Jump to content

காபூலுக்குள் நுழைந்த தலிபான் கிளர்ச்சியாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காபூலுக்குள் நுழைந்த தலிபான் கிளர்ச்சியாளர்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகரை சுற்றி வளைத்து காபூல் மீது தலிபான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக அந் நாட்டின் உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

பயங்கரவாதிகள் தலைநகருக்குள் அனைத்து பக்கங்களிலிருந்தும் நுழைந்துள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது.

234425302_4166289796800751_4540134645223

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அலுவலகம் டுவிட்டர் பதிவில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள் நிலைமையை "சர்வதேச பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து" கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளது.

காபூலின் பல தொலைதூர பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும் அந்த டுவிட்டர் பதிவு மேலும் வெளிப்படுத்தியுள்ளது.

தலிபான்கள் ஏற்கனவே காபூல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டை எடுத்துள்ளதாகவும், நகரின் மாவட்டங்களில் ஒன்றில் குழுவின் கொடியை உயர்த்தியுள்ளதாகவும் ஒரு தகவல் ஸ்புட்னிக் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளது.

236206088_4166290013467396_1909439923000

அமைதியான மாற்றத்தை எதிர்பார்த்து காபூலில் புயல் வீசக்கூடாது என்று தலிபான் போராளிகள் உத்தரவிட்டுள்ளனர். 

தலிபான்கள் "யாரையும் பழிவாங்க விரும்பவில்லை, காபூல் நிர்வாகத்தில் இராணுவம் மற்றும் சிவில் துறைகளில் பணியாற்றியவர்கள் அனைவரும் மன்னிக்கப்படுகிறார்கள் மற்றும் பாதுகாப்பாக உள்ளனர்.யாரும் பதிலடி கொடுக்கப்பட மாட்டார்கள். அனைவரும் தங்கள் நாட்டில் இருக்க வேண்டும்.  தங்கள் சொந்த இடத்திலும் வீட்டிலும், நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்காதீர்கள் என்றும் கூறியுள்ளனர்.

காபூலுக்குள் தலிபான்கள் நுழைவதற்கு சற்று முன்பு, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி எல்லைக் கடப்பும், பயங்கரவாதக் குழுவிடம் விழுந்தது. இவ்வாறு, கிளர்ச்சியாளர்கள் இப்போது ஆப்கானிஸ்தானின் அனைத்து எல்லைக் கடப்புகளையும் கட்டுப்படுத்துகின்றனர்.

மசார்-இ-ஷெரீப்பின் வடக்கு கோட்டையைக் கைப்பற்றிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை முக்கிய கிழக்கு நகரமான ஜலாலாபாத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர்.

இதற்கிடையில், காபூலை தலிபான்கள் கைப்பற்றும் அபாயம் மிகவும் தெளிவாகிவிட்டதால், அதன் பொதுமக்கள் மற்றும் இராஜதந்திர ஊழியர்களை வெளியேற்ற உதவுவதற்காக அமெரிக்கா சுற்றிவளைக்கப்பட்ட தலைநகருக்கு அதிக வீரர்களை அனுப்பி வைத்தது.

காபூல் தூதரகத்திலிருந்து அமெரிக்கா தமது இராஜதந்திரிகளை ஹெலிகாப்டர் மூலமாக வெளியேற்றியதாக அந் நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரியொருவர் உறுதிபடுத்தியுள்ளார்.

qm-9G0ir.jpg
 

 

https://www.virakesari.lk/article/111351

 

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

30 நாள் எடுக்கும் என்றார்களே! 3 நாளில் பிடித்து விடுவார்கள் போல.
பல இடங்களில் சண்டையிடாமலே கைப்பற்றியுள்ளார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரில்லா குழுவாக இருந்ததால், வல்லரசுகளே மண்டியிட்டு ஓட வேண்டிய நிலை.

ஓயாத அலைகளை தொடர்ந்து, வன்னி, துடைத்தெறியப்பட்டு, ஓமந்தை, வவவுனியா எல்லை வரை போன புலிகள், வடக்கே திரும்பி யாழ்பாணத்தையும் பிடித்திருந்தால் கதையே வேற.....

