Jump to content

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01

— சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

“இடதுசாரிகளை விட இனவாதிகளே மக்களை ஈர்த்தனர். அதனால் நாடு நாசமானது” என்று ஒரு பதிவைத் தன்னுடைய முகப்புத்தகத்தில் போட்டிருந்தார் ஜீவன் பிரசாத். ஒரு காலம் ஈழப்போராட்டத்தோடு இணைந்திருந்தவர் ஜீவன். அதேவேளை கலை, ஊடகவியல்துறை, திரைப்படம் எனப் பல துறைகளிலும் ஆளுமை மிக்கவர். ஜனநாயகவாதி. மாற்றங்களை எப்போதும் விரும்புகின்றவர். அவர் தன்னுடைய அவதானங்களின் வழியே கண்டடைந்த உண்மை இது.  

அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதே, அதையும் விட உண்மையானது. 

ஏனென்றால், இந்த ஈர்ப்பு இனரீதியான மேம்பாட்டை எந்த இனத்துக்கும் தரவில்லை. இனப்பாதுகாப்புக்கு இதுதான் சிறந்த வழி என்று தோன்றினாலும் இந்த வகையான நிலைப்பாட்டினால் அல்லது வழிமுறையினால் நாடும் நெருக்கடிக்குள்ளாகியது. இனங்களாகப் பிளவுண்டது. ஒவ்வொரு இனமும் நெருக்கடியைச் சந்தித்தன. அழிவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இன்று பிளவுண்ட மனதோடுதான் ஒவ்வொருவரும் உள்ளோம். எல்லோரிடத்திலும் சந்தேகமும் அச்சமும் பகையுணர்ச்சியுமே மேலோங்கியுள்ளன. இலங்கையின் குடிமக்களுக்குக் கிடைத்த வரமிதுவாகியுள்ளது. 

பதிலாக இடதுசாரிகளை ஆதரித்திருந்தால் ஜனநாயகம் செழுமையாக இருந்திருக்கும். போரும் இடைவெளிகளும் உருவாகியிருக்காது. அல்லது இந்தளவுக்கு நீறு பூத்த நெருப்பாக இருந்திருக்காது. சுய பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். அறிவியலும் பண்பாடும் புதிய வளர்ச்சி நிலையை எதிட்டியிருக்கும். அந்நியத் தலையீடுகள் இந்தளவுக்கு ஏற்பட்டிருக்காது. கல்வி, பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட விசயங்களில் சுதேசத்தன்மை உள்ள மக்களாக நாம் வாழ்ந்திருப்போம். அதேவேளை சர்வதேசத் தன்மை வாய்ந்தோராகவும் இருந்திருப்போம்.  

இலங்கைத்தீவு பல்லினத் தன்மையும் பன்மைத்துவமும் உள்ள அமைதித்தீவாக இருந்திருக்கும். 

இப்படி எழுதும்போது “இது ஒரு அற்புதக் கனவு” என ஒரு சாராரும் “இல்லை இது, சுத்தமான அபத்தக் கனவு” என இன்னொரு சாராரும் கூறுவர். ஏனெனில் இரண்டுக்கும் இதில் சாத்தியங்கள் உண்டு. இடதுசாரித்துவத்தில் முற்போக்குத் தன்மையும் மக்கள் நேயமும் மானுட விகசிப்பும் விடுதலையுணர்வும் இருக்கின்ற அதேவேளை அதில் எல்லையற்ற அதிகாரத்தைப் பிரயோகிக்கின்ற மூடத்தனமும் உண்டு. இரண்டுக்கும் ஏராளமான உலக உதாரணங்களும் வரலாற்று அனுபவங்களும் உண்டு. 

ஆகவே இரண்டுக்குமான சாத்தியங்களை – நன்மை தீமைகளை – மனதிற் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. 

இலங்கையின் எழுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இடதுசாரிகள் பங்கேற்ற அரசாங்கத்துக்கும் –ஆட்சிக்கும் – இடதுசாரிகளில்லாத ஆட்சிக்குமிடையில் உள்ள வேறுபாடுகளையும் இந்தக் கட்டுரை நோக்குகிறது. 

இனத்துவ ரீதியில் இடதுசாரிகள் சோரம்போனதும் இன்னமும் போய்க்கொண்டிருப்பதும் இடதுசாரிகள் மீதான அவநம்பிக்கைகளையும் மதிப்புக்குறைவையும் ஏற்படுத்தியிருப்பது உண்மையே. இனவன்முறைகளையும் இன ஒடுக்குமுறையையும் இடதுசாரிகள் கண்டிக்கவும் தடுக்கவும் தவறினர் என்பதும் உண்மையே. மட்டுமல்ல இனச் சமனிலையைப் பேணுவதற்கான அதிகாரப் பகிர்வு – அரசியலமைப்பு உருவாக்கம் – போன்றவற்றிலும் இடதுசாரிகளின் பாத்திரம் பலவீனமானதே. 

இப்படித் தவறுகளை இழைத்திருக்கும் –இன்னமும் இழைத்துக் கொண்டிருக்கும் இடதுசாரிகளை பிறகு எப்படி முன்னிலைப்படுத்தலாம். இவர்களால் எப்படி அற்புதமான – அதிசயமான ஒரு இலங்கையை உருவாக்கியிருக்க முடியும்? என்று இடதுசாரிகளை நோக்கி உங்களில் யாரும் கேள்வி எழுப்பலாம். 

