Jump to content

வடக்கில், விவசாயப் பண்ணைகள்... படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் விவசாயப் பண்ணைகள் படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ

வடக்கில், விவசாயப் பண்ணைகள்... படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கம் என கூறினார்.

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருவதாக கூறினார்.

மேலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமெனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். (நன்றி கேசரி)

https://athavannews.com/2021/1232485

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமெனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

A.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இதற்கு பதிலளித்த அமைச்சர், மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருவதாக கூறினார்.

ஏன் மக்களுக்கு விவசாயம் செய்யத் தெரியாதோ? அவர்களது காணியை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்களது காணியில் உங்களுக்கு என்ன பண்ணை வேண்டிக்கிடக்கு? மகாவலியில் போய் பண்ணையை நடத்துங்கள்.  யஸ்மின் சூகாவுக்கு எங்கள் மட்டில் உள்ள அக்கறை கூட நம்ம தலைமைகளுக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

ஏன் மக்களுக்கு விவசாயம் செய்யத் தெரியாதோ? அவர்களது காணியை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்களது காணியில் உங்களுக்கு என்ன பண்ணை வேண்டிக்கிடக்கு? மகாவலியில் போய் பண்ணையை நடத்துங்கள்.  யஸ்மின் சூகாவுக்கு எங்கள் மட்டில் உள்ள அக்கறை கூட நம்ம தலைமைகளுக்கு இல்லை.

எங்களுடைய தலைமைகள்…. அரசாங்கத்திடம் பல சலுகைகளைப் பெற்று விட்டு,

அமுசடக்கி கள்ளர் மாதிரி… பம்மிக் கொண்டு இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

1 hour ago, satan said:

ஏன் மக்களுக்கு விவசாயம் செய்யத் தெரியாதோ? அவர்களது காணியை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்களது காணியில் உங்களுக்கு என்ன பண்ணை வேண்டிக்கிடக்கு? மகாவலியில் போய் பண்ணையை நடத்துங்கள்.  யஸ்மின் சூகாவுக்கு எங்கள் மட்டில் உள்ள அக்கறை கூட நம்ம தலைமைகளுக்கு இல்லை.

 

1 hour ago, தமிழ் சிறி said:

எங்களுடைய தலைமைகள்…. அரசாங்கத்திடம் பல சலுகைகளைப் பெற்று விட்டு,

அமுசடக்கி கள்ளர் மாதிரி… பம்மிக் கொண்டு இருக்கிறார்கள். 


இதை வாசித்துப் பாருங்கள்; எங்கள் தமிழ் தலைமைகளும் மக்களும் எந்தளவுக்கு பொறுப்பற்று உள்ளார்கள் என்று அறிய 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இப்ப தமிழ் மக்களுக்கு தலைமை என்று ஒன்று உள்ளதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இதை வாசித்துப் பாருங்கள்; எங்கள் தமிழ் தலைமைகளும் மக்களும் எந்தளவுக்கு பொறுப்பற்று உள்ளார்கள் என்று அறிய 

 

எமது அரசியல் வாதிகளின்  பொறுப்பற்ற தன்மையை,
மிக விரக்தியுடன் எழுதிய கட்டுரை, நிழலி.

இப்படிப் பட்ட அரசியல் வாதிகள்... தம்மால் முடியாவிட்டால்,
அரசியலில் இருந்து, ஒதுங்கி     இருக்காமல், 
என்ன இழவுக்கு தேர்தலில் போட்டியிட்டு...
ஈழத் தமிழ் இனத்தை... சொல்ல முடியாத துன்பத்துக்கு, 
ஆளாக்குகின்றார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

7 hours ago, நிழலி said:

 


இதை வாசித்துப் பாருங்கள்; எங்கள் தமிழ் தலைமைகளும் மக்களும் எந்தளவுக்கு பொறுப்பற்று உள்ளார்கள் என்று அறிய 

 

எங்களது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சணைகளுக்கு எல்லாம் காரணம் வெளியார்கள் (சிங்களவர்கள்/மேற்குலகம்/எமது அரசியல்வாதிகள்) என்று சிந்திக்கும் தன்மை எம்மிடையே நன்றாக வேரூன்றிவிட்டது. நாம் ஒரு தனிமனிதனாக அல்லது ஒரு சமூதாயமாக எமக்கு எம்மைச் சுற்றி நடக்கும் விடயங்களுக்கு நாம் ஒரு பக்குவம் மிக்க ஒரு சமூதாயமாக பொறுப்பெடுக்கத் தொடங்கும்போதே எமக்கான தீர்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத்தொடங்கும். 

அதுவரை நாம் வெள்ளி பார்க்கும் கூட்டமாக இருந்து புழுங்கிக் கொண்டு இருக்வேண்டியதுதான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.