Jump to content

'நாளொன்றுக்கு 200 - 300 பேர் வரை மரணிக்கலாம்': அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாடு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் குடுத்த ஊசிய தமிழன் போட்டா இங்க இருக்குர கவரிமான் கூட்டத்தோட மானம் போயிடுமாம்.. முயலுக்கு மூனுகால் குருப்போட கட்டை வேகனுங்ரதுக்காக ஊர்ல இருக்குரதுங்க கவட்டைய வேக வச்சுக்கணுமாம்.. இவனுங்கள உட ரத்தம் ஏத்தாமலே சாகிற பெந்தகோஸ் குருப்பு பருவால போல.. அவன் தான் மட்டும்தான் சாகுரான்.. இவனுங்க மத்தவனை எல்லோ சாக சொல்லுரானுவ..🤦‍♀️🤦‍♀️

 

 

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Kein Anzeichen" für Corona-Ansteckung bei Test-Konzert in Spanien -  Berliner Morgenpost

அவுஸ்ரேலிய கொரோனா அவலம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சிங்களவன் குடுத்த ஊசிய தமிழன் போட்டா இங்க இருக்குர கவரிமான் கூட்டத்தோட மானம் போயிடுமாம்.. முயலுக்கு மூனுகால் குருப்போட கட்டை வேகனுங்ரதுக்காக ஊர்ல இருக்குரதுங்க கவட்டைய வேக வச்சுக்கணுமாம்.. இவனுங்கள உட ரத்தம் ஏத்தாமலே சாகிற பெந்தகோஸ் குருப்பு பருவால போல.. அவன் தான் மட்டும்தான் சாகுரான்.. இவனுங்க மத்தவனை எல்லோ சாக சொல்லுரானுவ..🤦‍♀️🤦‍♀️

இங்கே யாரும் யாரையும் சாக பிரார்த்திக்கவில்லை. இன துவேசமும் எமக்கில்லை. தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம் அவ்வளவுதான்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பணக்காரநாடுகளால் அனுமதிக்கப்படாத கொரோனா தடுப்பூசிகள் மூன்றாம் உலக நாடுகளை சென்றடைகின்றன. 
 
இதற்கு ஆதாரம்,போட்டோ எக்ஸ்சறாக்கள் கேட்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இங்கே யாரும் யாரையும் சாக பிரார்த்திக்கவில்லை. இன துவேசமும் எமக்கில்லை. தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம் அவ்வளவுதான்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பணக்காரநாடுகளால் அனுமதிக்கப்படாத கொரோனா தடுப்பூசிகள் மூன்றாம் உலக நாடுகளை சென்றடைகின்றன. 
 
இதற்கு ஆதாரம்,போட்டோ எக்ஸ்சறாக்கள் கேட்க வேண்டாம்.

ஒன்னும் அவசரம் இல்ல மெதுவா பொறுமையா நம்ப எல்லோருக்கும் புடிச்ச ஒரு  ஊசி ஏரியாக்கு வரட்டும்..அதுவரைக்கும் நம்ப மோடி ஜீ செஞ்சது போல கொரோனோவை லைட் அடிச்சு தகரத்துல தட்டி வெருட்டி வச்சிருப்பம்...  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒன்னும் அவசரம் இல்ல மெதுவா பொறுமையா நம்ப எல்லோருக்கும் புடிச்ச ஒரு  ஊசி ஏரியாக்கு வரட்டும்..அதுவரைக்கும் நம்ப மோடி ஜீ செஞ்சது போல கொரோனோவை லைட் அடிச்சு தகரத்துல தட்டி வெருட்டி வச்சிருப்பம்...  👍

நான் சொல்வதெல்லாம் உண்மை.

