Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

எல்லா(hello)...

வணக்கம்...

இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. 
 

கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா?

இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை..

புலிகளால் கட்டப்பட்டவையில் பெரும்பாலானவை மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலங்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-submarines) மற்றும் ஒற்றை நீரடி வளிவழங்கி நீர்மூழ்கிகள் (one snorkel submarine) ஆகும்... இவற்றினை புலிகள் போரில் கையாண்டிருந்தார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.. ஆனால் புலிகள் இவற்றைப் பயன்படுத்தி பொருட்களை தருவித்திருந்தனர் என்பது மட்டும் உறுதி. 2008இல் நடத்தப்பட்ட ஓர் கரும்புலித் தாக்குதலில் தாழ் தோற்றுருவ கலங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது…

 

 


நான் இங்கே நீர்மூழ்கி என்று பலர் கண்டு குழம்பும் புலிகளின் கலங்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்; படங்களை இணைத்துள்ளேன்.. ஏனைய கலங்களைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை!


 

 

சரி, முதலில் ஆம் என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம்.

  • நீர்மூழ்கிகள் (submarine):

பொதுவாக மெய்யான நீர்மூழ்கிகள் என்பவை அரை-நீர்மூழ்கிகள் மற்றும் தாழ் தோற்றுருவ கலங்களை விட கட்டுவது, பராமரிப்பது மற்றும் பணியாற்றுவது மிகவும் கடினம். எதிரொலிக்கருவி(sonar) மற்றும் ஏவரிகள்(torpedoes) உதவியின்றி அவைகளின் தந்திரோபாய நன்மைகளும் மிகவும் குறைவாகவே உள்ளன, எனவே கடற்புலிகள் அவற்றைக் கட்டுவதில் பெரியளவில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவர்கள் ஒப்பீட்டளவில் சில நீர்மூழ்கிகளைக் கட்டினார்கள், அவை குறைந்தபட்சம் ஒரு நீரடி வளிவழங்கியாவது (snorkel) மேற்பரப்பை எட்டி முழுமையாக நீரில் மூழ்கும் திறன் கொண்டதாக இருந்தது.

ஆனாலும் அவர்கள் 2 மெய்யான இயங்குநிலை நீர்மூழ்கிகளைக் கட்டியிருந்தார்கள். அத்தோடு மேலும் மூன்று நீர்மூழ்கிகளும் கிடைக்கப்பெற்றது.. ஆனால் அது இயங்குநிலை நீர்மூழ்கியா என்பதைப் பற்றிய புலனங்கள் ஏதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.. புலிகளால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஏனைய இரண்டு பெரிய வகை நீர்மூழ்கிகளும் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியதால் முடிக்கப்படாமல் விடப்பட்டிருந்தன, இதனால் அவற்றின் இறுதிவடிவம் எவ்வாறு இருந்திருக்க முடியும் என்பதை எம்மால் ஊகிக்க முடியவில்லை.. போர் இன்னும் கொஞ்ச நாட்கள் நீடித்திருக்குமானால் புலிகளின் இந்தப் புதிய நீரடி போரியல் முறையையும் நாம் அறிந்திருக்கலாம்.

 

1) &2)

  • கீழே உள்ள இரு மெய்யான நீர்மூழ்கிகளும் தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகும். இதில் ஒருவர் மட்டுமே பயணிக்க (travel) முடியும். ஆகையால் இது இராணுவ வேலைகளுக்கு பயன்படுத்தப்பட இயலாது. ஆனால் இவையே புலிகளால் பின்னாளில் கட்டப்பட்ட நீர்மூழ்கிகள் போன்ற மெச்சத்தக்க கலங்களின் கட்டுமானத்திற்கு வித்திட்டவையாகும்.

