Jump to content

அண்ணை, அண்ணா, அண்ணாச்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை, அண்ணா, அண்ணாச்சி

அண்ணை, அண்ணா, அண்ணாச்சி
 

— வேதநாயகம் தபேந்திரன் —  

”அண்ணை, அண்ணா, அண்ணாச்சி” இந்தச் சொற்கள் எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த சொற்கள்.  

முஸ்லீம் மக்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் அண்ணா போன்ற உறவு முறைச் சொற்களைப் பாவிப்பதில்லை. 

பாரசீக அரபுவழி வந்த ”நானா” மற்றும் சில இடங்களில் “காக்கா” என்ற சொற்களையே உரையாடலின் போது பாவிக்கின்றனர். 

வயதில் மூத்த ஒரு ஆணை அண்ணா போன்ற சொற்களைக் கொண்டு அழைப்பது தான் தமிழ் பாரம்பரியம். ஒரு குடும்பத்தில் 5 ஆண் பிள்ளைகள் இருந்தால் வயதில் மூத்தவர்களை அண்ணா என்ற சொல் கொண்டு அழைப்பார்கள். 

மூத்தவரைப் பெரியண்ணா எனவும் அடுத்தவரை இளைய அண்ணா எனவும், மூன்றாமவரை சின்னண்ணா எனவும், நாலாமவரை ஆசையண்ணா எனவும் கடைசித் தம்பி அழைக்கும் குடும்பங்களும் உண்டு. குடும்பத்திற்குக் குடும்பம், ஊருக்கு ஊர் மாறுபட்ட முறைகளில் இதனை அழைப்பார்கள். 

திருகோணமலையில் சில இடங்களில் அண்ணன் என அழைக்கும் வழக்கமும் உண்டு.  

மட்டக்களப்புப் பிரதேசத்தில் அண்ணாச்சி என அழைக்கும் கிராமிய வழக்கம் கூடுதலாக இருப்பதை அவதானிக்கலாம். 

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் அண்ணை, அண்ணா எனஅழைக்கும் வழக்கம் உள்ளது. 

விடுதலைப் போராட்ட இயக்கங்களை எடுத்துக் கொண்டால் ”அண்ணை, அண்ணா” என அழைக்கும் வழக்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டுமே முழுமையாக இருக்கிறது.  

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்டத்திற்குப் புறப்பட்ட ஆரம்பகாலத்தில் அவரை விட வயது கூடுதலாக உள்ளோரே அதிகமாக போராட்டத் தலைவர்களாக இருந்தார்கள். அதனால் அவரைத் ”தம்பி” என அழைத்தார்கள்.

 

08A75C73-B286-483C-9327-BF8C0E90FA83.web

பின்னாளில் அவர் பலமான தலைவராக உருவெடுத்த போது அவரை அவரது இயக்க உறுப்பினர்கள் ”அண்ணை” என அழைக்கும் வழக்கம் உருவானது. இடதுசாரிச் சிந்தனைகள் இந்த அமைப்பில் முதன்மைப்படுத்தப்படவில்லை. இதனால் போராட்ட அமைப்புகளின் வழக்கமான சொல்லாடலான”தோழர்” என்ற சொல் புலிகள் அமைப்பில் புழக்கத்தில் வரவில்லை. 

அதே வேளை முதன்மைமிக்க தளபதிகளை விடுதலைப் புலிகள் ”அம்மான் (மாமா)” என அழைக்கும் வழக்கமும் உள்ளது. பொன்னம்மான், பொட்டம்மான், சொர்ணம்மான், கருணா அம்மான் போன்றவர்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். 

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF),  ஈழப் புரட்சி அமைப்பு (EROS), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOT), தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT), தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (PLFT) ஆகிய இயக்கங்கள் தமது உறுப்பினர்களைத் தோழர் என மட்டுமே அழைத்தார்கள். 1990இன் பின்பாக ஈபிஆர்எல்வ் அமைப்பிலிருந்து பிரிந்து உருவான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) அமைப்பும் தனது உறுப்பினர்கள் யாவரையும் தோழர்கள் என அழைக்கும் முறையையே கடைப்பிடிக்கின்றனர். 