இன்று ஒரு இளம் தமிழ் வைத்தியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஜேர்மனியில் 20 வருடங்கள் வைத்தியராக பணிபுரிகின்றார். பல விடயங்களை பகிர்ந்து கொண்டோம். அதில் கொரோன விடயம் வரும் போது பல சொந்த அனுபவங்களை சொன்னார். கொரோன நோயாளிகளும் அவர்கள் படும் அவஸ்தைகள் பற்றியும் நிறைய சொன்னார். அதில் அவர் சொல்லிய சாரம்சம் இன்று உலாவும்  கொரோனா தடுப்பூசிகள் யாவும் ஒரு பரீட்சார்த்தமே. இதில் யாருமே வீரம் பேசமுடியாது. முறையான மருந்து வர இன்னும் சில வருடங்கள் செல்லலாம். அது வரைக்கும் வெளித்தொடர்புகள் கொண்டாட்டங்கள் கேளிக்கைகளை தவிர்த்து சுற்று பயணங்கள் இல்லாமல் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியுமோ அவ்வளவிற்கு பாதுகாப்பாக இருங்கள் என்பதே.

பி.கு:-  இதற்கு ஆதாரம்,புகைப்படங்கள்,ஒளிப்பதிவுகள்,ஒலிப்பதிவுகள் எதனையும் எதிர்பார்க்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சைனாபாம் ஊசியைத்தான் சிங்களப்பகுதிகளிலையும் போடுகிறார்கள். அப்படியான தரம் குறைந்த ஊசியை ஏன் சிங்கள மக்களுக்கும் போடவேண்டும். 

காசு உள்ளவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் பணம் கொடுத்து அந்தந்த நாடுகள் உள்வர அனுமதி அளித்திருக்கும் ஊசியை ஏற்றிக்கொள்கிறார்கள்.  நான் கூட சைனாபாம் என்பதை விட கிழக்கில் போடப்பட்ட ஊசிகள் அனைத்தும் சைனாபாம் தான். மக்கள் வாழ்கிறார்கள் ஆனால் வெளிநாட்டில் கூட ஊசி போட்டவர்கள் தொற்றினால் இறந்து போவதை செய்திகள் சொல்கின்றன 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

மக்கள் வாழ்கிறார்கள் ஆனால் வெளிநாட்டில் கூட ஊசி போட்டவர்கள் தொற்றினால் இறந்து போவதை செய்திகள் சொல்கின்றன 

நம்மடை கூட்டம் தானும் படுக்கமாட்டினம் தள்ளியும் படுக்கமாட்டினம் என்பது தெரியாதா மச்சி , எந்த ஊசியை ஏற்றினாலும் கொழுப்பெடுத்து ஆடி கொரோனவை தூக்கிக்கொண்டால் சங்கூதி ,பரிகாரம் செய்யவேண்டிவருமென்பது தான் கொரோன அம்மன் சொல்லும் பால பாடம், அவனெடுக்கும் பிச்சைக்கு ஊசியென்ற ஒன்றையாவது கண்ணில் காட்டுறானே என்று சந்தோஷப்படும், இவர்கள் வக்கணையாக பைசரையும், மொடர்னாவையும், அஸ்ட்ராவையும் ஏத்திப்போட்டு அரசியல் அலசல் அலசுவது போல அலம்பதான் சரி, ஒரு காலத்தில் இப்படித்தான் விஸ்கி கிளாஸுடன் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டிருந்து  புலத்தில் போராட்டம் எப்படி நடத்தவேணும் என்று தலைவருக்கே வகுப்பெடுத்த கேங்ஸ் தூக்கி கடாசிவிட்டு அடுத்தவேலையை பாருங்கோ          

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அக்கா தனது தம்பி குடும்பம் கொழும்பில் சினோ பார்ம் தடுப்பூசி போட்டுள்ளார்கள் பாவங்கள் என்று ஏதோ விஷ ஊசி போட்ட மாதிரி  சொல்லி மிகவும் கவலைபட்டா. நான் இதை மற்றவர்களுக்கு சொன்ன போது அவா தன்னிடம் இல்லாத ஆடம்பர சாமான்கள் எல்லாம் கொழும்பில் தம்பியும் மனைவியும் வைத்திருக்கிறர்கள் என்று சொல்லி இதுவரை பொறாமைபட்டவா இப்போ போலி கண்ணீர் வடிக்கிறா என்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கு சைனாபாம் ஊசியைத்தான் சிங்களப்பகுதிகளிலையும் போடுகிறார்கள். அப்படியான தரம் குறைந்த ஊசியை ஏன் சிங்கள மக்களுக்கும் போடவேண்டும். 

