Jump to content

லண்டன் போராட்டத்தில், ஜேவிபி யின் இனவாதம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DSC3309-1-678x381.jpg

 

இலங்கையில் 83 ம் ஆண்டு இடம்பெற்ற  இனகலவரம்  கறுப்பு ஜூலை  என அழைக்கபடுவதும், அது நினைவாக போராட்டம் நடப்பதும் அனைவரும் அறிவர்.

1983  ல் இதே நாளில்  நடை பெற்ற இனக்கலவரம், மற்றும் சமகாலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன்  வைத்து  பிரித்தானியா இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஒரு ஆர்பாட்டத்தை இளைஞர்கள் மற்றும் தமிழ்சொலிடாரிட்டி அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். அதே இடத்தில் ஜனநாயக உரிமைகள் வென்றெடுக்க என ஜேவிபி ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். அங்கு வந்து சேர்ந்த ஜேவிபி யினர் கதிகலங்கி கொதிப்படைந்தனர்.

 

தமிழர் போராட்டத்தோடு நாம் இணைந்து செய்ய மாட்டோம் – தமிழர்கள் இங்கிருந்து சென்றால் மட்டுமே நாம்  போராடுவோம் என அறிவித்தனர்.  உடனடியாக பொலிசாரை அழைத்து தமிழர்களை கலையுங்கள் என்றும், தங்களுக்கு மட்டும்தான் ‘அனுமதி’ வழங்கப் பட்டு இருக்கு என்றும் வாதாடினர். இலங்கை தூதரகத்தோடு இணைந்து நின்று கொண்டு அவர்கள் தமிழர் போராட்டத்தை எதிர்த்தனர்.  

நீங்கள் போராடும் உரிமையை நாம் எதிர்க்கவில்லை எனவும் அவர்களை ஒரு பக்கம் நின்று போராடும்படியும் நாம் கூறினோம் .ஜே வி பி உடன் வந்து சேர்ந்திருந்த ஒரு சில தமிழர்கள் கூட பேசிப்பார்த்தனர் (முன்னாள் கடும் புலி எதிர்ப்பாளர்கள் – மற்றும் புளொட் இயக்க உறுப்பினர் என சிலர் அவர்களோடு இணைந்து வேலை செய்து வருவதாக தெரிகிறது). சிங்கள இனவாத ஜே வி பி கடும் கொதிப்போடு பேசவே மறுத்து விட்டனர்.  

நாங்கள் அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடுகிறோம்- ஏன் உங்களுக்கு உடன் பாடில்லை? இதுதான் நீங்கள் ஜனநாயகத்திற்காக செய்யும் போராட்டமா என்ற கேள்வியை jvp யினரை நோக்கி மற்றவர்கள் முன்வைத்தனர்.   

தமக்கு அரசில உண்டப்படில்லை என ஒருவர் கூறினார். எத்தகைய உடன்பாடு இல்லை என்ற கேள்விக்கு பதில் வரவில்லை. உடன்பாடு இல்லாவிட்டலும் ஒரு பக்கத்தில் நீங்கள் போராடுங்கள் – மறுபக்கம் நாம் போராடுகிறோம் என்று சொல்லியும் பிரயோசனம் இருக்கவில்லை. கொதிப்போடு போலீசாரோடு பேசி தமிழர் போராட்டத்தை கலைக்கும் படி விடாபிடியாக நின்றனர்.  

நாங்கள் வைத்த கோரிக்கை.

  • இலங்கை அரசு – சர்வாதிகார, படுகொலை அரசு. 
  • பேச்சுரிமை, போராடும் உரிமை முதற்கொண்டு அனைத்து சனநாயக உரிமைகளுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்களை நிறுத்து.
  • கல்வி, சுகாதார துறைகளை தனியார் மயப்படுத்துவதை உடனடியாக நிறுத்து.
  • போராடுபவர்களை தாக்குவதை உடனடியாக நிறுத்து.
  • பொய் வழக்குகளை ரத்து செய்.
  • அரசியற் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்.
  • தமிழ் பகுதிகளில் இருந்து இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற, கைப்பற்றப்பட்ட  நிலங்களை மீட்டெடுக்க, சுய நிர்ணய கோரிக்கையை வென்றெடுக்க ஒன்றுபடுவோம்.