ஆனால் இந்தக் கேள்விக்குப் பின்னுள்ள உண்மைகளை மனந்திறந்து கண்டறிய வேண்டும். 

இலங்கையின் அரசியல் வரலாற்றில் சமஸ்டி முறை பற்றி முதன்முதலில் பேசியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா. ஆனால் அவரே பின்னர் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து கொந்தளிக்கும் நிலைமைக்கு வழியேற்படுத்தினார். அந்தக் கொந்தளிக்கும் நிலைமையின் வளர்ச்சியே இன்று சமஸ்டியைப் பற்றிய பேச்சையே எடுக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. 

ஏன் இப்படிப் பண்டாரநாயக்கா இரண்டு நிலைப்பாடு எடுக்க வேண்டியிருந்தது? இடையில் நடந்தது என்ன? என்பதைக் கண்டறிந்தால் இடதுசாரிகளிடம் ஏற்பட்ட  – ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வரலாற்றுத் தவறு எப்படி நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வளவுக்கும் பண்டாரநாயக்கா ஒன்றும் முற்போக்குவாதியோ சீர்திருத்தவாதியோ கிடையாது. ஐ.தே.கவின் பிரதிநிதியாக இருந்தவரே. பின்னர் அதிலிருந்து விலகி தனியாகச் சுதந்திரக் கட்சியை உருவாக்கியவர். ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இடையில் வேறுபாடுகள் கட்சியின் நிறக்கொடிகளில் மட்டுமல்ல நடைமுறை சார்ந்த கொள்கையிலும் இருந்ததுண்டு. ஆனால், அது அதிக வேறுபாடாக இல்லாமல் பின்னாளில் கரைந்து விட்டது. இதற்குக் காரணம், ஐ.தே.கவின் இனவாத அலைக்கு நிகரலையை சு.கவும் இனவாத அலையை உருவாக்க முற்பட்டதேயாகும். 

இந்த இரண்டு கட்சிகளும் இனவாத அலையை உச்ச நிலைக்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது இதை எதிர்த்து நிற்கும் திராணியை இடதுசாரிகள் கொண்டிருக்கவில்லை. ஆனால் 1948க்குப் பின்னான இலங்கை அரசியற் பரப்பில் இடதுசாரிகளுக்கென்றொரு தனித்துவ அடையாளம் இருந்தது. இடதுசாரித் தலைவர்கள் சிங்கள – தமிழ் சமூக வெளியில் பேரடையாளத்தோடிருந்தனர். நம்பிக்கை ஒளியூட்டினர். 

ஆனால் இனவாத அலையானது கொந்தளிக்கும் உணர்ச்சியின் மையத்தில் சுழன்று கொண்டிருப்பது என்பதால், தவிர்க்க முடியாமல் இடதுசாரிகளும் அதனோடு சமரசம் செய்ய வேண்டியேற்பட்டது. அல்லது அதைக் கண்டும் காணாதிருக்க வேண்டியேற்பட்டது. அல்லது அதனோடு சேர்ந்து இழுபட வேண்டியிருந்தது. இதில் இவர்கள் தவிர்க்க முடியாமல் இரண்டு சிக்கல்களுக்குள்ளாகினர். ஒன்று அப்போது ஏற்பட்ட ரஸ்ய – சீன சார்புப் பிளவு. இரண்டாவது ஐ.தே.கவை எதிர்த்துத் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் சு.கவுடன் செய்து கொண்ட சமரசம். இரண்டுமே இடதுசாரிகளைப் பலவீனப்படுத்தின என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது. இவர்கள் பிரதான எதிரியாக ஐ.தே.கவையும் அதனுடைய மேற்குச் சாய்வையும் வெளியான அந்நியத்தனத்தையும் எதிர்க்க வேண்டும் என்று கருதினர். இதனால் சு.கவின் ஏனைய தவறுகள், போக்குகளுக்கு தவிர்க்க முடியாமல் உடன்பட்டனர். 

இரண்டாவது தமிழ்ச்சமூகத்தின் மீதான இனவன்முறை, இன ஒடுக்குமுறை போன்றவற்றில் சரியான நிலைப்பாட்டினை எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியதாகும். இதனால் தமிழ் இடதுசாரிகள் தனியான நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  

இலங்கையின் இடதுசாரித்துவம் மூன்றாக வகைப்பட்டது. ஒன்று, ரஸ்ய சார்புவாதிகள். இரண்டாவது சீனச் சார்புடையோர். மூன்றாவது இவர்களில் தமிழ் நிலைப்பட்டுச் சிந்திக்கும் இடதுசாரிய நிலைப்பட்டோர் ஆக. 

ஆகவே வரலாற்றுப் பொறியிலிருந்து மீள முடியாத சுழலுக்குள் இவர்கள் சிக்குண்டனர். இதன் விளைவாக வரலாற்றுத் தவறுகளுக்குட்பட வேண்டியதாயிற்று. இடதுசாரியம் ஒரு விஞ்ஞானத்துவம். அது தூரநோக்கோடு சிந்திக்கும் ஆற்றலையும் பண்பையும் கொண்டது என்பதை இவர்கள் தவற விட்டனர். இதில் தவறிழைத்தனர். இந்தத் தவறே இடதுசாரிகளை முன்னிலைச் சக்தியாக இன்னும் மாற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. 

