Jump to content

சீன தடுப்பூசி செலுத்திக்கொண்ட இலங்கையர்கள் பிரான்ஸ் வர தடை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2021 ஜூலை 31ம் திகதி முதல் அமுலாகியுள்ள நடைமுறையின்படி, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா, கோவ்ஷீல்ட் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரம் பிரான்ஸிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி,

  • ஃபைசர் - இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • மாடர்னா -இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • அஸ்ட்ராஜெனெகா மற்றும் கோவ்ஷீல்ட் - இரண்டு அளவுகளையும் செலுத்திக்கொண்டு 2 வாரங்களுக்குப் பின்னர்
  • ஜான்சன் அண்ட ஜான்சன் - முதல் அளவு செலுத்திக்கொண்ட 4 வாரங்களுக்குப் பின்னர் பிரான்சிற்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.      
  • https://tamilwin.com/article/sri-lankans-barred-from-coming-to-france-1628637188
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேற சைனாக்காரன்ற ஊசிய போட்டுட்டன்  பிரான்ஸ் பக்கம் வர ஏலாதோ😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில உள்ள சில ஆக்களுக்கு புடிச்சு சினோபாமை போடனும். ஐயோ அம்மான்னு அலறி அடிச்சுக்கிட்டு ஓடுவினம். 

பை த பாய்.. யாழில் உள்ள ஒரு சில சிகாமணிகளின் கருத்தின் பிரகாரன் பிரான்ஸ் காரனுக்கு சிங்களவன்ற புத்திசாலித்தனம் பிடிக்கல்ல. பொறாமை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"Do not travel to France due to COVID-19. Exercise increased caution in France due to terrorism and civil unrest"

https://travel.state.gov/content/travel/en/traveladvisories/traveladvisories/france-travel-advisory.html 😂

தனி, ஒன்றும் குடிமுழுகி விடாது! அமெரிக்க வெளிநாட்டமைச்சு பிரான்சுக்கு பயணம் செய்ய வேண்டாமென்று இரண்டு நாட்கள் முன்பு தான் அறிவித்திருக்கிறது. எனவே சினோபாம் போட்டதும் சிறி லங்காவில் இருப்பதும் உங்களுக்கு இப்போது பாதுகாப்பு!

மற்றபடி: ஐரோப்பிய யூனியனின் 8 நாடுகள் இரண்டு சீன தடுப்பூசிகளையும் ஏற்றுக் கொள்கின்றன! எனவே ஸ்வீடனுக்கு சுற்றுலா போய் வரலாம் நீங்கள்!😎

12 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் வேற சைனாக்காரன்ற ஊசிய போட்டுட்டன்  பிரான்ஸ் பக்கம் வர ஏலாதோ😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

யாழில உள்ள சில ஆக்களுக்கு புடிச்சு சினோபாமை போடனும். ஐயோ அம்மான்னு அலறி அடிச்சுக்கிட்டு ஓடுவினம். 

பை த பாய்.. யாழில் உள்ள ஒரு சில சிகாமணிகளின் கருத்தின் பிரகாரன் பிரான்ஸ் காரனுக்கு சிங்களவன்ற புத்திசாலித்தனம் பிடிக்கல்ல. பொறாமை. 🤣

இப்பவெல்லாம் இஞ்சை ஜேர்மனியிலை சீனாக்காரனே சினோபாம் எண்டால் சீறிக்கொண்டு வெளிக்கிட்டு ஓடுறான். அந்தளவுக்கு சீனா சினோபாம் சுத்த பத்தம்  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் இஞ்சை ஜேர்மனியிலை சீனாக்காரனே சினோபாம் எண்டால் சீறிக்கொண்டு வெளிக்கிட்டு ஓடுறான். அந்தளவுக்கு சீனா சினோபாம் சுத்த பத்தம்  😜

அப்பிடியே?😂 ஜேர்மனியில சினோபாம் போட அனுமதியில்லை, பிறகெப்படி சீனாக் காரன் சீறிக் கொண்டு ஓடுறான்? இதுவும் சும்மா கேள்விப் பட்டனீங்கள் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

அப்பிடியே?😂 ஜேர்மனியில சினோபாம் போட அனுமதியில்லை, பிறகெப்படி சீனாக் காரன் சீறிக் கொண்டு ஓடுறான்? இதுவும் சும்மா கேள்விப் பட்டனீங்கள் போல!