இந்த அமைப்புகள் கம்யூனிஸ்ட் கட்சிகள்போல வழிவந்த இடதுசாரிக் கொள்கைகளை உடைய அமைப்புகள் ஆதலால் ”தோழர்” என அழைக்கும் முறையைக் கடைப்பிடித்தார்கள்.  

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) இயக்கத்தில் உயர்மட்ட உறுப்பினர்களைச் சிறியண்ணை, தாஸ்அண்ணை, பொபி அண்ணை, செல்வமண்ணை என அழைத்தார்கள். 

கீழ் மட்ட உறுப்பினர்கள் தமக்குள் தோழர்கள் என அழைத்தார்கள். புளொட் அமைப்பில் அண்ணா முறைகள் இருந்ததாகச் சொல்வோரும் உண்டு. 

சிங்களத்தில் ஐயா என்றால் அண்ணா என்ற கருத்து உள்ளது. 1980களில் அரச படையினர் சுற்றிவளைப்புகளை நடத்தி போராளிகள் என்ற சந்தேகத்தில் இளைஞர்களைக் கைது செய்வார்கள். பிடிபட்ட இளைஞர்களை அடித்த போது ”ஐயா அடிக்காதியுங்கோ” எனக் கதறி அழுதார்கள். இவன் என்னை அண்ணா என்று அழைக்கிறானே எனக் கோபம்கொண்டு படையினர் மேலும் அடித்தார்களாம். (சிங்களத்தில் ஐயே என்பது அண்ணன் என்று பொருள்.) 

அண்ணமார் என்பது ஒரு கிராமிய குலதெய்வம். குறித்த ஒரு சமூகப்பிரிவினர் இத் தெய்வத்தைத் தமது குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதிலும் ஒரு அண்ண வருகிறது. கருப்பண்ண சாமி என்பதும் தமிழக குலதெய்வம். 

”அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது” இது ஒரு பழமொழி. இதுபோல அண்ணனைக் குறிக்கும் பழமொழிகள் பல இருக்கலாம். 

” அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ……” 

”அண்ணன் காட்டிய வழியம்மா ….” 

”அண்ணன் என்ன தம்பியென்ன சொந்தமென்ன பந்தமென்ன…….” என்பது போல அண்ணனைக் குறிக்கும் பாடல்கள் பல சினிமாவில் உள்ளன. 

அண்ணாமலை, பெரியண்ணன், அண்ணாத்த ….இப்படியே சினிமாப் படங்களின் தலைப்புகளிலும் அண்ணா எட்டிப் பார்க்கின்றார். அண்ணன் தங்கை உறவுக்குப் பேர் போன படங்களில் சிவாஜியின் பாசமலர் பிரபலமானது.  

தமது பெயர்களில் ”அண்ணாச்சாமி, அண்ணாத்துரை” என அண்ணாவைக் கொண்டுள்ளனர்.  

தமிழக முதலமைச்சராக 1967இல் சீ.என்.அண்ணாத்துரை தெரிவானார். இவர் அறிஞர் அண்ணா என்ற பெயரில்தான் அழைக்கப்படுகின்றார். தமிழகத்தின் சென்னையில் அண்ணாநகர் எனும் இடம் உள்ளது. அதுபோல அண்ணாசாலை எனும் பெருந்தெருவும் பிரபலமானது. 

 

 

74208002-47CB-41F6-A3AF-216D9E392C94.jpe

யாழ்ப்பாணம் இணுவிலில் உற்பத்தியாகி உலகப் பிரபலம் பெற்ற அண்ணா கோப்பி, அண்ணா தயாரிப்புகளிலும் அண்ணா வருகிறது.   

அண்ணனைக் குறிக்கும் நாட்டார் பாடல்களும் பல புழக்கத்தில் உள்ளன.  

