Jump to content

பூப்படைந்தபெண்கள்- கர்ப்பிணி பெண்கள் எவற்றை உண்ணலாம்?


Recommended Posts

பெண்கள் வாழ்வில் மருந்தாகும் உணவு

இன்றைய காலகட்டத்தில் பெண் விடுதலை,பெண் முன்னேற்றம் என்பன பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால்அன்றும் இன்றும் என்றுமே குடும்பம் எனும் தேரானது பெண் எனும் அச்சாணியைப் பற்றியே சுற்றிக் கொண்டிருக்கிறது.அச்சாணி உறுதியாக இருந்தால் தான் தேர் சரியாக பயணிக்கும்.அதே போல ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அக் குடும்பத் தலைவியின் ஆரோக்கியத்திலேயே தங்கியுள்ளது. 

 

 

 

Diet-For-Teenage-Girls.jpg
குடும்பத்தலைவி ஆரோக்கியமாக இருந்தால் தான் அக் குடும்பத்தின் செயற்பாடுகள் சீராக அமையும். எனவே தான் முன்னோர்கள் அக் காலத்திலேயே பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து பெண்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உரிய உணவை கட்டாயமாக்கியிருந்தனர். அதாவது பெண் பருவமடையும் போதும் கர்ப்ப காலத்திலும் பிரசவ காலத்திலும் பாரம்பரியமான விசேட உணவுப் பழக்கங்களை கடைப் பிடிப்பது வழக்கம். இவற்றைக் கடைப்பிடிக்காததாலேயே இக்காலத்தில் கர்ப்பம் தரிப்பதில் தாமதம்,கருச்சிதைவு, இளம் வயதிலே உடற் பருமன் ஆகியன ஏற்படுகின்றன.
pregnancy.jpg
 
இன்றைய நவநாகரீக உலகிலே முன்னோர்கள் வகுத்தவை யாவும் கேலிக்கூத்தாகவே சித்தரிக்கப் படுகின்றன. அவற்றை மேலோட்டமாக விளங்கி கருத்திடாமல் அதன் உட் பொருளை விளங்கிக் கொண்டால் அதனால் ஏற்படும் நன்மைகளை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

 

இலங்கையில் யாழ்ப்பாண பாரம்பரியத்தில் ஒரு பெண் பூப்படையும் போது ஒரு மாத காலத்திற்கு பத்திய உணவு வழங்கப்படுகிறது. இவ் உணவிலே உழுந்தும் நல்லெண்ணை யும் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பப்பை மற்றும் இடுப்பெலும்புகளை வலுப்படுத்துவதில் இவற்றிற்கு நிகர் எதுவுமில்லை. மேலும் கத்தரிப் பிஞ்சு, அவரைப்பிஞ்சு, வாழைப்பிஞ்சு ஆகியனவும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சரக்குக்கறி எனப்படும் பத்தியக்கறியுடனே அப் பெண்ணுக்கு உணவு வழங்கப்படும். இதில் மல்லி, சீரகம், இஞ்சி, உள்ளி, மஞ்சள் என பல மூலிகை சரக்குகள் சேர்க்கப்படுகின்றன. மல்லி சீரகம் போன்றவை இரும்புச் சத்தை கொண்டுள்ளதோடு உடலை சீர்ப்படுத்தும் தன்மையுள்ளவை. இவை அப் பெண்ணின் உடலை வலுவாக்குவதோடு எதிர் காலத்தில் இன்னோர் உயிரை உடலில் தாங்குமளவுக்கு உடலை வலுப்படுத்துகின்றன.

diet%2Bfor%2Bgirls%2Btamil.jpg

 