சைனாபாம் தடுப்பூசி 70 வீதம் செய்ல்திறன் உடையது எனவும் ஃபைசர் 99 வீதம் செயல் திறன் உடையது எனவும் இங்கு கூறினார்கள்.

 இதற்கு ஆதாரம் தரப்பட மாட்டாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இங்கே யாரும் யாரையும் சாக பிரார்த்திக்கவில்லை. இன துவேசமும் எமக்கில்லை. தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம் அவ்வளவுதான்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பணக்காரநாடுகளால் அனுமதிக்கப்படாத கொரோனா தடுப்பூசிகள் மூன்றாம் உலக நாடுகளை சென்றடைகின்றன. 
 
இதற்கு ஆதாரம்,போட்டோ எக்ஸ்சறாக்கள் கேட்க வேண்டாம்.

 

42 minutes ago, குமாரசாமி said:

சைனாபாம் தடுப்பூசி 70 வீதம் செய்ல்திறன் உடையது எனவும் ஃபைசர் 99 வீதம் செயல் திறன் உடையது எனவும் இங்கு கூறினார்கள்.

 இதற்கு ஆதாரம் தரப்பட மாட்டாது.

என்னால சத்தியமா முடியல்ல அண்ணா😂 ...முடிவாய் அங்கிருப்பவர்களை என்ன தான்  செய்ய சொல்கிறீர்கள்? சினோபாம்  போட வேண்டாம் ...பைசர் தரச் சொல்லி போராட சொல்கிறீர்களா?
எனக்குத் தெரிந்த சிங்கள பெண் கொழும்பில் இருக்கிறார் ...மொறட்டுவை பக்கம் ....நேற்று சினோபாம் தான் தனக்கு போடப்  பட்டது என்றும் ,அவவின் கணவரும் ,அவரது பெற்றோர்களுக்கும் கோவிட் சீட் 2 மாசத்திற்கு முந்தி போடப்பட்டது என்றும் சொன்னா.
ஊசி அங்கு சிங்களம்,தமிழ் என்று பிரித்து கொடுக்கவில்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

என்னால சத்தியமா முடியல்ல அண்ணா😂 ...முடிவாய் அங்கிருப்பவர்களை என்ன தான்  செய்ய சொல்கிறீர்கள்? சினோபாம்  போட வேண்டாம் ...பைசர் தரச் சொல்லி போராட சொல்கிறீர்களா?

எதையும் செய்யச்சொல்லவில்லை. நடக்கும் செய்தி/நிகழ்வுகளையே சொன்னேன். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இங்கே யாரும் யாரையும் சாக பிரார்த்திக்கவில்லை. இன துவேசமும் எமக்கில்லை. தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம் அவ்வளவுதான்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பணக்காரநாடுகளால் அனுமதிக்கப்படாத கொரோனா தடுப்பூசிகள் மூன்றாம் உலக நாடுகளை சென்றடைகின்றன. 
 
இதற்கு ஆதாரம்,போட்டோ எக்ஸ்சறாக்கள் கேட்க வேண்டாம்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை அமெரிக்கர்களுக்கு செலுத்தாமல் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை போல என்று சொல்ல வாறியள்போல ??🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை அமெரிக்கர்களுக்கு செலுத்தாமல் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை போல என்று சொல்ல வாறியள்போல ??🤪

அமெரிக்காவில் இல்லை. இது ஒகேபோர்ட்டில் உருவாக்கப்பட்டது. நானும் குத்திக்கொண்டேன்.

இப்ப மாஸ்க் எல்லாம் போடாமல் வீறாப்பாக திரிகின்றேன் (தனியத்தான்😂)

சினோபார்ம் ஒரு பில்லியனுக்கு மேல் சீனாவில் குத்தி இருக்கின்றார்கள். அங்கு தொற்றும் இறப்பும் குறைவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

அமெரிக்காவில் இல்லை. இது ஒகேபோர்ட்டில் உருவாக்கப்பட்டது. நானும் குத்திக்கொண்டேன்.

