Jump to content

பாப் பீமன்: 52 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ஒலிம்பிக் சாதனைக்கு சொந்தக்காரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாப் பீமன்: 52 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ஒலிம்பிக் சாதனைக்கு சொந்தக்காரர்

  • கெளதமன் முராரி
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
பாப் பீமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1968 ஒலிம்பிக் போட்டிகள் மெக்சிகோவில் நடந்தது. அதோ பாப் பீமன், நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார். முதல் இரு முயற்சிகளும் ஃபவுலாகிவிட்டன.

தன் மூன்றாவது முயற்சியை சரியாக மேற்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார் அந்த அமெரிக்க வீரர்.

பீமனோடு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த சக அமெரிக்க வீரரான ரால்ஃப் பாஸ்டன், அவரை சமாதானப்படுத்தி சில அறிவுரைகளை வழங்கினார்.

மூன்றாவது முயற்சியில் 8.19 மீட்டர் தூரம் தாண்டி, ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் இரவு, அவருக்கு மனமே சரியில்லை. தன் வாழ்வில் எல்லாமே தவறாக நடப்பதாக வருத்தப்பட்டார்.

பிரிகம் யங் என்பவரின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக, கருப்பினத்தவர்களோடு சேர்ந்து சில புறக்கணிப்பு போராட்டங்களில் கலந்து கொண்டதால் டெக்ஸாஸ் எல் பசோவில் அவருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை இழந்திருந்தார் என்கிறது இ.எஸ்.பி.என் வலைதளம். மேலும் அன்று இரவு, அவர் டகிலா மதுபானத்தை அருந்தியதாகவும் குறிப்பிடுகிறது.

பாப் பீமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்த நாள் எல்லா சுக துக்கங்களையும் மறந்து, தெளிந்த நீரோடை போல் களத்துக்கு வந்தார்.

அப்போட்டியில் அமெரிக்காவின் ரால்ஃப் பாஸ்டன். சோவியத்தின் இகோர் டெர் ஓவனேசியன் போன்ற சாதனை படைத்த வெற்றியாளர்கள் இருந்தனர்.

இந்த இரு வீரர்களும் 1960 - 1967 வரை பல்வேறு சாதனைகளை முறியடித்திருக்கிறார்கள். அப்போது பாப் பீமன் ஓர் இளங்கன்று, அவ்வளவு தான். அவர் தங்கம் வெல்வார் என்று எல்லாம் யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை.

அவருக்கான வாய்ப்பு வந்தது. ஓடத் தொடங்கியதிலிருந்து ஆறே நொடி தான் பறந்து வந்து விழுந்தார். பீமனுக்கே அவர் சிறப்பாக தாண்டியதாகத் தோன்றியது.

அந்த நேரத்தில் ஓர் அசாதாரண பிரச்னை எழுந்தது. 1968 ஒலிம்பிக்கில் நீளம் தாண்டும் வீரர்களின் தூரத்தை அளக்க புதிய தொழில்நுட்பக் கருவி பயன்படுத்தத் தொடங்கி இருந்தனர். அக்கருவி, பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்க முடியாமல் திணறியது.

ஒலிம்பிக் நீளம் தாண்டுதல் போட்டி சில நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் பழைய படி மீட்டர் டேப்பை வெளியே எடுத்து, பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்கத் தொடங்கினர். ஒன்றுக்கு, இரு முறை, மூன்று முறை... என பல முறை தூரத்தை அளந்தனர். பாப் பீமன் தாண்டிய தூரத்தை அளக்கும் நடவடிக்கை சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்தது என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல்.

பாப் பீமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிட்டத்தட்ட எல்லா தடகள ஒலிம்பிக் அதிகாரிகளும் கூட கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்து அதிர்ந்து போயினர். பாப் பீமன் 8.90 மீட்டர் தூரம் தாண்டி இருந்தார்.

அந்த காலகட்டத்தில் 8.35 மீட்டர் தான் உலக சாதனையாக இருந்தது. அச்சாதனையை 55 சென்டிமீட்டர் தூரம் கூடுதலாகத் தாண்டி, நீளம் தாண்டுதலில் ஒரு பிரும்மாண்ட ஒலிம்பிக் சாதனையைப் படைத்தார் என்கிறது ஒலிம்பிக்ஸ் சேனல்.

பாப் பீமன் ஒரு குழந்தை போல மைதானத்திலேயே சுருண்டு கண்ணீர் விட்டு அழுதார். சக வீரர்கள் தேற்றி சமாதானப்படுத்தினர்.

இந்த 8.90 மீட்டர் தான் இன்று வரை ஒலிம்பிக் சாதனையாக இருக்கிறது. தற்போது உலக அளவில் மைக் பவல் என்கிற அமெரிக்க வீரர் 8.95 மீட்டர் தூரத்தைத் தாண்டி உலக சாதனை படைத்து இருக்கிறார்.

ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் யாரும் இதுவரை 8.90 மீட்டரைத் தாண்டவில்லை என்கிறது உலக தடகள சம்மேளனத்தின் தரவுகள்.

இதில் இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்ன என்றால், அந்த ஒரு முறைக்குப் பிறகு பாப் பீமனாலேயே, 8.90 மீட்டர் தூரத்தைத் தாண்ட முடியவில்லை.

அவ்வளவு ஏன்..? 1968 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு பாப் பீமனால் அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைக் கூட வெல்ல முடியவில்லை.

அவருக்கு தொடர்ந்து காலில் காயம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது என பாப் பீமன் கூறியதாக இ.எஸ்.பி.என் வலைதள செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

யார் இவர்?

பாப் பீமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

15 வயதிலேயே 7.34 மீட்டர் தூரம் தாண்டிய பாப் பீமன், உடல் ரீதியாகவே நீளம் தாண்டும் திறனோடு இருந்தார் என்கிறது ஒலிம்பிக் சேனல். போல தன் 22ஆவது வயதில் 8.33 மீட்டர் தூரம் தாண்டி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார் நியூ யார்க் மாகாணத்தைச் சேர்ந்த பாப் பீமன்.

அவரது தாயார் சிறுவயதிலேயே காச நோயால் இறந்துவிட்டார். தாயை இழந்த, தாயின் அன்புக்கும் கவனிப்புக்கும் ஏங்கிய சிறுவன், தொல்லை கொடுப்பவனாக கொஞ்சம் காலம் கழித்தான்.

அவர் கவனம் மெல்ல விளையாட்டின் மீது திரும்பியது. சரியான பயிற்சிகள் கிடைக்க மெல்ல தன் திறனை வளர்த்துக் கொண்டு 1968 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு பிரம்மாண்ட உலக சாதனை படைத்தார்.

பாப் பீமனின் 8.90 மீட்டர் சாதனை, புராணக் கதைகளில் வரும் பீமனைப் போல கடந்த 52 ஆண்டுகளாக யாராலும் உடைக்க முடியாத அளவுக்கு வலுவாக இருக்கிறது.

டோக்யோ ஒலிம்பிக்கிலாவது யாரேனும் இவர் சாதனையை உடைப்பார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.

https://www.bbc.com/tamil/sport-58043090

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.