Jump to content

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான்

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை

இலங்கைத் தமிழர்களின் வரலாறுகள் காலத்திற்குக் காலம் பௌத்த பேரினவாத சக்திகளினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, அதன் வரலாறுகள் மாற்றம் செய்யப்பட்டு, தமிழர்களை இந்த நாட்டில் வந்தேறு குடிகளாக காட்டிவரும் நிலை யில், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதைத் தமிழர்களே இன்னும் அறியாத நிலையே இருந்து வருவது கவலைக்குரியதாகும்.

 

குறிப்பாக தமிழர்களின் இருப்புத் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் ரீதியான அடையாளங்கள், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னரே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன.

 

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை வேடுவத் தெய்வ வழிபடு

தமிழர்களின் ஆதிக்குடிகளாக நாகர்கள், இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்திருக்கின்ற போதிலும், அதன் வரலாறுகள் அழிக்கப் பட்டு, நாகர்கள் சிங்களவர் களாக மாற்றப்பட்டு, இலங்கையில் வரலாறுகள் எழுதப் பட்டுள்ளன.

ஆனால் அண்மைக் காலமாக தமிழர்கள் மத்தியில் தொல்லியல் ஆய்வுகள் பற்றிய ஆர்வம் அதிகமாக வெளிவருகின்ற நிலையில் தமிழரின் பல்வேறு வரலாறுகள் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து தோண்டி எடுக்கப்படுகின்றன.

 

இருந்த போதிலும் தோண்டி எடுக்கப்படும் தொல்பொருள் ஊடான தமிழர்களின் வரலாறுகளை இளந்தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமை கவலைக்கு உரியதாகும்.

குறிப்பாக வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் கண்டு பிடிக்கப்படும் தமிழர்களின் தொன்மையானது, இலத்திரனியல் வாசிப்பு முறையில் உள்ளீர்க்கப்பட்டு, அவை எதிர்கால சந்ததியினர் இலகுவில் படித்தறியக் கூடிய வகையிலான செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

தமிழர்கள் ஆதிக்குடிகள்

இந்த நாட்டில் தமிழர்கள் ஆதிக்குடிகள். ஏனையோர் அனைவரும பின்னர் இங்கு வந்து குடியேறிய வந்தேறுகுடிகள் என்பதை இந்த உலகம் அறியும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை தமிழர்கள் ஆதிக்குடிகள்

இன்றும் தமிழர்கள் தங்களது வரலாறுகளை அறிவதில் போதியளவு அக்கறையற்ற நிலைமையே காணப் படுகின்றது. இவ்வாறான நிலையினை பெரும்பான்மை இனத்தவர்கள் தங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் போக்குக் காணப்படுகின்றது. எனவே எமது பாரம்பரியங்களை தேடியறிந்து, அவற்றினை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

இன்று இலங்கையின் ஆதிக்குடிகள் சிங்களவர்கள் தான் என்று கூறும் சிங்கள ஆய்வாளர்கள், அதற்காக முன்வைக்கும் ஆதாரங்கள் தமிழருக்கு உரியதாகவே இருக்கின்றன. இவ்வாறான நிலையிலேயே இலங்கையில் உள்ள ஆதிவாசிகள் தொடர்பான பார்வையும் காணப்படுகின்றது

 

இலங்கையில் இன்றுள்ள ஆதிவாசிகளைக் கொண்டு இலங்கையின் ஆதிக்குடிகளைச் சிங்களவர்களாகவே காட்ட முற்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில் எங்கள் மத்தியில் காணப்படும் பாரம்பரியங்கள் தொடர்பில் எமது எதிர்காலச் சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு அனைத்துத் தமிழர்களுக்கும் உரியதாகும்.

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை ஆதிக்குடிகள்

இலங்கையைப் பொறுத்த வரையில், ஆதிக் குடிவாசிகள் வாழும் பகுதியாக தெற்கில் உள்ள மகியங்கனை இன்று சர்வதேசம் வரையில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. இலங்கையில் உள்ளவர்களும், இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளும் ஆதிவாசி களைக் காண்பதற்கும், அவர்களின் பாரம்பரிய கலாசார பண்பாடுகளை அறிவதற்கும் அதிகளவில் செல்லு மிடமாகவும் அப்பகுதி உள்ளது.

இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்கள்தான்

இலங்கையின் ஆதிக்குடிகள் சிங்களவர்கள் தான் என்னும் வகையில் இந்தச் செயற்பாடுகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன.  கிழக்கில் இன்றும் ஆதிவாசிகள் வாழ்கின்றார்கள். ஆதிக்குடிகள் தமிழர்கள்தான் என்று அதன் உண்மைத் தன்மையினை வெளிக் கொணர்வதற்கு யாரும் தயாராக இல்லாத நிலையே காணப்படுகின்றது.

இலங்கையின் ஆதிக்குடிகள் சிங்களவர்கள்தான் என்பதை வெளிப்படுத்துவது போன்று மகியங்கனை ஆதிவாசிகள் பகுதி மிகவும் பிரமாண்டப் படுத்தப்பட்டு அனைவரையும் ஈர்க்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால் இலங்கையின் ஆதிக்குடிகளாக தமிழர்கள் உள்ள நிலையிலும்  அவர்களின் வழித் தோன்றல்களாக மட்டக்களப்பில் ஆதிக்குடிகள் வாழும் நிலையிலும் அது தொடர்பான அடையாளத்தினை வெளிப்படுத்துவதற்கான போதிய வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையையே பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

மட்டக்களப்பு ஆதிவாசிகள்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு ஆதிவாசிகள், மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில், மதுரங்கேணிக்குளம் கிராம அதிகாரி பிரிவிலுள்ள, குஞ்சங்கல்குளம் பகுதியில் மாத்திரம் 74 ஆதிவாசிக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் குஞ்சங்கல்குளம், மதுரங்கேணிக்குளம், கிரிமிச்சை, கொக்குவில், மாங்கேணி, காயான்கேணி, வட்டவான், ஆலங்குளம், நாசிவந்தீவு, குகனேசபுரம், பனிச்சங்கேணி, கண்டலடி, தட்டுமுனை, பால்சேனை, அம்பந்தாவெளி, திக்கான, கட்டுமுறிவு, ஆண்டான்குளம் ஆகிய பகுதிகளில் ஆதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு ஆதிவாசிகள் தங்களுடைய ஜீவனோபாய தொழில்களாக விவசாயம், வீட்டுத் தோட்டம், தேன் எடுத்தல், மீன் பிடித்தல், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களைச் செய்து வருகின்றனர்.

இங்குள்ள பிள்ளைகள் தங்களுடைய கல்வியை மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழக்கலவன் பாடசாலையில் கற்று வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆதிவாசிகள் சங்கத்தின் தலைவரான நல்லதம்பி வேலாயுதம், குஞ்சங்கல்குளம் பகுதியில் வசித்து வருகின்றார். இவரின் கீழ், கிழக்கு மாகாணத்தில் ஆதிவாசிகள் பல்வேறு கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

வேடுவத் தெய்வ வழிபடு

இவர்கள் காலை எழுந்து தங்களுடைய இயற்கைத் தெய்வமான வேடுவத் தெய்வத்தினை வழிபட்டு, அதன் பிற்பாடு தங்களது ஜீவனோபாய தொழிலான விவசாயம், வீட்டுத் தோட்டச் செய்கை, தேன் எடுத்தல், மீன் பிடித்தல் போன்ற தொழில்களைச் செய்து வருகின்றனர்.

அத்தோடு தங்களது உறவுகளுடன் இணைந்து தமது சந்ததிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தமது இனத்தின் மாற்றங்கள் தொடர்பில் கலந்துரை யாடல்களை வழமையாக மேற்கொண்டு வருகின்றனர். அதன் பிற்பாடு தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட வனங்களுக்கு சென்று தேன் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர். குறிப்பாக மழைக் காலம் தவிர்ந்த காலங்களில் அவர்கள்  தேன் எடுப்பது வழக்கம்.

 

இன்றும் இவர்கள் தமது முன்னோர்கள் வழியாக வந்தவற்றைத் தொடர்ச்சியாக கடைப்பிடித்து வருகின்ற போதிலும், உணவுப் பழக்கம், பேச்சு வழக்கம், கல்விமுறை உட்பட்ட பல விடயங்களில் காலத்திற்கேற்ப முன்னேறிய நிலையில், இவர்கள் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை இங்கு அவதானிக்க முடிகின்றது.