அரச அலுவலகங்களில் சில உயரதிகாரிகள் தம்மிடம் பணி புரியும் வயதுக்கு மூத்த அதிகாரிகளுக்கு அவர்களது வயது மூப்பை மதித்து அண்ணை என மதிப்பாக அழைப்பார்கள். (இந்த நடைமுறை இலங்கையில் மட்டும்தான். இந்தியாவில் அந்த வழக்கம் கிடையாது.) 

சிலரோ தனது தகப்பன் வயதிலுள்ள உத்தியோகத்தரைக் கூட ஆணவத்துடன் பெயர் சொல்லி அழைத்துக்கொள்வார்கள்.  

ஒரு பிரச்சினையுமில்லை. ஓய்வு பெற்ற பின்பாக அண்ணா என அழைத்த அதிகாரி மதிப்பாக வாழ்வார். ஆணவத்துடன் நடந்தோர் சமூகத்தில் செல்லாக் காசாகப் போவார்கள். அவ்வளவு தான். 

இன்னும் சில கோமாளி உயரதிகாரிகள் தமக்குக் கீழ் பணியாற்றும் வயது மூத்த, இளைய உத்தியோகத்தர்கள் யாவரையும் அண்ணா, அக்கா என அழைத்துக்கட்டுப்படுத்தும் திறனை இழந்து போவார்கள். 

பல்கலைக்கழகத்தில் சக மாணவன் எத்தனை வயது மூப்பென்றாலும் கூட அண்ணா என்று அழைக்க மாட்டார்கள். அங்கு மச்சான் என அழைக்கும் ஒரு உறவு உள்ளது.  

ஆனால் பாடசாலைகளில் ஒரு வயது கூடிய சிரேஸ்ட மாணவனைக் கூட அண்ணா எனத் தான் அழைப்பார்கள். 

உறவு முறைகளில் அண்ணையக்கா, அண்ணையம்மா, அண்ணை மாமா, அண்ணியக்கா என அழைக்கும் தன்மைகள் குடும்பத்திற்குக் குடும்பம் வேறுபடும். 

வயது மூத்தோரை அண்ணை என்ற சொல்லுடன் வழி வந்த உறவு முறையையும் கூறுவார்கள். சொந்த மச்சான், மச்சாளாக இருந்தாலும் சின்ன வயது முதல் அண்ணன் தங்கை போலப் பழகியவர்கள் பெரியவர்களானதும் திருமணம் செய்ய மறுத்தவர்களைக்கூடக் கண்டுள்ளேன். 

அண்ணன் கதைகள் பல இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். நண்பர்களே உங்களுக்குத் தெரிந்த சேதிகள் இன்னும் நிறைய இருக்கும். 

அதெல்லாம் இருக்கட்டும் 

அண்ணன் மனைவியை அண்ணி என அழைப்பார்கள். அப்படியாயின் தம்பியின் மனைவியைத் தண்ணி என அழைக்கலாமோ? 

விடை தெரிந்தோர் கூறுங்கள்.

 

https://arangamnews.com/?p=5934

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

அதெல்லாம் இருக்கட்டும் 

அண்ணன் மனைவியை அண்ணி என அழைப்பார்கள். அப்படியாயின் தம்பியின் மனைவியைத் தண்ணி என அழைக்கலாமோ? 

விடை தெரிந்தோர் கூறுங்கள்.

இந்த ஒரு லூசுக்கேள்வி கேக்கிறதுக்கு கட்டுரையாளர் எங்களை எங்கையெல்லாம் கூட்டிக்கொண்டு போய்  படம் காட்டிக்கொண்டு வாறார் பாத்தியளே?  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இந்த ஒரு லூசுக்கேள்வி கேக்கிறதுக்கு கட்டுரையாளர் எங்களை எங்கையெல்லாம் கூட்டிக்கொண்டு போய்  படம் காட்டிக்கொண்டு வாறார் பாத்தியளே?  🤣

அதை கடாசிவிடலாம் என்று யோசித்தேன்.😉

உண்மையில் தம்பி மனைவியை என்ன முறை கொண்டு அழைப்பார்கள்?

