Jump to content

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமையினால் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பூட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர்  ஆலய நிர்வாக உறுப்பினர்கள் 5 பேருக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகளவானோரை ஒன்று கூட்டியமை, முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியினை பேணாமை மற்றும் அறிவுறுத்தல்களை மீறியமை ஆகிய குற்றங்களுக்காக இன்று மாவட்ட சுகாதார பகுதியினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

1628495710374.jpg

இதன்போது  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏசீ.றிஸ்வான்  ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20,000/=ரூபாவை அபராதமாக விதித்தார்.

1628495710455.jpg

அத்தோடு, குறித்த நிர்வாகிகளும் கோயிலும் இன்று முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்தார்.

1628495710533.jpg

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவ தீர்த்தோற்சவத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமையினால் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பூட்டு | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குதிரை ஓடின பின் லாயத்தை பூட்டின கதை தான்.

Link to comment
Share on other sites

நல்ல செய்தி, கோவிலையும் அரச உடைமையாக  ஆக்கினால் சிறப்பாக இருக்கும். சிங்கள அரசாங்கம் குதிரை ஓடிய பின்னர் தான் தமிழர் பிரேதேசங்களில் நடவடிக்கை எடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

நல்ல செய்தி, கோவிலையும் அரச உடைமையாக  ஆக்கினால் சிறப்பாக இருக்கும். சிங்கள அரசாங்கம் குதிரை ஓடிய பின்னர் தான் தமிழர் பிரேதேசங்களில் நடவடிக்கை எடுக்கும்.

மண்டூர் , சித்தான்டி முருகன் கோவில்கள் அரச கோவில்களே குடி கோவில்களினால் குடும்ப பிரச்சினைகள் அதிகம் வந்து நீதிமன்றம் சென்று அரசின் கட்டளையில் இயங்குகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

மண்டூர் , சித்தான்டி முருகன் கோவில்கள் அரச கோவில்களே குடி கோவில்களினால் குடும்ப பிரச்சினைகள் அதிகம் வந்து நீதிமன்றம் சென்று அரசின் கட்டளையில் இயங்குகிறது .

சைவ கோவில்களை அரச உடமையாக்கினால் சாதி வேறுபாடுகள் ஒழியுமா சார்?   

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

சைவ கோவில்களை அரச உடமையாக்கினால் சாதி வேறுபாடுகள் ஒழியுமா சார்?   

சாதி வேறுபாடுகளுக்கு எதிராக இருந்த காரணத்தாலேயே பௌத்தம் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் வேகமாக பரவியது. பின்னர் அதே காரணத்துக்காகவே சாதி வேறுபாடுகளை உறுதியாக ஆதரிப்பவர்களால் பௌத்தம் இந்தியாவில் அரசர்களின் ஆதரவோடு அழித்தொழிக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

May be an image of 1 person, standing, military uniform and outdoors

May be an image of 1 person, standing and outdoors

May be an image of standing, elephant and outdoors

இதெல்லாம் இப்ப வெகு விமரிசையா நடக்குது.. இன்னும் நடக்கப் போகுது.

எங்கட ஆக்களில் சிலர் 2009 பின் நல்லா குனிஞ்சு பழகிட்டினம். அப்படி குனிஞ்சாவது ஏதாவது பொறுக்குவம் என்று நினைச்சிட்டினமோ என்னமோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கற்பகதரு said:

சாதி வேறுபாடுகளுக்கு எதிராக இருந்த காரணத்தாலேயே பௌத்தம் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் வேகமாக பரவியது. பின்னர் அதே காரணத்துக்காகவே சாதி வேறுபாடுகளை உறுதியாக ஆதரிப்பவர்களால் பௌத்தம் இந்தியாவில் அரசர்களின் ஆதரவோடு அழித்தொழிக்கப்பட்டது.