main-qimg-0cfa8d86c5461f7fcae6e034377b2598.jpg

'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கிகள் '

main-qimg-661e7ab441a8cd4e49ca2760d749a19e.png

main-qimg-0af71987978d9cdcc76e83ddd8434544.png

'மேலே pink நிறத்தில் உள்ள நீர்மூழ்கியின் உட்புறம்'

main-qimg-95af752263f6382f3a69236a14328ab0.png

'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளம்'

3)

  • இரும்பாலான இந்நீர்மூழ்கி ஆனது டிசம்பர் மாதம் 1995 ஆம் வல்வெட்டித்துறையில் வைத்து சிறிலங்கா தரைப்படையினரால் கைப்பற்றப்பட்டது .. இதில் 1 ஆள் மட்டுமே பயணிக்கலாம். இது கடலிலே இறக்கப்பட்டதில்லை என்று சிங்களம் கூறுகிறது. ஆனால் கடற்புலிகளின் செயல்பாடுகள் பற்றி துப்பில்லாத (அந்தக்காலத்தில்) சிங்களம் இவ்வாறு கூறுவது நம்பவியலாது கூற்று. எனவே இது இறக்கப்பட்டதா இல்லையா என்பது அறியில்லாத விடயம் ஆகும்.

அளவு (அடியில்): 18.7 x 3.5 X 4.5

main-qimg-660c277641d69ecc27c33eacee96b4d8.jpg

main-qimg-d2bedc8c4521db88899e8fd6eeb94325.png

main-qimg-f1cd07229935379e5a550f363f62cb20.png

'மேற்கண்டதின் பின் புறம்'

4)

  • புலிகளால் இது வரைக்கும் முழுமையாக் கட்டப்பட்ட ஒரே ஒரு நீர்மூழ்கி:

புலிகளால் கட்டப்பட்ட முதல் செயல்படும் மெய்யான நீரில் மூழ்கக்கூடியவற்றில் ஒன்று. இது ஓராள் பயணிக்கக் கூடிய நீர்மூழ்கியாகும். இது மின்கலம் மூலம் இயக்கப்பட்டது.

(இதைத் தவிர வேறு ஏதேனும் முற்றாக கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் நீர்மூழ்கிகள் இருந்தனவா என்பது தெரியவில்லை)

main-qimg-a33c96d69872b66dabfba9f43539d36e.jpg

main-qimg-edf80333149bf1ca54f4a8b014400f47.png

main-qimg-d626b7e8fc68c3e9e396d311952f43c7.png

'உயர் பின்பக்க பார்வை'

 

5)பெப். 27 . 2009 அன்று சிறிலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்ட மற்றுமொரு நீர்மூழ்கி. இந்தச் செய்தியை யூரியூப்பில் இருந்து எடுத்தேன்.

main-qimg-97481b2adda1cfe69548c0022161efa7.png

'கடற்கலத்தின் முன்பக்கம்' | படிமப்புரவு: இப்படம் என்னால் தொகுக்கப்பட்டது ஆகும்.. 3 படங்களை ஒன்றிணைத்தே இப்படத்தினை உருவாக்கினேன்..

main-qimg-7e97be1b83eb157f713538c68f380d73.png

தலைப்பகுதி

main-qimg-25838ef53179003dd3c8858e730764bf.png

தலைப்பகுதி

main-qimg-835236edbcf15527a886acf1e236b087.png

தலைப்பகுதி

main-qimg-a91009f16c6d64ee869ef98900969c30.png

'பக்கவாட்டுப் பகுதியில் அந்த இராணுவ அதிகாரி ஏதோ ஒன்றினைபற்றிச் சுழற்றிக்கொண்டு இருக்கிறார்'

main-qimg-0e83dca1abc41680b2f6556f073ee306.png

பின்பக்கம்

main-qimg-bbf7ef63cdf655f9172b4aa9ae65b374.png

பின்பக்கம்

main-qimg-5ef140405bab6506fac2f24c8f724261.jpg

'பின்பகுதி.. அருகில் உடைந்து விழுந்திருப்பது தான் நீங்கள் மேலே கண்ட அந்த திட்டுப்போன்ற பகுதி'

main-qimg-5b5df916d70f4c4c3200f617fb86edc5.png

main-qimg-c1f3abace3d005a722b52db35ac300bf.png

'சுழலி'

main-qimg-391f62ea1a84acd28465f59da21b75d3.png

'சுக்கான் உடன் கூடிய சுழலி'