இந்தியாவின் எச்சரிக்கையினை கணக்கில் எடுக்காமல் இருந்திருந்தால்...... இன்று கதை வேறாக இருந்திருக்கும்.

எல்லாம் தலையெழுத்து தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

இந்தியாவின் எச்சரிக்கையினை கணக்கில் எடுக்காமல் இருந்திருந்தால்...... இன்று கதை வேறாக இருந்திருக்கும்.

எல்லாம் தலையெழுத்து தான். 

நரிக்குணமுடையோராலும் நரி வேலைகளாலும் நரிகளாலும் வீழ்ந்தது தானே தனித்தமிழீழம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கொரில்லா குழுவாக இருந்ததால், வல்லரசுகளே மண்டியிட்டு ஓட வேண்டிய நிலை.

ஓயாத அலைகளை தொடர்ந்து, வன்னி, துடைத்தெறியப்பட்டு, ஓமந்தை, வவவுனியா எல்லை வரை போன புலிகள், வடக்கே திரும்பி யாழ்பாணத்தையும் பிடித்திருந்தால் கதையே வேற.....

இந்தியாவின் எச்சரிக்கையினை கணக்கில் எடுக்காமல் இருந்திருந்தால்...... இன்று கதை வேறாக இருந்திருக்கும்.

எல்லாம் தலையெழுத்து தான். 

ஓயாத அலை சண்டையில் நின்றவர் யுத்த நிறுத்த  காலத்தில் வந்தவர் சொன்னது நானும் இதே கேள்வியை கேட்டன்  அதற்கு அண்ணை சொன்னவராம்  அடித்து பிடிப்பது சுலபா இருக்கும் ஆனால் இடத்தை தக்கவைக்க போராளிகள் அதிகம் வேண்டும் அந்த நேரத்தில் போராளிகள் ஐவரின்  வேலையை ஒருவர் செய்திருந்தார்கள் என பாராட்டியும் இருந்தாராம்.

எல்லோரும் சண்டை சண்டை என விலகி வந்துவிட்டு இப்ப வாய் ஊறுகிறோம் நான் உட்பட  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய சாராம்சம்

  1. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டுச் சென்று விட்டதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
  2. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை அரசு ஒப்படைப்பது தொடர்பாக அரசுடன் தாலிபன்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
  3. நாடாளுமன்றத்தில் தரமான விவாதங்கள் நடப்பதில்லை. இந்தியத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா குற்றச்சாட்டு
  4. சுதந்திர தினம் - டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம். கடுமையான பாதுகாப்பு
  5. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுகிறோம். எல்லாவிதமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார் என்று தெரிவித்த பி.எஸ்.எஃப். தலைவர் - காரணம் என்ன?
  6. ஆப்கன் தலைநகர் காபூலில் நுழைந்த தாலிபன்கள் - பெரிய எதிர்ப்பு இல்லை என்று தகவல்.

நேரடிச் செய்தி

 

  1. பிரசுரிக்கப்பட்ட நேரம் 16:4416:44

    பிபிசி நிருபரை நேரலையில் அழைத்துப் பேசிய தாலிபன் செய்தித்தொடர்பாளர்

    பிபிசி செய்தியாளர் யால்டா ஹக்கிம் நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்தபோது, அவரது செல்பேசியில் அழைத்துப் பேசியுள்ளார் தாலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன். 

    "ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பாக உள்ளனர்," என்று அவர் தெரிவித்தார். 

    "ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இதை ஒன்றை உறுதிப்படுத்துகிறோம். குறிப்பாக காபூல் நகரவாசிகள், அவர்களின் உடைமைகள், உயிர் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது," என்று அவர் குறிப்பிட்டார். 

    "நாங்கள் இந்த நாட்டு மக்களின் சேவகர்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.

  • பிரசுரிக்கப்பட்ட நேரம் 16:3716:37

    காபூல் தூதரகத்தில் அமெரிக்க கொடி அகற்றம்

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதர் ரோஸ் வில்சன் தமது தூதரகத்தில் இருந்து வெளியேறி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தூதரகத்துக்கு வந்துள்ளார். 