சிறிலங்காவில் வசிக்கும் பௌத்த மக்களிடையே வேற்றுமைகள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

அத்தோடு, குறித்த நிர்வாகிகளும் கோயிலும் இன்று முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்தார்

 

8 hours ago, பிழம்பு said:

இதன்போது  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏசீ.றிஸ்வான்  ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20,000/=ரூபாவை அபராதமாக விதித்தார்

நல்ல செயல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்த்தமாடியோரை தேடும்பணி தீவிரம்

மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி, தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்ட அடியார்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதற்காக, சுகாதார தரப்பினர் பொலிஸாரின் உதவியுடன் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாரசிங்க, இன்று (09) இடம்பெற்ற மண்முனை வடக்கு பிரதேச கொவிட் செயலணி கூட்டத்தில் தெரிவித்தார். 

ஆலயத்தை 14 நாட்கள் பூட்டுவதாகவும் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்வதாகவும்  நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பிரதமகுருக்கள் ஆகியோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும் உற்சவத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்றையதினம் சுகாதார சுற்று நிருபத்தை மீறி வருடாந்த தீர்த்தோற்சவத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதையடுத்து தேசிய ரீதியில் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இருந்தபோதும், இந்த ஆலய உற்சவத்துக்கு கடந்த  கொரோனா செயலணி கூட்டத்தில் 100 பேருக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் அனுமதியையும் சுகாதார சுற்று நிருபத்தை மீறி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் இடம்பெற்ற இச் சம்பவமானது பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ். குமார், வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

Tamilmirror Online || தீர்த்தமாடியோரை தேடும்பணி தீவிரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

 

May be an image of 1 person, standing, military uniform and outdoors

May be an image of 1 person, standing and outdoors

May be an image of standing, elephant and outdoors

இதெல்லாம் இப்ப வெகு விமரிசையா நடக்குது.. இன்னும் நடக்கப் போகுது.

எங்கட ஆக்களில் சிலர் 2009 பின் நல்லா குனிஞ்சு பழகிட்டினம். அப்படி குனிஞ்சாவது ஏதாவது பொறுக்குவம் என்று நினைச்சிட்டினமோ என்னமோ. 

என்ன சொல்ல வாறீங்கள்?...சிங்கள பகுதியில் விகாரைகள் திறந்து இருக்குது ... சிங்கள மக்கள் அதிகமாய் இறக்கிறார்கள் ...அதே மாதிரி கோயில்களையும் திறந்து விடுங்கோ ...தமிழரும் செத்து தொலையட்டும் என்று சொல்கிறீர்களா?

இதே அரசு நடவடிக்கை ஒன்றும் எடுக்காமல் சாகிறவன் தமிழன் செத்து தொலையட்டும் என்று விட்டு இருந்தால் மற்ற மாதிரி கதைத்திருப்பினம் ...இந்த பிழைப்புக்கு .....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

என்ன சொல்ல வாறீங்கள்?...சிங்கள பகுதியில் விகாரைகள் திறந்து இருக்குது ... சிங்கள மக்கள் அதிகமாய் இறக்கிறார்கள் ...அதே மாதிரி கோயில்களையும் திறந்து விடுங்கோ ...தமிழரும் செத்து தொலையட்டும் என்று சொல்கிறீர்களா?

இதே அரசு நடவடிக்கை ஒன்றும் எடுக்காமல் சாகிறவன் தமிழன் செத்து தொலையட்டும் என்று விட்டு இருந்தால் மற்ற மாதிரி கதைத்திருப்பினம் ...இந்த பிழைப்புக்கு .....
 

 

கேள்வி அதுவல்ல என்று  நினைக்கின்றேன்

ஒரு  நாடு

இரு  சட்டம்???

இங்கே  பூட்ட முடிகிறது??

அங்கே  பூட்ட முடிவதில்லை???

ஏன்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

கேள்வி அதுவல்ல என்று  நினைக்கின்றேன்

ஒரு  நாடு

இரு  சட்டம்???

இங்கே  பூட்ட முடிகிறது??

அங்கே  பூட்ட முடிவதில்லை???

ஏன்????

 விசுகர்! இங்கே ஒரு சிலர் தங்களுக்குள் மட்டும் மனிதாபிமானமும் மக்கள் மீதான கரிசனையும் பொங்கி வழிகின்றதென நினைத்துக்கொண்டு திரிகின்றார்கள்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

 விசுகர்! இங்கே ஒரு சிலர் தங்களுக்குள் மட்டும் மனிதாபிமானமும் மக்கள் மீதான கரிசனையும் பொங்கி வழிகின்றதென நினைத்துக்கொண்டு திரிகின்றார்கள்.🤣

பௌத்தத்தை தொட்டுப்பார்

தெரியும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல் ,

கிழக்கு மக்கள் வாழ்நாள் முழுவதும் அழிவை தவிர வேறு எதையும் பார்த்ததில்லை.

