Jump to content

சவால்களுக்கு மத்தியில் 91 வருடங்களை எட்டுவது பாரிய சாதனையாகும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சவால்களுக்கு மத்தியில் 91 வருடங்களை எட்டுவது பாரிய சாதனையாகும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

சவால்கள் நிறைந்த ஊடக துறையில் 91 வருடங்களை எட்டுவது ஒரு பாரிய சாதனை யாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில், தனது 91 ஆவது அகவையில் காலெடுத்து வைக்கும் வீரகேசரி பத்திரிகை குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவிக்கிறேன்.

sampanthan.jpg

இந்த சாதனையை நிலைநாட்ட பாடுபட்ட உழைத்த முன்னாள் மற்றும் தற்கால ஆசிரியர்கள், ஊடகவியலார்கள், படப்பிடிப்பாளர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்பு கிறேன்.

வீரகேசரி பத்திரிகையானது, மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் நடுநிலையாக செய்திகளையும் ஆய்வு கட்டுரைகளையும் கொண்டு செல்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 

சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் தேவையான விடயங்களை காலத்திற்கேற்ற வண்ணம் கொண்டு செல்வதில் வீரகேசரி பத்திரிகை வெற்றி கண்டுள்ளது. 

விசேடமாக தமிழ் மக்களின் அரசியல் போராட்ட வரலாற்றிலே வீரகேசரி பத்திரிகை யின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

அரசியல் தலைவர்களின் போராட்டங்களையும் மக்களின் அபிலாஷைகளையும் சமூகமய மாக்குவதில் வீரகேசரி பத்திரிகை அளப்பெரிய சேவையாற்றி உள்ளது.

மேலும், வீரகேசரி குழுமமானது பல திறமை மிக்க ஊடகவியலாளர்களை உருவாக்கி உள்ளது என்பது மறக்கமுடியாத ஒரு உண்மையாகும். இன்று பல்வேறு ஊடகத்துறைகளில் பணியாற்றும் நண்பர்களின் ஆரம்பம் வீரகேசரி குழுமமாகும்.

தொடர்ந்தும் மக்களை மையமாகக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியில் வீரகேசரி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்கிறேன். 

புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள வீரகேசரி குடும்பத்தின் ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களிற்கும் எனது வாழ்த்துதல்களும் நன்றிகளும் உரித்தாகுக என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
https://www.virakesari.lk/article/110823

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

91 ஆவது அகவையை பூர்த்தி செய்து வீறு நடை போடும் வீரகேசரி

தனித்துவமான பாதையில் தெளிவான செய்திகளை வழங்கிவரும் வீரகேசரி இன்றுடன் 91 வருடங்களை பூர்த்தி செய்கின்றது.

 

Virakesari.JPG

 

அந்தவகையில், தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும் ஊடகமாக  வலம் வரும் வீரகேசரி வெற்றிப்பாதையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கின்றது.

 

 

vi1.jpg

கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியிலும் பல தடைகள், சவால்கள் என அனைத்தையும் தகர்த்தெறிந்து சாதனை சிகரத்தில் சரித்திரம் புரிந்துள்ள வீரகேசரி, நீண்ட வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட தமிழ்பேசும் மக்களின் உரிமை சொத்தாக உள்ளது. தமிழ் மக்களின் குரலாய் பரிணமித்து ஓங்கி ஒலிக்கும் வீரகேசரி இன்று  சர்வதேச ரீதியில் தன் கிளைகளைப் பரப்பி தனித்துவப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

 

WhatsApp_Image_2021-08-05_at_17.24.49__2

 

 

இதழியல் வரலாற்றில் தனக்கென முத்திரைபதித்து தனக்கென தனியிடத்தை வைத்துள்ள வீரகேசரி இன்று 92 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது.

 

இலங்கையின் ஊடக வரலாற்றில் ஆலவிருட்சம் போல் இருக்கும் வீரகேசரி தமிழ்ப்பேசும் மக்களின் இதயங்களில் தனக்கென தனியிடத்தைப்பிடித்துள்ளது. வீரகேசரி பல சவால்கள் மிக்க  ஊடகப்பயணத்தில் 91 ஆண்டுகளை பூர்த்திசெய்து 92 ஆவது அகவையில் மிடுக்குடன் காலடி எடுத்து வைக்கின்றது.

 

WhatsApp_Image_2021-08-05_at_17.24.54__1

 

ஊடகத்துறையில் வீரகேசரி உள்ளூரில் மாத்திரமல்லாமால் உலக நாடுகளிலுள்ள தமிழர்களும் அதன் நாமத்தை உச்சரிக்கும் அளவுக்கும் ஆலவிருட்சம் போல் வளர்ந்துள்ளது.