ஆனாலும் ஒப்பீட்டளவில் இடதுசாரிகளின் இடம் பெரியதே. 

எப்படியென்றால் ஒரு போதுமே அவர்கள் பன்மைத்துவத்தை மறுதலிக்கவில்லை. சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகளை நிராகரித்ததில்லை. மட்டுமல்ல, இலங்கையின் இந்தளவுக்கான அரசியல் நிலைமைக்கு – கட்டறுந்த அதிகார வெறிக்கும் மக்கள் விரோதப் போக்குக்கும் எதிராக இடதுசாரிகளே இடையில் நிற்கிறார்கள். ஒரு தரப்பு ஆட்சியில் பங்கேற்று விவாதங்களை நடத்துகிறது. கட்டுப்படுத்துகிறது. மறுதரப்பு மக்கள் போராட்டங்களை நடத்துகிறது. 

இந்த இடத்தில் இடதுசாரிகளையும் இடதுசாரித்துவத்தையும் வகைப்படுத்திப் புரிந்து கொள்வது அவசியம். ஒன்று உண்மையில் இடதுசாரிகள் சமகால நிலவரங்களுக்குள் சிக்கப்படாது தெளிவாக அரசியலை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனாலும் சமகாலத்தை அவர்களால் புறக்கணிக்க முடியாத நிலை இருந்ததையும் புரிந்து கொள்வது அவசியம். இதில்தான் இடதுசாரிகளிடையே பிளவுண்டாகியது. இந்தப் பாராளுமன்ற அரசியல் என்பது தரகு முதலாளித்துவத்தை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடே என இடதுசாரிகளில் ஒருசாரார் தொடர்ந்தும் வலியுறுத்தினர். இன்னொரு சாரார் இதில் பங்கேற்று இடையீடு செய்யவில்லை என்றால் மிகப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்றனர். ஆகவே இடதுசாரிகளில் இரு நிலைப்பட்டோர் உண்டு என்பதை மனங்கொள்ள வேண்டும். 

ஒரு சாரார் ஆட்சி அதிகாரத்தோடு சமரசம் செய்தோர். ஒத்தோடிகளாக இருந்தோர். இருப்போர். இதற்கு சமகால உதாரணம் திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார போன்றோர். இன்னொரு கோணத்தில் அரச எதிர்ப்பு – புரட்சி என்ற கோதாவில் வந்த விமல் வீரவன்ஸ. 

ஏனையயோர் அரசை எதிர்த்து, அதனுடைய மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்துக் கொண்டிருப்போர். இங்கே உள்ள கவலையும் துரதிருஷ்டமும் என்னவென்றால் இவர்கள் பல அணிகளாக – குழுக்களாகச் சிதறுண்டிருப்பதே. உண்மையில் இது மக்கள் விரோதமானது. அரச அதிகாரத்துக்குச் சார்பானது. ஒடுக்கு முறைக்கு ஒத்துழைப்பது. தவறுகளுக்கு வழிவிடுவது. இதனால்தான் எதிர்த்தரப்பில் இருந்தாலும் சரி, ஆளுந்தரப்பில் (தேர்தல் அரசியலில்) இருந்தாலும் சரி இடதுசாரிகள் மீதான மதிப்புக்குறைந்தமைக்குக் காரணம்.  

கூடவே எழுந்தெரியும் இனவாத அலையை அணைக்கக் கூடிய எந்தச் சக்தியும் கருத்து நிலையும் தந்திரோபாயமும் இடதுசாரிகளிடம் இல்லை என்பதாகும். ஆனால் இடதுசாரித்துவம் என்பது விஞ்ஞானம் என விளங்கிக் கொள்வோமாயின் அதனிடம் –அந்த தரப்பிடம் அறிவு பூர்வமான – விஞ்ஞான பூர்வமான ஆற்றல் மிக்க சிந்தனையும் செயல் வழிமுறையும் அதற்கான வடிவமும் கிடைத்திருக்கும் அல்லவா. இங்கே அது நிகழவில்லை என்றால் இது அந்த அறிவுபூர்மான – விஞ்ஞான பூர்வமான தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்றே அர்த்தமாகும். இதைக்குறித்த உரையாடல்களும் விமர்சனங்களும் மதிப்பீடுகளும் விசாரணைகளும் நடக்கவில்லை என்றால் அது இடதுசாரித்துவத்தின் அடிப்படைக்கும் அதன் பண்புக்கும் எதிரானதே. 

அப்படியென்றால் இங்கே என்னதான் நடந்தது? என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? 

(தொடரும்) 

 

https://arangamnews.com/?p=5648

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா இடதுசாரிகளா? (பகுதி 02)

spacer.png

இடதுசாரிகளிடம் ஒரு பொதுவான குறைபாடுண்டு. அவர்கள் எப்போதும் தங்கள் சித்தாந்தத்திலே மிகக் கறாராக இருப்பர். பிறரோடு எந்த வகையான உடன்பாட்டுக்கும் வரமுடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பர். குறிப்பாக தங்களை ஒத்த ஏனைய இடதுசாரியக் கோட்பாட்டைக் கொண்டோரை அல்லது சமத்துவவாதிகளை அல்லது பெரியாரியவாதிகளையே மிகத் தீவிரமாக எதிர்ப்பர். அல்லது இவர்களுக்கிடையில் உடன்பாடு காணமுடியாமல் திணறுவர். 

