Jump to content

முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் உடன் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் உடன் கைது!

August 14, 2021

spacer.png

முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று முதல் கடுமையாக அமல்படுத்த காவற்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அதற்கமைய எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவற்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

2020, அக்டோபர் 17ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, பொது இடத்தில் முகக்கவசம் அணியாத நபர் தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம். அத்தகைய குற்றத்தை செய்யும் ஒருவரை பிடிஆணை உத்தரவு இல்லாமல் கைது செய்ய சட்ட ஏற்பாடுகள் உள்ளன.

இந்த சட்டத்தின் கீழ் முகக்கவசம் அணியாததாலும், சரியான முறையில் முகக்கவசங்களை அணியாததாலும் கடந்த அக்டோபரில் இருந்து 53,000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், முகக்கவசம் இல்லாதவர்களுக்கும், சரியாக முகக்கவசம் அணியாதவர்களுக்கும் இன்று முதல் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2021/164642

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது, தொற்று நோய் வீரியமாக பரவும்போது போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது நல்லதே.
ஒரு தடவை பயன்படுத்தும் முகக்கவசத்தை தோய்த்து பயன்படுத்துவதை தவிர்க்க வைக்கவேண்டும், தரமான விலை குறைவான முகக்கவசங்கள் மக்களுக்கு வழங்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2021 at 16:53, ஏராளன் said:

நல்லது, தொற்று நோய் வீரியமாக பரவும்போது போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது நல்லதே.
ஒரு தடவை பயன்படுத்தும் முகக்கவசத்தை தோய்த்து பயன்படுத்துவதை தவிர்க்க வைக்கவேண்டும், தரமான விலை குறைவான முகக்கவசங்கள் மக்களுக்கு வழங்கவேண்டும்.

பாதுகாப்பான முகக்கவசம் என்பதை  எப்படி  எடுத்துக்கொள்ளலாம் இங்கே மக்கள் துணியினால் ஆன முகக்கவசத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள் அதுவும் நாட் கள் கடந்து  நாடியில் இறந்து தொங்கிறது யாரையாவது கண்டால் மட்டுமே முக்கிற்கு செல்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கீகாரம் பெற்ற முககவசம் ஒன்று விலை ரூபா இருபத்து ஐந்து என கேள்விப்பட்டேன். அனைவருக்கும் முககவசம் இலவசமாக வழங்கவேண்டியது அரசின் கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

அங்கீகாரம் பெற்ற முககவசம் ஒன்று விலை ரூபா இருபத்து ஐந்து என கேள்விப்பட்டேன். அனைவருக்கும் முககவசம் இலவசமாக வழங்கவேண்டியது அரசின் கடமை.

உண்மையில் எவ்வளவு மக்கள் 25 ரூபாய் குடுத்து முகக்கவசம் வாங்கிப் பாவிப்பார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

  நாடியில் இறந்து தொங்கிறது யாரையாவது கண்டால் மட்டுமே முக்கிற்கு செல்கிறது 

இங்கும் அதே நிலை தான்??☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

உண்மையில் எவ்வளவு மக்கள் 25 ரூபாய் குடுத்து முகக்கவசம் வாங்கிப் பாவிப்பார்கள்..

யாயினி 25 ரூபாய் எல்லாம் இலங்கையில் ஒரு காசே இல்ல இப்ப.. ஒண்டும் வாங்கேலா.. ஆபிரிக்க நாடுகள் போல பானுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொண்டுபோகும் நிலை வெகுவிரைவில் வரும்போல இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

இங்கும் அதே நிலை தான்??☹️

ஆனால் நம்மவர்கள் மாஸ்க் அடிக்கடி மாற்றுவதும் இல்லை அண்ணை அன்றாடம் தொழில் செய்பவ்ர்கள் கழுவி கழுவி பாவிக்கிறார்கள் ஆனால் அது கூட பாதுகாப்பு இல்லை . முடிந்தவரை எங்களை நாம் பாதுகாத்து கொள்ள நினைக்கிறம் அதுவும் முடியாதுள்ளது பார்ப்போம் எதுவரைக்கும் என 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனால் நம்மவர்கள் மாஸ்க் அடிக்கடி மாற்றுவதும் இல்லை அண்ணை அன்றாடம் தொழில் செய்பவ்ர்கள் கழுவி கழுவி பாவிக்கிறார்கள் ஆனால் அது கூட பாதுகாப்பு இல்லை . முடிந்தவரை எங்களை நாம் பாதுகாத்து கொள்ள நினைக்கிறம் அதுவும் முடியாதுள்ளது பார்ப்போம் எதுவரைக்கும் என 

உவ்விடம் மாஸ்க் சுயமாக தைத்து போடுவதற்கு அனுமதி இருக்கா?
இங்கு ஜேர்மனியில் அனுமதி இல்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

அங்கீகாரம் பெற்ற முககவசம் ஒன்று விலை ரூபா இருபத்து ஐந்து என கேள்விப்பட்டேன். அனைவருக்கும் முககவசம் இலவசமாக வழங்கவேண்டியது அரசின் கடமை.

Surgical mask 50 ரூபாய்க்கு 3 தருவாங்கள், 50 கொண்ட பெட்டி 600 ரூபாய்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2021 at 15:15, பாலபத்ர ஓணாண்டி said:

யாயினி 25 ரூபாய் எல்லாம் இலங்கையில் ஒரு காசே இல்ல இப்ப.. ஒண்டும் வாங்கேலா.. ஆபிரிக்க நாடுகள் போல பானுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொண்டுபோகும் நிலை வெகுவிரைவில் வரும்போல இருக்கு..

இருபத்து ஐந்து ரூபா ஒரு காசு இல்லை சரி, ஆனால் அந்த இருபத்து ஐந்து ரூபா எல்லாருக்கும் செலவளிக்கக்கூடிய மாதிரி கிடைக்கின்றதா? கைவசம் உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இருபத்து ஐந்து ரூபா ஒரு காசு இல்லை சரி, ஆனால் அந்த இருபத்து ஐந்து ரூபா எல்லாருக்கும் செலவளிக்கக்கூடிய மாதிரி கிடைக்கின்றதா? கைவசம் உள்ளதா?

சிறிலங்கா இப்ப புது காசு அடிக்கிறதிலை பிசியாய் இருக்குதாம்...
அடுத்தவருசம் இந்த நிலமைதான்.....

เชื่อหรือไม่!! นี่คือ "ซิมบับเว" ประเทศที่มีปัญหาเงินเฟ้อมากที่สุด  จะซื้อไข่ไก่สามฟองต้องใช้เงินถึง100ล้าน

เงินเฟ้อ คืออะไร | วิธีวัดอัตราเงินเฟ้อ | วิกฤตเงินเฟ้อของประเทศต่าง ๆ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வண்டிலிலை காசை கொண்டுபோய் கொட்டிப்போட்டு, கூடையில சாமானை கொண்டுவருவம் உயிரோட இருந்தால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2021 at 14:47, குமாரசாமி said:

உவ்விடம் மாஸ்க் சுயமாக தைத்து போடுவதற்கு அனுமதி இருக்கா?
இங்கு ஜேர்மனியில் அனுமதி இல்லை...

சிலர் சுயமாக தைத்து போடுகிறார்கள்  சில  உடைகள் தைப்பவர்கள் பொலித்தின் பையிட்டு துணியினால் ஆன முகக்கவசங்களை விற்கிறார்கள் அதுவும் தொழிலாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.