    முன்னதாக, நகருக்குள் இருந்த தூதரகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்த தூதரகத்தின் கொடிக்கம்பத்தில் இருந்த அமெரிக்க கொடி அகற்றப்பட்டு விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

     

    https://www.bbc.com/tamil/live/india-58220049

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஓயாத அலை சண்டையில் நின்றவர் யுத்த நிறுத்த  காலத்தில் வந்தவர் சொன்னது நானும் இதே கேள்வியை கேட்டன்  அதற்கு அண்ணை சொன்னவராம்  அடித்து பிடிப்பது சுலபா இருக்கும் ஆனால் இடத்தை தக்கவைக்க போராளிகள் அதிகம் வேண்டும் அந்த நேரத்தில் போராளிகள் ஐவரின்  வேலையை ஒருவர் செய்திருந்தார்கள் என பாராட்டியும் இருந்தாராம்.

எல்லோரும் சண்டை சண்டை என விலகி வந்துவிட்டு இப்ப வாய் ஊறுகிறோம் நான் உட்பட  

புலிகள் தகுந்த சந்தர்ப்பம் கைகூடி வந்தபோது, நழுவ விட்ட சந்தர்ப்பம் அது.

புலிகள் போராட்ட தவறு, மிக அதிக காலம் இழுபட வைத்ததும் அதனால் வந்த மக்கள் சலிப்பும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

புலிகள் தகுந்த சந்தர்ப்பம் கைகூடி வந்தபோது, நழுவ விட்ட சந்தர்ப்பம் அது.

புலிகள் போராட்ட தவறு, மிக அதிக காலம் இழுபட வைத்ததும் அதனால் வந்த மக்கள் சலிப்பும்.

புலிகள் மீது பிழை இல்லை புலிகளின் கைகளில் பிரச்சினையை விட்டு விட்டு நழுவிக்கொண்ட மக்கள் மீதுதான் பிழை  இனி யார் மீதும் பிழை சொல்லியும் எதுவும் நடக்க போவதில்லை இந்த தலிபான் களை பார்த்து ஈழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என கட்டுரைகள் வராமல் இருந்தால் மிகவும் நல்லது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

புலிகள் தகுந்த சந்தர்ப்பம் கைகூடி வந்தபோது, நழுவ விட்ட சந்தர்ப்பம் அது.

புலிகள் போராட்ட தவறு, மிக அதிக காலம் இழுபட வைத்ததும் அதனால் வந்த மக்கள் சலிப்பும்.

ஆப்கான் போராட்டம் எப்ப அண்ணே ஆரம்பிச்சது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஓயாத அலை சண்டையில் நின்றவர் யுத்த நிறுத்த  காலத்தில் வந்தவர் சொன்னது நானும் இதே கேள்வியை கேட்டன்  அதற்கு அண்ணை சொன்னவராம்  அடித்து பிடிப்பது சுலபா இருக்கும் ஆனால் இடத்தை தக்கவைக்க போராளிகள் அதிகம் வேண்டும் அந்த நேரத்தில் போராளிகள் ஐவரின்  வேலையை ஒருவர் செய்திருந்தார்கள் என பாராட்டியும் இருந்தாராம்.

எல்லோரும் சண்டை சண்டை என விலகி வந்துவிட்டு இப்ப வாய் ஊறுகிறோம் நான் உட்பட  

போலித்தமிழ் தேசியவாதிகளுக்கு விளக்கம் சொல்வது உங்கள் நேர விரயம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

புலிகள் மீது பிழை இல்லை புலிகளின் கைகளில் பிரச்சினையை விட்டு விட்டு நழுவிக்கொண்ட மக்கள் மீதுதான் பிழை  இனி யார் மீதும் பிழை சொல்லியும் எதுவும் நடக்க போவதில்லை இந்த தலிபான் களை பார்த்து ஈழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என கட்டுரைகள் வராமல் இருந்தால் மிகவும் நல்லது 

பிழை இந்தியா மீது....

அதே திருகுதாளத்தை இப்போதும் செய்ய நிக்குதே..... சும்மா படுத்துக் கிடந்த காசி ஆனந்தனுக்கு சூம் ரெயினிங் குடுத்து, மக்களால் நிராகிரிக்கப்பட்ட சிவாஜிலிங்கத்தாரையும், அனந்தியையும் வைச்சு யாருக்கு அல்வா கிண்டுது, சீனாக்காரன் உள்ள வந்தாப்பிறகு....

