Jump to content

இலங்கையில் உல்லாசப் பயணி தாக்கப்பட்டதன் விளைவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உல்லாசப் பயணி தாக்கப்பட்டதன் விளைவு

இலங்கையில் உல்லாசப் பயணி தாக்கப்பட்டதன் விளைவு

 — வி. சிவலிங்கம் —
 
*  உல்லாசப் பயணத்துறை வளர்ச்சியடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம்.
* பாதிப்படைந்த பெண்கள் மேலும் நீதிமன்றத்தில் அவமானப்படுத்தப்படும் அவலங்கள்.
* உல்லாச பயணத்துறை கம்பனிகளும் அவற்றின் பயணிகளின் பாதுகாப்பும் 

 
கடந்த வாரம் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் இலங்கையிலுள்ள பெந்தோட்ட (Bentota) உல்லாசப் பயண விடுதியில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டது தொடர்பாக கடந்த 11 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் அப் பெண்மணிக்கு சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் மிகவும் பிரசித்தி வாய்ந்த உல்லாச பயண முகவர் நிறுவனம் ஒன்று இலங்கைக்கென சகல அம்சங்களையும் உள்ளடக்கிய (Package holiday) உல்லாச பயண ஒழுங்குகளைச் செய்திருந்தது.

நடந்தது என்ன?
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது கணவருடன் இவ் உல்லாசப் பயணக் கம்பனி மூலமாக இலங்கையில் தமது விடுமுறைக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். தற்போது வயது 40ஐ எட்டியுள்ள அப் பெண்மணி கடந்த 2010ம் ஆண்டு யூலை மாதம் பென்தோட்டை உல்லாச பயணிகள் விடுதியில் அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்னர் சென்றிருந்தார்.

அவர் 2010ம் ஆண்டு யூலை மாதம் 17ம் திகதி அவ் விடுதியின் கீழ் பகுதிக்கு சென்ற வேளையில் அங்கு மின்சாரம் பழுது திருத்தும் ஒருவர் தனது சீருடையை அணிந்தபடி நின்றிருந்தார். அவ் விடுதியின் வரவேற்பு மையத்திற்குச் செல்லும் குறுக்கு வழியைக் காண்பிப்பதாகக் கூறி ஓர் அறைக்குள் அடைத்து அவர் பாலியல் கொடுமை புரிந்து தாக்கியும் உள்ளார். அதன் விளைவாக அப் பெண் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டார்.

வழக்கு விபரம்
இவ் வழக்கு மிக முக்கியமான அம்சங்களை வெளிப்படுத்தியிருப்பதை வாசகர்களுக்குத் தரும் நோக்கிலேயே இவ் விபரங்கள் தரப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட பெண்மணியின் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் விடுமுறை ஒழுங்குகளை மேற்கொள்ளும் கம்பனி அப் பெண்மணியை வரவேற்பு மையத்திற்கு குறுக்கு வழியில் அழைத்துச் செல்லும் கடமையையும் தனது பயண ஒழுங்குகளில் செய்துள்ளதால் அதற்கான பொறுப்பை அக் கம்பனி பொறுப்பேற்க வேண்டும் என்பதே வாதமாக அமைந்தது.

பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் உல்லாச பயணங்களை ஒழுங்கு செய்யும் கம்பனிகள் வெறுமனே தங்கும் இடம், உணவு, போக்குவரத்து என்பது மட்டுமல்ல, தனது வாடிக்கையாளர்கள் அந்த உல்லாச பயணத்தை நியாயமான விதத்தில் அனுபவிப்தையும், அதற்கான பாதுகாப்பையும் உறுதி செய்வது அவசியம் எனத் தீர்ப்பளித்திருந்தது.

பயணத்துறை கம்பனியின் தொடர்ச்சியான இழிவுபடுத்தல்கள்
நீதிமன்றத் தீர்ப்பினால் ஓரளவு மகிழ்ச்சியை அப் பெண்மணி தெரிவித்த போதிலும் கடந்த 11 வருடங்களாக இக் கம்பனி ஊடகங்களில் வழக்கை நடத்தியிருப்பதாகவும், தனது விபரங்களை முகநூல் வழியாகப் பெற்று தம்மை சமூக வலைத் தளங்களில் மிகவும் அவமானப்படுத்தியதாகவும், அதன் காரணமாக வைத்திய ஆலோசனைகளைப் பெறும் நிலைக்குத் தாம் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தம்மைப் பொறுத்த வரையில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திலும் பாலியல் விபரங்களை மீளவும் விசாரித்து மேலும் மன நோயை அதிகரித்த நிலைக்குத் தள்ளுவதாகத் தெரிவித்தார். இந்த வழக்கு என்பது அக் கம்பனி அந்தச் சம்பவத்திற்கு முன்னரும், பின்னரும் தம்மைப் பாதுகாக்கத் தவறியுள்ளது என்பதே தமது குற்றச்சாட்டு என்றார். தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ளாது அக் கம்பனி தம்மை நீதிமன்றத்தில் மேலும் மேலும் துன்புறுத்தியுள்ளது என்றார்.