இப்ப மாஸ்க் எல்லாம் போடாமல் வீறாப்பாக திரிகின்றேன் (தனியத்தான்😂)

நானும் அஸ்ட்ராசெனெகா தான் போட்டுக்கொண்டேன்

சிலர் தாங்கள் பைசர் போட்டதாக பீத்திக்கொண்டார்கள்

எனக்கு சிரிப்புத்தான் வரும்

எது நல்லது  என்று ஆண்டவனுக்கே  வெளிச்சம்  என்ற நிலை  தான்  இன்றுவரை???

பிரித்தானியாவில் அஸ்ட்ராசெனெகா போட்டவர்கள்  தான் அதிகம்.

பிரித்தானியாவில் அஸ்ட்ராசெனெகா போட்டவர்களுக்கு ஆபத்து  குறைவாக  இருப்பதாகவே தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

அமெரிக்காவில் இல்லை. இது ஒகேபோர்ட்டில் உருவாக்கப்பட்டது. நானும் குத்திக்கொண்டேன்.

இப்ப மாஸ்க் எல்லாம் போடாமல் வீறாப்பாக திரிகின்றேன் (தனியத்தான்😂)

சினோபார்ம் ஒரு பில்லியனுக்கு மேல் சீனாவில் குத்தி இருக்கின்றார்கள். அங்கு தொற்றும் இறப்பும் குறைவு. 

கிருபன் ஜோ பைடன் சொன்னதை கேட்கவில்லை போல இருக்கிது. அவர்கள் அமெரிக்காவில் தயாரித்த அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை ஏற்றுமதிசெய்யப்போகிறார்களாம். ஏனென்றால் அது CDA ஆல் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லையாம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சைனாபாம் தடுப்பூசி 70 வீதம் செய்ல்திறன் உடையது எனவும் ஃபைசர் 99 வீதம் செயல் திறன் உடையது எனவும் இங்கு கூறினார்கள்.

 இதற்கு ஆதாரம் தரப்பட மாட்டாது.

உயிர் பயம் உள்ளவர்கள் ஊசி எது கொடுத்தாலும் போட வரிசையாக உள்ளார்கள் கிடைப்பதை பெற்று உயிர் வாழ்ந்தால் போதுமென நினைக்கிறார்கள் இதில் சைனா என்ன , அமெரிக்க என்ன 

7 hours ago, அக்னியஷ்த்ரா said:

நம்மடை கூட்டம் தானும் படுக்கமாட்டினம் தள்ளியும் படுக்கமாட்டினம் என்பது தெரியாதா மச்சி , எந்த ஊசியை ஏற்றினாலும் கொழுப்பெடுத்து ஆடி கொரோனவை தூக்கிக்கொண்டால் சங்கூதி ,பரிகாரம் செய்யவேண்டிவருமென்பது தான் கொரோன அம்மன் சொல்லும் பால பாடம், அவனெடுக்கும் பிச்சைக்கு ஊசியென்ற ஒன்றையாவது கண்ணில் காட்டுறானே என்று சந்தோஷப்படும், இவர்கள் வக்கணையாக பைசரையும், மொடர்னாவையும், அஸ்ட்ராவையும் ஏத்திப்போட்டு அரசியல் அலசல் அலசுவது போல அலம்பதான் சரி, ஒரு காலத்தில் இப்படித்தான் விஸ்கி கிளாஸுடன் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டிருந்து  புலத்தில் போராட்டம் எப்படி நடத்தவேணும் என்று தலைவருக்கே வகுப்பெடுத்த கேங்ஸ் தூக்கி கடாசிவிட்டு அடுத்தவேலையை பாருங்கோ          

அவர்களுக்கும் அக்கறைதான் மச்சி என்ன செய்வது இலங்கை பிச்சை எடுத்து ஊசாவது தருதே இந்த அபாய சூழ்நிலையில் என்று போடு நகர்கிறோம் . 
இல்ங்கையில் சுகாதாரம் வெளிநாடுகள் போல் பேணமாட்டார்கள் எல்லா இன மக்களும் அதனால் அழிவு கொஞ்சம் அதிகமாகத்தான்  இருக்கும் போல எண்ணத்தோன்றுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

கிருபன் ஜோ பைடன் சொன்னதை கேட்கவில்லை போல இருக்கிது. அவர்கள் அமெரிக்காவில் தயாரித்த அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை ஏற்றுமதிசெய்யப்போகிறார்களாம். ஏனென்றால் அது CDA ஆல் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லையாம்!!