 

3 hours ago, நந்தன் said:

ஆப்கான் போராட்டம் எப்ப அண்ணே ஆரம்பிச்சது.

கொரில்லா போராட்ட முறைக்கும், கொன்வென்சனல் ஆமிமுறைக்கும் வித்தியாசம் தெரிஞ்சு வாங்கோஅண்ணைகதைப்பம்.

சும்மா விளப்பம் இல்லாம தமிழ் தேசியவாதம் கதைச்சு சிரிப்பு காட்டாமல் போங்கண்ண.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

கொரில்லா போராட்ட முறைக்கும், கொன்வென்சல் ஆமிமுறைக்கும் வித்தியாசம் தெரிஞ்சு வாங்கோஅண்ணைகதைப்பம்.

சும்மா விளப்பம் இல்லாம தமிழ் தேசியவாதம் கதைச்சு சிரிப்பு காட்டாமல் போங்கண்ண

நன்றி கூகுளுக்கா,இல்ல விக்கிபீடியாவுக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:

நன்றி கூகுளுக்கா,இல்ல விக்கிபீடியாவுக்கா

உங்களுக்குத்தான்...... நிஜமான தமிழ் தேசியவாதி எல்லோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணை சண்டை காபூலில் தானே, தனங்கிளப்பில் இல்லைத்தானே, நித்திரையால எழும்பி யாழை பார்த்து கொஞ்சம் குழம்பிப்போனேன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரில்லா போர்முறையை தாக்குப்பிடிக்க ஏலாமல், இரு வல்லரசுகள் வெளியேற, பின்லாடன் போன்ற பயங்கரவாதம் தலை தூக்க இடமளியோம் என்ற உத்தரவாதத்துடன், தலிபான் பராம்பரிய ராணுவ அரசியல் கட்டமைப்பாகிறது.

பாரம்பரிய ராணுவ அரசை இலகுவாக தகர்தே உள்ளே போனதால், மீண்டும் போகலாம் என, அது குறித்து கவலைப் படாமல் வெளியே வருகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

கொரில்லா குழுவாக இருந்ததால், வல்லரசுகளே மண்டியிட்டு ஓட வேண்டிய நிலை.

ஓயாத அலைகளை தொடர்ந்து, வன்னி, துடைத்தெறியப்பட்டு, ஓமந்தை, வவவுனியா எல்லை வரை போன புலிகள், வடக்கே திரும்பி யாழ்பாணத்தையும் பிடித்திருந்தால் கதையே வேற.....

இந்தியாவின் எச்சரிக்கையினை கணக்கில் எடுக்காமல் இருந்திருந்தால்...... இன்று கதை வேறாக இருந்திருக்கும்.

எல்லாம் தலையெழுத்து தான். 

வடக்கே  திரும்பாமலா  சாவகச்சேரி,நாகர்கோவில் அரியாலை கொழும்புதுறை யாழ்கச்சேரிவரை என அனைத்து பகுதியிலும் முன்னேறினார்கள்?

அப்போதைய போர் சூழலில் வவுனியா பக்கமாக முன்னேறிய புலிகள் ஜோசப் முகாமை தாக்கபோகிறார்கள் என்றும் வவுனியா மக்களை இடம்பெயர அறிவித்திருக்கிறார்கள்,  ஈரபெரியகுளம்,மதவாச்சி பகுதிகளில்கூட ராணுவம் புலிகள் முன்னேற்றத்தை தடுக்க பலமான ராணுவ தடுப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் ஊடகவியலாளர் சிவராம் பிபிசிக்கு பேட்டியளித்திருந்தார். ஆனால் புலிகள் வவுனியா பக்கமான மேலதிக தாக்குதலில் இறங்கவேயில்லை, அவர்கள் முழு கவனமும் வடபகுதிமீதே இருந்தது.

