Jump to content

அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கம் எமக்கில்லை ; மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவே போராடுகின்றோம் - சாணக்கியன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கம் எமக்கில்லை ; மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவே போராடுகின்றோம் - சாணக்கியன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதோ நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதோ எமது நோக்கம் அல்ல. எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பிரதான நோக்கமே எமக்கு உள்ளது எனவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவற்றை கூறினார். 

shanakiyan.jpg

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பொருளாதார நெருக்கடி என்பது புல்டோ இனிப்பு கடைக்கு ஒப்பானது என்பதே இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த நாளில் தேர்தலை நடத்தும் நோக்கத்தில் கிழக்கில் சாராய போத்தல்கள் பெட்டி பெட்டியாக கொண்டுவந்து பதுக்கிவைத்தது நினைவிற்கு வருகின்றது. 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஆயிரம் ரூபா பணத்தை கொடுப்பதற்கு  தயார்படுத்திக்கொண்டிருந்தார். கொழும்பு மக்கள் களனி கங்கையில் பாம்பு தோன்றியதாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதேபோல் ஒரு சிலர் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை தண்டிப்பார்கள் எனவும், மத்திய வங்கி ஊழல் வாதிகளை தண்டிப்பதாகவும் நம்பி வாக்களிக்க வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். இன்று திரும்பிப்பார்த்தால், வேடிக்கையாக உள்ளது.

கிழக்கில் மீன் கள்ளர்கள் பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது, அவர்களையே பிடிக்க முடியாத இந்த அரசாங்கம் எங்கே சென்று ஈஸ்டர் தாக்குதல் காரர்களையும், மத்திய வங்கி ஊழல்வாதிகளையும் பிடிக்கப்போகின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். 

அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கவோ நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதோ எமது நோக்கம் அல்ல. மக்களின் பிரச்சினைகளை தீர்வு காணும் பிரதான நோக்கமே எமக்கு உள்ளது. இப்போது மக்களின் பிரச்சினையை தீர்க்காவிட்டால் நாடு மோசமான நிலையொன்றை சந்திக்க நேரும்.

நாட்டுக்கான முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக ஒரே தொலைபேசி அழைப்பில் நூறாயிரம் கனேடிய டொலர் முதலீட்டை நாளையே பெற்றுக்கொடுக்க முடியும். ஒரு தொலைபேசி அழைப்பில் அதனை என்னால் செய்து காட்ட முடியும். இவ்வாறு எம்மால் பல முதலீட்டாளர்களை கொண்டுவர முடியும். ஆனால் அதனை செய்ய விடாது பிள்ளையான் தடுக்கின்றார். அவர் இந்த அரசாங்கத்தின் உறுப்பினர். அதேபோல் இலங்கை மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும். அதனை அரசாங்கம் சரியாக செய்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை மாத்திரம் பேசிக்கொண்டு இருக்காது நாட்டின் பிரச்சினையை மூடி மறைக்க நினைக்கக்கூடாது.

ஹிஷாலினியின் மரணத்தை சாட்டாக வைத்துக்கொண்டு மலையக தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் முரண்பட வைத்து கலவரம் ஒன்றினை உருவாக்கி அதனை அடக்குவதாக சிங்கள மக்களை ஏமாற்றி திருப்திப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் கையாண்டிருக்கும். 

நல்லவேளை நாட்டில் தேர்தல் ஒன்று இல்லை, அதேபோல் கொவிட் தடுப்பூசி திட்டம் அரசாங்கத்தை கைகொடுத்து வருவதால் இது நடக்கவில்லை. அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். அதை விடுத்து அமைச்சர்களே போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது என்றார். 

 

https://www.virakesari.lk/article/110674

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.