வடபகுதி மக்களாவது சிலகாலம் சிங்கள அரசிடமிருந்து புலிகளால் விடுவிக்கப்பட்ட பெரும் நிலபரப்பில் சுதந்திரம் என்றால் என்னவென்று அனுபவித்து பார்த்தவர்கள்.

ஆனால் தென் தமிழீழ மக்கள் காலம் முழுவதும் அனுபவித்தது எல்லாம்  சுற்றிவளைப்பு கைது படுகொலை நில ஆக்கிரமிப்பு மட்டுமே . அருகி கொண்டிருக்கும் எம் மக்கள் அங்கே மேலும் அழிவுகளை சந்திக்காது எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.

அவர்கள் பகுதியில் இந்த கட்டுபாடெல்லாம் இல்லை,  எங்கள் பகுதியில் எதற்கு என்று நாம் வேறு விடயங்களில் தர்க்கம் புரியலாம், ஆனால் ஒரு உயிர்கொல்லி நோய் விசயத்தில் நாம் வியாக்கியானம் செய்வது தவறு.

2 கோடிக்கும் மேற்பட்ட  மக்கள் தொகை கொண்ட அவர்களில் முன்னெச்சரிக்கையின்மையால் பத்து இலட்சம்பேர் உயிரிழந்தாலும் அவர்களுக்கு பாதிப்பு எதுவுமில்லை, எம்மில் பத்து லட்சம்பேர் சடுதியாக இல்லாமல் போனால் பாதி எம் மக்கள் தொகை அழிந்ததுக்கு சமம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

என்ன சொல்ல வாறீங்கள்?...சிங்கள பகுதியில் விகாரைகள் திறந்து இருக்குது ... சிங்கள மக்கள் அதிகமாய் இறக்கிறார்கள் ...அதே மாதிரி கோயில்களையும் திறந்து விடுங்கோ ...தமிழரும் செத்து தொலையட்டும் என்று சொல்கிறீர்களா?

இதே அரசு நடவடிக்கை ஒன்றும் எடுக்காமல் சாகிறவன் தமிழன் செத்து தொலையட்டும் என்று விட்டு இருந்தால் மற்ற மாதிரி கதைத்திருப்பினம் ...இந்த பிழைப்புக்கு .....
 

விழுகுற பக்கத்துக்கு குறிசுடுகுர ஆக்கள்தான…

Link to comment
Share on other sites

17 hours ago, குமாரசாமி said:

சிறிலங்காவில் வசிக்கும் பௌத்த மக்களிடையே வேற்றுமைகள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்கிறீர்களா?

வேற்றுமைகள் ஏற்றத்தாழ்வுகள் எல்லா மக்களிடமும் இருக்கின்றன. 

அப்படி வேற்றுமைகள் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இடம்:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

 

அப்படி வேற்றுமைகள் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இடம்:

 

 

பாட்டுடன் சேர்த்து வீடியோவில் எழுதி இருக்கும் வரிகளும் சம்மட்டியால் அடித்ததுபோல் இருக்கு…

இப்பொழுது எல்லாம் அடிக்கடி இரவில் எழும்பி இருந்து நினைக்கிறேன் நான் என் மரணத்துடன் அழிந்துவிடுவேன் பிள்ளைகள் அம்மா அப்பா யாரையும் இனி வாழ்வில் இன்னொரு தடவை பார்க்கமுடியாதே என்பதை நினைக்கும்போது வெறுமையாக இருக்கு மனசு முழுதும்..

எப்பொழுது கலெக்ஸிகள் நட்சத்திரங்கள் உருவாகி அழிவது பிக்பாங் பூமி தோன்றிய விதம் அணுவின் உள்ளிருக்கும் அப் டவுன் குவாக் போசோன்கள் பீல்ட் கூர்ப்பு etc..எல்லாம் எப்ப தெர்யதொடங்கியதோ கடவுள் இல்லை உயிர் என்பதும் இல்லை மறுபிறப்பும் இல்லை ஏதாவது ஒன்றை கொண்டு நினைவுகளை அழித்துவிட்டால் அந்த உடல் ஓணாண்டியே இல்லை இது எல்லாம் எப்ப புரியத்தொடங்கியதோ அண்டைக்கு புடிச்ச சனி..