மச்சாள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

அதை கடாசிவிடலாம் என்று யோசித்தேன்.😉

உண்மையில் தம்பி மனைவியை என்ன முறை கொண்டு அழைப்பார்கள்?

மச்சாள்??

அண்ணியெல்லாம் இடையில் வந்தது என நினைக்கின்றேன்.

முன்னரெல்லாம் பெரிய மச்சாள்,சின்ன மச்சாள் ஆசை மச்சாள்,குஞ்சு மச்சாள் என நீண்டுகொண்டே போகும் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அண்ணை, அண்ணா, அண்ணாச்சி

அண்ணை, அண்ணா, அண்ணாச்சி
 

— வேதநாயகம் தபேந்திரன் —  

”அண்ணை, அண்ணா, அண்ணாச்சி” இந்தச் சொற்கள் எமது தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இரண்டறக் கலந்த சொற்கள்.  

முஸ்லீம் மக்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் அண்ணா போன்ற உறவு முறைச் சொற்களைப் பாவிப்பதில்லை. 

பாரசீக அரபுவழி வந்த ”நானா” மற்றும் சில இடங்களில் “காக்கா” என்ற சொற்களையே உரையாடலின் போது பாவிக்கின்றனர். 

வயதில் மூத்த ஒரு ஆணை அண்ணா போன்ற சொற்களைக் கொண்டு அழைப்பது தான் தமிழ் பாரம்பரியம். ஒரு குடும்பத்தில் 5 ஆண் பிள்ளைகள் இருந்தால் வயதில் மூத்தவர்களை அண்ணா என்ற சொல் கொண்டு அழைப்பார்கள். 

மூத்தவரைப் பெரியண்ணா எனவும் அடுத்தவரை இளைய அண்ணா எனவும், மூன்றாமவரை சின்னண்ணா எனவும், நாலாமவரை ஆசையண்ணா எனவும் கடைசித் தம்பி அழைக்கும் குடும்பங்களும் உண்டு. குடும்பத்திற்குக் குடும்பம், ஊருக்கு ஊர் மாறுபட்ட முறைகளில் இதனை அழைப்பார்கள். 

திருகோணமலையில் சில இடங்களில் அண்ணன் என அழைக்கும் வழக்கமும் உண்டு.  

மட்டக்களப்புப் பிரதேசத்தில் அண்ணாச்சி என அழைக்கும் கிராமிய வழக்கம் கூடுதலாக இருப்பதை அவதானிக்கலாம். 

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் அண்ணை, அண்ணா எனஅழைக்கும் வழக்கம் உள்ளது. 

விடுதலைப் போராட்ட இயக்கங்களை எடுத்துக் கொண்டால் ”அண்ணை, அண்ணா” என அழைக்கும் வழக்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் மட்டுமே முழுமையாக இருக்கிறது.  

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதப் போராட்டத்திற்குப் புறப்பட்ட ஆரம்பகாலத்தில் அவரை விட வயது கூடுதலாக உள்ளோரே அதிகமாக போராட்டத் தலைவர்களாக இருந்தார்கள். அதனால் அவரைத் ”தம்பி” என அழைத்தார்கள்.

 

08A75C73-B286-483C-9327-BF8C0E90FA83.web

பின்னாளில் அவர் பலமான தலைவராக உருவெடுத்த போது அவரை அவரது இயக்க உறுப்பினர்கள் ”அண்ணை” என அழைக்கும் வழக்கம் உருவானது. இடதுசாரிச் சிந்தனைகள் இந்த அமைப்பில் முதன்மைப்படுத்தப்படவில்லை. இதனால் போராட்ட அமைப்புகளின் வழக்கமான சொல்லாடலான”தோழர்” என்ற சொல் புலிகள் அமைப்பில் புழக்கத்தில் வரவில்லை. 

அதே வேளை முதன்மைமிக்க தளபதிகளை விடுதலைப் புலிகள் ”அம்மான் (மாமா)” என அழைக்கும் வழக்கமும் உள்ளது. பொன்னம்மான், பொட்டம்மான், சொர்ணம்மான், கருணா அம்மான் போன்றவர்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். 

