Jump to content

ஆண்டர்ஸனில் இருந்து ராகுல் வரை 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
D9CE2526-EDDD-4AF9-B221-C7FC7C867597.jpeg
 
F7611124-00F1-4A38-8A54-CD352C882982.jpeg
 

 

லார்ட்ஸில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் நான் மிகவும் ரசித்த ஒரு விசயம் ஆண்டர்ஸனின் பந்து வீச்சு. அதற்கு அடுத்து ராகுலின் ரசிக்கத்தக்க, ரொம்ப ஸ்டைலான மட்டையாட்டம்.

 

 1 ) ஆண்டர்ஸன் மிதவேக வீச்சாளர்களிடையே ஒரு உன்னதமான கலைஞன் என்று சொல்லலாம். அவரால் வழக்கமான seam up பந்து வீச்சில் ஈடுபட முடியும். குளிரும் மந்தமான வானிலையும் கொண்ட காலைப் பொழுதில், மாலை வேளையில் நான்காவது ஸ்டம்பில் போட்டு ஸ்விங் பண்ண முடியும். பகற்பொழுதில் ஐந்தாவது ஸ்டம்பில் பொறுமையாக வீசி ரன்களை கட்டுப்படுத்த முடியும். பேட்ஸ்மேனை வைடாக செல்லும் பந்தை துரத்த வைத்து அவுட் ஆக்க முடியும். உள்ளே வெளியே என்று இறுக்கமாக பந்தை வீசி எல்.பி.டபிள்யூ முறையில் தூக்க முடியும். இந்தியா போன்ற வறட்சியான ஆடுதளத்தில் பந்தை ஒரு பக்கம் சொரசொரப்பாக தக்க வைத்து சற்று கூடுதல் வேகத்தில், சரியான நீளத்தில் வீசி ரிவர்ஸ் பண்ணவும் முடியும்.

 இப்போது நடந்து வரும் ஆட்டத்தொடரில் அவர் scrambled seam பந்து வீச்சிலும் கலக்குகிறார். பந்து உள்ளே வருவது போல மட்டையாளனுக்கு போக்கு காட்டி அதை அழகாக வெளியே எடுத்து சென்று விக்கெட் வீழுத்துகிறார். இது போக இரண்டாவது டெஸ்டில் ஆடுதளம் மிக தட்டையாக, பவுன்ஸ் இல்லாமல் இருக்க (அவ்வப்போது தட்படவெட்பம் காரணமாக ஸ்விங் மட்டுமே ஆக) ஆண்டர்ஸன் வெரைட்டியில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் - ஒரே ஓவரில் ஐந்து விதமான பந்துகளைக் கூட வீசுகிறாரே இவர் என மஞ்சிரேக்கர் வர்ணனையில் மெச்சினார். அது உண்மை தான் - குறிப்பாக பந்து ஸ்விங் ஆகாத போது ஆண்டர்ஸன் பந்தின் வெளிப்படும் இடமான point of releaseஐ மாற்றுவது அபாரமாக உள்ளது. சில பந்துகளை கிரீஸில் வைடாக ஓடி வந்து அகலமான கோணத்தில் இருந்து வெளியிடுகிறார். அப்படி வரும் பந்துகள் ஒன்று உள்ளே வரும். அல்லது நான்காவது ஸ்டம்பில் விழுந்து நேராக செல்லும். முன்பு தென்னாப்பிரிக்க வேகவீச்சாளர் மெக்கயா நிட்டினி இதையே தன் ஒரே வித்தையாக வைத்திருந்தார். நேராக பவுன்ஸ் ஆகிப் போகும் பந்தை வைத்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க வைப்பார். ஆண்டர்ஸனும் அப்படித்தான் புஜாரா, ரஹானே இருவரையும் வீழ்த்தினார். அப்படித்தான் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும் எடுத்தார்.

 

ஆண்டர்ஸனின் பந்து உள்ளே வருவதாக ஏற்படும் தோற்றம் காரணமாக மட்டையாளர்கள் இயல்பாகவே ஸ்டம்புக்கு குறுக்கே வந்து விடுகிறார்கள். நான்காவது ஸ்டம்பே தமது மூன்றாவது ஸ்டம்ப் என ஒரு தோற்றப்பிழை ஏற்பட வைடான பந்துகளை விரட்டி சென்று தடுத்தாட முயன்று ஸ்லிப்புக்கு கேட்ச் கொடுக்கிறார்கள். இத்தகைய மட்டையாளர்கள் ஏற்கனவே மோசமான ஆட்டநிலையில் இருப்பவர்கள் என்பதை கவனிக்க வேண்டும். தம்முடைய கால்பாடத்தின் போதாமையை ஈடுகட்ட அவர்கள் மூன்றாவது ஸ்டம்பில் நின்று கொள்ள விழைகிறார்கள். அதுவே அவர்களுக்கு எமனாகவும் முடிகிறது. (இந்த உத்தியை பிற இங்கிலாந்து வேகவீச்சாளர்களும் முயன்றார்கள், ஆனால் யாராலும் ஆண்டர்ஸன் அளவுக்கு கச்சிதமாக முன்னெடுக்க இயலவில்லை.)