இப்ப எல்லாம் நெத்தியில பட்டை அடிச்சுகொண்டு இல்லை பைபிளை தூக்கிகொண்டு மறுபிறப்பையும் உயிர் இருக்கு என்பதையும் நம்பிக்கொண்டு கோயிலுக்கோ சர்ச்சுக்கு நிம்மதியாக  போறவ்ங்களை பார்க்க பொறாமையாக இருக்கு..

ஒண்டுமே தெரியாம ஆடுமாடுகளை போல வாழ்வது எவ்வளவு நிம்மதி.. எதுக்குதான் பாழாய்ப்போன மனித மூளை உண்மைகளை உய்த்தும் பகுத்தும் அறியக்கூடியதாக வளர்ச்சி அடைஞ்சுதோ..😢😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாட்டுடன் சேர்த்து வீடியோவில் எழுதி இருக்கும் வரிகளும் சம்மட்டியால் அடித்ததுபோல் இருக்கு…

இப்பொழுது எல்லாம் அடிக்கடி இரவில் எழும்பி இருந்து நினைக்கிறேன் நான் என் மரணத்துடன் அழிந்துவிடுவேன் பிள்ளைகள் அம்மா அப்பா யாரையும் இனி வாழ்வில் இன்னொரு தடவை பார்க்கமுடியாதே என்பதை நினைக்கும்போது வெறுமையாக இருக்கு மனசு முழுதும்..

எப்பொழுது கலெக்ஸிகள் நட்சத்திரங்கள் உருவாகி அழிவது பிக்பாங் பூமி தோன்றிய விதம் அணுவின் உள்ளிருக்கும் அப் டவுன் குவாக் போசோன்கள் பீல்ட் கூர்ப்பு etc..எல்லாம் எப்ப தெர்யதொடங்கியதோ கடவுள் இல்லை உயிர் என்பதும் இல்லை மறுபிறப்பும் இல்லை ஏதாவது ஒன்றை கொண்டு நினைவுகளை அழித்துவிட்டால் அந்த உடல் ஓணாண்டியே இல்லை இது எல்லாம் எப்ப புரியத்தொடங்கியதோ அண்டைக்கு புடிச்ச சனி..

இப்ப எல்லாம் நெத்தியில பட்டை அடிச்சுகொண்டு இல்லை பைபிளை தூக்கிகொண்டு மறுபிறப்பையும் உயிர் இருக்கு என்பதையும் நம்பிக்கொண்டு கோயிலுக்கோ சர்ச்சுக்கு நிம்மதியாக  போறவ்ங்களை பார்க்க பொறாமையாக இருக்கு..

ஒண்டுமே தெரியாம ஆடுமாடுகளை போல வாழ்வது எவ்வளவு நிம்மதி.. எதுக்குதான் பாழாய்ப்போன மனித மூளை உண்மைகளை உய்த்தும் பகுத்தும் அறியக்கூடியதாக வளர்ச்சி அடைஞ்சுதோ..😢😢

அதே.....

எவ்வளவோ  மக்கள்

அமைதியாக

ஆர்ப்பாட்டமின்றி

மற்றவர்களுக்கு தொந்தரவின்றி வாழ்ந்துவிட்டுப்போக

இந்த நம்பிக்கை  தான்  காரணமென்றால்

அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அதே.....

எவ்வளவோ  மக்கள்

அமைதியாக

ஆர்ப்பாட்டமின்றி

மற்றவர்களுக்கு தொந்தரவின்றி வாழ்ந்துவிட்டுப்போக

இந்த நம்பிக்கை  தான்  காரணமென்றால்

அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே???