இது ஒரு தீரா நோய்க்கூறும் மூடத்தனமுமாகும். கூடவே மக்கள் விரோதச் செயலுமாகும்.  

ஏனெனில், தங்களுக்கும் மக்களுக்கும் உண்மையான எதிரிகள் யார்? என்ற தெளிவிருந்தாலும் அந்த எதிரிகளை ஒன்றிணைந்தே முறியடிக்க வேண்டும். ஒன்றிணைந்து மக்கள் அரசியலை முன்னெடுப்பதன் வழியாகத்தான் இதை ஓரளவுக்கேனும் சாத்தியப்படுத்தலாம் என்று இவர்கள் சிந்திப்பதில்லை. இந்தக் குறைபாட்டினால் இவர்கள் சிற்றணிகளாக சிதறுண்டு கிடக்க வேண்டியிருக்கிறது. இதனால் இவர்கள் பொருட்படுத்தத் தக்கவர்கள் என்ற அடையாளத்தை இழந்து விடுகின்றனர். 

பதிலாக எதிர்த்தரப்பில் உள்ள வலது அரசியலை முன்னெடுக்கும் சக்திகள் (இனவாதிகளும் மதவாதிகளும்) தேவைக்கேற்ப தங்களை நெகிழ்த்திக் கொண்டு அவ்வப்போது ஒன்றிணைவுகளைச் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றி வெற்றியைப் பெற்று விடுகின்றனர். இந்த எளிய சூத்திரத்தைக் கூட இவர்கள் புரிந்து கொள்ள முற்படுவதில்லை. 

உண்மையில் மக்களுக்கான அதிகாரத்தைப் பெற வேண்டிய சக்திகள் அதற்கான பொறிமுறையையும் தந்திரோபாயத்தையும் வகுக்கத் தவறி, மக்களுக்குரிய வாய்ப்பைத் தவறவிடுகின்றனர். இதன் மூலம் வலது நிலைப்பட்ட ஆதிக்கச் சக்திகளுக்கு இடமளித்து விடுகின்றனர். மக்களை இவர்களும் இணைந்தே தோற்கடிக்கின்றனர். 

இதைப்பற்றிப் பேச முற்பட்டால் ஏராளம் விளக்கங்களை வரலாற்று ரீதியாக அடுக்கி நம்மைக் களைப்படைய வைப்பர். இவர்கள் கூறுவதில் உண்மை உண்டுதான். ஆனால் அந்த உண்மைகளை சுய விமர்சனமாக்கி, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, தவறுகளைக் களைந்து புதிய நிலையொன்றை எட்டும் மனப்பாங்கும் நோக்கும் வேண்டுமே. அதை ஏன் எட்டுகிறார்களில்லை?சுத்தமான தங்கத்தினால் ஒரு போதுமே ஆபரணங்களைச் செய்ய முடியாது. அதாவது, எந்த உயிரிய கோட்பாடும் மக்களுக்குப் பயன்படவில்லை என்றால் அது புனித சுலோகமாகவே சுருங்கி விடும். 

இந்தப் பலவீனமே இடதுசாரிகளைத் தொடர்ந்தும் பலவீனப்பட்டவர்களாக்கி வெற்றிகளுக்கும் அதிகாரத்துக்கும் மிகத் தொலைவில் நிறுத்துகிறது. 

இதற்கு ஏராளம் உதாரணங்கள் உள்ளன. இலங்கையில் இடதுசாரியக் கட்சிகள் பலவுண்டு. ஆனால் அவற்றிடையே ஒருங்கிணைப்பு எதுவும்  கிடையாது. எல்லாமே உடைந்துடைந்து சிறு சிறு முகாம்களாகவே உள்ளன. சரியாகச் சொன்னால் பெட்டிக்கடைகளைப் போன்றவை. ஏதோ பெயரளவில் கட்சி என்ற அடையாளத்தோடு இருப்பவை. அதற்கப்பால் பரந்துபட்ட அளவில் மக்களின் செல்வாக்கைப் பெற்றவையல்ல. அப்படிச் செல்வாக்கைப் பெறும் முனைப்பைக் கொண்டவையும் அல்ல. 

தமிழ்த்தரப்பிலேயே உடன்பாடு கொள்ளக் கூடிய, மக்கள் அரசியலை முன்னெடுக்கின்ற, சமத்துவமான, மாற்றுச் சிந்தனையைக் கொண்ட, இடது அரசியலை உள்ளடக்கமாகக் கொண்ட தரப்புகள் உண்டு. ஆனால் ஒருங்கிணைய முடியாமல் ஒவ்வொன்றும் தனித்துச் சிதறிக் கிடக்கின்றன. சின்னஞ்சிறிய பெட்டிக்கடைகளாக. 

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால், இவர்கள் தங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பைக் காணமாட்டார்கள். அந்தளவுக்குத் தூய்மைவாதம் பேசுவார்கள். அதேவேளை தனித்தனியாக நின்று எதிர்த்தரப்புகளை – மக்கள் விரோத அரசியலை முன்னேடுப்போரைத் திட்டுவார்கள். பொது எதிரி யார் என்று தெரிந்து கொண்டும் அந்த எதிரியை ஒன்றிணைந்து முறியடிக்காமல் தனித்தனியாகப் பிரிந்து நின்று பலமாக்குவர். இதனால் என்ன பயன் விளைந்திருக்கிறது? எதிர்தரப்பைப் பலப்படுத்தி விட்டு தாம் தொடர்ந்தும் பலவீனப்படுகின்ற நிலையிலேயே உள்ளனர். 