 உங்கள் கருத்துக்கள் விடயத்தில் எட்டத்தில் இருக்க நினைக்கின்றேன். இந்த பாமரனை இழுக்கின்றீர்கள்.இருந்தாலும் எனக்கு எட்டியவரை ஒரு பதில் கருத்து.

நான் இங்கே எங்கேயும் ஜேர்மனியில் சினோபாம் தடுப்பூசி போடப்படுவதாக கூறவில்லை.
ஜேர்மனியில் எனது சிநேகித குழாம் கொஞ்சம் பெரியது. அதில் பல நாட்டவர்கள் உள்ளனர்.அவர்கள் கேம்பிறிட்ச் அளவிற்கு அறிவு இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்கு தேவையான தாராள பொதறிவு உள்ளவர்கள் என்பதில் எனக்கு திருப்தி.பல உலக விடயங்களை பகிர்ந்து கொள்வதிலும் எமக்குள் ஆர்வம் உண்டு. படித்து பட்டம் பெற்றவர்கள் அரைப்பதை விட அனுபவஸ்தர்கள் அரைப்பது என்றும் நம்பிக்கைக்குரியதும் பாதுகாப்பானதும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 உங்கள் கருத்துக்கள் விடயத்தில் எட்டத்தில் இருக்க நினைக்கின்றேன். இந்த பாமரனை இழுக்கின்றீர்கள்.இருந்தாலும் எனக்கு எட்டியவரை ஒரு பதில் கருத்து.

நான் இங்கே எங்கேயும் ஜேர்மனியில் சினோபாம் தடுப்பூசி போடப்படுவதாக கூறவில்லை.
ஜேர்மனியில் எனது சிநேகித குழாம் கொஞ்சம் பெரியது. அதில் பல நாட்டவர்கள் உள்ளனர்.அவர்கள் கேம்பிறிட்ச் அளவிற்கு அறிவு இல்லாவிட்டாலும் வாழ்க்கைக்கு தேவையான தாராள பொதறிவு உள்ளவர்கள் என்பதில் எனக்கு திருப்தி.பல உலக விடயங்களை பகிர்ந்து கொள்வதிலும் எமக்குள் ஆர்வம் உண்டு. படித்து பட்டம் பெற்றவர்கள் அரைப்பதை விட அனுபவஸ்தர்கள் அரைப்பது என்றும் நம்பிக்கைக்குரியதும் பாதுகாப்பானதும் கூட.

Coronavirus: Germany open to Chinese and Russian vaccines amid delays

https://www.dw.com/en/coronavirus-germany-open-to-chinese-and-russian-vaccines-amid-delays/a-56396510

தட்டுப்பாடு காரணமாக ஊசி போடுவதில் தாமதம் ஏற்பட்டால் சைனாவின் ஊசியை அனுமதிப்பது எனும் ஆலோசனையில்  ஜெர்மனி உள்ளது . இந்த சேதியை அறிந்த சைனாக்காரன் தெறிச்சு ஓடியிருப்பான் அப்படி ஓடியவன்  சாமியாரின் நண்பனாக இருக்கலாம் அதை இங்கு எழுதியது சாமியாரின் தப்பு அல்ல .

அப்ப  தப்பு யார் மேல்? 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் உள்ளவர்கள் இந்த அவசர நிலையின்போது நிச்சயமாக புலத்திலுள்ளவர்கள் கருத்தையறிந்து அதன்படி செயலாற்ற போவதில்லை.

அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு எது வசதிபடுகிறதோ எது சரியென்று படுகிறதோ அதைதான் செய்யபோகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு மாற்றுவழிகள் எதுவுமேயில்லை,சிங்களவன் கொடுப்பதை போடுவதை தவிர வேறு எந்த சக்தியும் தமது தனிப்பட்ட செல்வாக்கினால் அந்த மக்களுக்கு சிறந்ததை கொண்டுபோய் சேர்க்க எந்த வாய்ப்புகளுமேயில்லை.

நம்மால் செயல்வடிவம் பெறமுடியாத ஒன்றிற்காக பக்கம் பக்கமாக விவாதம் செய்வது உறவுகளுக்குள் பகையை ஏற்படுத்துவதைவிட உருப்படியாக எதுவுமே பலன் தராது..