அடுத்து திருமணமான புதுமணத்தம்பதியருக்கு உழுத்தங்களி மற்றும் பால் என்பன வழங்கப்படும் வழக்கம் உள்ளது. மேலும் உறவினர் வீடுகளில் அவர்களை அழைத்து விருந்து வைப்பதுவும் வழக்கம். இது அவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவாறு உடலை வலுப்படுத்தவும் ஆரோக்கியமான கருவை உருவாக்கவும் உருவான கருவை ஆரோக்கியமானதாக பெற்றெடுக்கவும் ஏற்றவாறு சத்தான உணவுகளை உறவினர்களால் வழங்குவதற்கும் உருவான வழக்கமாகும். ஆனால் இன்றைய காலகட்டத்திலே உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட மற்றும் செயற்கைச் சுவையூட்டிகள் கலக்கப்பட்ட துரித உணவுகளை புதுமணத்தம்பதிக்கு வழங்கி அவர்களை வைத்தியசாலைக்கு ஓடச் செய்கின்ற நாகரீகமே பரவி வருகிறது.

அடுத்து கர்ப்ப காலத்தில் உணவு எப்போதும் முக்கியத்துவம் வகிக்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பண்டைய வழக்கமாக சில சமூகங்களில் யாப்பண்டம் எனும் பெயரில் பலவகை மாறுபட்ட சுவையுள்ள சாதங்களை உறவினர் எடுத்து வந்து கொடுக்கும் வகையில் விழாக்கள் கொண்டாடப்படுவதாக அறிந்துள்ளேன். ஆயினும் இவ் விழா பற்றிய போதிய விளக்கம் கிடைக்கவில்லை.

மேலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கர்ப்பப்பையை உறுதியாக்க  குங்குமப்பூ பாலுடன் சேர்த்து கொடுக்கப்படுகிறது.ஆயினும் இது பிள்ளை நிறமாக பிறக்க கொடுக்கப்படுவதாக ஒரு மூடநம்பிக்கை நிலவுகிறது.

https://www.manithanfacts.com/2021/08/blog-post_4.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, selfywalking said:

இலங்கையில் யாழ்ப்பாண பாரம்பரியத்தில் ஒரு பெண் பூப்படையும் போது ஒரு மாத காலத்திற்கு பத்திய உணவு வழங்கப்படுகிறது. இவ் உணவிலே உழுந்தும் நல்லெண்ணை யும் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பப்பை மற்றும் இடுப்பெலும்புகளை வலுப்படுத்துவதில் இவற்றிற்கு நிகர் எதுவுமில்லை. மேலும் கத்தரிப் பிஞ்சு, அவரைப்பிஞ்சு, வாழைப்பிஞ்சு ஆகியனவும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சரக்குக்கறி எனப்படும் பத்தியக்கறியுடனே அப் பெண்ணுக்கு உணவு வழங்கப்படும். இதில் மல்லி, சீரகம், இஞ்சி, உள்ளி, மஞ்சள் என பல மூலிகை சரக்குகள் சேர்க்கப்படுகின்றன. மல்லி சீரகம் போன்றவை இரும்புச் சத்தை கொண்டுள்ளதோடு உடலை சீர்ப்படுத்தும் தன்மையுள்ளவை. இவை அப் பெண்ணின் உடலை வலுவாக்குவதோடு எதிர் காலத்தில் இன்னோர் உயிரை உடலில் தாங்குமளவுக்கு உடலை வலுப்படுத்துகின்றன.

வெள்ளக்கார சனமும் என்ன உப்பிடியே சாப்பிட்டு உடம்பை கல்லுமாதிரி வைச்சிருக்கினம் எண்டு கேக்கிறதுக்கு சனம் இருக்கேக்கை......நான் சொல்லுறன் எங்கடை சாப்பாடுகள் பின் விளைவுகள் பக்கவிளைவுகள் இல்லாதது எண்டு...😎

இளவட்டக்கல் hashtag on Twitter

Link to comment
Share on other sites

 உண்மைதான்,5 முட்டைகளின் சத்து இதில இருக்குன்னு விளம்பரபடுத்துவாங்க அத வாங்குறதுக்குப்பதிலா 5 முட்டையையே சாப்பிடாமேன்னு யாரும் யோசிக்கிறதில்லை

Comment க்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.