 

 இந்த back and across கால்பாடத்தின் ஒரு பிரச்சனை off பகுதியில் சரளமாக ஆடவும், pull ஷாட்டுகள் ஆடவும் அது தடையாகிறது, நீங்கள் முழுக்க கால்பக்கம் பந்தை தட்டி விட்டு ஓடும் படி உங்களை கட்டுப்படுத்துகிறது என்பது. கோலி, புஜாரா, ரஹானே என மத்திய வரிசை வீரர்கள் ஏனோ இந்த கையைக் கட்டி வாயைக்கட்டி ரன் அடிக்கும் பாணியை பயன்படுத்தி அதனால் நஷ்டமடைகிறார்கள். வி.வி.எஸ் லஷ்மண் குறிப்பாக இதை கோலி கைவிட வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

 

லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கோலி நன்றாகவே ஆடினாலும் அவருக்கு ஒரு சரளத்தன்மை இருக்கவில்லை. குறிப்பாக உள்ளே வரும், கால்பக்கமாய் சரியும் பந்தை கோலி முன்பு பின்னங்காலுக்குப் போய் அபாரமாக டைம் பண்ணி பவுண்டரிகளாக விளாசுவார். ஆனால் இந்த இன்னிங்ஸில் அவர் அத்தகைய பந்துகளை தொடவே இல்லை. கவர் டிரைவ் சுலபத்தில் அடிக்க முடியக் கூடிய off ஸ்டம்பில் விழும் முழுநீளப் பந்துகளைக் கூடத் தொடவில்லை. முழுநீளத்தில் நேராக உள்ளே வரும் பந்துகளை மிட் விக்கெட், மிட் ஆனுக்கு அடிப்பதைத் தவிர அவரால் வேறேதும் பண்ண முடியவில்லை. அதாவது வீட்டின் கதவை ஆணிகள் அடித்து மூடிவிட்டு உடம்பை கஷ்டப்பட்டு ஜன்னல் வழி நுழைத்து தினமும் வெளியே போய் வருவதைப் போன்றது இது. யார் இந்த கால்பாடத்தை நம் இந்திய மட்டையாளர்களுக்கு பரிந்துரைப்பது எனத் தெரியவில்லை. முன்பு மே.இ தீவுகளில் நடந்த டெஸ்ட் தொடரில் துவக்க மட்டையாளராக களமிறங்கிய ராகுல் இதே போல குறுக்குமறுக்காக கால்பாடம் கொண்டாடி ரொம்பவே சொதப்பினார். அதோடு பாயிண்ட் பகுதியில் இருந்து மட்டையை சுழற்றி உள்ளே கொண்டு வந்து தடுத்தாடும் ஒரு புதிய ஸ்டைலை முயன்று பார்த்து ரொம்ப கொடூரமாக அவுட்டானார். அதன் பிறகு அணியில் தன் இடத்தை இழந்த நிலையில் ராகுல் இந்த குழப்பங்களை விட்டொழித்து இப்போது முன்னுக்கும் பின்னுக்குமாக பந்தின் நீளத்துக்கு ஏற்ப நகர்கிற கால்பாடத்தை பின்பற்றுகிறார். அதனாலே அவர் இப்போது நடந்து வரும் ஆட்டத்தொடரில் அவ்வளவு சரளமாக ஆடுகிறார். இன்னொரு பக்கம் ரோஹித் தன் கால்பாடத்தைப் பற்றி ரொம்ப கவலைப்படாமல் வெளியே விழும் பந்துகளை விடுவதில் மட்டும் கவனம் செலுத்து மிச்ச பந்துகளை அடித்தாடுகிற எளிமையான பாணியை பின்பற்றுகிறார். மட்டையாட்டத்தைப் பொறுத்தமட்டில் கால்பாடமானது இப்படி ரன் அடிப்பதற்குத் தோதாக இருக்க வேண்டுமே ஒழிய, அவுட் ஆகக் கூடாது ஆண்டவரே எனும் கணக்கில் இருக்கக் கூடாது. அதுவும் இயல்பிலேயே அப்படியான கால்பாடம் கொண்டவர்கள் என்றால் பிரச்சனை இல்லை, கோலி, ரஹானேவைப் போன்ற இயல்பான அடித்தாடும் வீரர்கள் மாதமொரு முறை தம் ஸ்டைலை மாற்றுவது அபத்தம்.