சந்திரிக்கா அரசு இந்திய உதவியை நாடியதாகவும் இந்தியா வடக்கில் உள்ள ராணுவத்தை பாதுகாப்பாக வெளியேற்ற இலங்கைக்கு உதவ விளைந்ததாகவும், படையினர் மட்டும் வெளியேறலாம் ஆயுதங்கள் அப்படியே விட்டுபோட்டு போகோணும் என்பதுதான் புலிகள் விதித்த நிபந்தனை என்றும், அப்போது யாழில் உள்ள பொதுமக்கள் சிலரும் வெளியேற விரும்புகிறார்கள் என்று தகவலளிக்கப்பட்டதாகவும், யார் அந்த பொதுமக்கள் என்று கேட்டபோது ஈபிடிபியும் அதன் ஆதரவாளர்களும் என்று பதிலளிக்கப்பட்டதாகவும் ஓரு மாவீரர் நாளில் அன்ரன் பாலசிங்க உரை நிகழ்த்தினார்.

பல ஆயிரம் போராளிகள் இழப்பின் மத்தியிலும் கைப்பற்றபடமுடியாமல் போன வன்னியின் முகாம்கள் ஆனையிறவு எல்லாம் மிக குறைந்த போராளிகள் இழப்புடன் மீண்டும் கைப்பற்றகூடியதாய் இருந்ததுக்கு பிரதான காரணம் புலிகள் பக்கம் திடீரென அதிகரித்த எறிகணை சூட்டின் வலு.

கைப்பற்றிய இடங்களையெல்லாம் ராணுவம் விட்டுவிட்டு ஓட காரணமே சரமாரியான புலிகளின் எறிகணை தாக்குதல்தான். அதேபோல் புலிகள் கைப்பற்றிய இடங்களை எல்லாம் ராணுவம் மீள கைப்பற்ற காரணம் அவர்கள் பக்கம் அதிகரித்த எறிகணை சூட்டு வலுதான்.

ஆம் என்று மல்ரிபரல் எறிகணை செலுத்திகள் செக்கோவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ராணுவத்தின் கைகளுக்கு வந்து சேர்ந்ததோ அன்றே ராணுவ சமநிலை மாறிபோனது. வெட்டவெளிகளை பின்புலமாக கொண்ட நாகர்கோவில்,முகமாலை பகுதிகளை தவிர்த்து ஏனைய அனைத்து பகுதிகளிலிருந்தும் புலிகள் பின்நோக்கி தள்ளப்பட்டார்கள்.

இறுதிபோரின்போதுகூட பல ஆயிரம்போராளிகள் முன்பு நடந்த போர்களைபோல ராணுவத்தை நெருங்கி போக முடியாமல் , அவர்களை காணாமலே வீமரணம் அடைந்ததற்கு காரணம் மழையென பொழிந்த மல்டி பரல் சூட்டுவலுதான்.

அதன்பின்பு ஓயாத அலைகள் நான்கு தீச்சுவாலையும் முகமாலை பகுதியிலேயே வலுவாக நடந்ததாகவும் ஓயாத அலைகள் மூன்றுபோன்று அவை பாரிய வெற்றியளிக்கவில்லை  என்பதும்தான் சம்பவங்கள்.

நான் சொன்னேன் புலிகள் கேக்கவில்லையென்று ஐயா ஜெயபாலனும் ஓரிடத்தில் அளந்திருந்தார் .போராளிகள் ஆயுதபயிற்சி பெற்ற எல்லைபடைகள் பொதுமக்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வீரர்கள், சில ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட காடுகளில் எப்படி மறைந்திருப்பது கெரில்லா தாக்குதல் செய்வது?

கெரில்லா தாக்குதல் என்றாலே சிறு குழுக்களாய் பிரிந்து செயல்படுவது, பல ஆயிரம் வீரர்கள், பல ஆயிரம் கனரக ஆயுதங்கள் ,விமானங்கள் பெரும் எண்ணிக்கையிலான போராயுதங்கள் கடற்கலங்களை கொண்ட கடல்புலிகள்  இவற்றையெல்லாம் காட்டுக்குள் போய் பதுக்கி வைத்துக்கொண்டு என்ன கெரில்லா தாக்குதல் செய்வது?

அப்படி செய்தாலும் தரை கடல் என எல்லைகளின் கட்டுப்பாட்டை இழந்தால் எங்கிருந்து பல்லாயிரம் போராளிகளுக்கு உணவு மருத்துவம்  உட்பட்ட வளங்கல்களை செய்வது?

