Jump to content

நீரஜ் சோப்ரா டோக்யோவில் சாதனை: ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீரஜ் சோப்ரா டோக்யோவில் சாதனை: ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

7 ஆகஸ்ட் 2021, 12:47 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா.

ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பதக்கங்களைப் பெற்றதில்லை. மில்கா சிங், பி.டி. உஷா ஆகியோர் தடகளத்தில் மிகக் குறைந்த வேறுபாட்டில் பதக்கங்களைத் தவற விட்டனர்.

அந்த நூற்றாண்டு கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. டோக்யோ ஒலிம்பிக்கில் அவர் ஈட்டி எறிந்த அதிகபட்சத் தொலைவு 87.58 மீட்டர்.

ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் தனது முதல் முயற்சியிலேயே 87.03 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா முதல் மூன்று முயற்சிகளிலுமே தங்கப் பதக்கத்துக்கான நிலையைத் தக்க வைத்துக் கொண்டார்.

சிறிய வேறுபாட்டால் ஒலிம்பிக் பதக்கத்தை இழந்த மில்கா சிங் உள்ளிட்ட அனைத்து தடகள வீரர்களுக்கும் தமது தங்கப் பதக்கத்தை அர்ப்பணம் செய்வதாக ஒலிம்பிக் தங்கம் வென்ற பின் நீரஜ் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு 'ட்ரேக்' தமக்கு கடவுள் போன்றது என்றும் போட்டிக்கு பிறகு அதன் முன் தலை வணங்கியதாகவும் அவர் கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு அவரது சொந்த மாநிலமான ஹரியானாவில் மாநில அரசு சன்மானம் அறிவித்துள்ளது.

நீரஜ் சோப்ரா சாதனையைப் பாராட்டி 6 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் மனோகர்லால் கத்தார் அறிவித்துள்ளார்.

இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர்

வழக்கமாக 90 மீட்டர் தொலைவைத் தாண்டி எறியும் ஜெர்மனி ஜோகன்னஸ் வெட்டர் தனது முதல் முயற்சியில் 82 மீட்டர் தொலைவு மட்டும் எட்டினார். அடுத்த முயற்சி ஃபவுலாக அமைந்ததால் தொடர்ந்து பின்தங்கினார். மூன்று முயற்சிகளின் முடிவில் முதல் 8 இடங்களைப் பிடிக்க முடியாததால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

அதே நேரத்தில் தனது இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தனது நிலையை மேம்படுத்திக் கொண்டார் நீரஜ் சோப்ரா. முதல் மூன்று முயற்சிகளிலும் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறியும் உத்தியில் எந்தத் தவறும் ஏற்படவில்லை.

முதல் மூன்று முயற்சிகளில் நீரஜ் சோப்ராவின் தொலைவை வேறு எந்த வீரராலும் எட்ட முடியவில்லை. போட்டியாகக் கருதப்பட்ட வெட்டல் வெளியேறிய நிலையில், ஜெர்மனியின் மற்றொரு வீரரான ஜூலியன் வெபர் மற்றும் செக் குடியரசின் விட்டேஸ்லேவ் வெஸ்லி ஆகியோர் மட்டுமே 85 மீட்டர் தொலைவுக்கு அதிகமாக வீசியிருந்தனர்.

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் மொத்தம் 12 பேர் பங்கேற்பார்கள். அவர்களுக்கு முதலில் 3 வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் அதிகபட்சத் தொலைவு கணக்கில் கொள்ளப்படும்.

நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

நீரஜ் சோப்ரா

மூன்று முயற்சிகள் முடிந்த பிறகு முதல் எட்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு மேலும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டு மொத்தமாக சிறந்த தொலைவு கணக்கில் கொள்ளப்படும்.

முதல் மூன்று முயற்சிகளில் நீரஜ் சோப்ராவைத் தவிர வேறு யாரும் 86 மீட்டர் தொலைவைக்கூட எட்டவில்லை. ஆனால் அதற்கடுத்த மூன்று முயற்சிகளில் செக் குடியரசின் மற்றொரு வீரரான ஜேக்கப் 86.67 மீட்டர் தொலைவுக்கு வீசி நீரஜ் சோப்ராவை நெருங்கினார்.