அஸ்ட்ரா செனக்கா ஒரு சுவீடிஷ்-பிரித்தானிய கம்பனி. ஆனால், இதன் உற்பத்தித் தொழிற்சாலை அமெரிக்காவில் இருக்கிறது. இங்கே தடுப்பூசி உற்பத்தி செய்தாலும் பாவனைக்கு அனுமதியில்லை.

அனுமதி கிடைக்காமைக்கு பிரதான காரணம்: அமெரிக்க/அமெரிக்க ஜேர்மன் கூட்டுத் தயாரிப்பான மொடெர்னா, பைசர், ஜோன்சன் அன்ட் ஜொன்சன் போன்றவையின் சந்தை வாய்ப்பைப் பாதுகாக்கும் உள் நோக்கம்!

ஆனால், வெளியே சொல்லப் பட்ட காரணம்: FDA இற்கு அனுமதிக்காக முதலில் விண்ணப்பித்த போது தங்கள் efficacy data வில் சில தவறுகளை விட்டு விட்டார்கள். மீளவும் சரியான தரவுகளோடு விண்ணப்பித்தார்கள் - ஆனால் பயனர்களின் நம்பிக்கை பாதிக்கப் படலாம் என்று கிடப்பில் போட்டு விட்டார்கள்.

அமெரிக்காவிற்கு மேலுமொரு தடுப்பூசி தேவையில்லை என பைடன் நிர்வாகமும் இதை மீள உயிர்ப்பிக்க முயலவில்லை.

மற்றபடி AZ யின் தடுப்பூசி பாதுகாப்பும், வினைத்திறனும் மிக்கது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோடு வேலை பார்க்கும் ஒரு சிங்கள தம்பதி தமக்கு   இலங்கையிலிருந்து பகிரப்படும் காணொளிகளை அப்பப்போ காட்டுவார்கள், அவர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்வார்கள்.

ஒரு காணொளியில் வைத்திய சாலையில் போய் வர இடமின்றி எங்கு பார்த்தாலும் கொரோனா நோயாளிகளை வெறும் தரையில் பாயை விரிச்சு படுக்க வைத்திருக்கிறார்கள், எங்கு பார்த்தாலும் முனகல் சத்தம், அவர்களை சுற்றி சில உறவுகள்கூட கொரோனா விழிப்புணர்வின்றி அழுது கொண்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களூடாக அவர்களின் சக சிங்கள உறவுகள் பகிர்ந்த தகவல்படி இன்று இலங்கையில் உள்ள கொரோனா நிலவரம் முற்றுமுழுதாக இருட்டடிப்பு பண்ணப்பட்ட செய்திகள் என்றும் ., இழப்புக்கள் இலங்கை அரசு அறிவிப்பதைவிட மிக அதிகம் என்றும், கிராமபுற சிங்களவர்கள் பல லட்சம் பேர் ஏற குறைய வருமானமின்றி பட்டி சாவு நிலையை நெருங்கியிருப்பதாகவும்,

அதனால்தான் எவ்வளவு நெருக்கடியானபோதும் நாட்டை முழு அளவில் முடக்க நிலைக்கு கொண்டுவர ராஜபக்ச குடும்பம் விரும்பவைல்லை என்றும் சொனார்கள்.

அவர்கள் சொன்னதில் உண்மை இருக்கலாம்.

ராஜபக்ச என்ற குடும்ப அரசியலின் பலமே  கிராம புற சிங்களவர்களை தமிழருக்குஎதிராய் உசுப்பேத்திவிட்டு நகரத்தில் அவர்கள் சொகுசாய் வாழ்வதுதானே.