முன்னர் சிறிய எண்ணிக்கையில் போராளிகள் இருந்தபோது புலிகள் இயக்கம் கெரில்லா தாக்குதலில் மிரட்டியது அப்போது புலிகளுக்கு இந்தியாவில் தடையிருக்கவில்லை, காயபட்ட போராளிகளை பராமரிக்கவும்,ஆயுதங்கள் வெடிமருந்துகளை கொண்டு வந்து சேர்க்கவும் தமிழகம் பின்புலமாய் இருந்தது. இறுதி போரின்போது அதுவா நிலமை?

ஜெயபாலன் ஐயா கெரில்லா தாக்குதல் செய்ய சொல்லி நான் சொன்னேன் புலிகள் கேட்கவில்லை என்று அளந்துவிட்டைதை பார்த்து நாங்களும் சாத்தியமில்லாத விசயங்களை அலசகூடாது அது எதிர்கால சந்ததிக்கு பகிரப்படும் தவறான தகவலாக போய்விடும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

உங்களுக்குத்தான்...... நிஜமான தமிழ் தேசியவாதி எல்லோ...

நிச்சயமா, எந்த போலி முகத்திரைக்குள்ளும் ஒளிந்து கொள்ளாமல் எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி நடப்பதால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

நிச்சயமா, எந்த போலி முகத்திரைக்குள்ளும் ஒளிந்து கொள்ளாமல் எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி நடப்பதால்

சும்மா அலம்பறை பண்ணி கமாடி பீஸ் ஆகாதீங்கண்ண.

சுருக்கமாக சொல்வதானால் பாரம்பரிய இராணுவ அரசமைப்பு பலவீனமடையும்.

அதுவே கொரில்லா போர்முறையை கைவிட்ட, அதன் மூலம் இந்திய வல்லரசின் இராணுவத்தை தோற்கடித்த, புலிகளுக்கும் நடந்தது.

இது புரிய தமிழ் தேசியவாதமும் தேவையில்லை, சும்மா கிடக்கிற நெஞ்சை நிமிர்த்தி நடக்கிற பீலாவும் தேவை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

வடக்கே  திரும்பாமலா  சாவகச்சேரி,நாகர்கோவில் அரியாலை கொழும்புதுறை யாழ்கச்சேரிவரை என அனைத்து பகுதியிலும் முன்னேறினார்கள்?

அப்போதைய போர் சூழலில் வவுனியா பக்கமாக முன்னேறிய புலிகள் ஜோசப் முகாமை தாக்கபோகிறார்கள் என்றும் வவுனியா மக்களை இடம்பெயர அறிவித்திருக்கிறார்கள்,  ஈரபெரியகுளம்,மதவாச்சி பகுதிகளில்கூட ராணுவம் புலிகள் முன்னேற்றத்தை தடுக்க பலமான ராணுவ தடுப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் ஊடகவியலாளர் சிவராம் பிபிசிக்கு பேட்டியளித்திருந்தார். ஆனால் புலிகள் வவுனியா பக்கமான மேலதிக தாக்குதலில் இறங்கவேயில்லை, அவர்கள் முழு கவனமும் வடபகுதிமீதே இருந்தது.

சந்திரிக்கா அரசு இந்திய உதவியை நாடியதாகவும் இந்தியா வடக்கில் உள்ள ராணுவத்தை பாதுகாப்பாக வெளியேற்ற இலங்கைக்கு உதவ விளைந்ததாகவும், படையினர் மட்டும் வெளியேறலாம் ஆயுதங்கள் அப்படியே விட்டுபோட்டு போகோணும் என்பதுதான் புலிகள் விதித்த நிபந்தனை என்றும், அப்போது யாழில் உள்ள பொதுமக்கள் சிலரும் வெளியேற விரும்புகிறார்கள் என்று தகவலளிக்கப்பட்டதாகவும், யார் அந்த பொதுமக்கள் என்று கேட்டபோது ஈபிடிபியும் அதன் ஆதரவாளர்களும் என்று பதிலளிக்கப்பட்டதாகவும் ஓரு மாவீரர் நாளில் அன்ரன் பாலசிங்க உரை நிகழ்த்தினார்.

பல ஆயிரம் போராளிகள் இழப்பின் மத்தியிலும் கைப்பற்றபடமுடியாமல் போன வன்னியின் முகாம்கள் ஆனையிறவு எல்லாம் மிக குறைந்த போராளிகள் இழப்புடன் மீண்டும் கைப்பற்றகூடியதாய் இருந்ததுக்கு பிரதான காரணம் புலிகள் பக்கம் திடீரென அதிகரித்த எறிகணை சூட்டின் வலு.