இதுவும் மக்கள் விரோதச் செயலே. அதாவது என்ன, ஏது என்று தெரிந்து கொண்டே அதைப் பொருட்படுத்தாதுவிடுவது. 

இதைச் சற்று வெளிப்படையாகவே சொன்னால், இன்றுள்ள தமிழ்த்தேசிய நிலைப்பட்ட அரசியற் கட்சிகளிடத்திலும் அந்தத் தளத்தில் நின்று செயற்படுவோரிடத்திலும் இடது அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டோருக்கு உடன்பாடில்லை. 

இதில் புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸக் கட்சி, சமத்துவக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, இலங்கைத்தமிழர் மகா சபை, ஈழவர் ஜனநாயக முன்னணி என்றுள்ள கட்சிகள் எல்லாம் மக்கள் அரசியலை ஜனநாயக மேம்பாட்டுடன் மேற்கொள்ளும் வகையில் சிந்திப்பவை. 

ஆனால் இவற்றுக்கிடையில் பொது உடன்பாடில்லை. 

இவ்வளவுக்கும் இவர்கள் பிரதிபலிப்பது சிறுதிரள் சமூகத்தினரிடத்தில்தான். பெருந்திரளோ வலதுசாரிய கவர்ச்சி அலைகளில் ததும்பிக் கிடக்கிறது. 

இதேவேளை தமிழ்த்தேசிய நிலைப்பட்ட (வலதுசாரிய) கட்சிகள் பிரிந்து பல அணிகளாக நின்றாலும் தேவையான சந்தர்ப்பங்களில் ஒன்றிணைந்து விடும். அல்லது ஒருங்கிணைந்து நிற்கும். இது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டுத்தான். ஆனால் வெற்றிக்காக – அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அவை இதைச் செய்கின்றன. இதன் மூலமாக அவை தமது இருப்பைத் தக்க வைப்பதுடன் மாற்றுச் சக்திகளுக்கு இடமளிக்காத நிலையை உருவாக்கி விடுகின்றன. 

தேர்தல்கால ஒற்றுமை, தேர்தற் கூட்டணிகள் போன்றவற்றை நீங்கள் இந்த இடத்தில் நினைவெடுத்துப் பார்த்துக் கொள்ளலாம். அதைப்போல பொது நெருக்கடி என்று சொல்லப்படும் அல்லது அவ்வாறு கருதப்படும் இடங்களிலும் அவை ஒன்றிணைந்து, ஒருமித்து நின்று செயற்படும். உதாரணம், நினைவு கூருதல்கள் மற்றும் அரச நெருக்கடிகளின்போது. 

இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு உதாரணத்தையும் சொல்லிச் செல்ல வேண்டும். 

இந்த இடதுசாரிகளில் ஒரு தரப்பினர் அரசுடன் இன்று இணைந்து செயற்படுகின்றனர். எல்லோரும் தனித்தனியாகவே இணைந்திருக்கின்றனர். ஒன்றிணைந்து ஒரு தரப்பாக அரசுடன் இணையவில்லை. அதைப்போல அரசாங்கத்தை ஆதரித்து நிற்கின்ற தமிழ்க்கட்சிகள் கூட தமக்குள் ஒரு இணைவைக் கொள்ளாமல் தனித்தனியாகவே அரசுடன் இணைந்திருக்கின்றன. இது தம்மைத்தாமே பலவீனப்படுத்திக் கொள்வதன்றி வேறென்ன? மட்டுமல்ல, அரசாங்கத்தோடு இணைந்தே இவை வேலை செய்கின்றன. அதுவும் ஒரே பிராந்தியத்திலேயே வேலை செய்கின்றன. அதுவும் பலமான எதிர்ப்புச் சூழலுக்குள் நின்றே வேலை செய்கின்றன. சிறுதிரளுக்குள்ளேயே வேலை செய்கின்றன. இப்படியெல்லாம் இருந்தும் தமக்கிடையில் ஒருங்கிணைவைக் கொள்ள முடியவில்லை என்றால்? அதன் அர்த்தம் என்ன? 

இதற்கு உதாரணம், வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவும் அங்கயன் இராமநாதனும். கிழக்கில் சந்திரகாந்தனும் (பிள்ளையானும்) வியாழேந்திரனும் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனும். 

இவர்களைப் பற்றி ஒரு நண்பர் சொன்ன சுவாரசியமான சம்பவம் ஒன்றைச் சொல்ல வேண்டும். இவர்களில் ஒருவருடைய வாகனம் வழியில் பழுதடைந்து நின்றிருக்கிறது. அதே வழியால் வந்த மற்றவர் என்ன ஏது என்று கேட்காமலே விலகிச் சென்றாராம். இந்த இடத்தில் தற்செயலாக யானை ஒன்று தாக்கியிருந்தால் கூட அதுதான் நல்லது என்று மற்றைய நண்பர் நினைத்திருப்பாராம் என்றார் நண்பர். 

இது வெறுமனே கேலியல்ல. ஆழமான வருத்தத்தின்பாற்பட்ட ஒரு நிலை. இந்தளவுக்குத்தான் உள்ளது நம்முடைய சூழலின் அரசியல் நாகரீகமும் மனமுதிர்ச்சியும். 