 

 

அந்தவகையில், இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே  ஸ்தாபிக்கப்பட்ட வீரகேசரி நாளிதழ் பலதரப்பட்ட அரசியல், பொருளாதாரம் உட்பட பலவகையான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தது, தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தன்னை பலமாக வைத்து தொடர்ந்து அவர்களுக்கு பக்கபலமாகவே இருந்து வந்துள்ளதுடன் தற்போதும் இருந்து வருகின்றது.

 

WhatsApp_Image_2021-08-05_at_17.24.50__1

 

இலங்கையில் முதன்மையான ஊடகங்கள் பல உருவாகிய காலத்தில் ஆணித்தரமாக தனது 91 ஆவது வயதில் கால்த்தடம் பதிக்கும் போது இன்னும் அதன் வளர்ச்சி திடகாத்திரமாக இருக்கின்ற அதேவேளை, டிஜிட்டலிலும் தனியிடத்தைப் பிடித்துள்ளமையை இங்கு மறந்துவிட முடியாது.

 

 

தற்போதைய டிஜிட்டல் உலகிலும் வீரகேசரி தனக்கென தனியிடத்தைப் பிடித்து வைத்துள்ளதென்று சொன்னால் அதுவும் மிகையாகாது.

 

WhatsApp_Image_2021-08-05_at_17.24.55__1

 

நவீன உலகில் ஊடகத்துறையில் தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் வளர்ச்சிகளுக்கு மத்தியில் வீரகேசரியின் கம்பீரமான பயணம் என்பது அபரிமிதமாகவேயுள்ளது.

 

 

குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக இணையவழியில் உலக தமிழ் மக்களை ஒன்றிணைத்து வழங்கி வரும் செய்திச் சேவை, இன்று பலராலும் பாராட்டப்பட்டதாகும். இதன் மூலம் சிறந்த இணையத்தளம் என்ற விருதையும்  பல தடவைகள் வீரகேசரி தட்டிக் கொண்டது .

vi2.jpg

இவை அனைத்திற்கும் மேலாக புதிதாக அறிமுகம் செய்துள்ள செய்தி ஒலி ஒளிபரப்பு சேவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . பல்வேறு புதுமைகளை புகுத்துவதிலும் , நம்பகரமான செய்திகளை உடனுக்குடன் வழங்குவதிலும் virakesari.lk இணையத்தளம் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

அச்சு ஊடகங்களுக்கு இணையாக இலத்திரனியல் ஊடகங்கள் செல்வாக்கு செலுத்திவரும் இந்நேரத்திலும் அவற்றுக்கு எதிராக முகம்கொடுத்து  தனது அபிமான வாசகர்களின்  இதயம் கவர்ந்த வீரகேசரி தேசிய தமிழ் நாளிதழாகவும் வாராந்த வெளியீடாகவும்  வெளிவந்துகொண்டிருக்கின்றது.

 

WhatsApp_Image_2021-08-05_at_17.24.53.jp

 

 

தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளிலும், சமூக, கலை கலாசாரத்திலும் மக்களிக் நலனிலும் நாட்டு நலனிலும் கடந்த 90 வருடங்களாக தனது பங்களிப்பினையும் செல்வாக்கையும் வீரகேசரி செலுத்தி வருகின்றது.

 

 

 

இலங்கையின் ஊடகத்துறையில் வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்து வரும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்  ஸ்தாபனம், தனது வெற்றிகரமான பயணத்தில் வீரகேசரி நாளிதழ், வீரகேசரி வாரவெளியீடு, மித்திரன் செய்தித்தாள்களை வெளியிட்டு வருகின்றது.

 

vi3.jpg

 

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குநர் குமார் நடேசனினதும் பணிப்பாளர் சபையினதும் வழிகாட்டல்களினாலும் புதிய முயற்சிகளினாலும் பல்வேறு அபிவிருத்திகளைக் கண்டு ஆலவிருட்சம்போல் இலங்கையின் தலைநகரில் தலைநிமிரந்து நிற்கும் வீரகேசரி, டிஜிட்டல் உலகிலும் தனக்கு நிகர் தானே  என்ற வரலாற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

 

WhatsApp_Image_2021-08-05_at_17.24.51.jp

 

இதுவும் தமிழ்ப்பேசும் மக்களுக்கும் இளந்த தலைமுறையினருக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.

ஊடகத்துறையில் மாத்திரமன்றி, அச்சகத்துறையிலும் இன்று வீரகேசரி தன்னிகரற்ற நிறுவனமாக விளங்கிவருகின்ற நிலையில், கொழும்பு - ஏக்கலை பிரதேசத்தில் தனது நவீன ஊடக (Digital Media ) காரியாலயத்தையும் அச்சு இயந்திரத் தொகுதியையும் நிறுவி அதன்மூலம் டிஜிட்டல் ஊடகத்துறையிலும் அச்சகத்துறையிலும் நவீன மாற்றங்களை உள்வாங்கி நாட்டின் "ஊடக நிறுவன அபிவிருத்தியிலும் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.