6)

  • கீழ்க்கண்ட நீர்மூழ்கி எலும்புக்கூடானது பாதியே முற்றாக கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் கட்டி முடிக்கப்படாமையால் இது பற்றிய புலனங்கள் ஒன்றும் கிடைக்கபெறவில்லை.. ஆனால் இதில் உள்ள பெருமளவான உலத்தப்பட்ட (welded) எஃகு பட்டைகளை(steel plates) வைத்துப் பார்க்கும் போது இதனால் அதிக அளவு ஆழம் செல்ல முடியாது. இது முற்றிலும் முடிக்கப்படாமையால் இது எவ்வாறு இருந்திருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாது. ஆனால் இது கட்டி முடிக்கப்பட்டிருந்தால் இதுவே புலிகளின் முதலாவது பெரிய முழுஇயக்கம் கொண்ட நீர்மூழ்கி ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை... அவ்வளவு சிறப்பாக இதன் எஃகு பட்டைகள் உலத்தப்பட்டிருந்தன.
  • நீளம்: 30அடி (10m)
  • இக்கலத்தால் 1360 kg வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

main-qimg-88e7bc14225d68456d9b095972fa0da2.jpg

main-qimg-dd70ce5d5fc87d31ab2d8d58bf5b9e81.jpg

main-qimg-50228a7c1229ed817b6dfcc5807adf0d.jpg

 

7)

  • மற்றொரு நீர்மூழ்கியின் கட்டி முடிக்கப்படாத எலும்புக்கூடு. சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டவைகளிலே இதுதான் மிகப்பெரியது ஆகும்.
  • நீளம்: 360 அடி
  • உயரம் : 10 அடி

main-qimg-3189ab497a251e99fbe49db1ec18ccfe.jpg

main-qimg-454c6c5b65900798cd409a9c7a726c9e.jpg

main-qimg-67bf12dcef44bd00a69df0aca7967227.jpg

8 )

கடற்புலிகளால் பாதியிலேயே விட்டுவிடப்பட்ட மற்றுமோர் நீர்மூழ்கிக்கான உதிரிப்பாகங்கள்.

main-qimg-e798ca1f03c12f4c4143eb84dd273a57.png

 

 


சரி,இனி இல்லை என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். மேலே நான் கூறியதைப் போல நீர்முழ்கிகள் கட்டுவது அவ்வளவு இலகு இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட புலிகள் அவற்றிற்கு ஈடாக இவற்றினைக் கட்டினார்கள்.

  • தாழ் தோற்றுருவக் கலம் (low profile vessel):

தாழ் தோற்றுருவ கலங்கள் நீரில் மிகக் தாழ்வாக ஓட வடிவமைக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட முழு கலக்கூடும் (hull) நீரில் மூழ்கியுள்ளன, ஆனால் மேல்தளம் மட்டும் மேற்பரப்புக்கு மேலே தெரியும். இதன்மூலம் கதுவீகளின் கண்ணில் மண்ணைத் தூவுவதுடன் அவற்றைக் கண்டறிவதையும் கடினமாக்குகிறது. மேலும் இதனைச் சுடுவதும் கடினமான காரியம் ஆகும். இருப்பினும் இவ்வகைக் கலங்கள் வேகத்தில் கொஞ்சம் குறைவே.