இது சம்பந்தமாக நாம் முரண்படுவதெல்லாம் மாங்கு மாங்கு எண்டு குத்தி கீ போர்ட்டை பழுதாக்க மட்டுமே பயன்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

Coronavirus: Germany open to Chinese and Russian vaccines amid delays

https://www.dw.com/en/coronavirus-germany-open-to-chinese-and-russian-vaccines-amid-delays/a-56396510

தட்டுப்பாடு காரணமாக ஊசி போடுவதில் தாமதம் ஏற்பட்டால் சைனாவின் ஊசியை அனுமதிப்பது எனும் ஆலோசனையில்  ஜெர்மனி உள்ளது . இந்த சேதியை அறிந்த சைனாக்காரன் தெறிச்சு ஓடியிருப்பான் அப்படி ஓடியவன்  சாமியாரின் நண்பனாக இருக்கலாம் அதை இங்கு எழுதியது சாமியாரின் தப்பு அல்ல .

அப்ப  தப்பு யார் மேல்? 🤣

 

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சவங்களே தலையை பிச்சுக்கொண்டு திரியிறாங்களாம்.அடுத்த கட்டம் என்னவெண்டு தெரியாமலே அரசாங்கங்கள் தடுமாறுது.

இதுக்குள்ள எங்கடை அறிவாளிகள் நோபல் பரிசு வாங்கிற அளவுக்கு  எடுத்து விடுகினம்..

அறிவியலும் விஞ்ஞானமும் எவ்வளவுதான் வளர்ந்தாலும் மனித குலத்திற்கு சீரான வாழ்க்கையை காட்டத்தெரியவில்லை. இன்றைய உலகில் எங்கும் அழிவும் அவலங்களுமே  அகோரமாக வளர்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசி அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் அங்கீகரிக்கப்படாமையால் அந்த தடுப்பூசியினைப்பெற்றவர்கள் உள் நுழைவு அனுமதி மறுக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்கள், அவுஸ்திரேலியாவில் விலை குறைவான அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசியே பெருமளவில் போடப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இப்பவெல்லாம் இஞ்சை ஜேர்மனியிலை சீனாக்காரனே சினோபாம் எண்டால் சீறிக்கொண்டு வெளிக்கிட்டு ஓடுறான். அந்தளவுக்கு சீனா சினோபாம் சுத்த பத்தம்  😜

 

6 hours ago, Justin said:

அப்பிடியே?😂 ஜேர்மனியில சினோபாம் போட அனுமதியில்லை, பிறகெப்படி சீனாக் காரன் சீறிக் கொண்டு ஓடுறான்? இதுவும் சும்மா கேள்விப் பட்டனீங்கள் போல!

 

6 hours ago, பெருமாள் said:

Coronavirus: Germany open to Chinese and Russian vaccines amid delays

https://www.dw.com/en/coronavirus-germany-open-to-chinese-and-russian-vaccines-amid-delays/a-56396510

தட்டுப்பாடு காரணமாக ஊசி போடுவதில் தாமதம் ஏற்பட்டால் சைனாவின் ஊசியை அனுமதிப்பது எனும் ஆலோசனையில்  ஜெர்மனி உள்ளது . இந்த சேதியை அறிந்த சைனாக்காரன் தெறிச்சு ஓடியிருப்பான் அப்படி ஓடியவன்  சாமியாரின் நண்பனாக இருக்கலாம் அதை இங்கு எழுதியது சாமியாரின் தப்பு அல்ல .

அப்ப  தப்பு யார் மேல்? 🤣

ஜேர்மனி... சீனாவுக்கு,  "நீளமான  கயிறு"  குடுத்திருக்குது. :grin:

ஆலோசனையில்  உள்ளது என்று சொல்லியுள்ளதை... 
நாம்... ஊசி வந்து இறங்குது, அதை சனத்துக்கு ஏத்தப் போற கோணத்தில் ஆராயக் கூடாது. 🧐

மேலுள்ள செய்தியை...
சம்பந்தன் ஐயா... "தீபாவளிக்கு... தீர்வு வருகின்றது" என்பது போலவும், 😂
இந்தியா.... "இலங்கை நிலைமைகளை, மிக உன்னிப்பாக அவதானித்திக் கொண்டிருக்கிறோம்"  என்பது போலவும் 😂 வாசித்து விட்டு.... கொடுப்புக்குள்  சிரித்து விட்டு போக வேண்டும். 🤣

இப்பிடித்தான்... துருக்கியை, 
ஐரோப்பா ஒன்றியத்தில் சேர்க்க ஆலோசிக்கின்றோம் என்று ஜேர்மனி,
30 வருசத்துக்கு முன்பு, துருக்கிக்காரனுக்கும் "கயிறு" கொடுத்தது.
அதைக் கேட்ட... துருக்கிக்காரங்களுக்கு பயங்கர சந்தோசம். :grin:

