சா' இந்தியாவின் பழமையான மிளகாய் இனமாகும். ஆனால் இது குறித்து பழைய வரலாற்று புத்தகங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதற்குப் பின்னால் உள்ள காரணத்தை விளக்கும் புஷ்பேஷ் பந்த், "வடகிழக்கு மாநிலங்களுடனான இந்தியாவின் தொடர்பு முன்பு மிகவும் குறைவாக இருந்தது.

நாகாலாந்து அல்லது வேறு எந்த வடகிழக்கு மாநிலங்களின் நாட்டுப்புற பாடல்களிலும் இது குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் அது அங்குள்ள மக்களின் வாழ்வில் மிகவும் பொதுவான ஒன்றாக இருந்தது," என சுட்டிக்காட்டினார்.

மிளகாயின் புவியியல்

மிளகாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிளகாயை ஆங்கிலத்தில் 'சில்லி' என்று அழைக்கிறார்கள், இது ஒரு மெக்சிக மொழிச் சொல், அதாவது இதன் பொருள் 'பெரிய கேப்சிகம்.'

மிளகாயின் தாவரப்பெயர் 'கேப்சிகம் ஏனம்' (capsicum annuum). பச்சை மிளகாயில், வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவை போதுமான அளவில் காணப்படுகின்றன.

இது தவிர, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் இதில் ஏராளமாக உள்ளன. மிளகாயின் வீரியத்திற்கு, அதில் காணப்படும் அல்கலாய்டு ரசாயனமான 'கேப்சைசின்' (ஒலியோரெசின்) தான் காரணம். மிளகாய் பழுக்கும்போது 'கேப்சாண்டின்' காரணமாக சிவப்பு நிறம் ஏற்படுகிறது.

இந்தியா உலகின் மிகப்பெரிய மிளகாய் உற்பத்தியாளர் மட்டுமல்ல, மிகப்பெரிய நுகர்வோர் நாடுகளில் ஒன்றாகும்.

இந்தியாவில் மிளகாய் பல மாநிலங்களில் ஆண்டு முழுவதும் வளர்க்கப்படுகிறது. இதற்காக, 20 முதல் 30 டிகிரி வெப்பநிலை தேவைப்படுகிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வகை மிளகாய்கள் மிகவும் பிரபலமானவை.

இப்போது இந்தப்பட்டியலில் நாகாலாந்து மற்றும் அசாமின் பெயரும் இணைந்துள்ளன.

'ராஜா மிர்ச்சா' நான்கு முதல் ஐந்து அங்குல நீளம் கொண்டது. பச்சை தவிர, சிவப்பு மற்றும் சாக்லேட் நிறத்திலும் உள்ளன. அவை உணவில் மசாலாவாகவும், ஊறுகாய்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மிளகாய் போட்டு சமைக்கப்படும் அசைவ உணவு, மிகவும் சுவையானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது வடகிழக்கு பிராந்தியங்களில் 'சாஸ்கள் ' தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய சந்தையில் அதன் விலை கிலோவுக்கு சுமார் 300 ரூபாய் ஆகும். ஆனால் லண்டன் சந்தையில் இது கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்படும்.

இது தற்போது நாகாலாந்து மற்றும் அசாமில் சிறிய அளவில் வளர்க்கப்படுகிறது, ஆனால் ஏற்றுமதி தொடங்கியதும் உள்ளூர் மக்கள் அதை அதிக அளவில் வளர்ப்பார்கள் என வேளாண் அமைச்சக அதிகாரிகள் கருதுகின்றனர். இதன் காரணமாக, இந்திய அரசு அதன் ஏற்றுமதியில் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த மிளகாய் எவ்வளவு காரமானது?

மிளகாய் சாப்பிடும் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிளகாயின் காரத்தன்மையை அளக்க ஒரு அளவுகோல் உள்ளது. இந்த அளவு, ஸ்கோவில் ஹீட் யூனிட் (SHU) என்று அழைக்கப்படுகிறது. இந்த அளவீடு, அமெரிக்க மருந்தாளர் வில்பர் ஸ்கோவிலின் பெயரால் அறியப்படுகிறது.

மிளகாயில் உள்ள 'கேப்சைசின்' அடிப்படையில், மிளகாய் எவ்வளவு காரமாக இருக்கிறது என்று முடிவு செய்யப்படுகிறது.