இந்த வழக்கானது இக் குற்றச் செயலுக்கான சட்டப்படியான பொறுப்பாளர் யார்? என்பது குறித்ததாகும். ஆனால் அக் கம்பனியின் சட்டத்தரணிகள் தனது முகநூல் விபரங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியான விபரங்கள், தனது வைத்திய சிகிச்சை விபரங்கள், உளவியல் தாக்கங்கள் தொடர்பான விபரங்கள் போன்ற பல விபரங்கள் பற்றிய கேள்விகளே நீதிமன்றத்தில் தொடர்ந்தன. இவை யாவும் இக் குற்றச் செயல்களுக்குப் பின்னதான தனது உடல்நிலை பாதிப்புற்ற வேளையில்தான் நிகழ்ந்தன.

பாலியல் குற்றச் செயல்கள் காரணமாக பாதிப்புறும் மக்கள் தொடர்ந்தும் இவ்வாறான கொடுமைகளை அனுபவிக்கின்ற நிலமைகள் காணப்பட்ட போதிலும் அக் கம்பனி உண்மையில் தனது செயற்பாடுகளில் உள்ள தவறுகளைக் கண்டறிந்திருக்க வேண்டும். இந்த தீர்ப்பின் மூலம் அக் கம்பனி தனது வாடிக்கையாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பு, அவர்களுக்கான உதவிகள் என்பதில் எதிர்காலத்தில் கவனம் கொள்வார்கள் என நம்புகிறேன் என்றார். ஆனால் என்னைப் போன்று இதர பெண்களும் இவ்வாறு மிகவும் தளராத எண்ணத்துடன் நீதியைப் பெற இவ்வாறு செயற்படுவார்களா? என்பது சந்தேகமே எனவும் தெரிவித்தார்.

இப் பெண்மணி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கருத்து
சர்வதேச கடுமையான காயங்களுக்காக வாதாடும் சிறப்பு புலமை மிக்க அந்த வழக்கறிஞர் தெரிவிக்கையில் இப் பெண் அனுபவித்த துன்பங்கள் அப் பெண்ணை மட்டும் பாதிக்கவில்லை எனவும் முழுமையான குடும்பமே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அதன் தாக்கத்தை அவர்கள் மிகவும் குறைத்தே மதிப்பிட்டிருந்தார்கள். கடந்த ஒரு தசாப்தமாக அவர்களின் வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை வரவேற்கின்ற போதிலும் நடந்தவை அவற்றை ஆற்றுப்படுத்தப்போவதில்லை.

இந்த விடுமுறை காலத்தில் நிகழ்ந்த சம்பவம் என்பது அவரால் எதிர்பார்க்கப்பட்ட சம்பவம் அல்ல. இச் சம்பவம் விடுமுறைக்கான ஏற்பாடுகளின் தரத்தை விட மிகக் குறைந்ததாகவே உள்ளது.

இத் தீர்ப்பின் பரந்த தாக்கங்கள்
இத் தீர்ப்பு உல்லாச பயண ஒழுங்குகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு முக்கியமான ஒன்றாகும். அவர்களின் சட்ட அடிப்படையிலான பொறுப்புகளை இத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது. அத்துடன் அவ்வாறான நிறுவனங்களையும் பாதுகாக்க உதவியுள்ளது.

இத் தீர்ப்பு தமது பொறுப்பிலுள்ள பயணிகளின் பாதுகாப்பு இந்த உல்லாச பயணங்களை ஏற்பாடு செய்யும் கம்பனிகளின் பொறுப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் உல்லாசப் பயணத்துறை என்பது மிக முக்கியமான வருமானம் ஈட்டும் துறை என்பதால் உல்லாசப் பயணிகளின் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது என்பதை அரசு மட்டுமல்ல, உல்லாச பயணிகளும், அவர்களை விருந்தினராகக் கொள்ளும் அந் நாட்டு மக்களும் அப் பயணிகளை மிகவும் கௌரவமாக நடத்துவது நாட்டின் கௌரவத்திற்கும், வருமானத்திற்கும் பயனுள்ளதாக அமையும் என்பதை இத் தீர்ப்பு தந்துள்ளது. 

 

https://arangamnews.com/?p=5842

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.