Jump to content

ஐரோப்பிய ஆதிக்கக் கப்பல் ஆட்டம் காண்கிறதா-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


ஐரோப்பிய ஆதிக்கக் கப்பல் ஆட்டம் காண்கிறதா-பா.உதயன்

சீனாவின் பெரும் அலையோடு மோதி மூழ்கிக்கொண்டிருகிறதா இருநூறு வருட கால ஐரோப்பிய அதிகார ஏகாதிபத்தியம். முழித்து விட்டது ஆசியாவில் படுத்திருந்த சிங்கம் ஒன்று. இப்போ வேட்டை ஆட ஆரம்பித்து விட்டது . கொஞ்சம் ஆடித்தான் போய்  இருக்கிறார்கள் ஐரோப்பியரும் அமெரிக்கரும். ஆசியாவில் இருந்து புறப்பட்ட றகன் ஒன்று அனைத்து உலக வேலிகளையும் அறுத்துக் கொட்டி கொழுத்து பெருத்து இருக்கிறது பொருளாதார பெருச்சாளி ஒன்று.

நெப்போலியன் சீனாவை பார்த்து சொன்னது போலவே ஆசியாவில் சிங்கம் ஒன்று உறங்கிக்கொண்டிருக்கிறது. அது முழிக்கும் போது உலகம் தாங்காது  “என்றான் Let China Sleep, for when she wakes, she will shake the world,” அதே போல் கொழுத்த பணக்கா ரர்கள் கூடும் G7 கூட்டத் தொடரிலே சீனாவின் றகனை எப்படி அடக்கலாம் என்றும் மூழ்கிக் கொண்டிருக்கும் தங்கள் கப்பலை எப்படி மீட்காலம் என்றே எல்லா அண்ணமாருக்கும் தலை இடி. எங்கள் பக்கத்து நாடு அண்ணன் இந்தியாவுக்குக் கூட.

சீனாவின் பட்டுப் பாதை (Belt and Road) திட்டம் இப்போ எட்டுத் திக்கும் சுத்தி வளைக்குது. எங்கு பார்த்தாலும் மண்டரின் மெல்ல முளைக்குது. என்ன செய்யப் போகிறது ஐரோப்பாவும் அமெரிக்காவும் இந்தியாவும். சீனாவால் அமைதியாகவும் சமாதானமாகவும் முன்னேற முடியுமா என்ற கேள்வியும் பல அரசியல் ஆய்வாளர்களால் பேசப்படுகிறது. சீனாவின் பட்டிப் பாதை அபிவிருத்தியை அதிகாரதின் ஆதிக்கம்( Authoritarian threats) என்று தலைமை நாடுகள் விமரிசித்து இருக்கிறது. 

அதே தலை இடி இப்போ இந்தியாவுக்கும். அதன் அருகில் இருக்கும் ஆசிய நாடுகள் பல சீனாவின் வலையில் அகப்பட்டுப் போயினர். அரசியல் பொருளாதார நலன்களிலே ஆடும் ஆட்டத்தில் யார் காயை சரியாக நகர்த்துகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்பது போல் (Geo politics like a chess game the player that make a right move wins). சீன இராஜதந்திரம் ஆட்டம் காண வைத்திருக்கிறது உலகை. அதிகாரத்தில் இருந்தவர்கள் எல்லாம் இப்போ ஆடிப்போய் இருக்கிறார்கள். அருகில் உள்ள நாடு ஸ்ரீ லங்காவிலும் சீனாவின் ஆதிக்கத்தினால் ஆசியாவின் சக்கி மிக்க நாடு இந்தியா என்ற வல்லாதிக்கத்தை இழப்பதோடு இதன் பாதுகாப்புக்கும் பூகோள அரசியல் மூலோபாய நகர்வுகளுக்கு இது இந்தியாவுக்கு பெரும் தலை இடியாக மாறியுள்ளது. இந்திய வெளி விவகார இராஜதந்திர நகர்வு பெரும் பின்னடைவை சந்தித்ததோடு இனி வரும் காலம் இந்தியா எவ்வாறான உறவை ஸ்ரீ லங்காவோடு பேணப்போகின்றது என்பதே இப்போதுள்ள எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. இந்தியாவின் பொருளாதார நலன் சார்ந்தும் ஈழத்தமிழர் இனப் பிரச்சினை சார்ந்தும் இந்தியாவின் இராஜதந்திரமும் சர்வதேச தொடர்பும் சறுக்கி இருப்பது இப்போ தெரிகிறது.

அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடப்புகளுக்கான கற்கை நெறியின் பேராசிரியரும் ஆன John Mearsheimer தனது நூலிலே பெரும் அதிகார சக்திகளின் அரசியல் சோகம் என ஆதிக்க சக்திகளின் இன்றைய உலக ஒழுங்கு சார்ந்து சீனா என்ற பெரிய சக்தியினால் சமாதானமாய் மீள் எழுச்சி கொள்ள முடியுமா என்று கேட்டிருக்கிறார். Can China rise peacefully? அப்படி சீனாவால் முடியாது என்றே அவரின் வாதம் இருக்கிறது. அயல் நாடு இந்தியாவோடு பகைத்துக் கொண்டு அதன் எல்லையை தாண்டி பல இந்திய பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டும் அதே வேளை ஜப்பான் உட்பட பல நாடுகள் சீனாவின் ஆதிக்கத்தை ஒரு பய உணர்வோடே பார்க்கின்றனர்  என்கிறார்.