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF),  ஈழப் புரட்சி அமைப்பு (EROS), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOT), தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT), தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (PLFT) ஆகிய இயக்கங்கள் தமது உறுப்பினர்களைத் தோழர் என மட்டுமே அழைத்தார்கள். 1990இன் பின்பாக ஈபிஆர்எல்வ் அமைப்பிலிருந்து பிரிந்து உருவான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) அமைப்பும் தனது உறுப்பினர்கள் யாவரையும் தோழர்கள் என அழைக்கும் முறையையே கடைப்பிடிக்கின்றனர். 

இந்த அமைப்புகள் கம்யூனிஸ்ட் கட்சிகள்போல வழிவந்த இடதுசாரிக் கொள்கைகளை உடைய அமைப்புகள் ஆதலால் ”தோழர்” என அழைக்கும் முறையைக் கடைப்பிடித்தார்கள்.  

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) இயக்கத்தில் உயர்மட்ட உறுப்பினர்களைச் சிறியண்ணை, தாஸ்அண்ணை, பொபி அண்ணை, செல்வமண்ணை என அழைத்தார்கள். 

கீழ் மட்ட உறுப்பினர்கள் தமக்குள் தோழர்கள் என அழைத்தார்கள். புளொட் அமைப்பில் அண்ணா முறைகள் இருந்ததாகச் சொல்வோரும் உண்டு. 

சிங்களத்தில் ஐயா என்றால் அண்ணா என்ற கருத்து உள்ளது. 1980களில் அரச படையினர் சுற்றிவளைப்புகளை நடத்தி போராளிகள் என்ற சந்தேகத்தில் இளைஞர்களைக் கைது செய்வார்கள். பிடிபட்ட இளைஞர்களை அடித்த போது ”ஐயா அடிக்காதியுங்கோ” எனக் கதறி அழுதார்கள். இவன் என்னை அண்ணா என்று அழைக்கிறானே எனக் கோபம்கொண்டு படையினர் மேலும் அடித்தார்களாம். (சிங்களத்தில் ஐயே என்பது அண்ணன் என்று பொருள்.) 

அண்ணமார் என்பது ஒரு கிராமிய குலதெய்வம். குறித்த ஒரு சமூகப்பிரிவினர் இத் தெய்வத்தைத் தமது குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இதிலும் ஒரு அண்ண வருகிறது. கருப்பண்ண சாமி என்பதும் தமிழக குலதெய்வம். 

”அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது” இது ஒரு பழமொழி. இதுபோல அண்ணனைக் குறிக்கும் பழமொழிகள் பல இருக்கலாம். 

” அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ……” 

”அண்ணன் காட்டிய வழியம்மா ….” 

”அண்ணன் என்ன தம்பியென்ன சொந்தமென்ன பந்தமென்ன…….” என்பது போல அண்ணனைக் குறிக்கும் பாடல்கள் பல சினிமாவில் உள்ளன. 

அண்ணாமலை, பெரியண்ணன், அண்ணாத்த ….இப்படியே சினிமாப் படங்களின் தலைப்புகளிலும் அண்ணா எட்டிப் பார்க்கின்றார். அண்ணன் தங்கை உறவுக்குப் பேர் போன படங்களில் சிவாஜியின் பாசமலர் பிரபலமானது.  

தமது பெயர்களில் ”அண்ணாச்சாமி, அண்ணாத்துரை” என அண்ணாவைக் கொண்டுள்ளனர்.  

தமிழக முதலமைச்சராக 1967இல் சீ.என்.அண்ணாத்துரை தெரிவானார். இவர் அறிஞர் அண்ணா என்ற பெயரில்தான் அழைக்கப்படுகின்றார். தமிழகத்தின் சென்னையில் அண்ணாநகர் எனும் இடம் உள்ளது. அதுபோல அண்ணாசாலை எனும் பெருந்தெருவும் பிரபலமானது. 