ஆக பகை மனநிலை என்பது எல்லோரிடத்திலும் நன்றாக முற்றிக் கிடக்கிறது. இதனால் உரையாடல்களுக்கு யாரும் தயாரில்லை. கட்சிகளின் பெயர்களுக்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கும் இடையில் எந்தத் தொடர்புமே இல்லை என்ற நிலையில்தான் எல்லாமும் உள்ளன. 

இப்படியான நிலையில் இடது – வலது என்ற வேறுபாடுகளை அதிகமாகக் காண முடியாது. 

ஆனால் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் பொதுவெளியிலும் பெருந்திரள் மக்களிடத்திலும் இடதுசாரிகள் இனவாதத்தை விதைக்கவில்லை என்பது. கூடவே அதிகாரத்தைக் கைப்பற்றாத காரணத்தினால் ஜனநாயக விரோத –மக்கள் விரோத ஆட்சியையோ அதிகாரத்தையோ பிரயோகிக்கவும் இல்லை என்பதாகும். 

ஆனால் உலக வரலாற்று அனுபவங்களில் இடதுசாரிகளும் உச்சமான அதிகாரத்தைப் பிரயோகித்திருப்பதைக் காண்கிறோம். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்ததை. எதிர்ப்பை அடக்குதல் அல்லது புரட்சிகர நடவடிக்கை என்ற நிலைப்பாடெடுத்து மிக மோசமான அடக்குமுறையைப் பிரயோகித்ததை. 

இதை ஒத்த இன்னொரு உதாரணம்,நமது விடுதலை இயக்கங்கள் உருமாறித் திசைமாறி மக்கள் விரோத, விடுதலைக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியமை. 

ஆகவே இந்த மாதிரி ஏராளமான அரசியல் பேருண்மைகள் நம்மிடம் பல கோணங்களில் சிதறிக் கிடக்கின்றன. 

இங்கே நாம் பேச வந்த இடதுசாரிகளா –இனவாதிகளா இலங்கையின் மீட்பர்கள் என்பதைப் பார்க்க முற்பட்டால், இடதுசாரிகள் பலவீனங்களின் மத்தியிலும் தவறுகளைச் செய்வதில் குறைவான பாத்திரத்தையே வகித்திருக்கின்றனர். அதிலும் ஒரு சாரார்தான் இதற்குப் பொறுப்புடையோர். ஏனைய தரப்பினருக்கு இந்தளவுக்குப் பொறுப்பில்லை. 

ஆனால் இனவாதிகளின் நிலை அப்படியல்ல. அவர்கள் இனவாதத்தை இரத்தத்தை ஊற்றியே வளர்த்தனர். அதுவும் எதிர்த்தரப்பின் இரத்தத்தை. வன்முறைகளையே தங்களுடைய அரசியலின் ஆயுதமாகப் பயன்படுத்தினர். பகைமையையும் முரணையுமே முதலீடாக்கினர். அமைதியை நிர்லமாக்கினர். சந்தேகத்தையும் அச்சத்தையும் எல்லோரிடத்திலும் விதைத்தனர். ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். சனங்களைப் பகடைக்காய்களாக்கினர். ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்தனர். உண்மைக்கு நிறமடித்தனர். 

(தொடரும்) 

 

https://arangamnews.com/?p=5831

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? –(இறுதிப்பகுதி)

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? –(இறுதிப்பகுதி)

—  சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

(இறுதிப் பகுதி) 

இடதுசாரி அரசியல் என்பது மக்கள் அரசியலாகும். மக்களையும் அவர்களுடைய நலனையும் உரிமைகளையும் மையப்படுத்திச் சிந்திப்பதாகும். விடுதலை என்பதை முழுமையான அளவில் கருதிச் செயற்படுவது, செயற்படுத்துவது. சுருக்கிச் சொன்னால் மக்களுக்காக அரசியற் கோட்பாடும் நடைமுறைகளும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது. கட்சியோ உறுப்பினர்களோ தலைமைகளோ அனைத்தும் மக்களுக்காக என்ற உறுதியுரைப்பையும் நிலைப்பாட்டையும் கொண்டது. ஆகவே மக்களுக்காகச் செயற்படுவது, அவர்களுக்காகத் தம்மை ஈந்து கொள்வது என்பதாகும். 

வலது அரசியல் இதற்கு நேர்மாறானது. கட்சிக்காக, அதன்  கோட்பாட்டுக்காக, அதன் தலைமைக்காகவே மக்கள் என்பதாக அது வியாக்கியானம் கொண்டிருப்பது. நடைமுறைகளும் விதிமுறைகளும் கூட இந்த அடிப்படையில்தான் இருக்கும். இருக்கின்றது. மக்களோ கட்சிக்காகவும் தலைமைக்காகவும் செயற்பட வேண்டும், தியாகம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டது. ஆனால் இதை அது உருத்தெரியாமல் வெவ்வேறு பொருத்தமான தந்திரோபாயச் சொல்லாடல்களால் மறைப்புச் செய்து தன்னைத் தளைக்க வைத்துக் கொள்கிறது. இதற்கே தேசியவாதமும் இனவாதமும் துணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

இலங்கையின் 1948க்குப் பின்னரான அரசியலானது வலது சக்திகளின் ஆதிக்கத்திலேயே இருந்துள்ளது. இடையிடையே இடதுசாரிகளின் பங்கேற்புடன் அவ்வப்போதான ஆட்சிகள் நடந்திருந்தாலும் அவையும் வலதுக்குக் கட்டுப்பட்டதாக அல்லது அதனோடு இசைவாக்கம் கொண்டதாகவே இருந்துள்ளது. 

