Jump to content

ஊருக்கு போய்வந்த தம்பர்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.eiXSNKM87655jpg.jpg.df3a793a7e63521e845547e22dd63266.jpg

 

ஊருக்கு  போய்வந்த தம்பர்..!

***********************

ஊருக்கு போனபோது

ஒருபோத்தல் பியர் அடிக்க

பாருக்கு.. (Bar)

போன்னான் பாருங்கோ..

 

அங்கவந்த  சின்னம் சிறுசு 

பெருசுகள் எல்லாம்

தாள் தாளா எறிஞ்சு-பின்

தண்ணியில குளிச்சு 

 தவளுதுகள்.

 

ஒரு கூட்டம் உட்காந்து

காசுவந்த கதை சொல்லி

கதைச்சு பெருமைபேசி

கஞ்சா, புகையில என

புகையாக் கக்குதுகள்.

 

பிச்சைக்காஸ் அனுப்பினான் 

இவனுக்கு 

பின்னால போனவன்

கொட்டிக்குவிக்கிறானாம்

என தான் 

கொடுத்தனுப்பினவன் போல

வெட்டி 

முறிக்கிறான் ஒருத்தன்

 

விட்டுத்தொலை மச்சான் நீ

மற்றவனுக்கு போன் போடு

வந்தா மலை 

வராட்டி மயிர் என்றான்

மற்றவன்

 

காச்சல் இருமல்

என்றாலும்

கொஞ்சம் கடும் வருத்தம்

என்று சொல்லு

காஸ்வரும் என்றான் 

என்னொருவன்

 

இப்படி வெளிநாட்டுக்கசை

வேண்டும் முறைபற்றி 

அடுக்கடுக்காக

அலசி ஆராஞ்சு குடிச்சு

வெறிச்சு.. 

கும்மாளம் போடுதுகள்.

பாருங்கோ.

 

இங்க பார்த்தா..

வேற்று மொழி இடத்தில

வேற்றுக்கிரக 

வாசிபோல-பலர்

வீசாவுக்கும் அலைஞ்சு 

கொண்டு

இரவு பகலாய் கண்

முளிச்சு

வெய்யிலிலும் குளிரிலும்

சமையல்..

அடுப்பிலும் நெருப்பிலும்

அப்பிள் புடுங்கியும்

ஆர்பயன் புடுங்கியும்

தூசி துடைத்து

துப்பரவுப் பணிசெய்தும்

சுப்பர் மாக்கட்களிலும்

பெற்றோல் நிலையங்களிலும்

பிள்ளைகள்,பெரியவர்கள்

 படும் பாட்டை

எப்படித்தான் இவங்களுக்கு

சொல்லிப்புரியவைப்பேன்.

பாருங்கோ

 

போராட்டம் முடிஞ்சுது

போரில்லாத புனித பூமி

சொல்ல.. 

நல்லாத்தான் இருக்கு

 

போதை நிறைச்சு

பாதையை மாத்தினதும்

சிந்தனையை மறக்க

செய்த இந்த உத்தியும்

ஒருவித போர்தானே

பாருங்கோ.

 

அனால் ஒன்றை மாத்திரம்

உங்களுக்கு.. 

சொல்லுறன்  ஓடி ஓடி 

உழைக்கிற பணத்தை

ஊதாரியாய் 

செலவுசெய்வோர் என

அறிந்தால் 

உன் தாய்க்குகூட

பணம்அனுப்பாதே.

அங்கு பல உயிர்களை

காப்பாற்றலாம்.

 

 என்று சொல்லி  

ஒரு பெருமூச்சு விட்டார்

தம்பர்.

தொடரும்.. 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பர் உண்மையா ஊருக்கு வந்து போயிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை தொடருட்டும், பசுவூர்க் கோபி…!!!

கவிதை அழகு எனினும் கருப்பொருள் வலிக்கிறது…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல உண்மைகளை புட்டுப்புட்டு வைக்கிறார் தம்பர்.
கவிதை அழகு கோபி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பசுவூர்க்கோபி said:

அனால் ஒன்றை மாத்திரம்

உங்களுக்கு.. 

சொல்லுறன்  ஓடி ஓடி 

உழைக்கிற பணத்தை

ஊதாரியாய் 

செலவுசெய்வோர் என

அறிந்தால் 

உன் தாய்க்குகூட

பணம்அனுப்பாதே.

அங்கு பல உயிர்களை

காப்பாற்றலாம்.

இது தற்போதைய நிலவரம்.. ஆனால் உழைக்கிற பணத்தை ஊதாரியாகவும், ஊரில் வந்து விலாசம் காட்டாமலும் இருக்கவேண்டும் என தம்பர் கூறுவாரா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள நிலமையையும், அங்குள்ள நிலவரத்தையும் சொல்லியிருக்கிறீங்கள், அத்தனையும் ஏற்புடையவைதான் , இருந்தாலும் ...