இந்த யூனிட் அளவீட்டில் ராஜா மிர்ச்சா 1 மில்லியன் SHU யூனிட் ஆகும். உலகின் மிக அதிக காரமான மிளகாயின் SHU யூனிட் 2 மில்லியனுக்கும் அதிகம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகெங்கிலும் உள்ள மிகவும் காரமான ஐந்து மிளகாய்களில் 'ராஜா மிர்ச்சா' ஐந்தாவது இடத்தில் உள்ளது.

மிளகாயின் காரத்தில் முதல் இடத்தில் ப்யூர் கேப்சைசின் உள்ளது. இரண்டாவது இடத்தில் - ஸ்டாண்டர்ட் பெப்பர் ஸ்ப்ரே, மூன்றாவது இடத்தில் கரோலினா ரீப்பர் மற்றும் நான்காவது இடத்தில் டிரினிடாட் மோருகா ஸ்கார்பியனும் உள்ளன என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் பிபிசிக்கு அளித்த தகவல் தெரிவிக்கிறது.

இந்திய வீடுகளில் பொதுவாக எத்தனை சிவப்பு மிளகாய் பயன்படுத்தப்படுகிறதோ அந்த அளவிற்கு ராஜா மிர்ச்சா அல்லது மேலே குறிப்பிட்டுள்ள வேறு எந்த மிளகாயையும் பயன்படுத்த முடியாது. இந்த மிளகாயின் ஒரு சிறிய துண்டே உணவில் சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக உணவின் சுவை மற்றும் நறுமணம் அதிகரிக்கும் என்று. புஷ்பேஷ் பந்த் குறிப்பிட்டார்.

மிளகாய் மீது உலக மக்களின் பிரியம்

இதுவரை நீங்கள் ராஜா மிளகாயின் கதையை தெரிந்துகொண்டீர்கள். பார்க்கப்போனால், உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் மிளகாயை விரும்புகிறார்கள். இந்திய உணவில் மஞ்சள் மற்றும் மிளகாய் ஆகிய இரண்டுமே பெரும்பாலான காய்கறிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் ஒரு நபர் ஆண்டில் சராசரியாக எத்தனை மிளகாய் சாப்பிடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மிளகாய் சாப்பிடும் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மதிப்பீட்டின்படி, 2018 ஆம் ஆண்டில், ஒவ்வொரு நபரும் சராசரியாக ஐந்து கிலோ மிளகாய் சாப்பிடுகிறார்கள். இந்த புள்ளிவிவரங்கள் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான இன்டெக்ஸ் பாக்ஸிலிருந்து வந்தவை.

சில நாடுகளில் மிளகாய் மேலும் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. துருக்கியில், ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 86.5 கிராம் மிளகாய் உட்கொள்கிறார் அதாவது உலகிலேயே அதிக அளவு மிளகாய் இங்கு உண்ணப்படுகிறது.

மெக்சிகோ அதன் காரமான உணவுக்கு பிரபலமானது என்றாலும், மெக்சிகோவை விட துருக்கியில் அதிக மிளகாய் சாப்பிடப்படுகிறது.

மெக்சிகோவில் ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 50.95 கிராம் மிளகாய் சாப்பிடுகிறார்.

இவை தவிர, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகள் மிளகாயைப் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ளன.

மறுபுறம், ஸ்வீடன், ஃபின்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் மிளகாயின் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளன.

https://www.bbc.com/tamil/india-58031847

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இங்கு லா சப்பலில் எல்லாவிதமான ப. மிளகாயும் வாங்கலாம்......எனக்கும் எந்த உணவோடும் ப . மிளகாய் வேணும்.......!

 

http://cdn.shopify.com/s/files/1/1270/2601/products/Glen_Seeds_Heirloom_Chillies_-_Jamaican_Red_1_grande.jpg?v=1481104470

மேலும் இந்த ஆபிரிக்கன் மிளகாய் சரியான உறைப்பு......இதில் இரண்டு மிளகாயோடு உள்ளி 5 பல்லு, 3 மே . கரண்டி ஒலிவ் ஒயில் ,புளி ஒரு சிறு நெல்லிக்காய் அளவு (கரைக்கக் கூடாது), அளவான உப்பும்  சேர்த்து மைய அரைத்து ஒரு சிறிய போத்தலில் வைத்து இருக்கிறேன். தேவையான போது ஒரு அரை தே .கரண்டி  எடுத்து தொட்டுக்கொண்டு சாப்பிட காரம் சிரசில் அடிக்கும்.....!

