Jump to content

08.08.1992 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு படைத்த சாதனை வரலாற்றுச் சாதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

08.08.1992 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு படைத்த சாதனை வரலாற்றுச் சாதனை

08.08.1992 அன்று, வட தமிழீழம்  யாழ் அராலிப் பகுதியில் சிங்களப் படையின் கட்டுப்பாட்டுப் பகுதியுள் வெற்றிகரமாக ஊடுருவிய புலிகளின் சிறப்பு வேவுப் பிரிவு நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில், சிறீலங்காப் படைத்துறையின்  9 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.  இவ் வரலாற்றுச் சாதனையை எமது உலகத்தமிழ்மக்களுக்கு  குறிப்பாக இளையோர்களுக்கும்  ஆவணப்படுத்த வேண்டும்  என்கின்ற சிந்தனையில்  தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடு அன்றைய காலத்தில் பதிவுசெய்துள்ள பதிவை  பெரும்வரலாற்று  பணியில் பயணிக்கு  தமிழீழ ஆவணக்காப்பகம் இன்றைய நாளில் மீள் பதிவு   செய்துள்ளது   


 தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு படைத்த சாதனை வரலாற்றுச் சாதனை

 வட பிராந்திய படைத்துறை ஆணைப்பீடம் அழிக்கப்பட்டது

 

எமது இயக்கத்தின் சிறப்பு வேவுப்பிரிவினர் (Special Unit - Military Reconnaissance) துணிச்சலுடன் வைத்த - நுட்பமான கண்ணிக்குள் சிக்கி, வடபிராந்திய அதிஉயர் தளபதிகள் மூவர் உட்பட ஒன்பது உயர்நிலை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 8.8.1992 அன்று, சிங்களப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அராலிப்பகுதியில் இடம்பெற்ற ஒரு கண்ணிவெடித் தாக்குதலில், இச் சிங்களத் தளபதிகள்அழிக்கப்பட்டனர். வடதமிழீழத்தில் நடாத்தப்படும் படையெடுப்புக்களினதும், அதற்கான போர்முறைத்திட்டங்களினதும் சூத்திரதாரிகளாக மிக நீண்டகாலமாக இருந்துவரும் இந்த இராணுவ உயர் தளப திகள் - ஒரே சமயத்தில், ஒன்றாக அழிக்கப்பட்டது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. விடுதலைப் புலிகளின் சிறப்பு வேவுப் பிரிவினர் படைத்தஇவ்வரலாற்றுச் சாதனை, பாரிய அரசியல் - இராணுவ திருப்புமுனை களை ஏற்படுத்தும் என ஊகிக்கப்படுகின்றது. தமிழீழவிடுதலைப்போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு சிங்களப் படை ஒரு பேரழிவைச் சந்தித்துள்ளது.

 

தமிழீழ மக்களுக்கெதிரானகுறிப்பாக வடதமிழீழத்திற்கெதிரான - இன அழிப்புப் போரைத் திட்டமிட்டு, வடிவமைத்து, முன்னின்று வழி நடாத்தும் சிங்கள உயர் இராணுவ தளபதிகளுள் முக்கியமானவர்களான, வட பிராந்திய ஆணைத் தளபதி லெப்ரினன்ற் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, யாழ். மாவட்ட தரைப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன ,வட பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ஜயமகா உட்பட (சாவுக்குப் பின்பு பதவி உயர்த்தப்பட்டவர்கள்) சமர்க்களத்தில் படையினரை நேரடியாக வழி நடாத்தும் லெப்.கேணல் தரத்திலான மூன்று உயர் அதிகாரிகளும், மேஜர் தரத்திலான ஒரு அதிகாரியும், கடற்சண்டைகளை நேரடியாக வழிநடாத் தும் ஒரு லெப்ரினன்ற் கொமடோரும் (சாவுக்குப்பின் பதவி உயர்த்தப்பட்டவர்) ஒரு கடற்படை லெப்ரினன்ற்றும் ஒரே சம்பவத்தில் - ஒன்றாக அழிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீரசாதனையை, எமது இயக்கத்தின் சிறப்பு வேவுப்பிரிவினர் வெற்றிகரமாக நிறைவேற்றி, பாதுகாப்புடன் திரும்பியுள்ள னர். உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள இச்செய்தி, தமிழீழ மக்களுக்கு மகிழ்ச்சியையும் - உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.