எவ்வாறாயினும் ஏனைய பகுதிகளில் ஆதிவாசிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரமும், வசதி வாய்ப்புகளும் தங்களுக்கு கிடைப்பதில்லையென மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆதிவாசிகள் சங்கத்தின் தலைவரான நல்லதம்பி வேலாயுதம் தெரிவிக்கின்றார்.

“எனது நீண்ட நாள் ஆசை மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் எங்களது ஆதிவாசிகளின் நடைமுறைகளை உள்ளடக்கியதான பொருட்களைக் கொண்டு ஒரு நூதனசாலை அமைக்க வேண்டும் என்பதாகும். எங்களது சமூகத்தவர்களின் பல பெறுமதி மிக்க எங்களது பழமையான பொருட்கள் சிலவற்றைக் கடந்த கால யுத்தத்தின் போது இழந்து விட்டோம். மிகுதியாக இருக்கும் எங்களது பொருட்களையும் எங்களது பாரம்பரிய நடைமுறைகளைச் சித்தரிக்கக் கூடிய வகையில் ஒரு நூதனசாலை அமையப்பெறுவது அவசியம்” என்கிறார்.

“ஆதிவாசிகள் என்றால் அது மகியங்கனையை மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றது. நாங்கள் புறக்கணிக்கப்படுகின்றோம்”

 “கிழக்கு மாகாணத்தின் கரையோர ஆதி வாசிகளை அரசாங்கங்கள் தொடர்ச்சியாகப் புறக்கணித்தே வருகின்றன. மகியங்கனை, தம்பானையில் உள்ள ஆதிவாசிகளின் இருப் பிடத்திற்கு அரசாங்க அமைச்சர்கள் செல்வதும் அவர்களை சந்திப்பதும், அவர்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை கேட்டறிந்தும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஆனால் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்  கூட எங்களை வந்து சந்திப்பதும் இல்லை. எங்களது குறை நிறைகளை கேட்பதுமில்லை” எனவும் ஆதிவாசிகளின் தலைவர் வேலாயுதம் தெரிவித்தார். “ஆதிவாசிகள் என்றால் அது மகியங்கனையை மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றது. நாங்கள் புறக்கணிக்கப் படுகின்றோம்” எனவும் தெரிவித்தார்.
தமிழர்களின் பூர்வீக குடிகள் என்ற அடிப்படையில் அவர்களை வெளியுலகிலிருந்து மறைப்பதற்கான முயற்சியாக கூட இது இருக்கலாம். தமிழர்களான ஆதிக்குடிகளை சிங்களவர்களாக காண்பித்தவர்களுக்கு, மட்டக்களப்பில் உள்ள ஆதிக்குடிகளை சிங்களவர்களாக மாற்றமுடியாத நிலையில் இன்று அவர்களின் பாரம்பரியத்தினை வெளிக்காட்டுவதை விரும்பாத நிலையே இருந்து வருவது கண்கூடாக உள்ளது.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ள இந்த மக்கள் தொடர்பில், தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தாமல் இருப்பதும் மிகவும் கவலைக்குரியது.


 
அவர்கள் தொடர்பான முழுமையான வரலாறுகள் எழுதப்பட்டு, அவர்களின் பாரம்பரியங்களும் காட்சிப்படுத்தப்படும் போது, தமிழர்கள் தொடர்பான வரலாறு மீள் எழுச்சி பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அதனைச் செய்வதற்கு தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ளவர்கள் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

 

https://www.ilakku.org/situation-of-the-tamil-aborigin-in-batticaloa/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, உடையார் said:

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான்

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை

இலங்கைத் தமிழர்களின் வரலாறுகள் காலத்திற்குக் காலம் பௌத்த பேரினவாத சக்திகளினால் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, அதன் வரலாறுகள் மாற்றம் செய்யப்பட்டு, தமிழர்களை இந்த நாட்டில் வந்தேறு குடிகளாக காட்டிவரும் நிலை யில், இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதைத் தமிழர்களே இன்னும் அறியாத நிலையே இருந்து வருவது கவலைக்குரியதாகும்.

 

குறிப்பாக தமிழர்களின் இருப்புத் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் ரீதியான அடையாளங்கள், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னரே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன.

 

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை வேடுவத் தெய்வ வழிபடு

தமிழர்களின் ஆதிக்குடிகளாக நாகர்கள், இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்திருக்கின்ற போதிலும், அதன் வரலாறுகள் அழிக்கப் பட்டு, நாகர்கள் சிங்களவர் களாக மாற்றப்பட்டு, இலங்கையில் வரலாறுகள் எழுதப் பட்டுள்ளன.

