Jump to content

கோயில்களில் தமிழில் அர்ச்சனை: அமைச்சர் சேகர்பாபு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்களில் தமிழில் அர்ச்சனை: அமைச்சர் சேகர்பாபு

spacer.png

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பிராட்வேயில் நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 1,000 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும். இதற்காக 47 கோயில்களைத் தேர்வு செய்து ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என விளம்பரப் பலகைகள் வைக்கப்படும். முதற்கட்டமாக புதன் அல்லது வியாழக்கிழமை அன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படும்.

அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் தகவல் பலகையில் வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புவோர் அந்த அர்ச்சகரைத் தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.

முதலில் பெரிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறை தொடங்கப்பட்டு, பின்பு சிறிய கோயில்களுக்கும் அம்முறை விரிவுப்படுத்தப்படும். அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடிய அர்ச்சகர்களை முறையாகப் பயன்படுத்தி அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் பெரிய கோயில்களில் ஆடிப் பெருக்கு விழாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதங்களில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள கோயில்களுக்கு மக்கள் வருவது வழக்கம். அதன்மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில்களில் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குப் பிறகு கோயில்களைத் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என்று கூறினார்.

முன்னதாக, சென்னை மாநகராட்சி சார்பில் திரு.வி.க.நகர் மண்டல அலுவலக வளாகத்தில் ஒரு வார கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தின் தொடக்க விழாவை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

https://minnambalam.com/politics/2021/08/02/11/tamil-chanting-in-temples-from-next-week-says-minister-sekarbabu

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் அர்ச்சனை: அறிவிப்புப் பலகையை வெளியிட்ட முதல்வர்!

 
spacer.png

கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்த நிலையில் இதுதொடர்பான அறிவிப்புப் பலகையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்பது பலரது விருப்பமாகவும் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சேகர்பாபு கோயில் நிலங்களை மீட்பது, கோயில்களில் ஆய்வு மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்று தொடங்கப்படும் இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 47 கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தத் திட்டம் ஆகஸ்ட் 6ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 47 திருக்கோயில்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புப் பலகையை முதல்வர் நேற்று வெளியிட்டார்.

திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு அதில் அர்ச்சகர்களின் பெயர், செல்பேசி எண் ஆகியவை பக்தர்களுக்குத் தெரிவிக்கப்படும் வகையில் குறிப்பிடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படும் என்று அறிவிப்புக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

https://minnambalam.com/politics/2021/08/04/10/notice-board-released-by-mk-stalin-for-tamil-archana-in-temples

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கடவுளிடமிருந்து ரிப்பளையும் தமிழில் தான் வருமோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடக்கம்!

 
spacer.png

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (ஆகஸ்ட் 5) மாலை தொடங்கி வைத்தார்.

திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தினசரி கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

முக்கிய நடவடிக்கையாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கோயில் நிலங்கள் மீட்பு, கோயில் நிலங்களில் கல்வி நிலையங்கள், கோயில் சொத்துகள் குறித்த விவரங்களை அரசு இணையதளங்களில் வெளியிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில், தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை நடைமுறைப்படுத்தும் வகையில், கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு இருவரும் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற அறிவிப்புப் பலகையை வெளியிட்டனர்.

அதன்படி முதற்கட்டமாக அறநிலையத் துறைக்குச் சொந்தமான 47 கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “1971ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்தில் அப்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

1974ஆம் ஆண்டு இது தொடர்பாகச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. விரும்புகிறவர்கள் மட்டும் தமிழில் அர்ச்சனை மேற்கொள்ளலாம், இதர மொழிகளில் வழிபாடுகள் செய்வதை இத்திட்டம் தடுக்காது என்று 1998இல் நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தின்போது கலைஞர் தெளிவுபடுத்தினார்.

பக்தர்கள் தங்கள் வழிபாடுகளுக்கு உகந்த மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பெரும்பான்மை மக்களின் விருப்பம் எதுவோ அதன்படி அரசு செயல்படும். அனைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவது அரசின் கடமை. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் மற்றும் எந்த மதத்தினரின் மனமும் புண்படாமல் முதலமைச்சர் முடிவு எடுப்பார்.

536 கோயில்களில் அன்னைத் தமிழ் அர்ச்சனை திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அனைத்துக் கோயில்களுக்கும் தமிழில் 14 போற்றி புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளன” என்று தெரிவித்தார்

 

https://minnambalam.com/politics/2021/08/06/8/archanais-in-temples-will-be-done-in-tamil

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

புரிகிற மாதிரி  இருந்தால்  நல்லது தானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2021 at 10:05, putthan said:

அப்ப கடவுளிடமிருந்து ரிப்பளையும் தமிழில் தான் வருமோ....

சமஸ்கிருதத்திலை பூசையாக்கேக்கை ரிப்பளை  ஏதும் வருதா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம்போல் திமுகவின் பிரட்டு அரசியல் கொடுத்த வாக்குறுதிகள் நிறவேற்றமுட்டியவில்லை இப்படி குத்துகாரணம் அடித்து விளையாடுவினம் .

கோயில்களில் இரண்டுவிதமான வருமானம் அய்யர் மாருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2021 at 03:36, குமாரசாமி said:

சமஸ்கிருதத்திலை பூசையாக்கேக்கை ரிப்பளை  ஏதும் வருதா? :cool:

பேஷா வருதே.....ஆனால் புரியவில்லை...🤣

Link to comment
Share on other sites

  • 1 month later...
On 6/8/2021 at 19:36, குமாரசாமி said:

சமஸ்கிருதத்திலை பூசையாக்கேக்கை ரிப்பளை  ஏதும் வருதா? :cool:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.