Jump to content

"யூலை 14" பிரித்தானியாவில் மாபெரும் ஒன்றுகூடல்


Recommended Posts

இடம்: Trafalgar Square

காலம்: யூலை 14, சனிக்கிழமை

நேரம்: முற்பகல் 11 மணி

இலங்கைத்தீவில் நடைபெற்று வரும் தமிழ் மக்களுக்கெதிரான கொலைகள், கடத்தல்கள்,.. போன்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பாரிய கண்டன ஒன்றுகூடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

இப்பாரிய ஒன்றுகூடலை "பிரித்தானிய தமிழ் கவுன்ஸிலர்களின் அமைப்பு" வேறு சில மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்த ஏற்பாடுகள் செய்யபடுவதாக தெரிகிறது.

இன்று மேற்குலகில் எமது கைகள் கட்டப்பட்டு, வாய்களுக்கு பூட்டுகளும் போடப்பட்ட நிலையில், எம் உறவுகளின் அவலங்களை சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டிக் கேட்கும் வகையில் ஆயிரம் ஆயிரமாய் ஒன்று திரள்வோம்.

இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான இவ் ஒன்றுகூடல் தொடர்பான செய்தியை உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களையும் பங்கு கொள்ளச் செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

நானும் கேல்விப்பட்டேன். இதற்கான வாகன ஒழுங்குகளும் செய்யப்பட்டு உள்ளன. இதனை பற்றிய விபரங்கள்ளை யாழில் எதிபாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் ஜூலை 14 இல் மாபெரும் பேரணி

ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி லண்டனில் எதிர்வரும் எதிர்வரும் சனிக்கிழமை (14.07.07) நடைபெறவுள்ளது.

இக்கண்டனப் பேரணியினை ஒழுங்கு செய்துள்ள பிரித்தானிய நகராட்சி மன்றக்குழுவும் அங்கத்தவர்களும் ஏனைய தமிழ் அமைப்புக்களும் விடுத்துள்ள அறிக்கை:

ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்ளைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி

காலம்: சனிக்கிழமை (14.07.07)

நேரம்: முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 2.30 மணிவரை

இடம்:

ரவல்கர் சதுக்கம் (Trafalgar Square) - இலண்டன்

(நிலக்கீழ்த் தொடரூந்து நிலையங்கள்: Charing Cross, Leicester Square and Piccadilly Circus)

காலத்தின் தேவை - இது எங்கள் தேசியக் கடமை

வாய் பேசாது இருந்தால்

வந்த இடத்திலும் சொந்த இடம் போலே மனித உரிமை மீறப்பட்டு

நாம் அடக்கப்படுவோம்.

உலகிலேயே அழிக்கப்படுவோம்.

எனவே பெருந் திரளாக வாருங்கள். உங்கள் குடும்பத்தவர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும்

அழைத்து வாருங்கள்.

எமது தொப்புள்க்கொடி உறவுகள் மீதான அழிவைத் தடுத்து நிறுத்துவோம்.

ஒரே அணியிலே நின்று ஒரே குரலிலே உலகிற்கு எடுத்துரைப்போம்!

எமது சுதந்திரத்திற்காக நாம் குரல் கொடுப்பது குற்றமல்ல.

ஒழுங்கமைப்பு: பிரித்தானிய நகராட்சிமன்ற உறுப்பினர்கள் குழுவும் அங்கத்தவர்களும் ஏனைய தமிழ் அமைப்புகளும்.

தொடர்புகளுக்கு:

07812028741/ 07967565477 13 Cambridge Rd, Harrow, HA2 7LA

மின்னஞ்சல்: Tamils4peace@aol.com

-புதினம்

Link to comment
Share on other sites

நெவிக்கேசனிலை விலாசத்தை பிழையாய் அடிச்சு சிவாஜி திரையரங்குகளிலை போய் நிக்காமல்... ஒழுங்கு மரியாதையாய் இங்கிலாந்திலை இருக்கிறவை ஒண்று கூடலுக்கு வந்து சேருங்கோ...!

Link to comment
Share on other sites

ஒவ்வொருவரும் குறைந்தது 10 பேரையாவது கோட்டிக்கொண்டு வரவும்.

Link to comment
Share on other sites

நேற்றைய ஐபிசி நிகழ்ச்சியில் திரு கந்தையா ராஜமனோகரன் குறிப்பிட்டதை யாராவது கேட்டீர்களா? இந்த மாபெரும் ஒன்றுகூடலைத் தடுத்து நிறுத்த சிங்களவரும் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களும் கடும் முயற்சி எடுப்பதாக. இலங்கையில்தான் ஜனநாயக முறைப்படி எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாமல் தமிழர்களின் குரல் வளைகளை நசுக்குகிறர்கள் என்றால் லண்டனிலும் இந்தக் கொடுமையா? தொடர்ந்து இலங்கையில் தமிழர்களிற்க்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளியில் எடுத்துரைத்த ஊடகவியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத்தலைவர்கள் எல்லோரையும் கொன்றார்கள். வெளிநாடுகளில் வாழும் ஈழத்தவர்கள் ஒன்றுகூடுவதற்க்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இவர்களின் அநியாயத்துக்கு எல்லையே இல்லையா?

