Jump to content

‘தம்மிக்க பாணி’ தயாரித்த தம்மிக்கவுக்கு தடுப்பூசி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘தம்மிக்க பாணி’ தயாரித்த தம்மிக்கவுக்கு தடுப்பூசி

image_5518436c2e.jpg

கொரோனா வைரஸ் அலையின் போது, ஒரு வகையான பாணியை தயாரித்திருந்த தம்மிக்க பண்டார, அப்பாணியை பருகினால், கொரோனா தொற்றுவதை தடுக்குமென பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.

கேகாலையைச் சேர்ந்த நாட்டு மருத்துவரான தம்மிக்க பண்டார, தனது கனவில் வந்த காளியம்மனே, இந்த பாணி மருந்தை தயாரிக்குமாறு கூறியதாக தெரிவித்திருந்தார்.

தம்மிக்க பண்டார தயாரித்த இந்தப் பாணத்தை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோரும், ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பருகியிருந்தனர்.

தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு முன்னரே இந்தப் பாணியை அவர்கள் பருகியிருந்தனர். எனினும், அவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தம்மிக்க பண்டாரவின் பாணியை பெற்றுக் கொள்வதற்காக அவரின் வீட்டுக்கு முன்பாக பல்லாயிரக் கணக்கானோர் ஒரே நேரத்தில் ஒன்றுகூடினர். இதனால். “தம்மிக்க பாணி கொத்தணி” உருவாகிவிடுமோ என்றோர் அச்சமும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தனது வீட்டின் முன்பாக குழுமியிருந்தவர்களுக்கு தம்மிக்க பண்டார, கால் போத்தல்களில் அடைத்த பாணியை இலவசமாக விநியோகித்தார்.

 இந்த நிலையில், தம்மிக்க பண்டாரவின் தயாரிப்புக்கு மருத்துவ பானமாக அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளபோதும், கொரோனா எதிர்ப்பு மருந்தாக அங்கிகாரம் வழங்கப்படவில்லை என, ஆயுர்வேத ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, தம்மிக்க பண்டார, கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட படமும் சமூக வலைத்தளத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. இப்படத்துக்கு கீழே, “இவ்வருடத்துக்கான சிறந்த படம்” என பலரும் கருத்துக்களை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.tamilmirror.lk/ஏனையவை/தம்மிக்க-பாணி-தயாரித்த-தம்மிக்கவுக்கு-தடுப்பூசி/389-278349

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலிக்கே… அல்வாவா? 🤣

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

திருநெல்வேலிக்கே… அல்வாவா? 🤣

பருத்தித்துறைக்கே தட்டை வடையா என்று இனி கேட்கத் தொடங்க வேண்டும். எம்மூரிலும் நல்ல விடயங்கள் இருக்கு தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நிழலி said:

பருத்தித்துறைக்கே தட்டை வடையா என்று இனி கேட்கத் தொடங்க வேண்டும். எம்மூரிலும் நல்ல விடயங்கள் இருக்கு தானே. 

ஓம்… நிழலி. வாற வெள்ளிக்கிழமை… இப்படியான விசயங்களில் கவனம் எடுத்து ஆராய வேண்டும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

ஓம்… நிழலி. வாற வெள்ளிக்கிழமை… இப்படியான விசயங்களில் கவனம் எடுத்து ஆராய வேண்டும். 😁

வாற வெள்ளிக்கிழமை… பீர் சாப்டுவதாக இருந்தேன்… சம்பவம் இருப்பதால்.. விஸ்க்கி சாப்டப்போகிறேன்.. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

பருத்தித்துறைக்கே தட்டை வடையா என்று இனி கேட்கத் தொடங்க வேண்டும். எம்மூரிலும் நல்ல விடயங்கள் இருக்கு தானே. 