 

என்னுடைய ஊகம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பெறுகிற ரஹானே மனதளவில் பலவீனமாக மாறிப் போயுள்ளார். அவருக்கு தன் இடம் குறித்த கவலை அதிகமாகி உள்ளது. ஆக, அவர் ஒவ்வொரு இன்னிங்ஸில் சொதப்பும் போதும் எப்படியாவது ரன் அடிக்க வேண்டும் எனும் பதற்றம் மிக்கவராகிறார். ரஹானேவுக்கு என்றுமே உறுதியான முன்னங்கால் பாடம் இல்லை இருந்ததில்லை. ஆகையால் ஷார்ப்பாக உள்ளே வந்து முழுநீளப்பந்துக்கு அவர் எல்.பி.டபிள்யூ ஆக வாய்ப்பதிகம். அதைத் தடுக்க அவர் வலது பின்னங்காலை நகர்த்தி பந்து உள்ளே வரவிட்டு தடுத்தாடவோ நேராக டிரைவ் பண்ணி ரன் அடிக்கவோ வேண்டும். ஆனால் ரஹானேவுக்கோ முதல் முப்பது பந்துகளுக்கு கால்கள் அசைவதே இல்லை. இதன் விளைவாக off ஸ்டம்புக்கு வெளியே போய் நின்று overcompensate பண்ணுகிறார் - சமையலில் உப்பு கம்மி என்று சொல்லும் போது கூடுதலாக அள்ளிப் போட்டு கரிப்பது போல. அடுத்து, நேராக செல்லும் பந்தை விட முடியாது அதை ஸ்லிப்புக்கு தட்டவும் ஆரம்பிக்கிறார். எப்படியாவது பந்தை ரன்னுக்கு அடிக்க வேண்டும் எனும் ஆவேசமே இதற்குக் காரணம் என வி.வி.எஸ் லஷ்மண் கூறுகிறார்.

 

கோலி மோசமான ஆட்டநிலையில் இல்லை. ஆனால் அவருக்கு வேறொரு சிக்கல் உள்ளது - கால்சுழல் பந்துகளை அவர் முன்னங்காலை நகர்த்தி விரட்டுவதில்லை. குறிப்பாக டி-20 போட்டிகளின் தாக்கம் காரணமாக, கால்பாடத்தை சிக்கனமாக்கி off பக்கத்திலும் மிட்விக்கெட்டுக்கு மேலாக பெரிய ஷாட்டுகளை அடிக்க முயன்றதன் விளைவாக, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சுழலுக்கு எதிராக அவருடைய கால்பாடம் அநேகமாக இல்லாமல் ஆகி விட்டது. ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பாவின் கூக்ளிக்கு அவர் மிகவும் திணறியதை, சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் மோயின் அலியின் offbreak பந்தை கால்பாடமே இல்லாமல் கவர் டிரை பண்ண முயன்று பவுல்ட் ஆனதையும் பார்த்தோம். அதன் பிறகு அவர் இப்போது மோயின் அலியின் மோசமான பந்துகளை அடிக்கக் கூட திணறுகிறார். பொதுவாக சுழலர்களுக்கு எதிராக மோசமான கால்பாடம் கொண்ட மட்டையாளர்கள் ஸ்விங் பந்து வீச்சையும் கையாள சிரமப்படுவார்கள். அதுவே இப்போது கோலிக்கு இங்கிலாந்தில் நிகழ்கிறது. மற்றபடி பந்தை அடிப்பதில் அவருக்கு இப்போது பிரச்சனை இல்லை. மாறாக தன் குறைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதை சரி செய்வதற்காக overcompensate பண்ணுகிற பிரச்சனை கோலிக்கு உண்டு. அதுவே இங்கிலாந்தில் அவர் செய்து வரும் சர்க்கஸ் வித்தைகளின் காரணம். இதை விட்டு விட்டு முன்னர் போல காலை முன்னே வைக்க வேண்டிய முழுநீளப்பந்துக்கு மட்டும் முன்னே வைத்து துணிச்சலாக விரட்டத் தொடங்கினால் கோலியால் சுலபமாக சதம் அடிக்க முடியும். அவருடைய பிரச்சனை பலவிதமான ஆட்டவடிவங்களுக்கு, சூழல்களுக்கு தன்னை தகவமைக்க முயல்வதனால் நூல் கண்டுக்குள் விழுந்த பூச்சி வெளியேறும் பொருட்டு அதை மேலும் சிக்கலாக்கி, கைகால்கள் மாட்டிக்கொண்டது போல தன் ஆட்டத்தை தானே குழப்பிக் கொண்டது தான்.