ஆனால் அண்மைக் காலமாக தமிழர்கள் மத்தியில் தொல்லியல் ஆய்வுகள் பற்றிய ஆர்வம் அதிகமாக வெளிவருகின்ற நிலையில் தமிழரின் பல்வேறு வரலாறுகள் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து தோண்டி எடுக்கப்படுகின்றன.

 

இருந்த போதிலும் தோண்டி எடுக்கப்படும் தொல்பொருள் ஊடான தமிழர்களின் வரலாறுகளை இளந்தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமை கவலைக்கு உரியதாகும்.

குறிப்பாக வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் கண்டு பிடிக்கப்படும் தமிழர்களின் தொன்மையானது, இலத்திரனியல் வாசிப்பு முறையில் உள்ளீர்க்கப்பட்டு, அவை எதிர்கால சந்ததியினர் இலகுவில் படித்தறியக் கூடிய வகையிலான செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

தமிழர்கள் ஆதிக்குடிகள்

இந்த நாட்டில் தமிழர்கள் ஆதிக்குடிகள். ஏனையோர் அனைவரும பின்னர் இங்கு வந்து குடியேறிய வந்தேறுகுடிகள் என்பதை இந்த உலகம் அறியும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை தமிழர்கள் ஆதிக்குடிகள்

இன்றும் தமிழர்கள் தங்களது வரலாறுகளை அறிவதில் போதியளவு அக்கறையற்ற நிலைமையே காணப் படுகின்றது. இவ்வாறான நிலையினை பெரும்பான்மை இனத்தவர்கள் தங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் போக்குக் காணப்படுகின்றது. எனவே எமது பாரம்பரியங்களை தேடியறிந்து, அவற்றினை ஆவணப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.

இன்று இலங்கையின் ஆதிக்குடிகள் சிங்களவர்கள் தான் என்று கூறும் சிங்கள ஆய்வாளர்கள், அதற்காக முன்வைக்கும் ஆதாரங்கள் தமிழருக்கு உரியதாகவே இருக்கின்றன. இவ்வாறான நிலையிலேயே இலங்கையில் உள்ள ஆதிவாசிகள் தொடர்பான பார்வையும் காணப்படுகின்றது

 

இலங்கையில் இன்றுள்ள ஆதிவாசிகளைக் கொண்டு இலங்கையின் ஆதிக்குடிகளைச் சிங்களவர்களாகவே காட்ட முற்படுகின்றனர்.

இவ்வாறான நிலையில் எங்கள் மத்தியில் காணப்படும் பாரம்பரியங்கள் தொடர்பில் எமது எதிர்காலச் சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு அனைத்துத் தமிழர்களுக்கும் உரியதாகும்.

மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை ஆதிக்குடிகள்

இலங்கையைப் பொறுத்த வரையில், ஆதிக் குடிவாசிகள் வாழும் பகுதியாக தெற்கில் உள்ள மகியங்கனை இன்று சர்வதேசம் வரையில் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது. இலங்கையில் உள்ளவர்களும், இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளும் ஆதிவாசி களைக் காண்பதற்கும், அவர்களின் பாரம்பரிய கலாசார பண்பாடுகளை அறிவதற்கும் அதிகளவில் செல்லு மிடமாகவும் அப்பகுதி உள்ளது.

இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழர்கள்தான்

இலங்கையின் ஆதிக்குடிகள் சிங்களவர்கள் தான் என்னும் வகையில் இந்தச் செயற்பாடுகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன.  கிழக்கில் இன்றும் ஆதிவாசிகள் வாழ்கின்றார்கள். ஆதிக்குடிகள் தமிழர்கள்தான் என்று அதன் உண்மைத் தன்மையினை வெளிக் கொணர்வதற்கு யாரும் தயாராக இல்லாத நிலையே காணப்படுகின்றது.