 

 

74208002-47CB-41F6-A3AF-216D9E392C94.jpe

யாழ்ப்பாணம் இணுவிலில் உற்பத்தியாகி உலகப் பிரபலம் பெற்ற அண்ணா கோப்பி, அண்ணா தயாரிப்புகளிலும் அண்ணா வருகிறது.   

அண்ணனைக் குறிக்கும் நாட்டார் பாடல்களும் பல புழக்கத்தில் உள்ளன.  

அரச அலுவலகங்களில் சில உயரதிகாரிகள் தம்மிடம் பணி புரியும் வயதுக்கு மூத்த அதிகாரிகளுக்கு அவர்களது வயது மூப்பை மதித்து அண்ணை என மதிப்பாக அழைப்பார்கள். (இந்த நடைமுறை இலங்கையில் மட்டும்தான். இந்தியாவில் அந்த வழக்கம் கிடையாது.) 

சிலரோ தனது தகப்பன் வயதிலுள்ள உத்தியோகத்தரைக் கூட ஆணவத்துடன் பெயர் சொல்லி அழைத்துக்கொள்வார்கள்.  

ஒரு பிரச்சினையுமில்லை. ஓய்வு பெற்ற பின்பாக அண்ணா என அழைத்த அதிகாரி மதிப்பாக வாழ்வார். ஆணவத்துடன் நடந்தோர் சமூகத்தில் செல்லாக் காசாகப் போவார்கள். அவ்வளவு தான். 

இன்னும் சில கோமாளி உயரதிகாரிகள் தமக்குக் கீழ் பணியாற்றும் வயது மூத்த, இளைய உத்தியோகத்தர்கள் யாவரையும் அண்ணா, அக்கா என அழைத்துக்கட்டுப்படுத்தும் திறனை இழந்து போவார்கள். 

பல்கலைக்கழகத்தில் சக மாணவன் எத்தனை வயது மூப்பென்றாலும் கூட அண்ணா என்று அழைக்க மாட்டார்கள். அங்கு மச்சான் என அழைக்கும் ஒரு உறவு உள்ளது.  

ஆனால் பாடசாலைகளில் ஒரு வயது கூடிய சிரேஸ்ட மாணவனைக் கூட அண்ணா எனத் தான் அழைப்பார்கள். 

உறவு முறைகளில் அண்ணையக்கா, அண்ணையம்மா, அண்ணை மாமா, அண்ணியக்கா என அழைக்கும் தன்மைகள் குடும்பத்திற்குக் குடும்பம் வேறுபடும். 

வயது மூத்தோரை அண்ணை என்ற சொல்லுடன் வழி வந்த உறவு முறையையும் கூறுவார்கள். சொந்த மச்சான், மச்சாளாக இருந்தாலும் சின்ன வயது முதல் அண்ணன் தங்கை போலப் பழகியவர்கள் பெரியவர்களானதும் திருமணம் செய்ய மறுத்தவர்களைக்கூடக் கண்டுள்ளேன். 

அண்ணன் கதைகள் பல இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். நண்பர்களே உங்களுக்குத் தெரிந்த சேதிகள் இன்னும் நிறைய இருக்கும். 

அதெல்லாம் இருக்கட்டும் 

அண்ணன் மனைவியை அண்ணி என அழைப்பார்கள். அப்படியாயின் தம்பியின் மனைவியைத் தண்ணி என அழைக்கலாமோ? 

விடை தெரிந்தோர் கூறுங்கள்.

 

https://arangamnews.com/?p=5934

 

 

உறவு முறையில் அவளை கொழுந்தி, கொழுந்தியாள் எனக் குறிப்பிடுகிறார்கள். வழக்கத்தில் அவளை அவ்வாறு அழைப்பதில்லை. பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்கள். அண்ணன், அக்காவை உறவு சொல்லியே பெரும்பாலும் அழைக்கும் நாம் தம்பி, தங்கையைப் பெரும்பாலும் பெயர் சொல்லித்தானே அழைக்கிறோம் ! 

