Jump to content

'நாளொன்றுக்கு 200 - 300 பேர் வரை மரணிக்கலாம்': அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாடு..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

மனசாலும் நினைவாலும் இனத்துக்கு உதவியயர்களில் சாந்தி உடையார் விசுகு அணியில் உள்ளவர்களில்  நீங்களும் ஒன்று...

பிறருக்கு உதவும் உயர் குணம் கொண்ட குமாரசுவாமியண்ணா பக்கமே என் தராசு எப்போதும் நிற்கும், இனம் பற்றியதான என் விமர்சனங்கள் குமாரசுவாமியண்ணாவை எப்போதும் விமர்சிக்காது,

ஏன் இப்படி என்னை காயபடுத்துறீங்கள்?

எனது மடியிலும் மனதிலும் பாரமில்லை.
இருந்தாலும்  பல இடங்களில் சாடல்கள் வரும்போது சந்தர்ப்பம் பார்த்து எனது நிலையையும் தெளிவுபடுத்த வேண்டுமல்லவா...
மற்றும் படி அந்தக் கருத்து உங்களை காயப்படுத்த அல்ல.  :)

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்களுக்கும் அக்கறைதான் மச்சி என்ன செய்வது இலங்கை பிச்சை எடுத்து ஊசாவது தருதே இந்த அபாய சூழ்நிலையில் என்று போடு நகர்கிறோம் . 
இல்ங்கையில் சுகாதாரம் வெளிநாடுகள் போல் பேணமாட்டார்கள் எல்லா இன மக்களும் அதனால் அழிவு கொஞ்சம் அதிகமாகத்தான்  இருக்கும் போல எண்ணத்தோன்றுகிறது 

சுய முடிவெடுக்கும்  உரிமையுள்ள மக்கள் கேள்வி கேட்கின்றார்கள் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👆"கோவிட் என்பது இதயநோய், நீரிழிவு போல தனிப்பட்ட ஒருவரை மட்டும் பாதிக்கும் தொற்றா நோயல்ல, ஒருவரில் இருந்து குறைந்தது இருவர் மூவருக்குப் பரவக் கூடிய தொற்று நோய்"

இந்த அடிப்படைத் தகவலை கடந்த ஒன்றரை வருடங்களில் மூளையில் ஏற்றிக் கொள்ளாதவர்கள் கேள்வி கேட்கவும், முடிவெடுக்கவும் தகுதியுடையோர் அல்ல என்பது என் அபிப்பிராயம்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சுய முடிவெடுக்கும்  உரிமையுள்ள மக்கள் கேள்வி கேட்கின்றார்கள் ?

 

கேள்வி கேட் க உரிமை உண்டு ஆனால்  அதற்கான் பதில்?? கொரோனா இந்த நிலையில் எத்தனை கோவில்களில் திருவிழாக்களை நிறுத்தி உள்ளார்கள் ஆனால் நல்லூரிலும் நிறுத்தியிருந்தால் கேள்வி எழுந்திருக்காது ? சிங்களவன் கண்டிக்கு கொடுக்கான் ,கதிர்காமத்துக்கு கொடுக்கான் என்றால் அரசாங்கத்தின் பேச்சை மக்கள் அந்த மக்கள் ஓரளவேனும் கேட்பார்கள் ஆனால் தமிழர்கள் ??

கதிர்காமம் நிறைவடைந்தது பக்தர்கள் குறைப்பினால்  நம்மவர்கள் கொஞ்சமாவது புரிந்துகொள்ளுங்கள் என்றால் நீ என்ன எனக்கு சொல்கிற பெரிய புடுங்கியா என்பார்கள் எனது நண்பன் கொவிட்ரீமில் இருக்கிறான் வைத்தியர் வந்து சொல்வான் நிறைய கதைகள் இழப்பு ஏற்படும் வரைக்கும் நம்ம மக்களுக்கு தெரியப்ப்போவதில்லையாம் கடவுளும் இருக்கும் கோவிலும் இருக்கும் கும்பிட ஆள் இருக்க வேண்டுமென்பதே எனது எதிர்பார்ர்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/8/2021 at 17:33, கிருபன் said:

அமெரிக்காவில் இல்லை. இது ஒகேபோர்ட்டில் உருவாக்கப்பட்டது. நானும் குத்திக்கொண்டேன்.

இப்ப மாஸ்க் எல்லாம் போடாமல் வீறாப்பாக திரிகின்றேன் (தனியத்தான்😂)

சினோபார்ம் ஒரு பில்லியனுக்கு மேல் சீனாவில் குத்தி இருக்கின்றார்கள். அங்கு தொற்றும் இறப்பும் குறைவு. 

உங்களை இணையத்தில் காண்கின்றேன்  😂 அஸ்ட்ராசெனெகா போட்டவர்களை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். அவர்கள் நல்ல சிமாட்டாக திரிகிறார்கள். இலங்கையில் சினோபார்ம் போட்டவர்களும் திருப்த்தியாக உள்ளனர்.  புதிதாக தடுப்பூசி போட இருப்பவர்களை மட்டுமே  பொய் பிரசாரம் பாதிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

சுய முடிவெடுக்கும்  உரிமையுள்ள மக்கள் கேள்வி கேட்கின்றார்கள் ?

