Jump to content

பெலருஸ் ஒலிம்பிக் வீராங்கனை சிமானுஸ்காயாவுக்கு போலாந்தின் மனிதாபிமான விசா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெலருஸ் ஒலிம்பிக் வீராங்கனை சிமானுஸ்காயாவுக்கு போலாந்தின் மனிதாபிமான விசா

பெலருஸ் ஒலிம்பிக் வீராங்கனை கிரிஸ்டினா சிமானுஸ்காயாவுக்கு போலாந்து அரசாங்கத்தினால் மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் திங்களன்று உறுதிபடுத்தினார்.

E7tRCEcWEAgIF1t.jpg

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய பயிற்சியாளர் ஊழியர்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து தனது அணியின் விருப்பத்திற்கு மாறாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 24 வயதான சிமானுஸ்காயா  ஞாயிற்றுக்கிழமை டோக்கியோவிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார்.

பெலருஸுக்குத் திரும்பினால் தன் பாதுகாப்பு குறித்து அஞ்சுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அவர் பின்னர் ஜப்பானிய காவல்துறையின் பாதுகாப்பை நாடியதுடன், திங்களன்று ஜப்பானின் தலைநகரில் உள்ள போலந்தின் தூதரகத்திற்கு சென்றார்.

தூதரகத்தில் டோக்கியோவில் உள்ள போலந்து இராஜதந்திரிகளுடன் சிமானுஸ்காயா நேரடியாக தொடர்புகளை பேணி கலந்துரையாடிய பின்னர், அவருக்கு மனிதாபிமான விசா அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளதாக போலாந்தின் துணை வெளியுறவு அமைச்சர் மார்சின் பிரைடாக்ஸ் கூறினார்.

அத்துடன் சிமானுஸ்காயா விளையாட்டு வாழ்க்கையை தொடர போலாந்து தன்னாலான தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

https://www.virakesari.lk/article/110615

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டோக்யோ ஒலிம்பிக்: கடைசி சர்வாதிகாரியிடம் இருந்து தப்பிய பெலாரூஸ் வீராங்கனை - என்ன நடந்தது?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
வீராங்கனை

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

டிமனோவ்ஸ்கயாவுக்கு போலாந்து மனிதாபிமான விசா வழங்கியுள்ளது

கட்டாயப்படுத்தி தாய்நாட்டுக்கு அனுப்புவதாக புகார் கூறிய பெலாரூஸ் நாட்டைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனைக்கு போலாந்து அரசு, 'மனிதாபிமான விசா' வழங்கியிருக்கிறது.

ஜப்பானிய காவல்துறையின் பாதுகாப்பில் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த 24 வயதான கிறிஸ்டினா டிமனோவ்ஸ்கயா, டோக்யோவில் உள்ள போலந்து நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பயிற்சியாளர்களை விமர்சித்ததால் தன்னை வலுக்கட்டாயமாக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக அவர் புகார் கூறியிருந்தார்.

தனது பாதுகாப்பு குறித்தும் அவர் அச்சம் தெரிவித்திருந்தார். உணர்ச்சி வயப்படும்நிலை காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக பெலாரூஸ் தரப்பில் கூறப்படுகிறது.

நேற்று பிபிசியிடம் பேசிய அவர், தாம் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார். ஆனால் கூடுதல் விவரங்களை தர வேண்டாம் என்று தனக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

1994 ஆம் ஆண்டு முதல் அலெக்சாண்டர் லுகாஷென்கோவால் ஆளப்படும் பெலாரூஸ் மீது, இந்த சம்பவம் மீண்டும் கவனத்தைக் குவியச் செய்திருக்கிறது. கடந்த ஆண்டு, அவரது சர்ச்சைக்குரிய மறுதேர்தலுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் நடந்தன. கிளர்ச்சி செய்த மக்கள் பாதுகாப்புப் படையினரால் ஒடுக்கப்பட்டனர்.

போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பெலாரூஸ் எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக போலந்தில் நடந்த போராட்டம் (கோப்பு)

அந்தப் போராட்டங்களில் பங்கேற்ற சிலர் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள். அவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது. தேசிய அணிகளில் இருந்து நீக்கப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

டிமனோவ்ஸ்கயா டோக்யோவில் உள்ள போலாந்து தூதரக அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாக அந்நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் மார்சின் பிரைடாக்ஸ் கூறியுள்ளார்.