கொரோனா விசயத்தில் அந்த ராஜதந்திரம் எடுபடுமா? 

பல லட்சம் கிராமபுற சிங்களவர்கள்  கொரோனா முடக்க நிலையினால்  பசி பட்டினியில் வாடுவதாகவும், ஊடகங்கள் அதை மறைப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

நான் கேட்டேன்  புலம்பெயர் சிங்கள மக்கள் ஏன் ஒன்றிணைந்து தாயகத்தில் கஷ்டபடும் சிங்களவர்களுக்கு உதவகூடாது என்று?

அப்படி ஒன்று இருக்கா என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தார்கள், நான் பேசாமல் போய்விட்டேன்.

பின்புதான் யோசித்தேன் நானும் அவர்கள் இனம்தான், பிரபாகரன் என்ற ஒற்றை புள்ளி வளர்ந்த்துவிட்ட நல்ல குணங்களினால்தான் இன்றும் ஒரு சிலர் எம் தாயக மக்களை நினைவு கொண்டு ஏதாவது செய்கிறோம், இல்லையென்றால், தமிழர்களும் சிங்களவர்கள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

என்னோடு வேலை பார்க்கும் ஒரு சிங்கள தம்பதி தமக்கு   இலங்கையிலிருந்து பகிரப்படும் காணொளிகளை அப்பப்போ காட்டுவார்கள், அவர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்வார்கள்.

ஒரு காணொளியில் வைத்திய சாலையில் போய் வர இடமின்றி எங்கு பார்த்தாலும் கொரோனா நோயாளிகளை வெறும் தரையில் பாயை விரிச்சு படுக்க வைத்திருக்கிறார்கள், எங்கு பார்த்தாலும் முனகல் சத்தம், அவர்களை சுற்றி சில உறவுகள்கூட கொரோனா விழிப்புணர்வின்றி அழுது கொண்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களூடாக அவர்களின் சக சிங்கள உறவுகள் பகிர்ந்த தகவல்படி இன்று இலங்கையில் உள்ள கொரோனா நிலவரம் முற்றுமுழுதாக இருட்டடிப்பு பண்ணப்பட்ட செய்திகள் என்றும் ., இழப்புக்கள் இலங்கை அரசு அறிவிப்பதைவிட மிக அதிகம் என்றும், கிராமபுற சிங்களவர்கள் பல லட்சம் பேர் ஏற குறைய வருமானமின்றி பட்டி சாவு நிலையை நெருங்கியிருப்பதாகவும்,

அதனால்தான் எவ்வளவு நெருக்கடியானபோதும் நாட்டை முழு அளவில் முடக்க நிலைக்கு கொண்டுவர ராஜபக்ச குடும்பம் விரும்பவைல்லை என்றும் சொனார்கள்.

அவர்கள் சொன்னதில் உண்மை இருக்கலாம்.

ராஜபக்ச என்ற குடும்ப அரசியலின் பலமே  கிராம புற சிங்களவர்களை தமிழருக்குஎதிராய் உசுப்பேத்திவிட்டு நகரத்தில் அவர்கள் சொகுசாய் வாழ்வதுதானே.

கொரோனா விசயத்தில் அந்த ராஜதந்திரம் எடுபடுமா? 

பல லட்சம் கிராமபுற சிங்களவர்கள்  கொரோனா முடக்க நிலையினால்  பசி பட்டினியில் வாடுவதாகவும், ஊடகங்கள் அதை மறைப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

நான் கேட்டேன்  புலம்பெயர் சிங்கள மக்கள் ஏன் ஒன்றிணைந்து தாயகத்தில் கஷ்டபடும் சிங்களவர்களுக்கு உதவகூடாது என்று?

அப்படி ஒன்று இருக்கா என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தார்கள், நான் பேசாமல் போய்விட்டேன்.

பின்புதான் யோசித்தேன் நானும் அவர்கள் இனம்தான், பிரபாகரன் என்ற ஒற்றை புள்ளி வளர்ந்த்துவிட்ட நல்ல குணங்களினால்தான் இன்றும் ஒரு சிலர் எம் தாயக மக்களை நினைவு கொண்டு ஏதாவது செய்கிறோம், இல்லையென்றால், தமிழர்களும் சிங்களவர்கள்தான்.