 

புஜாராவைப் பொறுத்தமட்டில் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட முட்டிக் காயம் அவருடைய முன்னங்கால் பாடத்தை அனேகமாக இல்லையென்றாக்கி விட்டது. சுழலர்களை இறங்கி வந்து அடிக்கும் போது மட்டுமே புஜாரா கால்களை பயன்படுத்துகிறார். இல்லாத போது குழாயடி சண்டை நடக்கையில் மனைவியின் தோளுக்குப் பின்னால் மறைந்து நின்று எட்டிப் பார்க்கும் மாமாவைப் போன்றே ஆடுகிறார். ஆஸ்திரேலியாவில் அவர் முதல் ரன்னை அடிக்கவே ஐம்பது பந்துகளுக்கு மேல் எடுத்துக் கொண்டது உங்களுக்கு நினைவிருக்கும். சில நேரம் 100 பந்துகளுக்கு மேல் ஆடி 10 ரன்கள் எடுப்பார். ஏனென்றால் முன்னங்காலில் போய் ஒரு முழுநீளப்பந்தை விரட்டும் போது வேகவீச்சாளர் அடுத்தடுத்த பந்துகளை short of the lengthஇல் வீசுவார்கள். அப்போது அவற்றை பின்னங்காலுக்குப் போய் வெட்டியோ punch செய்தோ ரன் அடிக்க முடியும். ஆனால் புஜாரா இந்த ஷாட்களை முழுக்க தவிர்த்து விடுகிறார். ஏனென்றால் கால்பாடம் இல்லாததால் தான் உடம்புக்கு வெளியே கைகளை போகும்படி எம்பி எம்பி அடிக்க நேரிடும், பின்னால் எட்ஜ் கொடுப்போம் என பயப்படுகிறார். அதே போலத் தான் உள்ளே வரும் பந்து அவருக்கு எமனாகிறது. ஆஸ்திரேலியாவில் கூடுதலாக பேட் கம்மின்ஸ் வீசிய ஆறாவது ஸ்டம்பில் இருந்து நான்காவதுக்கு வரும் இன் கட்டர்களுக்கு புஜாரா தொடர்ந்து பின்னால் எட்ஜ் கொடுத்து அவுட்டாகி வந்தார். இதை அவர் இறுதிப்போட்டிகளில் தன் மன உறுதியால் கடந்து சென்றாலும், அடிப்படையான தொழில்நுட்ப சிக்கல் போகவே இல்லை. இங்கிலாந்தில் இந்த டெஸ்ட் தொடரில் புஜாரா தான் சந்திக்கும் முதல் இருபது வேகப் பந்துகளை விரட்டுவதற்கு முயல்கிறார். இது ஒரு நல்ல முன்னேற்றம். விளைவாக அவருடைய கால்பாடமும் மேம்படுகிறது. ஆனால் ஆண்டர்ஸனைப் பார்த்ததும் பதறி மீண்டும் “மனைவியின் தோளுக்குப் பின்னால் போய்” தடுத்தடப் பார்க்கிறார். சுலபத்தில் அவுட்டும் ஆகிறார்.

 

இவர்கள் மத்தியில், ராகுல் தான் சிறப்பான கால்பாடத்தை கொண்டிருக்கிறார். அதுவும் வைடான point of release இல் இருந்து உள்ளே வரும் பந்தை அவர் தடுத்தாடும் போதோ விடும் போதோ மற்றொரு சிறப்பான காரியத்தை பண்ணுகிறார் - மட்டையை உடம்புக்கு முன்னால் வைத்துக் கொள்கிறார். ஆகையால் பந்து நேராக சென்றாலும் எட்ஜ் கொடுக்க வாய்ப்பு மிக மிக சொற்பமே. அதனாலே ராகுலை தடுமாற வைக்க ஆண்டர்ஸனாலே முடியவில்லை.

 

 

http://thiruttusavi.blogspot.com/2021/08/blog-post_14.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.