"அவரது விளையாட்டு வாழ்க்கையைத் தொடர தேவையான அனைத்தையும் போலாந்து செய்யும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டோக்யோவில் இருந்து டிமனனோவ்ஸ்கயா அடைக்கலம் கோரியிருக்கும் அதே வேளையில் அவரது கணவரும் பெலாரூஸ் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். உக்ரைன் தலைநகர் கியேவுக்குச் சென்றுள்ள அவர் போலாந்து சென்று டிமனோவ்ஸ்கயாவுடன் சேருவார் என்று பெலாரூஸ் நாட்டு எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.

எனினும் போலாந்து அரசு மனிதாபிமான விசா வழங்க முடிவெடித்திருப்பது குறித்து பெலாரஸ் இன்னும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் போலந்தின் முடிவை வரவேற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரலின் செய்தித் தொடர்பாளரான நபிலா மஸ்ரலி இது குறித்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

"டிமானோவ்ஸ்கயாவை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அனுப்ப பெலாரஸ் மேற்கொண்ட முயற்சி லுகாஷென்கோவின் ஆட்சியில் நடக்கும் அடக்குமுறையின் கொடூரத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு" என்று கூறியுள்ளார்.

வீராங்கனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

டோக்யோவில் உள்ள போலந்து நாட்டு தூதரகத்தில் டிமனோவ்ஸ்கயா தற்போது இருக்கிறார்

"நாங்கள் கிரிஸ்டினா டிமனோவ்ஸ்காயாவுக்கு எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு ஆதரவளித்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைப் பாராட்டுகிறோம். அவருக்கு மனிதாபிமான விசா வழங்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம்" என்று ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் மஸ்ரலி தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை நடந்த 200மீ ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்பதற்காக டோக்யோ வந்திருந்தார் டிமனோவ்ஸ்கயா. திடீரென 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பங்கேற்குமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில், தொடர் ஓட்டத்தில் தன்னுடன் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு போதிய தகுதி இல்லை என்று அவர் சமூக வலைத்தளத்தில் காணொளி மூலம் புகார் தெரிவித்திருந்தார்.

இந்த காணொளியால் பெலாரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அரசுத் தொலைக்காட்சி மூலம் டிமனோவ்ஸ்கயா விமர்சனத்துக்கு உள்ளனார். அவருக்கு "குழு மனப்பாங்கு" இல்லை எனத் தொலைக்காட்சியில் கூறப்பட்டது.

திடீரென தனது அறைக்கு வந்த பெலாரூஸ் அதிகாரிகள் உடனடியாக உடமைகளை எடுத்துக் கொண்டு விமான நிலையத்துக்கு வருமாறு உத்தரவிட்டதாக டிமனோவ்ஸ்கயா கூறினார். இதைத் தொடர்ந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் உதவி கோருவதாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டார்.

"கட்டாயப்படுத்தி என்னை ஜப்பானை விட்டு வெளியேற்ற முயற்சிக்கிறார்கள்" என்று பெலாரூஸ்யன் ஸ்போர்ட்ஸ் சோலிடாரிட்டி ஃபவுண்டேஷனின் என்ற டெலிகிராம் குழுவில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில் அவர் கூறினார். இந்தக் குழு கடந்த ஆண்டு பெலாரூஸ் அரசை விமர்சிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டது.

"பெலாரூஸில் உள்ள தனது குடும்பத்தின் மீது அடக்குமுறை ஏவப்படலாம் என அவர் அஞ்சுகிறார். இதுதான் இப்போது அவருக்கு முக்கியமான கவலை." என்று அந்த டெலிகிராம் குழுவின் உறுப்பினரான அனடோல் கோட்டாவ் பிபிசியிடம் கூறினார்

"அவரது உணர்ச்சி நிலை மற்றும் உளவியல் காரணங்களுக்காக டிமானோவ்ஸ்கயா அணியில் இருந்து நீக்கப்பட்டார்" என்று பெலாரூஸ்ய ஒலிம்பிக் கமிட்டி கூறுகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று அவருடன் பேசியபோது அவர் மிகவும் கவலையாகத் தெரிந்தார் என்று அணியின் பயிற்சியாளர் யூரி மொய்செவிக் கூறியுள்ளார்.

வீராங்கனை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஜூலை 30-ஆம் தேதி நடந்த 100மீ தகுதிப் போட்டியில் ஓடிய பெலாரூஸ் நாட்டின் டிமனோவ்ஸ்கயா (இடது)

"நான் அவருடன் அமைதியாக உரையாட முயன்றேன்" என்று கூறிய மொய்செவிக் "பின்னர் அவர் பேசுவதை நிறுத்தி விட்டு பின்னர் மீண்டும் தொடங்குவதைக் கவனித்தேன், அதன் பிறகு தொலைபேசி எடுத்துப் பார்த்தார். ஏதோ நடப்பதாக உணர்ந்தேன்" என்று தெரிவித்தார்.