தமிழீழ ஆவணக்காப்பகம் 

 யாழ். குடாநாட்டின் மீது ஒரு பாரிய படையெடுப்புக்கு சிங்களப்படைகள் தங்களைத் தயார் செய்துகொண்டிருந்த வேளையில், சிங்களப்படையின் கோட்டைக்குள் நுழைந்து அவர்கள் மத்தியில் ஒரு பேரழிவை ஏற்படுத்தி, படையெடுப்புத் திட்டத்தைச் சீர்குலைக்க விழைந்த எமது முயற்சி, பெருவெற்றி கண்டுள்ளது. சிங்களதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இப்பேரழிவு,சிறீலங்கா பாதுகாப்புப் படை யைப் பொறுத்தளவில் என்றுமே ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

ஏனென்றால், இவர்களெல்லோரும் மிக நீண்டகாலப் போர் அனுபவம் மிக்க, மூத்த சிங்களத் தளபதிகளாவர்; படையினரைச் சமர்க்களத்தில் வழிநடாத்தி - சண்டையைத் தொடர்வதில், ஆளுமையும் தேர்ச்சியும் மிக்கவர்களாவர். லெப்ரினன்ற்ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவும், மேஜர் ஜெனரல் விமலரத்னவும், வடபிராந்திய கடற்படை றியர் அட்மிரல் ஜயமகாவும் எமது விடுதலைப் போர் முனைப்புப்பெற்ற காலத்திலிருந்து, வட - கிழக்குப் பகுதியிலேயே இருந்தபடி, புலிகள் இயக்கத்திற்கெதிராகப் போர்புரிந்து,

விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கக் கங்கணங்கட்டியிருந்த சிங்களத் தளபதிகளாவர்.அத்துடன், சிங்கள இராணுவ இயந்திரத்தின் முக்கிய தூண்களாக இவர்கள் இருந்துள்ளார்கள். வட பிராந்தியத்திற்கான சிங்கள கடற்படைத்தளபதிறியர் அட்மிரல்ஜயமகா, உலகின் பல நாடுகளில் சிறப்புப் போர்க்கல்விபயின்ற ஒரு மூத்த தளபதியாவர். இத்துடன், எதிர்பார்க்கப்படும் யாழ்.குடா நாட்டின் மீதான படையெடுப்பில், கடல்கடந்து துருப்பினரைக்குடாநாட்டுக்குள் தரையிறக்கிவிடும் பணிக்கு இவரே தலைமைதாங்க இருந்தார் என்று, 'வெரித்தாஸ் வானொலி குறிப்பிட்டது. சிங்களப் போர்வானின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருந்த இந்தத் தளபதிகளின் இழப்பால், சிங்கள தேசம் ஆடிப்போய் உள்ளது. (நன்றி தமிழீழ ஆவணக்காப்பகம்) - சிங்களப்படை சந்தித்துள்ள இப்பேரிழப்பு, சிறீலங்கா அரசின் இராணுவ இயந்திரத்தில் அடைக்க முடியாத ஒரு வெடிப்பை, ஏற்படுத்தியுள்ளது. 

05-07-92 அன்று இயக்கச்சியில் சுட்டு வீழ்த்தப்பட்டவை - 8 ரக இராட்சத விமானத்தில் இருந்த, வான் படையின் உயர் அதிகாரிகளான ஸ்குவார்டன் லீடர் காசீர், லெப்ரினன்ற்கள் பெர்னாண்டோ , மெண்டிஸ், ஆகியோருடன், வானூர்தி அதி காரிகளான விஜயக்கோன், பிரேமரத்ன, ரத்னாயக்க, சார்ஜன் சில்வா, உட்பட 19 வான்படையினர் கொல்லப்பட்டனர்.கடந்த ஏப்ரில் 28ஆம் திகதி தெல்லிப்பளையை நோக்கி சிங்களப்படைகள் நடாத்திய இராணுவ நடவடிக்கையின் போது, சிறீலங்கா இராணுவத் தின்5ஆவது தரைப்படைப் பிரிவின்துணைத் தளபதி லெப். கேணல் சூரியசேனனாயக்கா, மற்றும் முன்னணி தரைப்படை அதிகாரியான மேஜர் குலசன உட்பட சில இடைநிலை அதிகாரிகளும் கொல்லப்பட்டிருந்தனர். இதே போன்று 9.6.92அன்று பூநகரியில் எமது சிறப்பு வேவுப்பிரிவினர்வைத்த கண்ணிவெடிக்குள் சிக்குண்டு, ஒரு இராணுவ வாகனம்சிதறியது. அதற்குள் இருந்த கடற்படையின் உயர் நிலை அதிகாரியான லெப். கொமடோர்அஞ்சனா திசநாயக்கா, தரைப்படைத் தளபதிகளில் ஒருவரான கேணல் சித்ர - புஞ்சிஹேவா, கப்டன் கருணரத்ன ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல்,