ஆகவே தொகுத்துப் பார்த்தால், எழுபது ஆண்டுகளுக்கு மேலான ஆட்சி என்பது வலதுகளின் ஆட்சியாகவே இருந்துள்ளது. 

இந்த ஆட்சிக் காலத்தில்தான் பேரழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இனமுரண் உச்சமடைந்திருக்கிறது. கடன்பழு கூடியுள்ளது. பல லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு அகதிகளாகப் பெயர்ந்திருக்கின்றனர். வெளிச் சக்திகளின் தலையீடுகள் அதிகரித்த நிலை ஏற்பட்டுள்ளது. நாடு ஜனநாயகத்திலும் பொருளாதாரத்திலும் வீழ்ச்சிடையடைந்துள்ளது. லட்சக்கணக்கானோர் அங்கவீனர்களாகியுள்ளனர். 

ஒரு கணம் கண்களை மூடி நியாயமாகச் சிந்தித்தால் மக்கள் வழங்கிய ஆணையை இவர்கள் எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்று தெளிவாகத் தெரியும். நாட்டை அப்படியே கெடுத்துக் குட்டிச் சுவராக்கியுள்ளனர். 

அப்படியென்றால் இந்தத் தரப்பு தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்தில் இருக்கத் தகுதியற்றது. இதை இவர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் வரலாறு இதை உணர்த்தி வருகிறது. 

இதனால்தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மிகப் பின்னடைவைச் சந்திக்க வேண்டி வந்தது. இது வரலாற்று விதியாகும். ஆனாலும் அதை மீண்டும் மிகக் கடினமாகக் கட்டியெழுப்பினார்கள். இருந்தும் இப்பொழுது அது மறுபடியும் உடைந்து நலிந்துள்ளது. 

பதிலாக அது பொதுஜன பெரமுன என்ற ஒரு புதிய லேபிளைக் கொண்டுள்ளது. ஆனால் அடிப்படையில் இரண்டும் ஒன்றே. அதே ஆட்கள், அதே கோட்பாடு, அதே நிலைப்பாடு, அதே மாதிரிகள் என. 

இதே கதையும் கதியும்தான் ஐ.தே.கவுக்கும். ஐ.தே.க இப்பொழுது உடைந்து நொருங்கியுள்ளது. சு.க.வுக்கு எப்படிப் பொது ஜன பெரமுனவோ அப்படியே ஐ.தே.கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி. 

இவற்றுக்கிடையில் என்ன வித்தியாசம் என்று சத்தியமாக யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். 

இது நாடகமன்றி வேறென்ன? ஏமாற்றன்றி வேறேது? 

இப்படித்தான் தமிழ்த்தரப்பிலும். தமிழரசுக் கட்சி சரியில்லை என்று (அதாவது அதன் மீது மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர் என்ற நிலையில்) தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய லேபிளை ஒட்டிக் கொண்டது. 

இதைப்போலத்தான் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற மாதிரி புதிய லேபிள்களை உருவாக்கியிருப்பது. இடையில் தமிழ் மக்கள் பேரவை என்ற இன்னொரு தில்லாலங்கடி… 

அடிப்படையில் இவற்றுக்கிடையில் எந்த வேறுபாடுகளும் இல்லை. அதே குணவியல்பு. அதே ஆட்கள். அதே பம்மாத்து மற்றும் மக்கள் விரோத தன் மைய அரசியலும். 

மட்டுமல்ல, தமிழ்த்தரப்பிலும் இந்தச் சக்திகள்தான் மாறி மாறி அதிகாரத்தில் இருந்துள்ளன. மக்களிடம் செல்வாக்கைப் பெற்றிருந்தன. 

அப்படியிருந்தும் மக்களுக்கு ஏதாவதொரு விமோசனத்தையோ, சிறிய மாற்றத்தையேனுமோ செய்திருக்கின்றனவா? …இல்லையே! 

பதிலாக முரண்பாட்டையே ஊக்கி வளர்த்துள்ளன. 

மக்களின் வாழ்க்கையைக் கீழிறக்கியுள்ளன. 

சமூகங்களைப் பிளவுற வைத்துள்ளன. 

அரச ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற கோதாவில் மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி விட்டுத் தாம் மட்டும் அரசுடன் இணைந்த ரகசிய நடவடிக்கைகளில் கொழுத்திருக்கின்றனர். 

ஆகவேதான் இவை மக்களுக்கு எதிரான சக்திகள் என்கிறோம். 

இன்னும் பத்து ஆண்டுகளல்ல, ஐம்பது ஆண்டுகளை இவர்களிடம் கொடுத்தாலும் இவர்களால் ஒரு சிறிய மாற்றத்தையும் உருவாக்க முடியாது. அதையும் கரியாக்கி விடுவார்கள். 

எனவேதான் இவர்களை – இந்தச் சக்திகளை நாம் கழித்து விட வேண்டியுள்ளது. கழித்துக் குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட வேண்டும். 

ஆமாம், வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள். 

பதிலாக இலங்கையின் பல்லினத் தன்மைக்கும் பன்மைத்துவச் சூழலுக்கும் அமைய புதிய மக்கள் சிந்தனைப் போக்குடைய – இடது நிலைப்பட்ட தரப்பினரே ஆட்சிக்கு வர வேண்டும். 