இலங்கையரசு, மக்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் கோரானா தடுப்பூசியினைப்போட்டு நாட்டை வெளினாட்டு உல்லாசப்பயணத்திற்காகத்திறந்து விடும், ஏற்கனவே நாடு வரலாறு காணாத மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது, கோவிட் இறப்பை வெளியிட்டால் வெளினாட்டவர்கள் வரமாட்டார்கள் அதற்காக உண்மையை மூடி மறைக்கலாம். இலங்கையரசுக்கு கோவிட்டை விட நாட்டின் பொருளாதார நெருக்கடிதான் அதிக தொல்லையான விடயமாகவுள்ளது. இலங்கைக்கு கோவிட் அரசன், பொருளாதாரம் தெய்வம், நின்று கொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

இலங்கையரசுக்கு கோவிட்டை விட நாட்டின் பொருளாதார நெருக்கடிதான் அதிக தொல்லையான விடயமாகவுள்ளது. இலங்கைக்கு கோவிட் அரசன், பொருளாதாரம் தெய்வம், நின்று கொல்லும்.

அது எப்படி மண்டையில் சுட்டியலால் அடிச்சதுமாதிரி இப்படி சொல்கிறீர்கள்?

இது புரியாமால்தான் பலபேர்  யாழில் தமக்கு தெரிந்த விஞ்ஞான அறிவை வைத்து பலருக்கு வகுப்பெடுக்கிறார்கள்...

இலங்கைக்கு கோவிட் அரசன், பொருளாதாரம் தெய்வம், நின்று கொல்லும். அற்புதமான வரிகள்.

எனக்கு புரிந்தவரை ...

பலர் இங்கே இலங்கையின் விஞ்ஞான தடுப்பூசிகள் பற்றி எல்லைகள் கடந்து  கோப்பி குடிச்சுக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டபடி விமர்சிக்கின்றனர்..

பொதுவாகவே அறிவியல் மேதாவிகள்  தமது பாதுகாப்பை பக்காவாக வைத்துக்கொண்டே பிறருக்கு வகுப்பெடுப்பார்கள்.

இங்கே கள உறுப்பினர் ஜஸ்டின் கூறியது நினைவு வருகிறது..எமக்கு தெரிந்த விஞ்ஞான அறிவை பலரை பலவீனபடுத்த பயன்படுத்தாதீர்கள்...

அற்புதம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

பலர் இங்கே இலங்கையின் விஞ்ஞான தடுப்பூசிகள் பற்றி எல்லைகள் கடந்து  கோப்பி குடிச்சுக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டபடி விமர்சிக்கின்றனர்..

பொதுவாகவே அறிவியல் மேதாவிகள்  தமது பாதுகாப்பை பக்காவாக வைத்துக்கொண்டே பிறருக்கு வகுப்பெடுப்பார்கள்.

அப்படியே சரியாகச் சொன்னீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

பொதுவாகவே அறிவியல் மேதாவிகள்  தமது பாதுகாப்பை பக்காவாக வைத்துக்கொண்டே பிறருக்கு வகுப்பெடுப்பார்கள்.

இங்கே கள உறுப்பினர் ஜஸ்டின் கூறியது நினைவு வருகிறது..எமக்கு தெரிந்த விஞ்ஞான அறிவை பலரை பலவீனபடுத்த பயன்படுத்தாதீர்கள்...

அற்புதம்!!!

நான் இங்கே ஜேர்மனிய மொழி வானொலி மற்றும் தொலைக்காட்சி பத்திரிகை செய்திகளை வைத்தே கருத்தெழுதுகின்றேன்.

நானாக செய்திகளை தயாரிக்கவில்லை. அந்தளவிற்கு அறிவுமில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நான் இங்கே ஜேர்மனிய மொழி வானொலி மற்றும் தொலைக்காட்சி பத்திரிகை செய்திகளை வைத்தே கருத்தெழுதுகின்றேன்.