  • இது 2 வெளியிணைப்பு மின்னோடியைக் கொண்டது!
  • வட்டு வரைக்குமான உயரம் : 5.0' - 5.3'

1) ஊடுருவி 2006-01

main-qimg-6b095723f028f446446a27c4a2afa37c.png

main-qimg-d20406da03c1a830143603c3ca1430dd.png

main-qimg-6626deadfb7938e46f0b7bd294502f48.jpg

main-qimg-39ddb48732fa94bb30b8a19a23198b87.png

'இந்த இரண்டு கொளுக்கிகள் போன்று இருப்பவைக்கு முன்னால்த்தான் கதுவீ (radar) பொருத்தப்படிருந்தது'

main-qimg-15bdc79d293139f95b2802be97858e48.png

main-qimg-03f55466d18b78269277acc999179df4.png

'படத்தின், முன்புறத்தில் திறந்த நிலையில் இருக்கும் அறையினுள்தான் மீகாமன் இருப்பார்….. பின்புறத்தினுள் தெரியும் அந்த இரு அறைகளுக்குள்தான் பண்டங்கள் வைக்கப்படும்'

main-qimg-e427695b570d286e2f062ccc2de90794.png

'மீகாமன் அறையினுள் இறங்கி நிற்கும் ஓர் சிறீலங்காத் தரைப்படை வீரன்'

main-qimg-f9ea93c58441c21a52bc281a2583d5cd.png

'கலத்தின் பின்புறத்தின் மேற்பகுதி'

main-qimg-18a4cbc2d598117317f9277fa5812049.png

'கலத்தின் பின்பகுதி'

  • மேற்கண்ட கடற்கலனின் முழு நிகழ்படத்தினையும் காண:

 

 

 

2) இது தான் புலிகளின் முதலாவது தாழ் தோற்றுருவக் கலனாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

main-qimg-d5003078c87ebae4ef987550fd9b6be8.png

3)

மிக நொவ்வு கலத்தின்(VSP) மேலோட்டு(hull) வடிவம் கொண்ட ஓர் தாழ் தோற்றுருவ கலம்.. இதுதான் கடற்புலிகளால் கட்டப்பட்டதிலேயே மிகவும் சீரிய மேம்படுத்தப்பட்ட வடிவம் கொண்ட தா.தோ.க ஆகும். பார்த்துப் பார்த்து செதுக்கியிருகிறார்கள்!

  • இது உள்ளிணைப்பு மின்னோடியைக் (inboard motor) கொண்டது!

main-qimg-9266a4834967f9fa006f108cc0704c02.png

படிமப்புரவு :H I Sutton

மேற்கண்ட கலனின் பல்வேறுபக்க தோற்றங்கள்:

main-qimg-657961c6cd0cac93dc4a0706306bd636.jpg

main-qimg-f72c77bc83d5ec64042534b286e99e34.jpg

main-qimg-d5040cc920c45aecf9099ed83e8881d7.jpg

main-qimg-4150ae596f9d3322b10e1eaf0ad6f474.png

'பின்பகுதி'

 

4)

27 டிசம்பர் 2008 அன்று முல்லைக் கடலில் சிங்களக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட கடற்புலிகளின் தாழ் தோற்றுருவக் கடற்கலம். 

(கீழுள்ள படிமங்கள் யாவும் சிங்கள கதுவீயில் தெரிபவையே... முழு நிகழ்படம் )

cs.jpg

'கலத்தின் முழுத் தோற்றம்'

Sea Tigers' Low Profile Very Slendered Vessel - sunk on 27th December 2008.jpg

'ஓட்டியிடம் இரு பொந்து போன்று தெரிவதை நோக்குக'

asfa.jpg

'அணியம்'

 


1)

main-qimg-908e01de7fa756d313aa76674df4ada4.jpg

LTTE boats and submarines.jpg

main-qimg-4db0c067942271dd8a8b472e504a2386.jpg

Shutterstock_7838681b.jpg

 

2)

  • நீளம்: 30 அடி

main-qimg-7d8c455e0c8d75fa66859363f80c799b.jpg

main-qimg-fc53263b325153f124591699170eda5c.jpg

main-qimg-d674eabc7f91541294be41c7acb117d8.png

main-qimg-94b87102b5090c30f23705d6828984d2.png

 

 