 

UB1OK8XwMYv8Fh5T2xPK.jpg

 

 8.8.1992 அன்று அராலியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில், சிங்களப்படையின் அதிஉயர் தளபதிகளானலெப்ரினன்ற் ஜெனரல் கொப்பேகடுவ, றியர் அட்மிரல் ஜயமகா, மேஜர் ஜெனரல் விமல ரத்ன, லெப்.கேணல்கள் ஆரியரத்ன, பலிப்பான, ஸ்ரீபன் , மேஜர்அல்விஸ், கடற்படை லெப்ரினன்ற் கொமடோர்லங்காதிலக, கடற்படை லெப்ரி னன்ற் விஜயபுர ஆகியோரும் அழிக்கப்பட்டனர்.இந்த வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த கண்ணி வெடித் தாக்குதலுடன், வடபிராந்திய படைத்துறை ஆணைப்பீடம் (Northern Military Command Structure) முற்றாகவே அழிக்கப்பட்டுவிட்டது.

நன்றி 

விடுதலைப்புலிகள்  ஏடு 

 

https://www.thaarakam.com/news/2c50d580-b9ce-425f-8710-94f562fc2c98

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இவர்தான் உந்த அராலி அணிக்கு பொறுப்பாகப் போன மேஜர் ஆதித்தன் அவர்கள்..
தலைவர் மாமாவின் கையால் சிறந்த வேவிற்கான சான்றிதளைப் பெறுகிறார். இவ்வாறு பெற்றவர்களில் இவரே முதலாமவர் ஆவார்.

 

Major Aathiththan.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரைகள் எல்லாம் ஏன் இது அராலியில் நடந்தது என்கிறன?

சம்பவம் நடந்தது வேலணை தீவில் இருக்கும் அராலித்துறைக்கும் (அராலி யாழ் பெரு நிலப்பரப்பு, வலிகாமத்தில் உள்ளது) ஊர்காவற்துறைக்கும் இடையில் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

இந்த கட்டுரைகள் எல்லாம் ஏன் இது அராலியில் நடந்தது என்கிறன?

சம்பவம் நடந்தது வேலணை தீவில் இருக்கும் அராலித்துறைக்கும் (அராலி யாழ் பெரு நிலப்பரப்பு, வலிகாமத்தில் உள்ளது) ஊர்காவற்துறைக்கும் இடையில் அல்லவா?

அராலி என்பது அராலித்துறை கடற்பரப்பின் இப்பாலும் அப்பாலும் உள்ளது. யாழ் பண்ணை பாலம் அழிக்கப்பட்ட போது அராலித்துறை தான் தீவகத்திற்கான முக்கிய போக்குவரத்து இடமாக இருந்தது. அந்த வகையில் அராலி என்பது கடற்பரப்பின் அப்பாலும்.. இப்பாலும் அராலி என்றே அழைக்கப்படுகிறது. இது ஆழம் குறைந்த கடற்பகுதி ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதல் நடந்த காலபகுதியில் அது  புலிகளால் ஊடுவ முடியாத பிரதேசம், தன்னைமீறிய அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டதால் கொப்பேகடுவ பிரேமதாசவினால்தான் போட்டு தள்ளப்பட்டார் என்றுஒரு கதையும் பரவலாக தமிழ் மக்களிடையே உலவியது.

 

கொப்பேகடுவ வடமராட்சியை ஒபரேசன் லிபரேசன்மூலம் கைபற்றியவர். பல கிலோ மீட்டருக்கு அப்பால் பாதுகாப்பாக இருந்துகொண்டு வோக்கி டோக்கியில் கட்டளையிடாது  களத்தில் நேரடியாகவே ராணுவத்துடன் நிற்பவர்,பின்வாங்கும் ராணுவத்தை சுட சொல்லி ஒரு அணியை அனுப்பிவைப்பார் என்றும் பேசிகொள்வார்கள், அவர் களத்தில் இறங்கிய தாக்குதல்களில் பெரும்பாலானவை வியதகு வெற்றிகள்...

இப்படி பேசும்போது புலிகளில் ஒருவர் நினைவுக்கு வரவேண்டுமே..