 

 

வீரகேசரி அச்சு ஊடகத்துறையில் பல பத்திரிகைகளை பிரசுரித்து வருகின்ற போதிலும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தமிழ் பேசும் மக்களுக்கு தனது இணையத்தளத்தையும் ஆரம்பித்து தற்போதும் அதனை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.

 

 

 

இலங்கையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் செய்தி இணையத்தளம் என்ற பெருமையும் இலங்கையில் முதல் முதலாக செயற்படுத்தப்பட்ட மின்னிதழ் (e-paper) என்ற பெருமையும் வீரகேசரியையே சாரும்.

 

WhatsApp_Image_2021-08-05_at_17.24.51__1

 

அந்தவகையில் தற்போது வீரகேசரி டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தன்னை பக்குவப்படுத்திக்கொண்டுள்ளதோடு இணையத்தள செய்தி சேவைகளையும் தனது வாசகர்களுக்கு வழங்கி வருகின்றது.

 

 

 

இதேவேளை, நவீன இலத்திரனியல் ஊடகங்களும் தொழில்நுட்பங்களும் உலகில் நாளுக்கு நாள் வளர்ச்சியடையும் வேளையில், தனது அபிமான வாசகர்களின் தேவைகளை அறிந்து வீரகேசரி எதிர்காலத்தில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளது.

 

 

 

இலங்கை வரலாற்றில் தமிழ்ப் பத்திரிகைத்துறையின் வளர்ச்சிக்கு வீரகேசரி ஓர் பல்கலைக்கழகமாக விளங்குகின்றதென்றால் அது மிகையாகது. கடந்த 1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வீரகேசரி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில்,  ஈழத்துப் பத்திரிகை வளர்ச்சியில் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட் ஆற்றிய மகத்தான பணிகள்  வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியனவாகும்.

 

WhatsApp_Image_2021-08-05_at_17.24.48.jp

 

 

இலங்கைப் பத்திரிகை நிறுவனமொன்று தொடர்ச்சியாக நீண்டகாலம் செயற்பட்டு தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஆற்றிய மகத்தான பணிகள் காலத்தால் அழியாதவை. 92 ஆவது ஆண்டில் தனது காலடியை எடுத்து வைக்கும் வீரகேசரி, நிறுவனத்தை  ஆரம்பித்த சுப்பிரமணியம் செட்டியார் மற்றும் அவரோடு தோளோடு தோள் நின்று பணியாற்றிய சகல அறிஞர்களையும் கல்விமான்களையும் இப்பத்திரிகையின் ஆசிரியர்களையும் இந்நிறுவனத்தின் தலைவர்களாக விளங்கிய பெருமக்களையும் மற்றும் வீரகேசரியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அயராது நல்கிய எழுத்தாளர்களையும் வாசகர்களையும்  வாடிக்கையாளர்களையும்  நாம் நினைவுகூர வேண்டியது இந்நாளில் அவசியமாகும்.

 

 

 

ஒரு பத்திரிகையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்கள் வாசகர்களேயாவர். இவர்களின் ஊக்கமும் ஒத்துழைப்பும் இருந்தால்தான் ஒரு பத்திரிகை 'ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி' வளர்ச்சியடைய முடியும். வீரகேசரி தலைநிமிர்ந்து நின்று முக்கியமாக தமிழ்ப்பேசும் மக்களுக்கு ஆற்றிவரும் மகத்தான பணிகளுக்குக்  காரணம்  இப்பத்திரிகை கொண்டுள்ள பக்கச்சார்பற்ற கொள்கையும் தமிழ்ப்பேசும் மக்களின் ஆதரவுமாகும்.

 

 

 

தமிழ்ப்பேசும் மக்கள் பலரும் கடல்கடந்து வாழ்ந்தும் வீரகேசரிக்கு நல்கிவரும் ஆதரவு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சகல வழிகளிலும் பேருதவியாக அமைந்துள்ளது என்பதே யதார்த்தம். வீரகேசரி பிரசுரங்களை வெளியிட்டு வரும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ்  நிறுவனம் தங்கள் வாசகர்கள், விளம்பரதாரர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் இன்றைய பொன்னான தருணத்தில் மீண்டும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றது.

 

 

WhatsApp_Image_2021-08-05_at_17.24.49__1

 

 

 

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

சவால்களுக்கு மத்தியில் 91 வருடங்களை எட்டுவது பாரிய சாதனையாகும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

sampanthan.jpg

நான் காலமை தலையங்கத்தை பாத்தவுடனை சம்பந்தன் ஐயா தன்னைப்பற்றி சொல்லுறார் எண்டு தலைகீழாய் யோசிச்சிட்டன்.... கோதாரிவிழ ஆண்டு கணக்கு/ வீரகேசரி எண்டதை இப்பதான் பாத்தன் 🤣

அது சரி அதென்ன அவசரமாய் 91வது வருசத்துக்கு வாழ்த்து? 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.