  • அரை நீர்மூழ்கிகள் (semi submarine) :

நீரில் பாதியளவு மூழ்கக்கூடிய / கிட்டத்தட்ட முற்றிலும் நீரில் மூழ்கும் கலங்களே இந்த அரை நீர்மூழ்கிகள் ஆகும். இருப்பினும், செலுத்தறை(cock pit), காற்று உட்கொள்ளல் (air intakes) மற்றும் இயந்திர புறம்போக்கி(engine exhaust) பொதுவாக மேற்பரப்புக்கு மேலே இருக்கும். இவை ‘நீரடி வளிவழங்கி நீர்மூழ்கி’ (snorkel submarine) என்றும் அழைக்கப்படுகின்றன.

இக்கலங்களை எதிரொலிக்கருவி மூலமோ இல்லை கதுவீ மூலமோ கண்டறிவது கடினமாகும்.

கீழே நீங்கள் பார்ப்பவை அனைத்தும் எஃகால் ஆனவை

1)

  • நீளம்: 7.3m
  • அகலம்: 1.2m
  • உயரம் : 5.6' - 6'
  • இதற்குள் ஓரிருக்கை மட்டுமே இருந்தது

main-qimg-3eaf55063cfd8131e162557e28eb3ab3.jpg

main-qimg-b1106c152ce0abbd1f721f36ae5cef6f.jpg

main-qimg-6793047b3070b7413791294ab0a39a5c.jpg

main-qimg-956e4680f53dc2ac51dba80c50124df5.jpg

main-qimg-941339685d1769876a8aa9262723a59b.jpg

main-qimg-204fb9e0747d6ac72a0a366254aeaca9.jpg

main-qimg-4800c150bf497dcbd88d449eac2f7cc1.jpg

main-qimg-b7308831e75842de882aa684faa2740d.jpg

main-qimg-8c12b4d679bf0afa4909b6f6d40d1c51.png

'ஓட்டியிருக்கை'

2) கோகுகலன்-45 2008

  • கீழ்க்கண்ட வகை நீர்மூழ்கியில் கதுவீ(radar) பூட்டப்படிருந்தது.. அத்துடன் உள்ளே ஒட்சியன் குடுவையும் இருந்தது.
  • இதால் 15 பேர் வரை காவிச்செல்ல இயலும்.
  • இந்தக் கலம் ஆனது சரளையுடன்(ballast) வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் செலுத்துநெறிக்கு(navigation) உதவ ஒரு புவி நிலை காட்டியையும் கொண்டிருந்தது.

நீளம்: 47 அடி

அகலம்: 8 அடி

உயரம் : 7 அடி

வளி வழங்கியின் உயரம் உயரம் : 6' - 6.2-

இதற்கான ஆற்றல் வழங்குவது உந்தியுடன் கூடிய உள்ளிருக்கும் பொறியாகும்.

பொறியின் ஆற்றல்: 400–800 HP

main-qimg-e10a8dd819d0a4139783b55bf5154fd2.jpg

main-qimg-4e6cd3aaf52904e2e4a30be7ae6bac04.jpg

'முன்பக்கத்திலிருந்து சத்தார் பார்வை'

main-qimg-c8e3aae946af7713916bdcb7e4ad3be5.png

main-qimg-8416efad1459eab7e9c203976941fa5a.png

'மேற்புறத் தோற்றம்'

main-qimg-4be6a5b9ca75cd2a0531dd6db647785c.png

'முன்புறத் தோற்றம்'

main-qimg-7c2d0820ee41716b7619b07f709f822c.png

main-qimg-3ee0ac5852e2b704812cedfb0d9eb4c0.png

main-qimg-3b1d4357a3ea4467e26ee939f5b3c185.png

main-qimg-30e45c40ae56aae6aee9158647024406.png

'உட்புறத் தோற்றங்கள்'

main-qimg-d6a920eb30fca23211d9c2b742fb469a.png

main-qimg-a79a5807cb2d447c82c0b105b0fd1a0c.png

'ஓட்டியிடம் & steering wheel'

main-qimg-9180e0c10f00af0f6ca1b1e3d05e160f.png

எப்படி ஓட்டுவார்கள் என்று விளக்குகிறார் ஓர் சிங்களத் தரைப்படை வீரர்'

main-qimg-2d987240a3b83d1a514d21e1071916a9.png

'பின்பகுதி (தெரிவது சுழலி ); அருகில் சிங்கள இராணுவ வீரர்கள் உள்ளனர்.'

