Jump to content

மக்களின் பசியோடு விளையாடும் ராஜபக்‌ஷர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் பசியோடு விளையாடும் ராஜபக்‌ஷர்கள்

புருஜோத்தமன் தங்கமயில்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பழைய காணொளியொன்று, சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு, மூன்று நாள்களாகப் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில், “நாட்டு மக்களுக்கு சமையல் எரிவாயுவைக் கிரமமாக வழங்க முடியாத நல்லாட்சி அரசாங்கத்தினர், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவார்கள்...?” என்று கேள்வியெழுப்புகின்றார். 

நல்லாட்சிக் காலத்தில், எதிரணி வரிசையில் இருந்த ராஜபக்‌ஷ(ர்கள்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்த தருணத்தில், ஆற்றப்பட்ட உரையின் காணொளி அது. 

அந்த உரை நிகழ்த்தப்பட்டு சில ஆண்டுகளுக்குள்ளேயே, ராஜபக்‌ஷர்களின் அரசாங்கம், நாட்டு மக்களை சமையல் எரிவாயுவுக்காக, நீண்ட வரிசைகளில் காத்திருக்க வைத்திருக்கின்றது.

நாட்டில், சமையல் எரிவாயுவை இன்றைக்குப் பெறுவது, பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. எரிவாயு சிலிண்டர்களைச் சுமந்து கொண்டு, நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்த காட்சிகளை, கடந்த சில நாள்களாகக் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் நகரங்கள் காட்டின. 

நீண்ட வரிசையில் காத்திருந்தும், சமையல் எரிவாயு நிரப்பிய சிலிண்டர்களைப் பெற முடியாது, காலிச் சிலிண்டர்களை சுமந்து கொண்டு, வீட்டுக்கு சென்றோரின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கானது. நகரப் பகுதிகளில் நிலை இப்படியென்றால், கிராமங்களில் நிலைமை இன்னும் மோசமானது. ஒரு மாத காலத்துக்கு முன்னர் இருந்தே, சமையல் எரிவாயுவைக் கிராமங்களில் பெறமுடியாமல் இருந்தது.

ராஜபக்‌ஷர்களை நாட்டின் நம்பிக்கையான தலைவர்களாக, நிர்வாகிகளாக முன்னிறுத்தி, தேர்தல் காலத்தில் முழங்கிக் கொண்டிருந்த பெண்மணி ஒருவர், கடந்த சில நாள்களுக்கு முன்னர், சமையல் எரிவாயு கிடைக்காத நிலையில், மண்ணெண்ணை அடுப்பைப் பாவிப்பது பற்றிப் பேசியிருந்தார். 

இன்னொருவர், களிமண் அடுப்பைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது பற்றியும் அந்த அடுப்பை எரிப்பதற்கு, தேங்காய் சிரட்டைகளைப் பெறுவது பற்றியும், சமூக ஊடகமொன்றில் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார். 

இவர்கள் எல்லோரும் கொழும்பு மேல்வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். யாருக்கு என்ன கிடைக்கிறதோ இல்லையோ, கொழும்பு மேற்றட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களும் சேவைகளும் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட, நாட்டை ஆண்ட எந்த அரசாங்கமும் அனுமதித்ததில்லை. 

அதனால், அவர்களுக்கு நாட்டின் பெரும்பான்மை மக்களின் அன்றாடப் பிரச்சினை தொடர்பிலான எந்த அறிவும் அனுபவமும் இருந்ததும் இல்லை. ஆனால், இன்றைக்கு ராஜபக்‌ஷர்களின் ஆட்சிக் குழப்பத்தால், அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும், அதனால் எழும் நெருக்கடி என்றால் என்ன என்று புரியத் தொடங்கி இருக்கின்றது.

ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் உழுந்து, மஞ்சள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிக்கான தடையை, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் விதித்தார்கள். உழுந்தின் விலை கிலோகிராம் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை எட்டியது.

உழுந்தின் மீதான இறக்குமதித் தடையை நீக்குமாறு, கொழும்பு மொத்த வியாபாரிகள் உள்ளிட்ட தரப்புகள் அரசாங்கத்திடம் கோரிய போது, உழுந்தை  தமிழ் சிறுபான்மை மக்களே, அதிகமாக நுகர்பவர்கள்; அதனால், அதன் மீதான இறக்குமதிக்கான தடையை நீக்க வேண்டியதில்லை என்ற தோரணையிலான பதில் வழங்கப்பட்டது.

உழுந்தின் மீதான தடை, சிங்கள மக்களைப் பெரியளவில் பாதிக்கவில்லை. அவர்களின் உணவுப் பழக்கத்தில், உழுந்து அவ்வளவு பெரிய வகிபாகத்தை எடுத்துக் கொள்ளவில்லை. 

