Jump to content

சம்மர் இன் யுகே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

மறைந்த ஈழத்துப் பெருங்கவிஞர் மகாகவியவர்கள் நானறிந்தவரை குறும்பாக்களை தமிழில் முதன்முதல் அறிமுகம் செய்தவர். அவரைப்பின்பற்றிப் பலரும் பின்னர் குறும்பாக்களையெழுதத் தொடங்கினார்கள்.
குறும்பா என்பது குறுகியா பாவாகவும் அதேவேளை குறும்பு கலந்ததாகவும் இருந்தாலேயே குறும்பா இலக்கணத்துக்கு உட்படும். எமது ஈழக்கவிஞர் மகாகவியைப் பின்பற்றி நானெழுதிய தற்போதைய யுகே காலநிலைக்கேற்ற குறும்பாவை இங்கு தருகிறேன். நண்பர்களும் இதை முயற்சித்துப்பார்க்கலாம்.
நாற்படையுங் கொண்டுயர்ந்த நாடு -யுகே
நாணா நவமாதர் வீடு
காற்தொடையின் கவடுவரை
காரிகையர் கவுணுயரும்
காலமிங்கு சம்மர் கடுஞ் சூடு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, karu said:

May be an image of 1 person

மறைந்த ஈழத்துப் பெருங்கவிஞர் மகாகவியவர்கள் நானறிந்தவரை குறும்பாக்களை தமிழில் முதன்முதல் அறிமுகம் செய்தவர். அவரைப்பின்பற்றிப் பலரும் பின்னர் குறும்பாக்களையெழுதத் தொடங்கினார்கள்.
குறும்பா என்பது குறுகியா பாவாகவும் அதேவேளை குறும்பு கலந்ததாகவும் இருந்தாலேயே குறும்பா இலக்கணத்துக்கு உட்படும். எமது ஈழக்கவிஞர் மகாகவியைப் பின்பற்றி நானெழுதிய தற்போதைய யுகே காலநிலைக்கேற்ற குறும்பாவை இங்கு தருகிறேன். நண்பர்களும் இதை முயற்சித்துப்பார்க்கலாம்.
நாற்படையுங் கொண்டுயர்ந்த நாடு -யுகே
நாணா நவமாதர் வீடு
காற்தொடையின் கவடுவரை
காரிகையர் கவுணுயரும்
காலமிங்கு சம்மர் கடுஞ் சூடு

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை வெயில் காலம் என்பதே UK யில் இல்லை வெயில் காலம் முழுக்க மழையும் மப்பும் ஆக உள்ளது எதோ நல்ல செய்தி என்று இங்கு வந்தால் கடுப்பாகுது யுவர் ஆனர் .

இனிவரும் நாட்கள் நல்ல வெயில் என்கிறார்கள் இப்படி பலமுறை இந்த வருட சமர் பேய்க்காட்டி விட்டது பேசாமல் அவுஸ் பக்கம் இடம்பெயரலாம்   தாவலாம்  என்று ஒரு யோசனை வருவதை தவிர்க்க முடியவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இந்த வருட சமர் பேய்க்காட்டி விட்டது பேசாமல் அவுஸ் பக்கம் இடம்பெயரலாம்   தாவலாம்  என்று ஒரு யோசனை வருவதை தவிர்க்க முடியவில்லை .

உங்களுக்குத்தான் ஓப்பின் வீசா இருக்குமே? உடனை ஏற வேண்டியதுதானே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இந்தமுறை வெயில் காலம் என்பதே UK யில் இல்லை வெயில் காலம் முழுக்க மழையும் மப்பும் ஆக உள்ளது எதோ நல்ல செய்தி என்று இங்கு வந்தால் கடுப்பாகுது யுவர் ஆனர் .

இனிவரும் நாட்கள் நல்ல வெயில் என்கிறார்கள் இப்படி பலமுறை இந்த வருட சமர் பேய்க்காட்டி விட்டது பேசாமல் அவுஸ் பக்கம் இடம்பெயரலாம்   தாவலாம்  என்று ஒரு யோசனை வருவதை தவிர்க்க முடியவில்லை .

இங்கும்  தான்

இந்த வாரக்கடைசியில் நானும் அமைதி தேடி புறப்படுகின்றேன்

பார்க்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவின் குறும்பாவில் 

குறும்பும் கொப்பளித்து 

கரும்பாய் இனிக்க காரணமான 

வெய்யிலை போற்றுகின்றோம்.......!  😂

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஏரோ பிளேன் skirt என்று தான் நினைக்கிறன்.

அப்படியான skirt இல் cockpit  எங்கிருக்கும்?

பெயர் வைத்தவரின் திறமை அபாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

கருவின் குறும்பாவில் 

குறும்பும் கொப்பளித்து 

கரும்பாய் இனிக்க காரணமான 

வெய்யிலை போற்றுகின்றோம்.......!  😂

மிக்க நன்றி சுவி

 

 

 

12 hours ago, பெருமாள் said:

இந்தமுறை வெயில் காலம் என்பதே UK யில் இல்லை வெயில் காலம் முழுக்க மழையும் மப்பும் ஆக உள்ளது எதோ நல்ல செய்தி என்று இங்கு வந்தால் கடுப்பாகுது யுவர் ஆனர் .

இனிவரும் நாட்கள் நல்ல வெயில் என்கிறார்கள் இப்படி பலமுறை இந்த வருட சமர் பேய்க்காட்டி விட்டது பேசாமல் அவுஸ் பக்கம் இடம்பெயரலாம்   தாவலாம்  என்று ஒரு யோசனை வருவதை தவிர்க்க முடியவில்லை .