ஆம் அவர் சிங்களவர்களின் பால்ராஜ், சிங்கள ராணுவமும் சிங்களவர்களும் எப்படி மனதுக்குள் பால்ராஜை ஒரு தீரமிகு தளபதியென்று மெச்சினார்களோ அதேபோன்று புலிகளும் போர்முறையில் மரியாதை செய்த தளபதி கொப்பேகடுவ,

அதனால்தால் அராலிதுறையில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கையின்போது அந்த பகுதியில் உள்ள கொப்பேகடுவவின் நினைவு சின்னத்துக்கு சேதம் விளைவிக்ககூடாது என்று தமக்கு கட்டளையிடப்பட்டதாக ஐரோப்பாவின் நான் சந்தித்த ஒரு முன்னாள் போராளிகூறியிருந்தார். அதன் உண்மை பொய் முழு விபரம் அறியேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

அராலி என்பது அராலித்துறை கடற்பரப்பின் இப்பாலும் அப்பாலும் உள்ளது. யாழ் பண்ணை பாலம் அழிக்கப்பட்ட போது அராலித்துறை தான் தீவகத்திற்கான முக்கிய போக்குவரத்து இடமாக இருந்தது. அந்த வகையில் அராலி என்பது கடற்பரப்பின் அப்பாலும்.. இப்பாலும் அராலி என்றே அழைக்கப்படுகிறது. இது ஆழம் குறைந்த கடற்பகுதி ஆகும். 

நிச்சயமாக தெரியுமா?

ஏனென்றால்,

நான் முன்னர் பண்ணை பாலம் வழியே போக்குவரத்து இல்லாத சமயம் - அராலிக்கு போய், அங்கிருந்து வள்ளம் மூலம் அராலித்துறை போய் கரம்பன் போயுள்ளேன்.

பண்ணை பாலம் கட்ட முதல் இதுதான் தீவுப்பகுதிக்கு போகும் வழி எனவும், ஒருபக்கம் அராலி ( வலிகாமம்), மறுபக்கம் அராலித்துறை (வேலணை) எனவும் சொல்லபடுவதாக என்னுடன் கூட வந்த நல்ல ஒரு அனுபவசாலி, வயசாளி சொன்னார்.

தவிரவும் வேலணை-ஊர்காவற்றுறை வீதியில் அராலி ரோட் பிரியும் சந்தியில் உள்ள வெள்ளைகாரர் கால கல்லிலால் ஆன sign post ஐயும் காட்டினார் அதில் to Araly எனவும் “அராலிக்கு” எனவும் பொறிக்கபட்டிருந்தது. ஏனைய இடங்கள் “வேலணை” “ஊர்காவற்றுறை” என “க்கு” போடாமல்  பொறிக்கபட்டிருந்தது. அராலி கடல்நீரேரியின் அந்தபக்கம் என்பதாலே அப்படி பொறிக்கபட்டிருப்பதாகவும் சொன்னார். 

நான் மிக சிறு வயதில் இருபகுதி மக்களிடம் நெருக்கமாக பழகியுள்ளேன், அராலித்துறை (தீவகம்), அராலி ( வலிகாமம்) என்றே பேச்சு வழக்கு இருந்ததாக நியாபகம்.

ஆனால் விடுதலைபுலிகள் ஏடு இப்படி ஒரு தவறை விட வாய்ப்பு இல்லை. எனவே நீங்கள் சொல்வது சரியாக இருக்க வேண்டும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இந்த தாக்குதல் நடந்த காலபகுதியில் அது  புலிகளால் ஊடுவ முடியாத பிரதேசம், தன்னைமீறிய அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டதால் கொப்பேகடுவ பிரேமதாசவினால்தான் போட்டு தள்ளப்பட்டார் என்றுஒரு கதையும் பரவலாக தமிழ் மக்களிடையே உலவியது.

எப்படி விக்ரர் கிட்டரின் ஆக்களினால் கொல்லப்பட்டார் என்று ஒரு கதை உலவியதோ அதுபோல.

கொப்பேகடுவ வடமராட்சியை ஒபரேசன் லிபரேசன்மூலம் கைபற்றியவர். பல கிலோ மீட்டருக்கு அப்பால் பாதுகாப்பாக இருந்துகொண்டு வோக்கி டோக்கியில் கட்டளையிடாது  களத்தில் நேரடியாகவே ராணுவத்துடன் நிற்பவர்,பின்வாங்கும் ராணுவத்தை சுட சொல்லி ஒரு அணியை அனுப்பிவைப்பார் என்றும் பேசிகொள்வார்கள், அவர் களத்தில் இறங்கிய தாக்குதல்களில் பெரும்பாலானவை வியதகு வெற்றிகள்...

இப்படி பேசும்போது புலிகளில் ஒருவர் நினைவுக்கு வரவேண்டுமே..