அவர்களே மாற்று அரசியற் பண்பாட்டை உருவாக்கக் கூடியவர்கள். மக்கள் அரசியலைச் சிருஸ்டிக்கக் கூடியவர்கள். 

இதுவரையான வரலாற்றில் அவர்கள் –அந்தச் சக்திகள் – மையத்தில் நின்று ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கமுடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆட்சியதிகாரத்தில் இருந்தோரை ஓரளவுக்கேனும் நெறிப்படுத்தியது இடதுசாரிகளின் மக்கள் நிலைப் போராட்டங்களேயாகும். 

இப்போது கூட ஜனநாயகத்துக்கும் உரிமைகளுக்கும் சமத்துவத்துக்கும் தேச நலனுக்கும் நாட்டின் இறைமைக்குமாக மெய்யாகவே போராடிக் கொண்டிருப்பது இடதுசாரிகளே. 

விலையேற்றத்திற்கு எதிராக, தொழில் உரிமைகளுக்காக, சம்பள உயர்வுக்காக, இயற்கை வளங்களின் சுரண்டலுக்கும் அழிப்புக்கும் எதிராக, ஜனநாயகத்துக்காக, அதிகாரக் குவிப்புக்கு எதிராக, வெளிச்சக்திகளின் தலையீடுகளை எதிர்ப்பதாக, அரசியல் உள் நோக்கமுடைய கைதுகள், கொலைகள், தவறான அரசியல் நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிராக என இடதுசாரிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். 

இவர்களில் ஒரு சிறிய தரப்பே ஆட்சியில் – அரசோடு இணைந்து பங்கேற்கிறது. 

ஏனைய இடது சக்திகள் அத்தனையும் மக்களோடு நின்று அரசை நெறிப்படுத்தவும் ஆட்சியைச் சீரமைக்கவும் உரிமைகளை நிலை நிறுத்தவும் போராடுகின்றன. 

கொழும்பிலும் கண்டி, ஹற்றன், யாழ்பாணம் போன்ற நகரங்களிலும் நடக்கும் சிவப்புப் போராட்டங்களுக்கு என்றொரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. 

இப்போது கூட கொழும்பு – கோட்டையிலும் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலும் இந்தச் சிவப்புகளின் ஆக்ரோஸமான குரலை நீங்கள் கேட்கலாம். 

மழையிலும் வெயிலிலும் நின்று இவர்கள் கூவுகிறார்கள். எதற்காக? யாருக்காக? எந்த அதிகாரமும் இல்லாத இவர்களுடைய இந்தக் குரல்தான் அதிகாரத்தையே ஆட்டுகிறது. 

எனவேதான் சொல்கிறோம், அரசியல் வரலாற்றில் இடதுகளின் பாத்திரம் என்பது வலுவானது. வரலாற்று முக்கியத்துவமுடையது. மக்கள் இன்று அனுபவிக்கின்ற பாதி அரசியல் உரிமைகள் மற்றும் மக்கள் நலன்கள் எல்லாமே இடதுகளினால் உருவாகியவையே என்று. 

இதை யாராலும் மறுத்துரைக்க முடியாது. 

ஆகவே இனியாவது இலங்கைத் தீவை ஒரு புதிய நிலையை நோக்கி நகர்த்த வேண்டும் என்றால், இலங்கை ஒரு பல்லின சமூகங்கள் வாழும் நாடு என்ற வகையில் பன்மைத்துவப் பண்பையும் அதற்கான ஜனநாயக விழுமியங்களையும் உருவாக்கி வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு இடதுசாரிகளே பொருத்தமானவர்கள். 

இனவாதிகளோ மதவாதிகளோ அல்ல. 

இடதுசாரிகளே சுதேசியப் பொருளாதாரத்தைக் குறித்துச் சிந்திக்கக் கூடியவர்கள். நவீனத்தைக் குறித்த புரிதலைக் கொண்டவர்கள். விரிந்த சிந்தனையை உடையவர்கள். நெறிமுறைகளை மீறத் துணியாதவர்கள். இதுவரையான வரலாற்றுப் பங்களிப்பிலும் பாத்திரத்திலும் அவர்களுடைய அடையாளத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். 

இதை விளங்கிக் கொள்ளவோ விளங்கியும் ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை என்றால் அழிவு அரசியலையே நாம் விரும்புகிறோம். தொடரப்போகிறோம் என்றே அர்த்தமாகும். 

அழிவு அரசியற் சக்திகள் எத்தனை தடவை வென்றாலும் எதையும் புதிதாக ஆக்கப் போவதில்லை. வரலாற்று நிரூபணமும் அதுவே. 

மீட்பர்கள் யார்? என்று அறியாமல் இன்னும் எத்தனை காலம்தான் நெருப்பில் எரிவது? குழிக்குள் வீழ்வது? 

ஆனால் இடதுகளும் தம்மை மீள் பரிசீலனை செய்து மீள்நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வரலாற்றையும் அரசியலையும் சமூகப் பொருளாதாரவியலையும் விஞ்ஞான பூர்வமாக விளங்கிச் செயற்படக் கூடிய இடதுசாரிகள் தமக்குள் பிளவுண்டு எதிர்த்தரப்புகளுக்கு இடமளிப்பது மக்கள் விரோதமாகும்.  

(முற்றும்) 

 

https://arangamnews.com/?p=5913

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.