அதே வேளை சீனாவால்  முன்னெடுக்கப்படுகின்ற ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான பாரிய பொருளாதார அவிவிருத்தியானது சீனா இவர்களுக்கு வழங்கும் கடன் அடிப்படையிலானதும் சீனாவுக்கே சொந்தமான ஓப்பந்தங்களின் மூலமாகவே செய்யப்படு கின்றன. இந்தக் கடனை வறிய நாடுகள் திருப்பி பெரும் வட்டியோடு செலுத்துவதில் பெரும் கஸ்ரங்கள் ஏற்படலாம். இது பெரும் பிரச்சினையை சீனாவுக்கும் இந்த நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தி விடலாம் என்றும் இப்படி பல காரணங்களை குறிப்பிட்டு கூறும் இவர் அமெரிக்கா பனிப் போர் உட்பட இரண்டாம் உலக மகா யுத்தம் என்றும் பல முக்கிய போர்களை வென்றது என்றும் இதன் இராணுவ பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்றும் வாதாடுகிறார் .

இதையே Joseph nye  என்ற அமெரிக்க ஹாவ்ர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்புகளுக்கான பேராசிரியரும் மென் சக்தி(Soft power) என்ற அரசியல் கேட்பாட்டை கூறியவருமான இவர் அமெரிக்காவை சீனாவால் வெற்றி கொள்ள முடியாது என்றே கூறுகிறார். இது இப்படி இருந்தபோதும் இவரது இந்த (soft power diplomacy) மென்வலு இராஜதந்திரத்தையே சீனா கையாள்கிறது. யுத்தம் செய்யாமலேயே பல நாடுகளை பாரிய அபிவிருத்தி என்ற போர்வையில் தம்வசப் படுத்தியுள்ளது.

இவை எல்லாவற்றிக்கும் மாறுபட்ட கருத்தை சிங்கப்பூரின் லீ குவான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியலுக்கான பேராசிரியரும் சிங்கப்பூருக்கான ஐ நாவின் முன்னை நாள் நிரந்தர பிரதிநிதியுமான Kishore Mahbubani தனது நூலான சீனா வென்றுவிட்டதா (Has China won) என்று தான் எழுதிய நூலில் ஆம் சீனா வென்றுவிட்டது 200 வருட ஐரோப்பி யர்களின் ஆதிக்க கப்பல் மூள்கிக்கொண்டிருக்கிறது என்றும் சீனாவால் அமைதியாகவும் சமாதானமாகவும் முன்னேற முடியும் என்றும் பல ஆதாரங்களை முன் வைத்து வாதிடுகிறார்.

எது எப்படி இருந்தாலும் சீனாவின் ஆதிக்கம் இன்று உலகம் பூராகவும் பரவி இருப்பது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிடையே ஒரு பயத்தை உண்டு பண்ணி இருப்பதை மறுக்க முடியாது. இதையே இறுதியாக கூடிய G 7 நாடுகளுக்கு இடையே பேசப்பட்ட முக்கிய விடியங்களாகவும் அதே வேளை சீனாவை எதிர்த்து இதன் பாரிய ஆதிக்க சவாலை எப்படி முறியடிக்கலாம் என்ற செயல் திட்டத்தை முன் வைத்துள்ளார்கள். சீனாவின் வலைக்குள் சிக்கிக் கொண்ட நாடுகளை எப்பிடி மீண்டும் தமது மென் வலுவை (Soft power) இராஜதந்திர மூலம் வென்றெடுக்கலாம் என்று சீனாவைப் போன்று இன்னமும் ஒரு பட்டுப் பாதை திட்டத்தை  7 நாடுகள் கூட்டத் தொடரிலில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு முக்கிய சர்வதேச கற்கை நெறிக்கான அமெரிக்கா பேராசிரியர் Francis Fukuyama வரலாற்றின் முடிவு (End of history) என்ற தனது நூலிலே அமெரிக்காவுக்கும் சோவியத் யூனினியனுக்கும் இடையிலான பனிப் போரின் முடிவின் பின் வரலாறு ஒன்று முடிவுக்கு வந்ததாகவும் இந்த முடிவின் மூலம் ஐரோப்பிய அமெரிக்கா திறந்த பொருளாதார முதலாளித்துவமே இறுதியில் வென்றதாகவும் தன் நூலிலே எழுதினார். ஆனால் இன்று அந்த வரலாற்று முடிவு வேறு ஒரு திசையில் பயணித்து சீனாவின் ஆதிக்கத்தோடு தொடர்கிறது என்று பார்க்கக் கூடியதாக உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள். 

இனி வரும் காலம் கலாச்சாரங்களுக்கு இடையிலான யுத்தமாக (Clash of Civilizations ) தொடரும் என்று மிகவும் முக்கியம் வாய்ந்த நூலான கலாச்சாரங்களின் யுத்தம் என்ற தனது நூலிலே Samuel Huntington என்ற அமெரிக்க அரசியல் பேராசிரியர் எழுதியிருந்தார். அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த நிக்ஸ்சன் காலத்தில் அவருக்கான ஆலோசகர்களில்  ஒருவராகவும் இருந்திருக்கிறார். ஐரோப்பிய கலாச்சாரமும் அமெரிக்க கலாச்சாரமும் ஆசியா சீனா கலாச்சாரத்தோடு மோதும் ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ளது போல் தான் ஆய்வாளர்க ளால் பேசப்போடுகிறது. அமெரிக்க ஐரோப்பிய கைகளில் இருந்து ஆதிக்க அரசியல் சீனாவின் கையில் மாறிப் போகுமா சீனாவின் பெரும் சக்தி வாய்ந்த தலைமையில் புதிய உலக ஒழுங்கில் பூமி சுற்றுமா என்று இனி வரும் காலங்கள் பதில் சொல்லும்.

-பா.உதயன் ✍️


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர்.
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.