இந்த மிளகாய் வெட்டும்போது கவனம் நாலு நாகம் கொத்தினதுபோல் கை எரியும் நாள் முழுதும்........!  😎

Jamaican Red Scotch Bonnet - Capsicum Chinense - Chilli Pepper - 10 Se –  Seeds for Africa

நானும் ஒரு வெள்ளைக்கு நாங்கள் எல்லாம் உறைப்பில்லாமல் சாப்பிடவே மாட்டமென்று கதைவிட, அவன் தன்ர வீட்டில வளர்த்த இந்த மிளகாயை கொண்டு வந்து தந்து இதை சுவைத்து பார் என்றான், நானும் வாயில ஒரு கடிதான், கண்ணால் கண்ணீர் ஆறா ஓட தொடங்கிவிட்டது, அவன் சிரித்த சிரிப்புக்கு அளவேயில்லை😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் முன்னம் நாங்கள்தான் உறைப்பு சாப்பிடிறதுல சூரர் எண்டுதான் விறைப்பா இருந்தனான்.

ஒருநாள் ஒரு டிவி நிகழ்சியில் உலகின் உறைப்பான உணவுகளை டேஸ்ட் பண்ணும் நிகழ்ச்சி பார்த்ததில் இரு என்ர கர்வம் எல்லாம் கரைஞ்சு போச்சு🤣.

ஆனால் இங்க பலர் நேரடியாவே அனுபவப்பட்டு இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

. நானும் எனது சூரத்தனத்தைக் காட்ட ஒன்றை கடித்து விழுங்காமல் வாயில் கொஞ்ச நேரம் வைத்திருந்தேன். சில நிமிடங்களில் இருதயம் வேகமாக அடித்து, கண்ணில் இருந்து கண்ணீர் வரத்தொடங்கியது. இன்னும் நின்றால் மானம் போய்விடும் என்று கார்ப் பார்க்கிற்கு போனேன். ஆனால் எச்சில் கூட அடுத்த அரை மணிநேரம் விழுங்கமுடியவில்லை. வாய், நாக்கு, தொண்டை எல்லாம் நெருப்பாக எரிந்தது. ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர்தான் ஓரளவு நிலைகொள்ளக்கூடியதாக இருந்தது. அந்த நாகா சில்லி (சுவி ஐயா சொன்னமாதிரி அவை கொத்தும் நாகங்கள்தான்) சமைக்கும்போது பாதி பாதியகாத்தான் பல நாட்கள் பாவித்தேன்!

spacer.png

-

வெஸ்ற் இண்டியன் சில்லி நம்ம கறிகளுக்கு ஒத்துவராது என்பதுதான் எனது பார்வை.

 

முத்தா போகும் எரிந்திருக்குமே.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் நான் சொல்லி இருக்கிறேன் அரை தே .கரண்டி எடுத்து சும்மா தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்........அதுவும் நூடில்ஸ், அவித்த மரவள்ளி கிழங்கு  மற்றும் குஷ் குஷ் சுடன் சாப்பிட சூப்பராய் இருக்கும்.......!   😎

நானும் ஒரு குரூப்பில் ஆபிரிக்கனுடன் வேலை செய்தபோதுதான் இதை சாப்பிடவும் மற்றும் செய்முறையையும் அறிந்து கொண்டேன்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு காலத்திலை உறைப்பு சாப்பிடுறதிலை விண்ணன். ஆனால் இப்ப ஏலாது.மனம் அங்கலாய்த்தாலும் உடம்பு ஓம் படுதில்லை. 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோர் மிளகாய் வத்தல்.

இங்கு  எனக்குத் தெரிந்த தமிழர் ஒருவர்...
மிளகாய் பொரிக்க  முதல், அதனை மிளாகாய்த் தூளில்... 
போட்டு, பிரட்டி எடுத்து விட்டுத்தான் பொரித்து சாப்பிடுகின்றவர். :grin:

Link to comment
Share on other sites

On 31/7/2021 at 00:55, நிழலி said:

பச்சை மிளகாயின் அருமை எங்களில் பலருக்கு தெரிவதில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மோர் மிளகாய் வத்தல்.

இங்கு  எனக்குத் தெரிந்த தமிழர் ஒருவர்...
மிளகாய் பொரிக்க  முதல், அதனை மிளாகாய்த் தூளில்... 
போட்டு, பிரட்டி எடுத்து விட்டுத்தான் பொரித்து சாப்பிடுகின்றவர். :grin:

அந்த உங்களுக்கு தெரிந்த ஒருவர் பெயர் ப,பா வரிசையில் வருமா சிறித்தம்பி? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அந்த உங்களுக்கு தெரிந்த ஒருவர் பெயர் ப,பா வரிசையில் வருமா சிறித்தம்பி? 😁

ஓம் குமாரசாமி அண்ணை. அவரின் பெயர் பிரபா. 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.