Jump to content

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணினிக் கொள்வனவில் 2 கோடியே 76 இலட்சம் முறைகேடு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணினிக் கொள்வனவில் 2 கோடியே 76 இலட்சம் முறைகேடு?

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் 240 கணினிகள் கொள்வனவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறுவிலை கோரல் வழங்கிய நிறுவனம் ஒன்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். 

Screenshot_2021-08-07-10-13-05-44_c37d74

குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிரதியிடப்பட்டுள்ளது. குறித்த  கடிதத்தில் வடக்கு  மாகாண கல்வித்திணைக்களம் கோரிய கூறு விலை பிரகாரம் 240 கணினிகள் கொள்வனவு செய்யும் கோரிக்கையினை நூறு வீதம் தமது நிறுவனம் நிறைவு செய்துள்ளதோடு, ஏனையவர்களை விட விலையும் தங்களுடையதே குறைவானதாகவும் இருந்ததாகவும். ஆனால் 16.07.2021  திகதிய கொள்வனவு கடிதத்திற்கு அமைவாக தங்களின் விலையினை விட ஒரு கணினிக்கு 11500.00 ரூபா அதிக விலையினை கொண்ட  வழங்குனரிடம் கொள்வனவு  செய்ய கொள்வனவு கட்டளை அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி 11500 x 240 = 2760000.00 ரூபா அதிக விலை செலுத்தப்படவுள்ளதாகவும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி  அமைச்சின் செயலாளருடன் ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த விடயம் தொடர்பில் எமக்கும்  கடிதம் கிடைப்பெற்றது. எனவே இது தொடர்பான விளக்கம்  ஆளுநருக்கு அனுப்பட்டுள்ளது. 240 கணினிகள் கொள்வனவு விடயத்தில் முறைப்பாடு செய்தவரிடம் கணினிகள் கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்றவர் என தொழிநுட்ப குழு பரிந்துரைத்துள்ளது. எனவே தொழிநுட்ப  குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே மேற்கொள்வனவு இடம்பெற்றது எனத் தெரிவித்தார்.
 

https://www.virakesari.lk/article/110883

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வடமாகாணத்தில் இருந்து கொழும்பு சென்றுள்ள கொள்ளைக் கொலைக்கும்பல் அமைச்சருக்கு என்ன பங்கு..??! அவர் முன்னரும் பகற்கொள்ளை அடிச்ச குற்றச்சாட்டில் இருந்திருக்கிறார்.. பல சந்தர்ப்பங்களில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

இதன் படி 11500 x 240 = 2760000.00 ரூபா அதிக விலை செலுத்தப்படவுள்ளதாகவும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது

அதெல்லாம் ஜனநாயக நாட்டில் நடப்பதுதான் . அதென்ன கொசுறு 76 லட்சம் . 3 க்கு ரவுண்டு செய்யப்படாதா.? 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தில் இவ்வாறு  நடக்காது  விட்டால்  தான்  அதிசயம்

அரசன் (தலைவர்கள்)  எப்படியோ  பணியாளர்களும்  அவ்வழி

மக்களும்?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணினிக் கொள்வனவில் 2 கோடியே 76 இலட்சம் முறைகேடு?

1 hour ago, விசுகு said:

வடமாகாணத்தில் இவ்வாறு  நடக்காது  விட்டால்  தான்  அதிசயம்

அரசன் (தலைவர்கள்)  எப்படியோ  பணியாளர்களும்  அவ்வழி

மக்களும்?????

இதனால் தான் பல புலம்பெயர் மக்கள் தங்கள் தாராள மனப்பான்மையையும்  உதவி 
மனப்பான்மையையும் தங்கள் குடும்ப உறவுகளோடு நிறுத்திக்கொள்கின்றார்கள். 

நம்பிக்கையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது இனிவரும் காலங்களில் அவசியமாகின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முறைகேடு இல்லாத ஒரு துறையைச் சொல்லுங்கள் பார்க்கலாம்? மக்களுக்கு சேவை என்று சொல்வார்கள், அந்த மக்களையே கொள்ளையடிப்பார்கள். அவர்களுக்கு கிடைப்பது பதவியுயர்வு.

Link to comment
Share on other sites

5 hours ago, satan said:

முறைகேடு இல்லாத ஒரு துறையைச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

சமுக இணையத்தளங்களை நிர்வகிக்கும் துறை.
 

5 hours ago, satan said:

மக்களுக்கு சேவை என்று சொல்வார்கள், அந்த மக்களையே கொள்ளையடிப்பார்கள்.

யாழ் கள நிருவாகிகள் மக்களுக்கு சேவை செய்கிறார்கள். இவர்கள் யாரை கொள்ளையடித்தார்கள்? ஆதாரத்துடன் நிருபியுங்கள் பார்க்கலாம். இப்படி எல்லோரையும் மொட்டையாக கொள்ளயர்கள் என்று சொல்வது தவறு.

5 hours ago, satan said:

அவர்களுக்கு கிடைப்பது பதவியுயர்வு.

யாருக்கு இங்கே பதவியுயர்வு கிடைத்தது?

Link to comment
Share on other sites

240 கணினிகள் கொள்வனவு விடயத்தில் முறைப்பாடு செய்தவரிடம் கணினிகள் கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்றவர் என தொழிநுட்ப குழு பரிந்துரைத்துள்ளது. எனவே தொழிநுட்ப  குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே மேற்கொள்வனவு இடம்பெற்றது எனத் தெரிவித்தார்.”

முறைப்பாடு செய்தவரின் கணணிகளும் அவற்றிற்கான சேவையும் தேவையான தொழில்நுட்பத்தை கொண்டிருக்காத காரணத்தால் தொழிநுட்ப குழு முறைப்பாடு செய்தவரை நிராகரித்துள்ளது. அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.