 

கோவில் போவது உங்கள் உரிமை அதை தடுப்பதால் உங்களது சுதந்திரம் பறிபோகிறது என நினைத்தால் ,நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.. உங்களால் கொரோனா தொற்று அடுத்தவர்களுக்கு பரவுகின்றது... அடுத்தவர்களுக்கு ஆபத்தில்லாத சுதந்திரத்தை மட்டுமே நீங்கள் அனுபவிக்க முடியும்… அடுத்தவர்கள் பாதுகாக்கப்படுவதே சுதந்திரம்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோவில் போவது உங்கள் உரிமை அதை தடுப்பதால் உங்களது சுதந்திரம் பறிபோகிறது என நினைத்தால் ,நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.. உங்களால் கொரோனா தொற்று அடுத்தவர்களுக்கு பரவுகின்றது... அடுத்தவர்களுக்கு ஆபத்தில்லாத சுதந்திரத்தை மட்டுமே நீங்கள் அனுபவிக்க முடியும்… அடுத்தவர்கள் பாதுகாக்கப்படுவதே சுதந்திரம்..!

நம்பிக்கை என்பது ஒரு பலமான சக்தி, சிலர் அதற்காக உயிரையும் கொடுக்கிறார்கள், படித்தவர்கள் தடுப்பூசியினை சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறார்கள், இலங்கையைப்பூர்வீமாகக்கொண்ட அவுஸ்திரேலியாவில் வளர்ந்து படித்து மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர, முண்ணனி வைத்தியசாலையில் பணிபுரிகிறார் (செவிலித்தாய்), கோவிட் தடுப்பூசி போடவில்லை (அதற்கு பல காரணங்களை கூறினார்) ,அவர்களது வைத்தியசாலையில் முகாமையாளர் மட்டுமே தடுப்பூசி போட்டதாகக்கூறினார், அத்தியாவசிய சேவை செய்பவர்கள் தடுப்பூசி போடாமல் விடுவதால் சமூக அளவில் ஏற்படும் தீமைகளை புரிந்து கொள்ளவில்லை. கோவிட் பரவல் தீவிரமானபின் அண்மையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தடுப்பூசி பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்டபோது ஆம் என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.


மானில அரசுகள் அத்தியாவசிய சேவையாளர்களுக்கு தடுப்பூசி அவசியமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது ஆனால் தேசிய அரசு அதற்கு மறுக்கிறது.


 கோவிட் தடுப்பூசி போடுவதால் போடுபவர்க்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று தெரியாது, அதனால்தான் நான் யாருக்கும் தடுப்பூசி போடுங்கள் என்று சிபார்சு செய்யவில்லை, ஆனால் நான் தடுப்பூசி பெற்றுக்கொண்டேன், அது எனது விருப்பம்.

அதே மாதிரி தடுப்பூசி போட வெண்டாம் என கூறுவதற்கும் தனிமனித அதிகாரமில்லை. குறிப்பாக பாமரமக்களை இந்த படித்தவர்கள் குழப்பிவிதிறார்கள்.

 ஜனநாயகம் என்பது எனது கைத்தடி உனது மூக்கைத்தொடாதவரைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

நம்பிக்கை என்பது ஒரு பலமான சக்தி, சிலர் அதற்காக உயிரையும் கொடுக்கிறார்கள், படித்தவர்கள் தடுப்பூசியினை சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறார்கள், இலங்கையைப்பூர்வீமாகக்கொண்ட அவுஸ்திரேலியாவில் வளர்ந்து படித்து மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர, முண்ணனி வைத்தியசாலையில் பணிபுரிகிறார் (செவிலித்தாய்), கோவிட் தடுப்பூசி போடவில்லை (அதற்கு பல காரணங்களை கூறினார்) ,அவர்களது வைத்தியசாலையில் முகாமையாளர் மட்டுமே தடுப்பூசி போட்டதாகக்கூறினார், அத்தியாவசிய சேவை செய்பவர்கள் தடுப்பூசி போடாமல் விடுவதால் சமூக அளவில் ஏற்படும் தீமைகளை புரிந்து கொள்ளவில்லை. கோவிட் பரவல் தீவிரமானபின் அண்மையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தடுப்பூசி பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்டபோது ஆம் என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.


மானில அரசுகள் அத்தியாவசிய சேவையாளர்களுக்கு தடுப்பூசி அவசியமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது ஆனால் தேசிய அரசு அதற்கு மறுக்கிறது.


 கோவிட் தடுப்பூசி போடுவதால் போடுபவர்க்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று தெரியாது, அதனால்தான் நான் யாருக்கும் தடுப்பூசி போடுங்கள் என்று சிபார்சு செய்யவில்லை, ஆனால் நான் தடுப்பூசி பெற்றுக்கொண்டேன், அது எனது விருப்பம்.

அதே மாதிரி தடுப்பூசி போட வெண்டாம் என கூறுவதற்கும் தனிமனித அதிகாரமில்லை. குறிப்பாக பாமரமக்களை இந்த படித்தவர்கள் குழப்பிவிதிறார்கள்.

 ஜனநாயகம் என்பது எனது கைத்தடி உனது மூக்கைத்தொடாதவரைதான்.

இவ்வாறு, மருத்துவத் துறையில் இருந்து கொண்டு அடிப்படையான உயிரியல் புரிந்திருக்க வேண்டிய வேலைகளில் இருந்து கொண்டு கோவிட் தடுப்பூசிகளை சந்தேகிப்போர் மீது எனக்கு மரியாதை மிகக் குறைவு! -ஏனெனில் இவர்கள் தங்கள் துறை சார் அறிவை வாழ்க்கை சார்ந்த  முடிவுகள் எடுக்கப் பாவிக்காமல் மாதச் சம்பளம் எடுக்க மட்டுமே பாவிக்கும் போலிகள்!

அமெரிக்காவில் மிகப் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் சேவையில் இருப்போர் கோவிட் தடுப்பூசி எடுக்கா விட்டால் வேலை காலி! மிகச்சரியான முடிவென நினைக்கிறேன் - மருத்துவ விஞ்ஞானத்தை நம்பாதவர், அதை நோயாளியின் நலனுக்காகப் பாவிப்பார் என்று எனக்கு நம்பிக்கையில்லை!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.