கருத்துக்கு நன்றி பெருமாள். இது மிகவும் வெயிலெறித்த ஒரு கோடையில் எழுதியது.  தற்போதுதான் யாழில் பதிவிட்டேன்.

21 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.👍

வரவேற்புக்கு நன்றி தமிழ்த்தேசியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

இதை ஏரோ பிளேன் skirt என்று தான் நினைக்கிறன்.

அப்படியான skirt இல் cockpit  எங்கிருக்கும்?

பெயர் வைத்தவரின் திறமை அபாரம்.

கேள்விக்கு நன்றி கடஞ்சா.  பிளேனில் ஓட்டுனர் இருந்து வேலை செய்யுமிடத்தை கொக் பிற் என்பார்கள்.   அதனை சேவற் குழியென்று தமிழ்ப்படுத்தினால் புதிருக்கு விடை கிடைத்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் கரு அவர்களின் கலைநயத்துக்கும் கவித்திறனுக்கும் பாராட்டு. எனக்குக் கதை, கட்டுரை எழுத வரும். கவிதை வருவதில்லை. ஆனால் நல்ல கவியை ரசிக்கும் திறனுண்டு என்ற நம்பிக்கை உண்டு. கரு அவர்கள் பதிவு செய்த காரிகை நல்ல ஓவியரின் தூரிகைக்கானவர். இப்படத்தைப் பார்த்ததும் பெரும்பாணாற்றுப்படையில் வரும் விறலியின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலான வருணனை நினைவுக்கு வருகிறது. குறிப்பாக ஒரு வரி : "பிடியின் தடக்கையன்ன செறிதிரள் குரங்கு".

(பிடி - பெண்யானை; தடக்கை என்பது இங்கு யானையின்  துதிக்கையைக் குறிக்கும்; அன்ன - போல - உவம உருபு; செறிதிரள் - செறிந்து திரண்ட; குரங்கு - தொடை - பலபொருள் ஒரு மொழி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2021 at 16:09, suvy said:

கருவின் குறும்பாவில் 

குறும்பும் கொப்பளித்து 

கரும்பாய் இனிக்க காரணமான 

வெய்யிலை போற்றுகின்றோம்.......!  😂

 

 

 

'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்,

..............................................

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் 

................................................

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்'

என்று ஒவ்வொரு போற்றுதலுக்குமான காரணம் சொல்லி சிலம்பில் மங்கல வாழ்த்துப் பாடல் உண்டு. அதுபோல் இங்கு சுவி அவர்கள் எடுத்துத் தர நமக்குத் தோன்றும் மங்கல வாழ்த்துப் பாடல் : 

"வெய்யில் போற்றுதும் வெய்யில் போற்றுதும் 

பைய நடந்த தையல் அவள் 

மையல் துகில் தையல் துறந்த 

வெய்யில் போற்றுதும் வெய்யில் போற்றுதும்".

(வெயிலுக்கு வெய்யில் என்ற வழக்கும் உண்டு).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுப.சோமசுந்தரம் said:

'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்,

..............................................

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் 

................................................

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்'

என்று ஒவ்வொரு போற்றுதலுக்குமான காரணம் சொல்லி சிலம்பில் மங்கல வாழ்த்துப் பாடல் உண்டு. அதுபோல் இங்கு சுவி அவர்கள் எடுத்துத் தர நமக்குத் தோன்றும் மங்கல வாழ்த்துப் பாடல் : 

"வெய்யில் போற்றுதும் வெய்யில் போற்றுதும் 

பைய நடந்த தையல் அவள் 

மையல் துகில் தையல் துறந்த 

வெய்யில் போற்றுதும் வெய்யில் போற்றுதும்".

(வெயிலுக்கு வெய்யில் என்ற வழக்கும் உண்டு).

நான் முதல் போற்றுதும் என்றுதான் எழுதி கொஞ்சம் கூடிய சொல்லாக இருக்குதென்று  அழித்து விட்டு எளிமையாக போற்றுகின்றோம் என்று எழுதினேன்.......!

மிகவும் நன்றி சுப. சோமசுந்தரம்.....!   🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுப.சோமசுந்தரம் said:

தோழர் கரு அவர்களின் கலைநயத்துக்கும் கவித்திறனுக்கும் பாராட்டு. எனக்குக் கதை, கட்டுரை எழுத வரும். கவிதை வருவதில்லை. ஆனால் நல்ல கவியை ரசிக்கும் திறனுண்டு என்ற நம்பிக்கை உண்டு. கரு அவர்கள் பதிவு செய்த காரிகை நல்ல ஓவியரின் தூரிகைக்கானவர். இப்படத்தைப் பார்த்ததும் பெரும்பாணாற்றுப்படையில் வரும் விறலியின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலான வருணனை நினைவுக்கு வருகிறது. குறிப்பாக ஒரு வரி : "பிடியின் தடக்கையன்ன செறிதிரள் குரங்கு".

(பிடி - பெண்யானை; தடக்கை என்பது இங்கு யானையின்  துதிக்கையைக் குறிக்கும்; அன்ன - போல - உவம உருபு; செறிதிரள் - செறிந்து திரண்ட; குரங்கு - தொடை - பலபொருள் ஒரு மொழி)

தங்கள் இலக்கிய ரசனையோடு கூடிய விளக்கத்துக்கு மிக்க நன்றி சோமசுந்தரம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.