பெலாரூஸ்ய குழுவுக்கு எதிராக சில ஒழுங்கு நடவடிக்கைகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்கெனவே எடுத்திருப்பதாக அதன் செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் திங்களன்று தெரிவித்தார்.

அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக அதிபரின் மகன் உட்பட சில அதிகாரிகளுக்கு ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்திருந்தது.

பெலாரூஸ் நாட்டின் விளையாட்டு நிர்வாகம் முழுவதும் அதிபர் லுகாஷென்கோவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பிரிவைச் சேர்ந்த ஹீதர் மேக்ஹில் கூறுகிறார்.

"விளையாட்டு வீரர்கள் சமூகத்தால் மதிக்கப்படுகிறார்கள். அதனால் அரசுக்கு எதிராகப் பேசும் விளையாட்டு வீரர்கள் பழிவாங்கப்படுவதற்கான இலக்காக இருப்பதில் வியப்பில்லை" என்று அவர் கூறினார்.

தன்னார்வக் குழுவின் தலைவர் மர்ம மரணம்

கீவ்

பட மூலாதாரம்,TADEUSZ GICZAN

பெலாரூஸில் இருந்து தப்பிச் செல்லும் மக்களுக்கு உதவும் ஒரு குழுவின் தலைவர் விட்டலி ஷிஷோவ் அண்டை நாடான உக்ரைனில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

காலையில் உடற்பயிற்சிக்காகச் சென்ற அவரது உடல், கியேவ் நகரில் உள்ள ஒரு பூங்காவில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் கொல்லப்பட்டாரா மற்றும் அவரது மரணம் தற்கொலையாக தோன்றியதா என்று விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

"ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி"

லுகஷென்கோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்று அழைக்கப்படும் லுகஷென்கோ, ரஷ்ய அதிபர் புடினின் நண்பர்

கிழக்கில் நட்பு நாடான ரஷ்யாவையும் தெற்கில் உக்ரைனையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்திருக்கிறது பெலாரஸ். வடக்கு மற்றும் மேற்கில் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளான லாட்வியா, லிதுவேனியா மற்றும் போலாந்து உள்ளன.

யுக்ரேனைப் போலவே, 95 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த நாடு மேற்குலகம் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போட்டியில் சிக்கியுள்ளது. அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ "ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி" என்று அழைக்கப்படுபவர். அவர் 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார்.

நாட்டில் ஆட்சி மாற்றத்தையும் பொருளாதார சீர்திருத்தத்தையும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் மேற்கத்திய அரசுகளும் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் லுகாஷென்கோ மோசடி செய்ததாகக் கூறுகிறார்கள். ஆனால் அதிகாரபூர்வமாக அவர் அமோக வெற்றி பெற்றார்.

ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாகக் கூறி பெரும் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராக காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள். பலர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

இதன் பிறகு அடக்குமுறைக்கு அஞ்சி பெலாரஸ் நாட்டில் இருந்து ஏராளமானோர் தப்பிச் செல்கிறார்கள். யுக்ரேன், போலாந்து மற்றும் லிதுவேனியா ஆகியவை அவர்களது இலக்குகளாக இருக்கின்றன.

https://www.bbc.com/tamil/global-58068643

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிஸ்டினா சிமானுஸ்காயா விவகாரம் ; ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்த இரு பெலருஸ் பயிற்சியாளர்கள்

டோக்கியோவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து தடகள வீரரை வெளியேற கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு பெலருஸ் பயிற்சியாளர்கள் ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்துள்ளனர்.

ஆர்தூர் ஷிமாக் மற்றும் யூரி மைசெவிச் ஆகியோரே இவ்வாறு ஒலிம்பிக் அங்கீகாரத்தை இழந்துள்ளதுன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC), அவர்கள் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேறியதையும் உறுதிபடுத்தியது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய பயிற்சியாளர் ஊழியர்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து தனது அணியின் விருப்பத்திற்கு மாறாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 24 வயதான கிரிஸ்டினா சிமானுஸ்காயா  ஞாயிற்றுக்கிழமை டோக்கியோவிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார்.

20210801krystina.jpg

பெலருஸுக்குத் திரும்பினால் தன் பாதுகாப்பு குறித்து அஞ்சுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இச் சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.

பின்னர் அவருக்கு போலாந்தினால் மனிதாபிமான விசா வழங்கப்பட்டதுடன், தற்சமயம் அவர் போலந்தில் இருக்கிறார்.
 

 

https://www.virakesari.lk/article/110827

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.