14072007.gif14072007_2.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் தோள் கொடுக்காமையை இங்கே கழுவிக் கொள்வோம். இதைக் கூடச் செய்யவில்லை என்றால் நாங்கள் மனிதர்களாகவே இருக்க மாட்டோம். அனைவரும் அணி திரண்டு ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரமிது.

Link to comment
Share on other sites

நேற்றைய ஐபிசி நிகழ்ச்சியில் திரு கந்தையா ராஜமனோகரன் குறிப்பிட்டதை யாராவது கேட்டீர்களா? இந்த மாபெரும் ஒன்றுகூடலைத் தடுத்து நிறுத்த சிங்களவரும் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களும் கடும் முயற்சி எடுப்பதாக. இலங்கையில்தான் ஜனநாயக முறைப்படி எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாமல் தமிழர்களின் குரல் வளைகளை நசுக்குகிறர்கள் என்றால் லண்டனிலும் இந்தக் கொடுமையா? தொடர்ந்து இலங்கையில் தமிழர்களிற்க்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளியில் எடுத்துரைத்த ஊடகவியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத்தலைவர்கள் எல்லோரையும் கொன்றார்கள். வெளிநாடுகளில் வாழும் ஈழத்தவர்கள் ஒன்றுகூடுவதற்க்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இவர்களின் அநியாயத்துக்கு எல்லையே இல்லையா?

14072007.gif14072007_2.gif

அடக்கு முறைதான் என்ன நடந்தால் எனக்கென்ன, எண்று இருக்கும் மக்களை கிழர்ந்து எழவைக்கும்....!

மக்களின் எழுச்சியை தடுக்க வேண்டுமானால் அம்மக்களின் பலவீனமான தலைமையினால் மட்டும்தான் முடியும்.... அப்படியான நிலைதான் எங்களுக்கு இல்லையே...!!

Link to comment
Share on other sites

கிளர்ந்து எழுவது எம் எல்லோருக்கும் நல்லது. சென்ற பொங்குதமிழ் நிகழ்ச்சியின் போது குழப்புவதற்க்கென்றே வந்த இனவிரோதிகள் சிலரை எமது தமிழ் இளைஞர்கள் விரட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இம்முறையும் குழப்ப முனைவார்கள். பொய்யாக சிலவற்றை சோடித்து எம்மீது சேறு பூசவும் வரலாம். அவதானமாக இருந்து வெற்றிகரமாக செய்து முடிப்போம்.

Link to comment
Share on other sites

ஏறக்குறைய 15000 இற்கும் அதிகமான எம்மவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என இந்த ஒன்றுகூடலின் முக்கிய அமைப்பாளர் தயா இடைக்காடர் தெரிவித்தார். லண்டனிலிருந்து மட்டுமல்லாது ஸ்கொட்லண்ட், வேல்ஸ் போன்ற மிக மிக தூர இடங்களிலிருந்தும் எம்மவர்கள் பலர் பங்கு கொள்ள உள்ளதாக தெரிகிறது.

இன்றைய காலகட்டத்தில் எம்மினத்துக்கு எதிராக நடைபெற்று வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு மட்டும் குரல் கொடுப்பதற்காக மட்டுமன்றி, எம் ஒற்றுமையையும் உலகிற்கு எடுத்துக் காட்டுவோம்.

Link to comment
Share on other sites

லண்டனில் நாளை மாபெரும் கண்டன ஒன்றுகூடல் - பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்வர்

சிறீலங்கா அரசின் மனி உரிமை மீறல்களைக் கண்டித்து லன்டனின் மையப் பகுதியில் நாளை மாபெரும் கண்டன ஒன்றுகூடல் இடம்பெற இருக்கின்றது.

பிரித்தானிய நகராட்சிமன்றக் குழுவும், அதன் உறுப்பினர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்டன ஒன்றுகூடல், றபகல் ஸ்கொயர் (Trafalgar Square) என்ற சதுக்கத்தில் காலை 11.00 மணி முதல் 2.30வரை நடைபெறவுள்ளது. நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள் (Charing Cross, Leicester Square and Piccadilly Circus)

முக்கியமான காலகட்டத்தில் இந்த ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், பிரித்தானியாவிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்கள் இவ்வாறு பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்வதன் மூலம், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை அனைத்துலகின் கவனத்திற்கு கொண்டு வர முடியும் எனவும், தமிழ் மக்களின் வேணவாவை ஒருமித்த குரலில் உலகிற்கு வெளிப்படுத்த முடியும் எனவும் ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Link to comment
Share on other sites

Charing Cross, Leicester Square and Piccadilly Circus ஆகிய புகையிரத நிலயங்கலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அண்மையானவை. விழாவிற்கென BUS சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. Alperton Station (HA0)ல் இருந்து 9.55 மணிக்கு ஒரு சேவை உள்ளது. இதனை விட ஏனைய இடங்களில் இருந்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.