Jump to content

கார்த்திக் சுப்புராஜ்.. எங்கள விட்ருங்க.. ஈழ பிரச்சனையை படமாக்க வேண்டாம் என கோரிக்கை.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திக் சுப்புராஜ்.. எங்கள விட்ருங்க.. ஈழ பிரச்சனையை படமாக்க வேண்டாம் என கோரிக்கை.!

Screenshot-2021-08-09-08-04-47-379-org-m

சென்னை: ஜகமே தந்திரம் படத்தை பார்த்து விட்டு பல ஈழத் தமிழர்களும் இதே கருத்தை முன் வைத்த நிலையில், நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள நவரசாவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் ஈழ பிரச்சனையை தொட்டுள்ளதற்கு எதிராக ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

சினிமா கலைஞர்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்ய அத்தனை முன்னணி நடிகர்களும் சம்பளம் கூட வாங்காமல் முன் வந்த நிலையில், இயக்குநர்கள் இன்னமும் மெனக்கெட்டு நல்ல கதைகளை கொடுத்திருந்தால் நவரசா சர்வதேச அளவில் பேசப்பட்டு இருக்கும் என்பதே பலரது வாதமாக உள்ளது.

இதற்கு முன்னதாக நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் பேசப்பட்ட அளவுக்கு கூட நவரசா டாக் ஆஃப் தி டவுனாக மாறவில்லை.

ஏமாற்றிய நவரசா

நவரசா ஆந்தாலஜியில் மொத்தம் 9 இயக்குநர்கள் தங்களுக்கு தெரிந்த மொத்த வித்தையும் இறக்கி 9 குறும்படங்களை உருவாக்கி உள்ளனர். இதில் ஒரு சில மட்டுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால், பல கதைகள் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்தது ஒட்டுமொத்த நவரசாவையும் ரசிக்கும் படி செய்யவில்லை என்பதே ஒடிடி ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்

.jpg

அதில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கெளதம் மேனன், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான பீஸ் - சாந்தி கதை இலங்கை தமிழர்கள் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது. மறுபடியும் அதே மரமா என்பது போல மீண்டும் ஈழ பிரச்சனையை கையில் எடுத்த கார்த்திக் சுப்புராஜை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பர்னிச்சர் உடைச்சாச்சு

IMG-20210809-081040.jpg

தனுஷ் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியான ஜகமே தந்திரம் படத்திலும் இதே போல ஈழத் தமிழர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து எந்த அளவுக்கு பர்னிச்சரை உடைக்க முடியுமோ அந்த அளவுக்கு உடைச்சாச்சு.. இப்போ மறுபடியும் நெட்பிளிக்ஸின் நவரசாவிலும் உடைக்க வந்துட்டீங்களா என நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

மகா பிரபு இங்கேயும் வந்துட்டீங்களா..

fb_img_1561212539654-2095654988.jpg

மேலும், மகா பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். போதும் டா சாமி இனி மேல் இலங்கை தமிழர்கள் பிரச்சனையை யாரும் சினிமா எடுத்து காசு பார்க்க வேண்டாம் என்றும் கண்டன பதிவுகளும் அதிகம் கண்ணில் தென்படுகின்றன.

என்ன கதை.?

இப்படி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் கழுவி ஊற்றும் அளவுக்கு அப்படி என்ன கதையை எடுத்து வைத்திருக்கிறார் என்று பார்ப்போம். விடுதலை புலிகளான கெளதம் மேனன், பாபி சிம்ஹா மற்றும் சந்தீப் கிஷன் பதற்றமான இடத்தில் மறைமுகமாக உள்ளனர். அங்கே வரும் ஒரு சிறுவன் தனது தம்பியை வீட்டில் விட்டு விட்டு வந்து விட்டதாக கூறி அழுகிறான்.

பாவப்பட்ட பாபி சிம்ஹா

அந்த சிறுவனின் பேச்சைக் கேட்டு பாவப்படும் பாபி சிம்ஹா, அந்த சிறுவனுக்கு உதவ தனது டீமுடன் முன்னேறி செல்கிறார். தனியாளாக சிங்களர்கள் இருக்கும் இடத்திற்குள் சென்று அந்த சிறுவனின் தம்பியை மீட்க முயற்சிக்கிறார். வீட்டுக்குள் சென்று பார்த்தால் செம ட்விஸ்ட். அங்கே தம்பியே இல்லை.

நாய்க்குட்டி

Screenshot-2021-08-09-08-14-56-661-org-m

அந்த சிறுவனிடம் கோபமாக கேட்க, அங்கே இருக்கும் நாய்க்குட்டி தான் தனது தம்பி "வெள்ளையன்"  அதனை காப்பாற்றுங்கள் என சொல்ல அதனை தூக்கிக் கொண்டு வெளியேறும் போது சிங்கள படை சுட ஆரம்பிக்கிறது. பின்னர் நாய்க்குட்டியை தூக்கிட்டுப் போறேன் என இவர் கையசைத்துக் காட்ட சுடுவதை நிறுத்துகிறது.

என்ன சொல்ல வரீங்க.?

இவரும் ஜாலியா நாய்க்குட்டியை காப்பாற்றி செல்கிறார். போனவர் சும்மா இல்லாமல், சிங்கள ராணுவத்தினருக்கும் இரக்கம் இருக்கிறது. அவங்களுக்கு நன்றி சொல்லணும் என எட்டிப் பார்த்து நன்றி சொல்ல இவரை சிங்கள ராணுவம் சுட்டு வீழ்த்துகின்றனர். அத்துடன் கதை முடிகிறது.

இதில் என்னத்த சொல்ல வருகிறார் கார்த்திக் சுப்புராஜ் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நாய்க்குட்டிக்கு காட்டும் இரக்கத்தை கூட ஈழத் தமிழர்களுக்கு சிங்களம் காட்டுவதில்லை என்பதையே சுட்டுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்  ரசிகர்கள் விளக்கி வருகின்றனர்.

ப்ளீஸ் எங்களை விட்ருங்க..

IMG-20210809-081649.jpg

இந்நிலையில், இலங்கை பெண்ணொருவர் டியர் கார்த்திக் சுப்புராஜ், ப்ளீஸ் விட்ருங்க இதற்கு மேல் எங்கள் கதையை எடுக்கிறோம் என்கிற பெயரில் கொடுமைப்படுத்தாதீங்க ..

போதும் .. முக்கியமா நடிகர்களை இலங்கை தமிழ் பேச வைக்க முயற்சிக்காதீங்க .. என்று போட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

ஆதரவும் எதிர்ப்பும்

அந்த ட்வீட்டுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நல்லாத்தான் எடுத்திருக்கார் என்றும் சரியா சொன்னீங்க, இனிமேலாவது கார்த்திக் சுப்புராஜ் வேற பக்கம் திரும்புவாரா என பார்க்கலாம் என கலவையான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.

https://tamil.filmibeat.com/news/fans-strong-request-to-karthick-subbaraj-tweet-goes-viral-085923.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .
    • எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி -  இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஓளட் போடும் ஶேர்யக்ஹ் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.