உண்மைதான் ஜயா.. நான் நினைக்கிறேன் கடவுள் இல்லை என்று உணர்ந்தவர்கள் பலர் வயதான காலத்தில் மறுபடியும் கோவிலுக்கு போவது இந்த உண்மைகளை உணர்ந்த பின் வரும் வெறுமையில் இருந்து தப்புவதற்காகவே அன்றி மறுபடியும் கடவுளை நம்பி அல்ல.. அவர்கள் உள் மனதுக்கு தெரியும் கடவுளும் இல்லை உயிரும் இல்லை என்பது.. ஏனெனில் இந்த உண்மைகளை நீங்கள் அறிவியலின் துணையுடன் ஒருமுறை உணர்ந்துவிட்டால் ஒரு போதும் உளமார அதை உங்களால் மறுதலிக்கமுடியாது.. 

நான் இங்கு வந்து சண்டைபுடிப்பது காமெடிபன்னுவது எழுதுவது கூட இந்த சிந்தனைகள் மனதில் தோன்றாமல் இருக்கத்தான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹோமோ சேபியன்ஸ் என்ற நவீன மனித இனம் (நாங்கள் தான்!😂) வருவதற்கு முன்னர் இருந்த உடல் வலிமை கூடிய நியண்டதால் மனித இனம் அழிந்து போன கதை தான் நினைவுக்கு வருகிறது இங்கே சில கருத்துக்களைப் பார்க்க.

"அவனைப் பூட்டச் சொல்லு, நாங்கள் பூட்டுறம்!" என்ற தொனியில் டயலாக் விடுகிறார்கள்! இது சிங்களவனோ, யாருமோ சொல்லாமலே செய்ய வேண்டிய வேலை, எங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனநாளைக்கு பிறவு அறிவியல் பூர்வமா எழுதக்கூடிய அறிவியல் ஆசான் யஸ்ற்றினை கண்டது மகிழ்ச்சி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கனநாளைக்கு பிறவு அறிவியல் பூர்வமா எழுதக்கூடிய அறிவியல் ஆசான் யஸ்ற்றினை கண்டது மகிழ்ச்சி..

வேலை காரணமாக சிறு விலகல் எடுத்திருந்தேன், இலங்கைக் கொரனா நிலை தொடர்பான செய்திகளுக்கு கருத்துரைக்க விலகலில் இருந்து சிறு விடுமுறையெடுத்து வந்திருக்கிறேன். நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைதான் ஜயா.. நான் நினைக்கிறேன் கடவுள் இல்லை என்று உணர்ந்தவர்கள் பலர் வயதான காலத்தில் மறுபடியும் கோவிலுக்கு போவது இந்த உண்மைகளை உணர்ந்த பின் வரும் வெறுமையில் இருந்து தப்புவதற்காகவே அன்றி மறுபடியும் கடவுளை நம்பி அல்ல.. அவர்கள் உள் மனதுக்கு தெரியும் கடவுளும் இல்லை உயிரும் இல்லை என்பது.. ஏனெனில் இந்த உண்மைகளை நீங்கள் அறிவியலின் துணையுடன் ஒருமுறை உணர்ந்துவிட்டால் ஒரு போதும் உளமார அதை உங்களால் மறுதலிக்கமுடியாது.. 

நான் இங்கு வந்து சண்டைபுடிப்பது காமெடிபன்னுவது எழுதுவது கூட இந்த சிந்தனைகள் மனதில் தோன்றாமல் இருக்கத்தான்..

நீங்கள் எழுதிய கருத்தில்  எனக்கும் 100வீத  உடன்பாடுண்டு

ஆனால் அநேகமான வயதானவர்கள் கடவுளை  நம்பித்தான் போகிறார்கள்

காரணம்  வேறு யாரும்   இல்லை அவர்கள்  சொல்பவற்றை  கேட்க...

அல்லது  

ஆறுதல் தர???😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நீங்கள் எழுதிய கருத்தில்  எனக்கும் 100வீத  உடன்பாடுண்டு

ஆனால் அநேகமான வயதானவர்கள் கடவுளை  நம்பித்தான் போகிறார்கள்

காரணம்  வேறு யாரும்   இல்லை அவர்கள்  சொல்பவற்றை  கேட்க...

அல்லது  

ஆறுதல் தர???😪

விசுகர்! இந்த உலக மக்கள் தொகையில் எத்தனை வீதமானவர்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள் என யாரிடமாவது  கேட்டு சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.