நானாக செய்திகளை தயாரிக்கவில்லை. அந்தளவிற்கு அறிவுமில்லை...

என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

மனசாலும் நினைவாலும் இனத்துக்கு உதவியயர்களில் சாந்தி உடையார் விசுகு அணியில் உள்ளவர்களில்  நீங்களும் ஒன்று...

பிறருக்கு உதவும் உயர் குணம் கொண்ட குமாரசுவாமியண்ணா பக்கமே என் தராசு எப்போதும் நிற்கும், இனம் பற்றியதான என் விமர்சனங்கள் குமாரசுவாமியண்ணாவை எப்போதும் விமர்சிக்காது,

ஏன் இப்படி என்னை காயபடுத்துறீங்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அமெரிக்கா குறித்து தெரியாது. பிரிட்டனை பொறுத்த வரை, மருந்தை தயாரித்தது, oxford பல்கலைக்கழக விண்ஞானிகள். மருந்தை அதிவிரைவாக வணிக ரீதியில் சந்தைக்கு கொண்டு வர, தகுந்த கட்டமைப்பினை கொண்ட  astra zeneka வணிக நிறுவனம் சேர்ந்து கொண்டது. இதுவே எனது புரிதல், தவறானால் திருத்தவும்.

https://www.astrazeneca.com/media-centre/press-releases/2020/astrazeneca-and-oxford-university-announce-landmark-agreement-for-covid-19-vaccine.html

****

.....But while the majority of batches have been produced in the UK, there are three batches of the AstraZeneca vaccine produced by the Serum Institute of India, with these made and manufactured under the name ‘Covishield’ in India.

https://www.scotsman.com/health/what-are-the-indian-astrazeneca-vaccine-batch-numbers-and-how-to-check-them-will-eu-countries-like-portugal-accept-covishield-3294722

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

அது எப்படி மண்டையில் சுட்டியலால் அடிச்சதுமாதிரி இப்படி சொல்கிறீர்கள்?

இது புரியாமால்தான் பலபேர்  யாழில் தமக்கு தெரிந்த விஞ்ஞான அறிவை வைத்து பலருக்கு வகுப்பெடுக்கிறார்கள்...

இலங்கைக்கு கோவிட் அரசன், பொருளாதாரம் தெய்வம், நின்று கொல்லும். அற்புதமான வரிகள்.

எனக்கு புரிந்தவரை ...

பலர் இங்கே இலங்கையின் விஞ்ஞான தடுப்பூசிகள் பற்றி எல்லைகள் கடந்து  கோப்பி குடிச்சுக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டபடி விமர்சிக்கின்றனர்..

பொதுவாகவே அறிவியல் மேதாவிகள்  தமது பாதுகாப்பை பக்காவாக வைத்துக்கொண்டே பிறருக்கு வகுப்பெடுப்பார்கள்.

இங்கே கள உறுப்பினர் ஜஸ்டின் கூறியது நினைவு வருகிறது..எமக்கு தெரிந்த விஞ்ஞான அறிவை பலரை பலவீனபடுத்த பயன்படுத்தாதீர்கள்...

அற்புதம்!!!

நீங்கள் கூறுவது மிகவும் சரி, தடுப்பூசிகள் அனைத்தும் உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன,எனது புரிதலின்படி தடுப்பூசியில்லாமல் கோவிட்டை எதிர்கொள்வது கடினம் இது எனது சொந்த புரிதல் மட்டுமே, ஆலோசனை கூறுவதற்கு துறைசார் கல்வியறிவில்லை, ஆனால் இணைய தேடலில் நான் அறிந்தவரை கோவிட் தடுப்பூசிகளை 4 வகைகளாகப்பிரிக்கிறார்கள் ஆனால் எனது புரிதலில் அடிப்படையில் இரண்டு வகைதான்
1. வலுவிழந்த கோவிட் கிருமியை உடலில் செலுத்துவது
2.கோவிட் வைரசின் மூலக்கூறை 3 வழிகளில் செலுத்துவது (viral vector, mrna, protein subunit)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.