மேற்சொன்னது ஒரு நகர்ப்புறத்தானின், குறிப்பாக நெல்லை நகரத்தானின் கூற்று. அவ்வளவே.

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

அண்ணன் மனைவியை அண்ணி என அழைப்பார்கள். அப்படியாயின் தம்பியின் மனைவியைத் தண்ணி என அழைக்கலாமோ? 

விடை தெரிந்தோர் கூறுங்கள்.

தம்பி என்பது தண்ணன் என இருந்திருந்தால் அவரது மனைவியை தண்ணி என அழைத்திருக்கலாம்.ஆனால் அப்படி இல்லையே.

அண்ணன்-அண்ணி

தண்ணன்-தண்ணி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
On 14/8/2021 at 05:58, குமாரசாமி said:

அண்ணியெல்லாம் இடையில் வந்தது என நினைக்கின்றேன்.

முன்னரெல்லாம் பெரிய மச்சாள்,சின்ன மச்சாள் ஆசை மச்சாள்,குஞ்சு மச்சாள் என நீண்டுகொண்டே போகும் 😁

ஐயா, இவையெல்லாம் யாரைக் குறிப்பிடும் என கொஞ்சம் விளக்கமாக தெரிவிப்பீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நன்னிச் சோழன் said:

ஐயா, இவையெல்லாம் யாரைக் குறிப்பிடும் என கொஞ்சம் விளக்கமாக தெரிவிப்பீர்களா?

ஆண் வழிகளில் வருபவர்கள் சகோதர/சகோதரி முறைகளாகவும்.....
பெண் வழிகளில் வருபவர்கள் மச்சான்/மச்சாள் முறைகளாகவும் இருக்கலாம்.

என்னைவிட பாஞ் ஐயா! சுவி ஐயா போன்றோர் இதற்கு  விளக்கமளித்தால் இன்னும் அழகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, குமாரசாமி said:

ஆண் வழிகளில் வருபவர்கள் சகோதர/சகோதரி முறைகளாகவும்.....
பெண் வழிகளில் வருபவர்கள் மச்சான்/மச்சாள் முறைகளாகவும் இருக்கலாம்.

என்னைவிட பாஞ் ஐயா! சுவி ஐயா போன்றோர் இதற்கு  விளக்கமளித்தால் இன்னும் அழகு.

நன்றி ஐயனே...

 

---------------------

@Paanch  & @suvy

உறவுகளே உங்களுக்கு //பெரிய மச்சாள்,சின்ன மச்சாள் ஆசை மச்சாள்,குஞ்சு மச்சாள்// இவற்றின் விளக்கம் தெரிந்தால் தெரிவித்துதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 

 

Link to comment
Share on other sites

ஆண் வழி, பெண் வழி.

இந்த வழியில் நிற்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவென்ன?

இந்த உறவை அறியத்தந்தால் அறிந்தவற்றைக் கொண்டு உதவலாம் என எண்ணுகிறேன்.🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Paanch said:

ஆண் வழி, பெண் வழி.

இந்த வழியில் நிற்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவென்ன?

இந்த உறவை அறியத்தந்தால் அறிந்தவற்றைக் கொண்டு உதவலாம் என எண்ணுகிறேன்.🤔

தாய் வழி, தந்தை வழி என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, Paanch said:

ஆண் வழி, பெண் வழி.

இந்த வழியில் நிற்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவென்ன?

இந்த உறவை அறியத்தந்தால் அறிந்தவற்றைக் கொண்டு உதவலாம் என எண்ணுகிறேன்.🤔

ஐயனே, அவை ஏராளன் ஐயன் கூறியது போன்று தாய் & தந்தை தான்...

ஆனால் நீங்கள் அவற்றை எல்லாம் விடுங்கள்... தாங்கள் பெரிய மச்சாள்,சின்ன மச்சாள் ஆசை மச்சாள்,குஞ்சு மச்சாள் போன்ற தாமறிந்த சொற்களுக்கான விளக்கத்தினை மட்டும் கொடுத்தால் போதுமானது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.