இலங்கையின் ஆதிக்குடிகள் சிங்களவர்கள்தான் என்பதை வெளிப்படுத்துவது போன்று மகியங்கனை ஆதிவாசிகள் பகுதி மிகவும் பிரமாண்டப் படுத்தப்பட்டு அனைவரையும் ஈர்க்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

 

ஆனால் இலங்கையின் ஆதிக்குடிகளாக தமிழர்கள் உள்ள நிலையிலும்  அவர்களின் வழித் தோன்றல்களாக மட்டக்களப்பில் ஆதிக்குடிகள் வாழும் நிலையிலும் அது தொடர்பான அடையாளத்தினை வெளிப்படுத்துவதற்கான போதிய வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையையே பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

மட்டக்களப்பு ஆதிவாசிகள்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு ஆதிவாசிகள், மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில், மதுரங்கேணிக்குளம் கிராம அதிகாரி பிரிவிலுள்ள, குஞ்சங்கல்குளம் பகுதியில் மாத்திரம் 74 ஆதிவாசிக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் குஞ்சங்கல்குளம், மதுரங்கேணிக்குளம், கிரிமிச்சை, கொக்குவில், மாங்கேணி, காயான்கேணி, வட்டவான், ஆலங்குளம், நாசிவந்தீவு, குகனேசபுரம், பனிச்சங்கேணி, கண்டலடி, தட்டுமுனை, பால்சேனை, அம்பந்தாவெளி, திக்கான, கட்டுமுறிவு, ஆண்டான்குளம் ஆகிய பகுதிகளில் ஆதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.

மட்டக்களப்பு ஆதிவாசிகள் தங்களுடைய ஜீவனோபாய தொழில்களாக விவசாயம், வீட்டுத் தோட்டம், தேன் எடுத்தல், மீன் பிடித்தல், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களைச் செய்து வருகின்றனர்.

இங்குள்ள பிள்ளைகள் தங்களுடைய கல்வியை மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழக்கலவன் பாடசாலையில் கற்று வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆதிவாசிகள் சங்கத்தின் தலைவரான நல்லதம்பி வேலாயுதம், குஞ்சங்கல்குளம் பகுதியில் வசித்து வருகின்றார். இவரின் கீழ், கிழக்கு மாகாணத்தில் ஆதிவாசிகள் பல்வேறு கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

வேடுவத் தெய்வ வழிபடு

இவர்கள் காலை எழுந்து தங்களுடைய இயற்கைத் தெய்வமான வேடுவத் தெய்வத்தினை வழிபட்டு, அதன் பிற்பாடு தங்களது ஜீவனோபாய தொழிலான விவசாயம், வீட்டுத் தோட்டச் செய்கை, தேன் எடுத்தல், மீன் பிடித்தல் போன்ற தொழில்களைச் செய்து வருகின்றனர்.

அத்தோடு தங்களது உறவுகளுடன் இணைந்து தமது சந்ததிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தமது இனத்தின் மாற்றங்கள் தொடர்பில் கலந்துரை யாடல்களை வழமையாக மேற்கொண்டு வருகின்றனர். அதன் பிற்பாடு தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட வனங்களுக்கு சென்று தேன் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர். குறிப்பாக மழைக் காலம் தவிர்ந்த காலங்களில் அவர்கள்  தேன் எடுப்பது வழக்கம்.

 

இன்றும் இவர்கள் தமது முன்னோர்கள் வழியாக வந்தவற்றைத் தொடர்ச்சியாக கடைப்பிடித்து வருகின்ற போதிலும், உணவுப் பழக்கம், பேச்சு வழக்கம், கல்விமுறை உட்பட்ட பல விடயங்களில் காலத்திற்கேற்ப முன்னேறிய நிலையில், இவர்கள் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை இங்கு அவதானிக்க முடிகின்றது.

எவ்வாறாயினும் ஏனைய பகுதிகளில் ஆதிவாசிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரமும், வசதி வாய்ப்புகளும் தங்களுக்கு கிடைப்பதில்லையென மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆதிவாசிகள் சங்கத்தின் தலைவரான நல்லதம்பி வேலாயுதம் தெரிவிக்கின்றார்.

“எனது நீண்ட நாள் ஆசை மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் எங்களது ஆதிவாசிகளின் நடைமுறைகளை உள்ளடக்கியதான பொருட்களைக் கொண்டு ஒரு நூதனசாலை அமைக்க வேண்டும் என்பதாகும். எங்களது சமூகத்தவர்களின் பல பெறுமதி மிக்க எங்களது பழமையான பொருட்கள் சிலவற்றைக் கடந்த கால யுத்தத்தின் போது இழந்து விட்டோம். மிகுதியாக இருக்கும் எங்களது பொருட்களையும் எங்களது பாரம்பரிய நடைமுறைகளைச் சித்தரிக்கக் கூடிய வகையில் ஒரு நூதனசாலை அமையப்பெறுவது அவசியம்” என்கிறார்.