கைப்பற்றிய இடங்களையெல்லாம் ராணுவம் விட்டுவிட்டு ஓட காரணமே சரமாரியான புலிகளின் எறிகணை தாக்குதல்தான். அதேபோல் புலிகள் கைப்பற்றிய இடங்களை எல்லாம் ராணுவம் மீள கைப்பற்ற காரணம் அவர்கள் பக்கம் அதிகரித்த எறிகணை சூட்டு வலுதான்.

ஆம் என்று மல்ரிபரல் எறிகணை செலுத்திகள் செக்கோவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ராணுவத்தின் கைகளுக்கு வந்து சேர்ந்ததோ அன்றே ராணுவ சமநிலை மாறிபோனது. வெட்டவெளிகளை பின்புலமாக கொண்ட நாகர்கோவில்,முகமாலை பகுதிகளை தவிர்த்து ஏனைய அனைத்து பகுதிகளிலிருந்தும் புலிகள் பின்நோக்கி தள்ளப்பட்டார்கள்.

இறுதிபோரின்போதுகூட பல ஆயிரம்போராளிகள் முன்பு நடந்த போர்களைபோல ராணுவத்தை நெருங்கி போக முடியாமல் , அவர்களை காணாமலே வீமரணம் அடைந்ததற்கு காரணம் மழையென பொழிந்த மல்டி பரல் சூட்டுவலுதான்.

அதன்பின்பு ஓயாத அலைகள் நான்கு தீச்சுவாலையும் முகமாலை பகுதியிலேயே வலுவாக நடந்ததாகவும் ஓயாத அலைகள் மூன்றுபோன்று அவை பாரிய வெற்றியளிக்கவில்லை  என்பதும்தான் சம்பவங்கள்.

நான் சொன்னேன் புலிகள் கேக்கவில்லையென்று ஐயா ஜெயபாலனும் ஓரிடத்தில் அளந்திருந்தார் .போராளிகள் ஆயுதபயிற்சி பெற்ற எல்லைபடைகள் பொதுமக்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வீரர்கள், சில ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட காடுகளில் எப்படி மறைந்திருப்பது கெரில்லா தாக்குதல் செய்வது?

கெரில்லா தாக்குதல் என்றாலே சிறு குழுக்களாய் பிரிந்து செயல்படுவது, பல ஆயிரம் வீரர்கள், பல ஆயிரம் கனரக ஆயுதங்கள் ,விமானங்கள் பெரும் எண்ணிக்கையிலான போராயுதங்கள் கடற்கலங்களை கொண்ட கடல்புலிகள்  இவற்றையெல்லாம் காட்டுக்குள் போய் பதுக்கி வைத்துக்கொண்டு என்ன கெரில்லா தாக்குதல் செய்வது?

அப்படி செய்தாலும் தரை கடல் என எல்லைகளின் கட்டுப்பாட்டை இழந்தால் எங்கிருந்து பல்லாயிரம் போராளிகளுக்கு உணவு மருத்துவம்  உட்பட்ட வளங்கல்களை செய்வது?

முன்னர் சிறிய எண்ணிக்கையில் போராளிகள் இருந்தபோது புலிகள் இயக்கம் கெரில்லா தாக்குதலில் மிரட்டியது அப்போது புலிகளுக்கு இந்தியாவில் தடையிருக்கவில்லை, காயபட்ட போராளிகளை பராமரிக்கவும்,ஆயுதங்கள் வெடிமருந்துகளை கொண்டு வந்து சேர்க்கவும் தமிழகம் பின்புலமாய் இருந்தது. இறுதி போரின்போது அதுவா நிலமை?

ஜெயபாலன் ஐயா கெரில்லா தாக்குதல் செய்ய சொல்லி நான் சொன்னேன் புலிகள் கேட்கவில்லை என்று அளந்துவிட்டைதை பார்த்து நாங்களும் சாத்தியமில்லாத விசயங்களை அலசகூடாது அது எதிர்கால சந்ததிக்கு பகிரப்படும் தவறான தகவலாக போய்விடும்..