அதனைப்போல... சீனாவை, இப்ப ஜேர்மனி  சந்தோசப் படுத்தியிருக்கு.    😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

"Do not travel to France due to COVID-19. Exercise increased caution in France due to terrorism and civil unrest"

https://travel.state.gov/content/travel/en/traveladvisories/traveladvisories/france-travel-advisory.html 😂

தனி, ஒன்றும் குடிமுழுகி விடாது! அமெரிக்க வெளிநாட்டமைச்சு பிரான்சுக்கு பயணம் செய்ய வேண்டாமென்று இரண்டு நாட்கள் முன்பு தான் அறிவித்திருக்கிறது. எனவே சினோபாம் போட்டதும் சிறி லங்காவில் இருப்பதும் உங்களுக்கு இப்போது பாதுகாப்பு!

மற்றபடி: ஐரோப்பிய யூனியனின் 8 நாடுகள் இரண்டு சீன தடுப்பூசிகளையும் ஏற்றுக் கொள்கின்றன! எனவே ஸ்வீடனுக்கு சுற்றுலா போய் வரலாம் நீங்கள்!😎

 

இங்கே இடத்துக்கு இடம் ஊசி கிடைக்கப்பொறுவதை பொறுத்து போடுகிறார்கள் மன்னார் பக்கம் அமெரிக்க ஊசி, மலையகத்தில் வேற கிழக்கில் சைனா, வடக்கில் சைனா,  என்னவோ ஊசி போட்டால்தான் வேலைக்கு வாங்க என்று சொல்லி இருக்கிறார்கள் காட்டையும் அனுப்ப சொல்லி இருக்கிறார்கள் . அரசு சுழற்சி முறையில் வேலைக்கு வாங்கோ என்றால் அப்படி செய்ய முடியாது கடமைக்கு வாங்கோ என நம்ம அரச உயரதிகாரிகள்  சொல்கிறார்கள் ஒரு கிழமை போனேன் தொன்டை மெதுவாக இறுக்கமானது போல உணர்ந்தேன் தற்போது வேலை போனாலும் பரவாயில்லை என வீட்டில்  இருக்கிறன் ஜஸ்டின் அண்ண ஒரு ஊசி போட்டாச்சு 

சுவீடனுக்கு நானு சுற்றுலா ம்கும் கனவிலதான் போய் வரணூம் 

12 hours ago, valavan said:

தாயகத்தில் உள்ளவர்கள் இந்த அவசர நிலையின்போது நிச்சயமாக புலத்திலுள்ளவர்கள் கருத்தையறிந்து அதன்படி செயலாற்ற போவதில்லை.

அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு எது வசதிபடுகிறதோ எது சரியென்று படுகிறதோ அதைதான் செய்யபோகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு மாற்றுவழிகள் எதுவுமேயில்லை,சிங்களவன் கொடுப்பதை போடுவதை தவிர வேறு எந்த சக்தியும் தமது தனிப்பட்ட செல்வாக்கினால் அந்த மக்களுக்கு சிறந்ததை கொண்டுபோய் சேர்க்க எந்த வாய்ப்புகளுமேயில்லை.

நம்மால் செயல்வடிவம் பெறமுடியாத ஒன்றிற்காக பக்கம் பக்கமாக விவாதம் செய்வது உறவுகளுக்குள் பகையை ஏற்படுத்துவதைவிட உருப்படியாக எதுவுமே பலன் தராது..

இது சம்பந்தமாக நாம் முரண்படுவதெல்லாம் மாங்கு மாங்கு எண்டு குத்தி கீ போர்ட்டை பழுதாக்க மட்டுமே பயன்படும்.

ஊசி குத்தியே ஆகணும் என வீட்டைத்தட்டுகிறார்கள் எந்த ஊசியாக இருந்தாலும் பராவாயில்லை என மக்களும் உயிர் பயத்தில் குத்திக்கொள்கிறார்கள் ஆனால் இலங்கையை பொறுத்த வரைக்கும் தனிநபர் சுகாதாரம் என்பது ஒரு துளியும் இல்லை பாரிய ஆபத்து எல்லா பக்கமும் சனம் கூடிய பகுதிகளில்  மக்கள் இறப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது ஓட்டமாவடி நிறம்பியுள்ளது தற்போது அம்பாறை இறக்காமம் பகுதி புதைப்பதற்கு தெரிவாகியுள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கே இடத்துக்கு இடம் ஊசி கிடைக்கப்பொறுவதை பொறுத்து போடுகிறார்கள் மன்னார் பக்கம் அமெரிக்க ஊசி

சவுதி அரேபியாவின் நிதிப் பங்களிப்போடு.. முஸ்லிம்கள் மத்தியில் அமெரிக்க ஊசிதான் போடினம். அதனடிப்படையில் தான் மன்னாரில் சில பிரதேசங்களுக்கு அந்தக் கொடுப்பனவு. 

