Jump to content

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுப்பு

 

temple-33-720x375.jpg


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில், மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன், ஆலய பூஜைகளில் பங்குபற்றுவதற்கு பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார அமைச்சின் சுற்றிக்கையின் பிரகாரம், மதத்தலைவர்கள் உட்பட 100 அடியார்களே உரிய நேரத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவர்.

ஆலய உள்வீதியில் மாத்திரமே பூஜைகள், சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புறச் சூழலில் எந்தவிதமான சமய நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் மற்றும் நேர்த்தி கடன் நிறைவேற்றுதல் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்னதானம் வழங்கலும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி பெரஹர கணக்கு பார்க்க மாட்டினம் போல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, alvayan said:

கண்டி பெரஹர கணக்கு பார்க்க மாட்டினம் போல..

கண்டி பெரஹரா பார்வையாளர்கள் பக்தர்கள் இல்லாமல் இந்தக் கடிதத்தில் இருப்பது போன்ற வடிவத்தில் தானே நடக்கப் போகிறது? யாழ் களத்திலேயே செய்தி இருக்கிறது.

இன்னொரு பத்துப் பக்கத்திற்கு இதையும் இழுக்காதையுங்கோ. உயிர்வாழ அவசியமில்லாத அனைத்தையும் மூடி விட்டு பொறுத்திருந்தால் சில ஆயிரம் உயிர்கள் இன்னும் சில வருடங்கள் தப்பி வாழும் வரம் பெறும்!

இந்த வரத்தை விட முக்கியமா சாமிகளைத் தூக்கித் திரிவது?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லிபுர ஆழ்வார் மகோற்சவம் மாசி மாதத்திற்கு ஒத்திவைப்பு!

August 14, 2021

spacer.png

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார்  ஆலய மகோற்சவத்திற்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் , ஆலய தர்மகர்த்தா சபை மகோற்சவத்தை எதிர்வரும் மாசி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய மகோற்சவ கால ஏற்பாட்டுக் கூட்டம்  நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறீ தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின் முடிவில்  ,இவ்வருடம் மகோற்சவம் நடாத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆலய தர்ம கர்த்தா சபையினர், ஆலய நிர்வாகம், திருவிழா உபயகாரர்களுடன் ஆலய வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தி இருந்தனர்.  அக்கலந்துரையாடலின் முடிவில் , ஆலய மகோற்சவத்தை அடுத்த வருடம் மாசி மாதம் வரும் பூரணை மகம் நாளிற்கு ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2021/164674

 

 

Link to comment
Share on other sites

மனிதர்கள் உயிரோடு இருந்தால் தானே கடவுளும் உயிர் வாழ முடியும். ஆகவே கடவுள் உயிர் வாழ்வதற்கு உதவி செய்ய வேண்டுமானால் மனிதர்கள் நோய்த் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை இந்த பக்தர்கள் உணரும் அறிவை அவர்கள் தாமாக வளர்தது கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த அறிவை அவர்கள் நம்பும் கடவுள் கொடுக்க போவதில்லை. நோய் தொற்றில் இருந்து மனிதரை பாதுகாக்கும் சக்தியும் அவர்கள் தூக்கி திரியும் கடவுளுக்கு இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி புத்தர், நல்லூர் கந்தன் போல வல்லிபுரத்தாருக்கு காசு, பவர் இல்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

மனிதர்கள் உயிரோடு இருந்தால் தானே கடவுளும் உயிர் வாழ முடியும். ஆகவே கடவுள் உயிர் வாழ்வதற்கு உதவி செய்ய வேண்டுமானால் மனிதர்கள் நோய்த் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை இந்த பக்தர்கள் உணரும் அறிவை அவர்கள் தாமாக வளர்தது கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த அறிவை அவர்கள் நம்பும் கடவுள் கொடுக்க போவதில்லை. நோய் தொற்றில் இருந்து மனிதரை பாதுகாக்கும் சக்தியும் அவர்கள் தூக்கி திரியும் கடவுளுக்கு இல்லை. 

Brian Green என்ற பௌதீகவியலாளரின் "Until the End of time" என்ற புத்தகம் நான் அண்மையில் வாசித்த அருமையான நூல்களுள் ஒன்று. கடவுள் நம்பிக்கை, அல்லது மத நம்பிக்கை எவ்வாறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களைக் காத்து, கூர்ப்பிற்கு வழி வகுத்தது என்று விளக்கியிருக்கிறார்.

ஒரு மனிதக் கூட்டம் கடவுள் என்பதை நம்பி ஒரு குகைக்குள் அல்லது மறைவிடத்தில் கூடிப் பாதுகாப்பாக இருக்க, அந்த நம்பிக்கை இல்லாத தனியன்கள் வெளியே சுற்றப் போய் விலங்குகள் அல்லது இயற்கை இடரினால் இறந்து போகின்றன. ஒரு கட்டத்தில் கடவுள் நம்பிக்கை இருக்கிற மனிதர்களுக்குத் தான் பாதுகாப்பான வாழ்வு என்ற புரிதல் வந்த போது, அடுத்த தலைமுறைகள் எல்லாமே கடவுள் நம்பிக்கையோடு வளரும் எச்சங்களாக ஆகிப் போயினவாம்! இப்படித் தான் கடவுள் நம்பிக்கை எம்மிடையே கூர்ப்போடு சேர்ந்து வளர்ந்திருக்கலாம் என்கிறார்.

தற்போது தலைகீழ் நிலைமை: கடவுள்/மத நம்பிக்கை மிகுதியானோர் மொக்குத் தனமாக வெளியே போய் கொரனாவால் பலியாகிப் போக, வீட்டிற்குள் பாதுகாப்பாக இருப்போர் தப்பி , அதனால் அடுத்த தலைமுறையை உருவாக்கப் போகின்றனர்.

"கடவுள் இருக்கிறாரா தெரியாது, ஆனால் கடவுள் உலகின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் அவசியமில்லை!" என்ற ஸ்ரிபன் ஹாவ்கின்சின் கருத்து இப்போது மிகவும் பொருந்துகிறது!   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.