ஆம் அவர் சிங்களவர்களின் பால்ராஜ், சிங்கள ராணுவமும் சிங்களவர்களும் எப்படி மனதுக்குள் பால்ராஜை ஒரு தீரமிகு தளபதியென்று மெச்சினார்களோ அதேபோன்று புலிகளும் போர்முறையில் மரியாதை செய்த தளபதி கொப்பேகடுவ,

அதனால்தால் அராலிதுறையில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கையின்போது அந்த பகுதியில் உள்ள கொப்பேகடுவவின் நினைவு சின்னத்துக்கு சேதம் விளைவிக்ககூடாது என்று தமக்கு கட்டளையிடப்பட்டதாக ஐரோப்பாவின் நான் சந்தித்த ஒரு முன்னாள் போராளிகூறியிருந்தார். அதன் உண்மை பொய் முழு விபரம் அறியேன்.

சந்திரிகா அமைத்த ஒரு ஜனாதிபதி ஆணைகுழுவும் பிரேமதாச மீதும் இன்னொரு உயர் அதிகாரி மீதும் பழியை போட்டது.

நான் அறிந்தவரையில் இந்த பிரயாணம் போகும் திட்டத்தில் கொப்பேகடுவ இருக்கவில்லை எனவும் முதல்நாள் இரவு விஜய விமலரத்ன சொல்லியே பயணம் தீர்மானிக்கப்பட்டதாயும் சொல்வார்கள்.

தவிரவும் கடல்நீரேரிக்கு அப்பால் இருந்து இலக்கு வைக்கப்படலாம் என்பதாலேயே, மூன்று வாகனங்களில் போனோர் இறங்கி ஒரே வாகனத்தில் ஏறியதாயும், இதுவும் விமலரத்னவின் ஏற்பாடே என்றும் சொல்வார்கள். இல்லாவிடில் அதிகாரிகள் இப்படி ஒரே வாகனத்தில் போவது security protocol ற்கு முரணானதாம்.

புலிகள் இவர்களை எதிர்பார்த்துத்தான் இந்த கண்ணிவெடியை வைத்தார்களா?

அல்லது அராலிதுறைக்கு வரும் ஏதோ ஒரு ஜீப்புக்கு வைத்த குறி இவர்களில் பட்டதா?

இவர்களை எதிர்பார்த்துத்தான் குறிவைக்கப்பட்டது என்றால் - உள்வீட்டு தகவல் புலிகளுக்கு வந்ததா?

அப்படி வந்தாலும் 1992 இல், சடுதியாக இவர்கள் எடுத்த அராலி துறைக்கு போகும் முடிவு, எல்லாரும் ஒரே ஜீப்பில் போகும் முடிவு எப்படி அவ்வளவு விரைவாக எதிர் தரப்பை வந்தடைந்து இருக்கும்?

எல்லாம் விடை தெரியா கேள்விகள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சடுதியாக இவர்கள் எடுத்த அராலி துறைக்கு போகும் முடிவு, எல்லாரும் ஒரே ஜீப்பில் போகும் முடிவு எப்படி அவ்வளவு விரைவாக எதிர் தரப்பை வந்தடைந்து இருக்கும்?

கோசான் கேட்டதுதான் அந்தகாலகட்டத்தில் பலரின் சந்தேகத்திற்குரிய காரணமாகவிருந்தது.

வேவுபுலிகள் பொதுவாக பல மாதங்கள்/வாரங்கள் ஒரு இலக்கை வேவு பார்த்து முடிவில் தாக்குதல் நடத்துவார்கள்,

ஆனால் அந்த சம்பவத்தில் ஏறக்குறைய ஒட்டுமொத்த வடக்கின் ராணுவ கட்டளை, தாக்குதல் தலைமைபீடமே அழிந்து போனது.

இவர்கள் அனைவரும் அடிக்கடி ஒன்றாய் வந்துபோகவும் வேவு பார்க்கப்பட்டு அவர்கள் அழித்தொழிக்கப்பட  வாய்ப்பே  இல்லையென்பதும்தான் அப்போதைய விவாத பொருளாய் இருந்தது.

எது எப்படியாக இருந்திருந்தாலும் அந்தகாலகட்டத்தில் அது ஒரு மகிழ்ச்சியான தரமான சம்பவம்தான்.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

அராலியில் கண்ணிவெடி புதைப்பதற்கான வேவுப் பணியில் ஈடுபட்டு வெவ்வேறு சம்பவங்களில், வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு இடங்களில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகள்

 

"தூங்கிக் கிடந்த 
உள்ளங்கள் யாவும்
துள்ளி எழுந்தது பார்"

 

இவ்வண்ணாக்களது உடல்கள் கூட எமக்கு கிடைக்கவில்லை!

 

Araali heroes.jpg

 

தகவல்: களத்தில் 27/11/1992 பக்- 14
இவர்கள் செய்த பணிகள் இவ்விதழில் பதியப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.