அதே நேரத்தில் நீரஜ் சோப்ராவின் அடுத்தடுத்த இரண்டு முயற்சிகளும் ஃபவுலாக முடிந்தன. அதனால் அவரால் தனது நிலைமை மேம்படுத்திக் கொள்ள முயவில்லை. எனினும் தங்கப் பதக்கத்துக்கான தனது நிலையை அவர் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தார்.

கடைசி வாய்ப்பில் எந்த அதிர்ச்சியான முடிவுகளும் வரவில்லை. நிலைகளும் மாறவில்லை. ஜெர்மனியின் வெபரால் எவ்வளவோ முயன்றும் பதக்கத்துக்கான போட்டிக்குள் வர இயலவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

தொடக்கத்தில் இருந்து இறுதிவரை முதல் இடத்தில் இருந்த நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். செக் குடியரசு நாட்டின் ஜேக்கப் மற்றும் வெஸ்லி ஆகியோர் முறைய வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

போட்டி தொடங்கும்போது 97 மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு எறிந்து சாதனை படைத்திருந்த ஜெர்மனியின் ஜோகன்னஸ் வெட்டலுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் என்று பலரும் கணித்திருந்தனர். ஆனால் அவர் தொடக்கத்தில் இருந்தே தடுமாறினார்.

அதிர்ச்சியளிக்கும் வகையில் முதல் எட்டு இடங்களுக்குள்கூட அவரால் வரமுடியவில்லை. ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வெல்லும் அவரது கனவு நிறைவேறாமல் போனது.

நீரஜ் சோப்ராவுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக் போட்டி. கடந்த ஒலிம்பிக் போட்டியில் ஜெர்மனியின் தாமஸ் ரோஹ்லர் 90.30 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அப்போது வெள்ளிப் பதக்கத்துக்கான தொலைவு 88.24 மீட்டர். கென்யாவின் ஜூலியஸ் யெகோ அந்தத் தொலைவை எட்டியிருந்தார்.

ஆனால் டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தத் தொலைவை எந்த வீரரும் எட்டவில்லை.

https://www.bbc.com/tamil/sport-58129327

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23 வயது பையன், இந்திய இராணுவ வீரர். சிறப்பான எதிர்காலம் உள்ளது. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்! 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கை ஒருத்தரும் சும்மா வந்து தங்கத்தை தூக்கிக்கொண்டு போகவில்லை. கடுமையான பயிற்சி, சரியான நெறிப்படுத்தல், என பல விசயங்கள் உள்ளடக்கம்.

சோமாலியா, கென்யா இதர ஆபிரிக்க நாடுகள் எல்லாம் என்ன தொழில்நுட்பத்தை பாவித்து இவ்வளவு காலமும் பதக்கங்களை அள்ளுகின்றார்கள்?

இலங்கை வீராங்கணை சிட்னியில் வெள்ளிப்பதக்கம் எடுத்தார். என்ன நவீன தொழிநுட்பம் பாவிக்கப்பட்டது?

இந்தியாவுக்கு பதக்கங்கள் போதியளவு கிடைக்கவில்லை என்றால் இது வெறும் தொழில்நுட்பத்துடன் சம்மந்தப்பட்ட விசயம் இல்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

உங்கை ஒருத்தரும் சும்மா வந்து தங்கத்தை தூக்கிக்கொண்டு போகவில்லை. கடுமையான பயிற்சி, சரியான நெறிப்படுத்தல், என பல விசயங்கள் உள்ளடக்கம்.

சோமாலியா, கென்யா இதர ஆபிரிக்க நாடுகள் எல்லாம் என்ன தொழில்நுட்பத்தை பாவித்து இவ்வளவு காலமும் பதக்கங்களை அள்ளுகின்றார்கள்?

இலங்கை வீராங்கணை சிட்னியில் வெள்ளிப்பதக்கம் எடுத்தார். என்ன நவீன தொழிநுட்பம் பாவிக்கப்பட்டது?

இந்தியாவுக்கு பதக்கங்கள் போதியளவு கிடைக்கவில்லை என்றால் இது வெறும் தொழில்நுட்பத்துடன் சம்மந்தப்பட்ட விசயம் இல்லை. 

 

திருத்தம்; எத்தியோப்பியாவை சோமாலியா என்று கூறி உள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.