8 hours ago, பசுவூர்க்கோபி said:

ஊதாரியாய் 

செலவுசெய்வோர் என

அறிந்தால் 

உன் தாய்க்குகூட

பணம்அனுப்பாதே.

வறுமையோடு போராடிய காலம் ஒரு றாத்தல் பாணை ஐஞ்சு பேருக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு நான் சாப்பிட்டுவிட்டன் என்று பொ்ய் சொல்லி வெறும் தேத்தண்ணி குடித்துவிட்டு பலநாள் படுத்த என் தாய் நினைவுக்கு வருகிறா.

காலங்கள் ஓடி வெளிநாடு வந்து காசு கையில் புழங்க தொடங்கியதும் ஆள் இல்லை, போயிட்டா.

பல இரவுகள் காய்ஞ்ச வயிறோடு படுத்த  தாய் இப்போ இருந்திருந்தா  கை நிறைய காசு கொடுத்து ஊதாரிதனமா செலவு செய் என்று சொல்லவேண்டும் என்று அடிக்கடி ஏங்குவேன்.

இனி என் வாழ்நாள் முடியும்வரை தீர்க்கமுடியாத துயர சுமை அது.

மற்றும்படி உங்கள் கவிதை விழிப்புணர்வானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

தம்பர் உண்மையா ஊருக்கு வந்து போயிருக்கிறார்.

உண்மைதான் நன்றிகள்.ஏராளன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பர் வந்து பார்த்த மிச்சத்தையும் சொல்லட்டும் ...........!  😁

கருத்துடன் கூறிய கவிதை நன்று கோபி.......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி.

இன்னும் நிறைய இருக்கு எடுத்து விடுங்ககோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2021 at 10:02, புங்கையூரன் said:

கவிதை தொடருட்டும், பசுவூர்க் கோபி…!!!

கவிதை அழகு எனினும் கருப்பொருள் வலிக்கிறது…!

நன்றிகள்  

On 15/8/2021 at 10:56, குமாரசாமி said:

பல உண்மைகளை புட்டுப்புட்டு வைக்கிறார் தம்பர்.
கவிதை அழகு கோபி

நன்றிகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2021 at 15:21, பிரபா சிதம்பரநாதன் said:

இது தற்போதைய நிலவரம்.. ஆனால் உழைக்கிற பணத்தை ஊதாரியாகவும், ஊரில் வந்து விலாசம் காட்டாமலும் இருக்கவேண்டும் என தம்பர் கூறுவாரா? 

நன்றிகள்.
 அடுத்த  பதிவில்  கட்டாயம்  சொல்லுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2021 at 16:23, valavan said:

இங்குள்ள நிலமையையும், அங்குள்ள நிலவரத்தையும் சொல்லியிருக்கிறீங்கள், அத்தனையும் ஏற்புடையவைதான் , இருந்தாலும் ...

வறுமையோடு போராடிய காலம் ஒரு றாத்தல் பாணை ஐஞ்சு பேருக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு நான் சாப்பிட்டுவிட்டன் என்று பொ்ய் சொல்லி வெறும் தேத்தண்ணி குடித்துவிட்டு பலநாள் படுத்த என் தாய் நினைவுக்கு வருகிறா.

காலங்கள் ஓடி வெளிநாடு வந்து காசு கையில் புழங்க தொடங்கியதும் ஆள் இல்லை, போயிட்டா.

பல இரவுகள் காய்ஞ்ச வயிறோடு படுத்த  தாய் இப்போ இருந்திருந்தா  கை நிறைய காசு கொடுத்து ஊதாரிதனமா செலவு செய் என்று சொல்லவேண்டும் என்று அடிக்கடி ஏங்குவேன்.

இனி என் வாழ்நாள் முடியும்வரை தீர்க்கமுடியாத துயர சுமை அது.

மற்றும்படி உங்கள் கவிதை விழிப்புணர்வானது.

உங்களின்  உண்மையான  உணர்வு  வலிதருகிறது.அவர்கள்  ஒரு  போதும்   ஊதாரித்தனமாக செலவு செய்யமாட்டார்கள்..
நன்றிகள் valavan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2021 at 20:51, suvy said:

தம்பர் வந்து பார்த்த மிச்சத்தையும் சொல்லட்டும் ...........!  😁

கருத்துடன் கூறிய கவிதை நன்று கோபி.......!  

 விரைவில் தொடருகின்றேன் நெஞ்சார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2021 at 00:50, நிலாமதி said:

பகிர்வுக்கு நன்றி.

இன்னும் நிறைய இருக்கு எடுத்து விடுங்ககோ .

விரைவில்  எழுதுகிறேன்.  நன்றிகள்  நிலாமதி  அக்கா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.