நீர்வேலிக்கே வாழைக் குலையா.வேறு திரியில் இப்படி ஒன்டு தொங்குவோமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

நீர்வேலிக்கே வாழைக் குலையா.வேறு திரியில் இப்படி ஒன்டு தொங்குவோமே

சாவகச்சேரிக்கே பிலாப்பழமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சாவகச்சேரிக்கே பிலாப்பழமா

பிலாப்பழம் சாவகச்சேரிக்கு அல்ல👇🏽
பிலாப்பழ பெருமை மீசாலைக்கு மட்டுமே 😎

Link to comment
Share on other sites

4 hours ago, சுவைப்பிரியன் said:

நீர்வேலிக்கே வாழைக் குலையா.வேறு திரியில் இப்படி ஒன்டு தொங்குவோமே

அதுதானே, இதோ.

பூனகிரிக்கே மொட்டைக் கறுப்பனா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வாற வெள்ளிக்கிழமை… பீர் சாப்டுவதாக இருந்தேன்… சம்பவம் இருப்பதால்.. விஸ்க்கி சாப்டப்போகிறேன்.. 😁

கிழிஞ்சுது…. கிளிநொச்சி.  😂 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ  பாணி என்று சொல்லி ஊசி குத்தலில் இருந்து தப்ப பார்த்தார் சிங்கன் விடக்கூடாது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

கிழிஞ்சுது…. கிளிநொச்சி.  😂🤣

ஒட்டிச்சுது.. ஒட்டி சுட்டான்..

முக்குது.. முல்லைத்தீவு…

நக்குது… நாவற்குழி..

படுத்துது… பரந்தன்… 😄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒட்டிச்சுது.. ஒட்டி சுட்டான்..

முக்குது.. முல்லைத்தீவு…

நக்குது… நாவற்குழி..

படுத்துது… பரந்தன்… 😄

புங்குடுதீவுக்கே.... கோவணமா? 🤣

விசுகரையும்.... கோத்து  விடுவம்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

புங்குடுதீவுக்கே.... கோவணமா? 🤣

விசுகரையும்.... கோத்து  விடுவம்.  :grin:

பாவ்ம்யா அவரு.. சங்கத்துல மெம்பரா இருக்காப்ல.. சங்கத்து ஆளுக அடிப்பானுக..😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2021 at 09:50, பாலபத்ர ஓணாண்டி said:

வாற வெள்ளிக்கிழமை… பீர் சாப்டுவதாக இருந்தேன்… சம்பவம் இருப்பதால்.. விஸ்க்கி சாப்டப்போகிறேன்.. 😁

பீரை (பியரை) எப்படி சாப்பிடுவீர்கள்? அதி குளிரூட்டியில் வைத்துக் கட்டியாக்கிய பின்னா?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

புங்குடுதீவுக்கே.... கோவணமா? 🤣

விசுகரையும்.... கோத்து  விடுவம்.  :grin:

புங்குடுதீவாருக்கே (புகையிலை) வியாபாரமா???என்று தான்  வரணும் ராசா🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2021 at 23:52, குமாரசாமி said:

பிலாப்பழம் சாவகச்சேரிக்கு அல்ல👇🏽
பிலாப்பழ பெருமை மீசாலைக்கு மட்டுமே 😎

இஞ்ச சாவகச்சேரி பழம் என்றுதான் சொல்லி விற்பார்கள் 

உங்க புங்குடுதீவு புகையிலை கதை போலத்தான் சாமியார் அப்பாடா  அந்த முருகனுக்கே வெளிச்சம் 🤣🤭😜

Link to comment
Share on other sites

16 hours ago, Justin said:

பீரை (பியரை) எப்படி சாப்பிடுவீர்கள்? அதி குளிரூட்டியில் வைத்துக் கட்டியாக்கிய பின்னா?😎

கேட்டதுதான் கேட்டீர்கள்... அதை எப்படி சூப்பி உறுஞ்சுவீர்கள் என்று கேட்டிருக்க வேண்டும் ஐயா.😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2021 at 19:27, Justin said:

பீரை (பியரை) எப்படி சாப்பிடுவீர்கள்? அதி குளிரூட்டியில் வைத்துக் கட்டியாக்கிய பின்னா?😎

தமிழ்நாட்லதா கேக்கனும் வாத்தியாரே..😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2021 at 09:48, தனிக்காட்டு ராஜா said:

இஞ்ச சாவகச்சேரி பழம் என்றுதான் சொல்லி விற்பார்கள் 

உங்க புங்குடுதீவு புகையிலை கதை போலத்தான் சாமியார் அப்பாடா  அந்த முருகனுக்கே வெளிச்சம் 🤣🤭😜

யாழ்ப்பாணத்தான் ஒருவரிடம்,
புங்குடுதீவான் ஒருவர் கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார்.
அடுத்தநாள் சந்தியில புங்குடுதீவான் போய்க் கொண்டிருந்த போது யாழ்ப்பாணி அவரை சந்தித்தார். "அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது கிணத்தை மட்டும்தான்.
அதில் இருக்கும் தண்ணியை இல்லை. அதனால அந்த தண்ணிய நீங்கள் பயன்படுத்த வேண்டுமெண்டா மாசா மாசம் அதுக்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.( யாரு யாழ்ப்பாணிடா..😜)
அப்ப புங்குடுதீவான் தயங்காமல் "நேத்து நானேஉங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாங்க இண்டைக்கு நேரில பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு மட்டுமே காணும்.,அதில் இருக்குற தண்ணி வேணாம் ., ஒண்டு நீங்க அதிலிருக்கும் தண்ணீரை இறைச்சிட்டு வெத்து கிணறை எனக்கு கொடுங்க..
இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணிய வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்றாரே பார்க்கலாம்.
( புங்குடுதீவானா கொக்காண்டானாம்😜)👈👍
குறிப்பு : இந்தக்கதை நமக்குள்ளேயே இருக்கட்டும்😜
Peut être une image de 2 personnes et texte
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:
யாழ்ப்பாணத்தான் ஒருவரிடம்,
புங்குடுதீவான் ஒருவர் கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார்.
அடுத்தநாள் சந்தியில புங்குடுதீவான் போய்க் கொண்டிருந்த போது யாழ்ப்பாணி அவரை சந்தித்தார். "அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது கிணத்தை மட்டும்தான்.
அதில் இருக்கும் தண்ணியை இல்லை. அதனால அந்த தண்ணிய நீங்கள் பயன்படுத்த வேண்டுமெண்டா மாசா மாசம் அதுக்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.( யாரு யாழ்ப்பாணிடா..😜)
அப்ப புங்குடுதீவான் தயங்காமல் "நேத்து நானேஉங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாங்க இண்டைக்கு நேரில பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு மட்டுமே காணும்.,அதில் இருக்குற தண்ணி வேணாம் ., ஒண்டு நீங்க அதிலிருக்கும் தண்ணீரை இறைச்சிட்டு வெத்து கிணறை எனக்கு கொடுங்க..
இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணிய வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்றாரே பார்க்கலாம்.
( புங்குடுதீவானா கொக்காண்டானாம்😜)👈👍
குறிப்பு : இந்தக்கதை நமக்குள்ளேயே இருக்கட்டும்😜
Peut être une image de 2 personnes et texte
 

இந்த புங்குடுதீவாரே இப்படித்தான் தண்ணியில வெண்ணை எடுக்கிற  ஆட் களப்பா   சைக் 48 Emojis sick and sleep ideas | smiley emoji, emoticons emojis, emoji  symbols

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2021 at 09:50, பாலபத்ர ஓணாண்டி said:

வாற வெள்ளிக்கிழமை… பீர் சாப்டுவதாக இருந்தேன்… சம்பவம் இருப்பதால்.. விஸ்க்கி சாப்டப்போகிறேன்.. 😁

ஏதோ வெள்ளிக்கிழம சம்பவம் எண்டாங்கள்? வந்து பார்த்தா ஒண்டையும் காணேல்ல?

வர வர எல்லாரும் டீசண்டா மாறியிட்டாங்கள்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ஏதோ வெள்ளிக்கிழம சம்பவம் எண்டாங்கள்? வந்து பார்த்தா ஒண்டையும் காணேல்ல?

வர வர எல்லாரும் டீசண்டா மாறியிட்டாங்கள்!😎

உள் வீட்டு பிறசரால் சம்பவம் செய்ய முடியல.. வீட்டில அடி பலம் அய்யா..😆

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.