இன்னொரு நாளில், அரிசி இறக்குமதியை அரசாங்கம் மட்டுப்படுத்தியது. இலங்கையின் அரிசி ஆலை முதலாளிகள், இதுதான் சந்தர்ப்பம் என்று, அரிசி விலையைத் தாறுமாறாக உயர்த்தினர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அரிசியின் விலை 30 சதவீதத்தால் அதிகரித்து இருக்கின்றது.

இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தல் என்பது, இலங்கையின் பணம் வெளிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் என்ற பொருளாதார சிந்தனை முன்வைக்கப்படுகின்றது. அதில், குறிப்பிட்டளவு உண்மையும் இருக்கின்றது. ஆனால், நாட்டு மக்களின் வயிற்றுப் பசியோடு விளையாடிக் கொண்டு, ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று எந்தவோர் அரசாங்கமும் முடிவுகளை எடுக்க முடியாது. ராஜபக்‌ஷர்கள் அதனை எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கொவிட்-19 பெருந்தொற்று, மக்களின் வாழ்வாதாரத்தைக் கிட்டத்தட்ட முடக்கிப் போட்டுவிட்டது. வட்டிக் கடைகளிலும் கடன்களிலும் காலத்தைக் கடத்தும் நிலையொன்றுக்குள் நாட்டின் பெரும்பான்மையானவர்கள் சென்றுவிட்டார்கள். அப்படியான நிலையில்தான், அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதித் தடையும் அதனால் உள்நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பும், பெரும் சுமையாக மாறுகின்றது.

நாட்டின் எந்தவொரு பாகத்திலும், பால்மா பைகளைப் பெற முடியாத சூழல் இருக்கின்றது. இலங்கை மக்களின் உணவு, தேநீரோடு ஆரம்பிப்பது! பல இலட்சக்கணக்கான மக்களின் காலை உணவே, பால் தேநீர் மட்டுந்தான். 

அப்படியான நிலையில், பால்மா பைகளுக்கான தட்டுப்பாடு, அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. டிஇந்தியா உள்ளிட்ட நாடுகள் போல, இலங்கையில் பால் தேநீர், நேரடியாகப் பாலைக் கொண்டு தயாரிக்கப்படுவதில்லை. ஏனெனில், நேரடியான பாலின் விலை, பால்மா விலையோடு ஒப்பிடும் போது மிகவும் அதிகம்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது, நல்லாட்சி அரசாங்கத்தினரின் சமையல் எரிவாயு விநியோக குழப்பத்தை விமர்சித்த ராஜபக்‌ஷர்கள், இன்றைக்கு தேநீர் தயாரிப்புக்கான பால்மாவுக்கான தட்டுப்பாடு, உணவுத் தயாரிப்பில் பெரும் பங்கை எடுத்துக் கொள்ளும் அரிசிக்கான விலை அதிகரிப்பு என்று செய்து, இறுதியில் சமையல் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு வரையில் கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றார்கள்.  

நாட்டின் உள்ளூர்   பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது என்பது, எந்தவோர் அரசாங்கமும் செய்ய வேண்டியதுதான். ஆனால், மக்களின் பொருளாதார நிலை, அத்தியாவசியப் பொருட்களின் நெருக்கடிகள் குறித்து, எந்தவித தெளிவும் இல்லாமல், முடிவுகளை எடுக்கும் போது, நாடு இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி வரும். 

இதனால், நாட்டில் கறுப்புச் சந்தையொன்று பெரிய அளவில் வளரும். ஒரு சில பண முதலைகள் மாத்திரம் கறுப்புப் பணத்தை  சேர்க்கும். கறுப்புப் பணத்தால் நாட்டுக்கு எந்தவொரு பயனும் ஏற்படாது. அதுதான், துறைசார் நிபுணர்களுடன் ஆலோசித்து, ஆட்சியாளர்கள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதாகும். 

நாடு ஏற்கெனவே கடனில் முழ்கிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பணப்பெறுமதி என்பது படுவீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி, இன்றைய சூழலில் 230 ரூபாய் அளவுக்கு வந்துவிட்டது. வங்கிகளுக்கு ஊடாக 200 ரூபாய் அளவில் பேணப்பட்டாலும், உண்மை நிலை மோசமானது. அதனால்தான், அத்தியாவசியப் பொருட்களில் விலை உயர்வும் கிடுகிடுவென அதிகரித்திருக்கின்றது.

ராஜபக்‌ஷர்களின் புதிய இலங்கைக்கான இலக்கு என்பது, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு என்கிற சாதாரண மக்களின் மீதான நெருக்கடிகளுடன் ஆரம்பித்திருக்கின்றது. 

ராஜபக்‌ஷர்களுக்காக அளிக்கப்பட்ட 69 இலட்சம் வாக்குகளும் இவ்வாறான கறுப்பு விடியலுக்கானதா என்று தென் இலங்கை கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையிலிருந்து நாடு மீள்வதற்கான எந்தவோர் ஏற்பாடுகளையும் காண முடியவில்லை. 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மக்களின்-பசியோடு-விளையாடும்-ராஜபக்-ஷர்கள்/91-278637

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.