இலங்கையின் 5வது பணக்காரர்.. மிஸ்டர் கருணா கும்மானால்.. ஏன் போட முடியவில்லை.. கிழக்கு மக்களுக்கு ஏன் போட முடியவில்லை..?! இதையிட்டு ஏன் கேள்வி கேக்கிறீங்களில்லை. புலம்பெயர் மக்களை பார்த்து கேட்கவும் திட்டவும் முடிவதை.. ஏன் அங்கு செய்கிறீர்கள் இல்லை..??!

வடக்கில் இருந்து பல தடவை அமைச்சரான தாடியர் பில்லியன் கணக்கில் சொத்து வைத்துள்ளவரால்.. ஏன் வடக்கிற்கு போட முடியவில்லை..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, vasee said:

அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசி அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் அங்கீகரிக்கப்படாமையால் அந்த தடுப்பூசியினைப்பெற்றவர்கள் உள் நுழைவு அனுமதி மறுக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்கள், அவுஸ்திரேலியாவில் விலை குறைவான அஸ்ட்ரா செனிக்கா கோவிட் தடுப்பூசியே பெருமளவில் போடப்படுகிறது.

அஸ்ட்ரா செனிக்காவை அரசு அங்கிகரித்துவிட்டது WHO அங்கிகரித்து விட்டது ஆனால் எம்மவர்கள்  அங்கிகரித்துவிட்டனரா?
அப்படியிருக்க சினோபார்ம்முக்கு சான்சே கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

சவுதி அரேபியாவின் நிதிப் பங்களிப்போடு.. முஸ்லிம்கள் மத்தியில் அமெரிக்க ஊசிதான் போடினம். அதனடிப்படையில் தான் மன்னாரில் சில பிரதேசங்களுக்கு அந்தக் கொடுப்பனவு. 

இலங்கையின் 5வது பணக்காரர்.. மிஸ்டர் கருணா கும்மானால்.. ஏன் போட முடியவில்லை.. கிழக்கு மக்களுக்கு ஏன் போட முடியவில்லை..?! இதையிட்டு ஏன் கேள்வி கேக்கிறீங்களில்லை. புலம்பெயர் மக்களை பார்த்து கேட்கவும் திட்டவும் முடிவதை.. ஏன் அங்கு செய்கிறீர்கள் இல்லை..??!

வடக்கில் இருந்து பல தடவை அமைச்சரான தாடியர் பில்லியன் கணக்கில் சொத்து வைத்துள்ளவரால்.. ஏன் வடக்கிற்கு போட முடியவில்லை..???!

அப்ப மன்னாரில் மட்டும்தான் முஸ்லீம்கள் இருக்கிறார்களா  வடகிழக்கில் இல்லையா அரசாங்கம் கிடைக்கும் ஊசிகளை போடப்படாத இடங்களுக்கு அனுப்புகிறது அதிகமாக கிடைக்கும் ஊசி சைனாவினது .

 கருணா அம்மான் டக்ளஸ் ஐயாவிடம்  சொத்து இருக்கலாம் காசும் இருக்கலாம் ஏன் நீங்கள் கூட்டமைக்காரரை இங்கு சேர்க்கவில்லை அவர்களிடமும் பணம் இருக்குதானே ஏன் நீங்களும் இலங்கையில் பிறந்தவர்தானே கேள்விகளை கேட் கலாம் தானே .

புலம்பெயர்ந்தவர்களுக்கு யார் திட்டினார்கள் புலம்பெயர்ந்தவர்கள் நினைப்பதும் இங்கு நடக்க வேண்டும் என நினைக்கும் போது கருத்து முரண்பாடுகள் வருகிறது இது வரைக்கும் அக்கறையுள்ள நீங்கள் ஏன் மக்களுக்கு யாழில் திட்டத்தைக்கொண்டு ஊசிகள் வாங்கி தமிழ் மக்களூக்கு  வைத்திசாலையூடாக ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது  கேள்விகளை  அனைவராலும் கேட் கவே முடியும்  5 ரூபா ஊசியாக இருந்தாலும் சரி அரசாங்கம் இலவசமாக மக்களுக்கு வழங்குகிறது அது எல்லா மக்களையும் சேர்த்தே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.