 

 இந்த எந்த கோரிக்கை அவர்களுக்கு உடன்பாடு இல்லை?

 

 இவ்வாறான மக்கள் கோரிக்கையை jvp யினர் மறுக்கின்றனர். தாங்கள் முற்போக்குவாதிகள் -மார்க்ஸிஸ்ட் கள் எனப் பறைசாற்றும் இவர்களது உண்மையான முகத்தை போராட்டத்தில் நின்றவர்கள் வெளிப்படையாக காணக்கூடியதாக இருந்தது.  இவர்களுக்கு தமிழ் பேசும் மக்கள் மீது ஒரு அக்கறையும் இல்லை. சிங்கள இனவாதம் தெருவில் நடைமுறையில் இருந்ததை பார்க்க கூடியதாக இருந்தது.  

பெளத்த இனவாத இலங்கை அரசிற்கும் jvp யினர் களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை இவர்கள் நிரூபித்துள்ளார்கள். வடகிழக்கு பிரிப்பதற்கு இவர்கள் எப்படி பாடு பட்டார்கள் என்ற வரலாற்றையும் நாம் மறக்க முடியாது. அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் ஒன்றினைப்பதற்கு இவர்களுக்கு எந்த திட்டமிடல்களும் இல்லை. இவர்கள் ஒரு இனவாத கட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார்கள்.

2009ம் ஆண்டு மே 1 தொழிலாளர் தினத்தின்போது இவர்கள் அரச ஆதரவு கோசம் செய்தார்கள். தமிழ் மக்கள் படுகொலை நிகழ்ந்து கொண்டிருந்த தருனத்தில் இவர்கள் இவ்வாறு கோசமிட்டது ஏற்றுக் கொள்ள முடியாமல் மற்ற போராட்டக் காரர்களால்(தமிழர் அல்ல – இங்கிலாந்து தொழிலாளர்) மே தின ஊர்வலத்தில் இருந்து அடித்து துரத்தப் பட்டார்கள். இன்றும் அது நடந்திருக்கும். ஆனால் அத்தகைய நடமுறையை மறுக்கும் தமிழ் சொலிடாரிட்டி நின்றபடியால் அத்தகைய நடவடிக்கை அனுமதிக்கப்படவில்லை. இன்னுமொரு இடத்தில் போராட்டம் நடந்த படியால் அனாவசிய மோதலை தவிர்க்க கூடியாதாக இருந்தது.  

மக்கள் கொந்தளிக்கும் வேளையில் மக்களை இணைக்க முடியாதவர்கள்,  தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை எவ்வாறு போராடி பெறப்போகிறார்கள்.  இடதுசாரி எனக் கூறும் JVP கட்சியினரிமிருந்து தமிழ் பேசும் மக்களின் தேசிய உரிமையை மட்டுமல்ல எந்த சனநாயக உரிமைகளையும் எதிர்பார்க்க முடியாது என்பது தெட்டதெளிவாகியது. 

மதன். 

https://ethir.org/?p=6845

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கு இணைப்பை வழக்கு போட்டு பிரித்த ஜேவிபி இவர்களோடு சேர்ந்து போராடும் என்று எதிர்பார்த்ததும், இணைந்து போராடுவோம், பக்கத்தில் பக்கதில் போராடுவோம் என அவர்களிடம் கேட்டதும், எமது பிரச்சனையின் வரலாறு பற்றி தமிழ் சொலிடாரிக்கு இருக்கும் விளக்கத்தை கேள்விக்குள்ளாகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.