Jump to content

டோக்யோ ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டோக்யோ ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
சிந்து

பட மூலாதாரம்,PEDRO PARDO/AFP VIA GETTY IMAGES

டோக்யோ ஒலிம்பிக்கின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து

2016 ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்துடன் சேர்த்து தனிப்பட்ட வகையில் இரண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஆகிறார் சிந்து.

டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்த பி.வி. சிந்து இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்ஜியாவோ வீழ்த்தியுள்ளார்.இன்றைய போட்டின் முதல் ஆட்டத்தில் ஹி பிங்ஜியாவோவை 21க்கு 13 என்ற கணக்கில் சிந்து வீழ்த்தினார். கடும் போட்டி நிறைந்த இரண்டாம் ஆட்டத்திலும் 21க்கு 15 என்ற கணக்கில் சிந்து வெற்றிப்பெற்று பதக்கத்தை வென்றுள்ளார்.

இரு ஒலிம்பிக் பதக்கங்களை பெறும் முதல் இந்திய பெண்

சிந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டி ஒன்றில் இருமுறை பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

சிந்துவுக்கு முன் இந்தியாவை சேர்ந்த இரு ஆண்கள் இருமுறை ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றிருந்தாலும், முதல் இந்தியப் பெண் என்ற பெருமை சிந்துவை வந்து சேர்கிறது.

1900 ஒலிம்பிக் போட்டியில் நார்மன் பிரிட்சார்ட் இரு பதக்கங்களை பெற்றார். அதன்பின் சுஷில் குமார், மல்யுத்தத்தில் பீய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலமும், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார்.

சிறு வயது சாம்பியன்

1995 ஜூலை 5ஆம் தேதி பிறந்த சிந்து சிறுவயதிலேயே சாதித்தவர்.

2009 சப்-ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், அதன் பிறகு தன் வெற்றிப் பயணத்தில் பின்னோக்கிப் பார்க்கவே இல்லை.

18 வயதான போது, 2013 உலக சாம்பியன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்திய வீராங்கனை ஒருவர் உலக சாம்பியன் போட்டியில் பதக்கம் வென்றது அதுவே முதல் முறை.

அதன் பிறகு சிந்துவுக்கு நிறைய சாம்பியன் பட்டங்கள் கிடைத்தன.

2016 ரியோ ஒலிம்பிக்சில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றது அவரது வாழ்க்கையில் மிகவும் பெருமைக்குரிய தருணமாக அமைந்தது.

2017 மற்றும் 2018ல் நடந்த உலக சாம்பியன் போட்டிகளில் இறுதிச் சுற்றுகளில் தோல்வி அடைந்த சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். அதன் பிறகு 2019ஆம் ஆண்டில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சிந்து தங்கப்பதக்கத்தை பெற்றார்

தான் பெற்ற வெற்றிகளில் உலக சாம்பியன் பட்டம் மிக முக்கியமானது என சிந்து கூறுகிறார். இந்த போட்டிகளில் 2 வெண்கலம், 2 வெள்ளி என பிறகு கடைசியாக தங்கப்பதக்கமும் வென்றார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையான சிந்து உள்ளார். ``ஒலிம்பிக்ஸ் வெற்றி எளிதாக கிடைத்துவிடுவதில்லை. ரியோ ஒலிம்பிக்ஸுக்கு முன்பு எனது செல்போன் 3 முதல் 4 மாதங்கள் வரை பறிக்கப்பட்டு விட்டது. ஐஸ் கிரீம் சாப்பிடுவது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் கூட ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நிறுத்திவிட்டேன்'' என கடந்த ஆண்டு பிபிசிக்கு அளிக்க பேட்டியில் சிந்து குறிப்பிட்டிருந்தார்.

எளிதாக கிடைத்த வெற்றியல்ல

''என் 8 வயதில் நான் பேட்மிண்டன் விளையாடத் தொடங்கினேன். என் பெற்றோர் இருவருமே சர்வதேச வாலிபால் வீரர்கள். என் தந்தை அர்ஜுனா விருது பெற்றவர். அவர் செகந்திராபாத் ரயில்வே மைதானத்தில் வாலிபால் விளையாடும்போது, அருகில் பேட்மிண்டன் மைதானங்கள் இருந்தன. நான் அங்கே விளையாடத் தொடங்கினேன்.`` என்கிறார் சிந்து.

இந்திய விளையாட்டு வீராங்கனைகளில் மிகவும் வெற்றிகரமானவர்களில் ஒருவராக மட்டுமல்லாமல், மிகவும் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் சிந்து இருக்கிறார்.

https://www.bbc.com/tamil/sport-58049274

Link to comment
Share on other sites

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டபோட்டியில் முதன் முதல் ஒரு இத்தாலியர் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.( தாயார் இத்தாலியன், தகப்பன் ஆபிரிக்க அமெரிக்கன்). வெள்ளி பதக்கத்தை அமெரிக்கரும், வெண்கல பதக்கத்தை கனடாவும் பெற்றன.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.