“ஆதிவாசிகள் என்றால் அது மகியங்கனையை மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றது. நாங்கள் புறக்கணிக்கப்படுகின்றோம்”

 “கிழக்கு மாகாணத்தின் கரையோர ஆதி வாசிகளை அரசாங்கங்கள் தொடர்ச்சியாகப் புறக்கணித்தே வருகின்றன. மகியங்கனை, தம்பானையில் உள்ள ஆதிவாசிகளின் இருப் பிடத்திற்கு அரசாங்க அமைச்சர்கள் செல்வதும் அவர்களை சந்திப்பதும், அவர்கள் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை கேட்டறிந்தும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ஆனால் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்  கூட எங்களை வந்து சந்திப்பதும் இல்லை. எங்களது குறை நிறைகளை கேட்பதுமில்லை” எனவும் ஆதிவாசிகளின் தலைவர் வேலாயுதம் தெரிவித்தார். “ஆதிவாசிகள் என்றால் அது மகியங்கனையை மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றது. நாங்கள் புறக்கணிக்கப் படுகின்றோம்” எனவும் தெரிவித்தார்.
தமிழர்களின் பூர்வீக குடிகள் என்ற அடிப்படையில் அவர்களை வெளியுலகிலிருந்து மறைப்பதற்கான முயற்சியாக கூட இது இருக்கலாம். தமிழர்களான ஆதிக்குடிகளை சிங்களவர்களாக காண்பித்தவர்களுக்கு, மட்டக்களப்பில் உள்ள ஆதிக்குடிகளை சிங்களவர்களாக மாற்றமுடியாத நிலையில் இன்று அவர்களின் பாரம்பரியத்தினை வெளிக்காட்டுவதை விரும்பாத நிலையே இருந்து வருவது கண்கூடாக உள்ளது.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ள இந்த மக்கள் தொடர்பில், தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தாமல் இருப்பதும் மிகவும் கவலைக்குரியது.


 
அவர்கள் தொடர்பான முழுமையான வரலாறுகள் எழுதப்பட்டு, அவர்களின் பாரம்பரியங்களும் காட்சிப்படுத்தப்படும் போது, தமிழர்கள் தொடர்பான வரலாறு மீள் எழுச்சி பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. அதனைச் செய்வதற்கு தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ளவர்கள் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

 

https://www.ilakku.org/situation-of-the-tamil-aborigin-in-batticaloa/

 

இவர்களின் வரலாறுகளை நாம் பாதுகாக்க வேண்டும்... குறிப்பாக இவர்கள் பயன்படுத்தும் தனித்தமிழ்ச் சொற்கள், இவர்களுக்கே உரித்தானவை. இது மிகவும் முக்கியமானது... சிங்களவனின் எலு மொழிக் கோட்பாட்டை நாம் சுக்குநூறாக்க வேண்டும். அதற்கு இவர்களின் தனித்தமிழ்ச் சொற்கள் மிகவும் முக்கியம். தற்போதுள்ள பழைய தலைமுறை அழிந்துவிட்டால் செய்ய இயலாது...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்  (தமிழ்) ஆதிக் குடிகள் அல்ல.

தமிழர் ஆகிய வேடர்கள் (Tamilsed Veddas).

இவர்கள்  இலங்கைத்தீவின் முதன் முதலக குடியேறிய மனிதவர்க்கத்தின் அடிகள்.

இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

வேடுவர்களின் குடியேற்றம் அனுராதபுரத்தின் கிழக்கில் இருந்து , இப்போதைய குமண, யால பகுதிகளிலும், மலை நாட்டை அண்டியும் பரவி இருந்தது.

வெருகல் அல்லது கதிரவெளியில் வேடரின் ஆட்சி பீடம் (seat of rule) இருந்தது.

இதில் எழுதியவர்களுக்கு கூட இது தெரியவில்லை என்பது, எமது வரலாற்றை நகைப்பிற்கு  இடமாக்கும்.


இதனால் இங்கே முன்பே சொல்லி இருந்தேன்,  கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு வரலாறு, தொல்பொருள் துறை சார் பீடங்கள் இருக்க வேண்டும் என்று. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.