main-qimg-b7ae70b0e5e94160928e30b44e9ba149.png

'சுழலி '

3) கோகுகல்ன்-24 2008

இக்கலமானது கோகுலன்-45 ஐ விடச் சிறியது.

  • நீளம்: 5.4 m
  • அகலம்: 1.5 m

main-qimg-7418868290001238005d5ff0cc4c4be8.png

main-qimg-dd74e2b63f2f28970bed248b8c1273ea.jpg

4)

  • நீளம் : 8m
  • உயரம் : 4.2'

main-qimg-cc4b5d8e2cf7ff8076cb999749d52624.jpg

main-qimg-f745a85cb1ca3ed71e3d467161ba5eda.jpg

main-qimg-8f5a86702b6a67cb007f2d06b61c0dfc.jpg

main-qimg-a0eafbe62c653670979a53f294d0bfc8.png

main-qimg-44f15d59a554b6d7a0a459d1c4431439.jpg

main-qimg-37cc10b6525d52eadfe48686adc2bcfb.png

main-qimg-d815c7de1892ae2318c61f32f0f86672.png

main-qimg-3be51e978f0ebc6e965ae665ef2bc71e.png

'மேற்கண்ட நான்கு புகைப்படங்களும் ஓட்டுநர் இருக்கும் உள்ளிடம் தொடர்பானவை'

5) புதைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பிறிதொன்று:

main-qimg-a6d43b74fbd0d4798618c3cb5284da26.jpg

 

இனி நீங்கள் கீழே பார்ப்பவை அனைத்தும் கண்ணாடியிழைகளால் (fibre glass) ஆனவை

6)

இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel).

main-qimg-8014ac062f3f4c7c87529eb9bb435821.jpg

main-qimg-7aec4bfe87b9b63abeeb577ca3fd41d2.png

'உட்புறத் தோற்றம்'

7)  கோகுலன்-2 

  • நீளம்: 4.30m
  • அகலம்: 1.20m
  • உயரம்:1.18m

இது 1993 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இந்திய காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

main-qimg-e461c1b818fd6ab1e5410a9394365ffa.jpg

'மேற்கண்ட கடற்புலிகளின் அரை நீர்மூழ்கியானது கோயம்புத்தூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது'

8 ) சதீஸ்

  • கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்டுகிறது. இதால் 10 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். 

LTTE-giant-semisub-profile.jpg

main-qimg-c5d2f3747eb9ad367c9347044ae3f485.jpg

'முன்னிருந்து சத்தார் பார்வை'

main-qimg-14c08d16acd50fdcaa588efdb66b9b04.png

'மேலிருந்த பார்வை'

main-qimg-19bed17cdfcf6afd13e591e1b60b800c.jpg

'பின்னிருந்து சத்தார் பார்வை'

main-qimg-0d3060179746f3d05f780511cefa69e0.jpg

'பக்கவாட்டுப் பார்வை'

main-qimg-c4b5315dba938ad3aae7f542d5636cb9.png

'நடுப்பகுதியை கீழிருந்து மேனோகிய பார்வை'

main-qimg-c4ccc57d4faba7f8744fba4f3c291179.jpg

'பின்பகுதிப் பார்வை'

 

9)

  • கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்டுகிறது. இதால் 5 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும்.
  • இது இரண்டு பகுதிகளாக கட்டப்பட்டு பின்னர் ஒட்டப்பட்டுளது, முக்கிய சேரல் கிடைமட்டமாக பக்கங்களில் தெரிகிறது இயங்கும்.
  • நீளம் : 25.5 அடி
  • உயரம் : 5 அடி
  • அகலம் : 9.5 அடி

main-qimg-701f79723aebd391d683112771671bfd.png

main-qimg-20fb987079bb653a5724cfd6b001914d.png

'மேற்கண்டதின் பின் புறம்'

main-qimg-27214e1bedf2f2ef96d2681433ed4db3.png

'மேற்கண்டதின் நீரடி வளி வழங்கி(snorkel)'

 


  • அடைக்கப்பட்ட மாந்த ஏவரிகள் (enclosed human torpedoes):

முதலில் மாந்த ஏவரிகளை விளக்குகிறேன்.. இதில் புலிகளிடம் பல வகைகள் இருந்தாலும் பார்ப்பதற்கு நீர்மூழ்கிகள் போல இருப்பவைப் பற்றி மட்டும் இங்கே கொடுக்கிறேன். இவை கடற்புலிகளிடம் இருந்த அலைமேற் செலவாகும் கரும்புலிகளால் உருவோட்டப்படும்(sail) கலங்களைப் போல இவை நீரடியில் உருவோட்டப்படும் ஏவரிகள் ஆகும்.

  1. இது ஒரு கைடென்(kaiten) வகுப்பு ஏவரியாகும்.

இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்.

main-qimg-7a6a11cd39021457e13182782488d61c.jpg

main-qimg-e3e7f683126327f998c0fbdeee2b250e.jpg

'உள்ளிருந்து முன்னோக்கிய பார்வை'

main-qimg-64b8a6488cf00d796a5b8bedbc92a708.png

main-qimg-9ef28909474dfc01ecc385dde114c90d.png

'உட்பகுதி'

 

2) இது ஒரு கைரென்(kaiten) வகுப்பு ஏவரியாகும்.

இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்

main-qimg-43345272f3ffb0e688f93cce43abc68f-c.jpg

main-qimg-0aaa7e29e8bfa16924b6d9e84d61f3f7-c.jpg

main-qimg-cadfa16e30a633d0d8e39d7413ee7c56.png

 

 


  • தாழ் தோற்றுரு அடைக்கப்பட்ட மாந்த ஏவரி(low profile enclosed human torpedo):

1)

இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்

main-qimg-80229ea01b99867f90756880b510efc7.png

main-qimg-f838d4b2f3d2327d47f095b05883592c.png

main-qimg-f39cfc58d1baeb86757b5c8e242c6d5e.png

'பின்பகுதி'

2) MS 380

இதில் ஒருவர் மட்டுமே பயணிக்கலாம்

main-qimg-b810ee32a6e0e3dcf18cc88f2001d4cf.jpg

படத்தில் முன்னால் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி.

 

3) இடது புறத்தில் உள்ளது தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலமொன்றின் மாதிரி ஆகும்ம் (Low profile Very slender vessel); வலப்புறத்தில் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி ஒன்றின் மாதிரி ஆகும்.

LTTE boats and submarines.jpg

 

மேலுள்ள மாதிரியின் முழுக் கலம்

main-qimg-fd09bcd3e41999780e4796da33256184.png

main-qimg-59c4ffa58493cf1fce3b7b4c0bf08150.png

 

 

  • கூடுதல் செய்திகள்:

 

உசாத்துணை :

படிமப்புரவு

 

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் மற்றும் தாழ் தோற்றுரு கடற்கலன்கள் - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் மற்றும் தாழ் தோற்றுருவ கடற்கலன்கள் - ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+

புதுக்குடியிருப்பு போர் அருங்காட்சியகத்தில் இருக்கின்ற ஏதோ ஒரு நீரடி கடற்கலனின் வால் பகுதி... என்னவென்று அறியமுடியவில்லை!

 

What si this.png

Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் மற்றும் தாழ் தோற்றுருவ கடற்கலங்கள் - ஆவணம்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.