இதுதான் உண்மை.. மல்ரிப்பரல் மழை.. முன்னேற முன்னம் மல்றிப்பரல் அடிச்சு பலகிலோமீற்றர் நீளமான ஏரியாவை எரிச்சு அழிச்சு அங்க இருந்த பனை தென்னை மரங்கள்தலைமுறிஞ்சு கிடக்க மரங்கள் புல்லுக்கூட எரிஞ்சு போய் கிடக்க அந்த புகைக்கு நடுவிலதான் ஆமி முன்னேறுவான் ஒவ்வொரு வாட்டியும்.. இதுக்குள்ள இயக்கம் எங்க நிக்குறது? இயக்கதின்ர உடம்பென்ன இரும்போ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதுதான் உண்மை.. மல்ரிப்பரல் மழை.. முன்னேற முன்னம் மல்றிப்பரல் அடிச்சு பலகிலோமீற்றர் நீளமான ஏரியாவை எரிச்சு அழிச்சு அங்க இருந்த பனை தென்னை மரங்கள்தலைமுறிஞ்சு கிடக்க மரங்கள் புல்லுக்கூட எரிஞ்சு போய் கிடக்க அந்த புகைக்கு நடுவிலதான் ஆமி முன்னேறுவான் ஒவ்வொரு வாட்டியும்.. இதுக்குள்ள இயக்கம் எங்க நிக்குறது? இயக்கதின்ர உடம்பென்ன இரும்போ..?

உண்மையில் இதன் முழு விபரமும் தலைவருக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் பொதுமக்கள் மற்றும் முக்கிய தளபதிகள் உட்பட அனைவரது  எதிர்பார்ப்பும் வடபகுதி முழுமையாக விழுந்து விடும் என்பது தான். ஏனெனில் களநிலை கல்லால் எறிந்து முன்னேறும் நிலையில் தான் இருந்தது??

தலைவர் ஒருவர் மட்டுமே நிதானமாக தூரநோக்கோடு உத்தரவு தர மறுத்ததாக தான் சொல்லப்பட்டது. 

என்ன காரணம் என்ன அழுத்தம்?? அவர் மட்டுமே அறிவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

வடக்கே  திரும்பாமலா  சாவகச்சேரி,நாகர்கோவில் அரியாலை கொழும்புதுறை யாழ்கச்சேரிவரை என அனைத்து பகுதியிலும் முன்னேறினார்கள்?

அப்போதைய போர் சூழலில் வவுனியா பக்கமாக முன்னேறிய புலிகள் ஜோசப் முகாமை தாக்கபோகிறார்கள் என்றும் வவுனியா மக்களை இடம்பெயர அறிவித்திருக்கிறார்கள்,  ஈரபெரியகுளம்,மதவாச்சி பகுதிகளில்கூட ராணுவம் புலிகள் முன்னேற்றத்தை தடுக்க பலமான ராணுவ தடுப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் ஊடகவியலாளர் சிவராம் பிபிசிக்கு பேட்டியளித்திருந்தார். ஆனால் புலிகள் வவுனியா பக்கமான மேலதிக தாக்குதலில் இறங்கவேயில்லை, அவர்கள் முழு கவனமும் வடபகுதிமீதே இருந்தது.

சந்திரிக்கா அரசு இந்திய உதவியை நாடியதாகவும் இந்தியா வடக்கில் உள்ள ராணுவத்தை பாதுகாப்பாக வெளியேற்ற இலங்கைக்கு உதவ விளைந்ததாகவும், படையினர் மட்டும் வெளியேறலாம் ஆயுதங்கள் அப்படியே விட்டுபோட்டு போகோணும் என்பதுதான் புலிகள் விதித்த நிபந்தனை என்றும், அப்போது யாழில் உள்ள பொதுமக்கள் சிலரும் வெளியேற விரும்புகிறார்கள் என்று தகவலளிக்கப்பட்டதாகவும், யார் அந்த பொதுமக்கள் என்று கேட்டபோது ஈபிடிபியும் அதன் ஆதரவாளர்களும் என்று பதிலளிக்கப்பட்டதாகவும் ஓரு மாவீரர் நாளில் அன்ரன் பாலசிங்க உரை நிகழ்த்தினார்.

பல ஆயிரம் போராளிகள் இழப்பின் மத்தியிலும் கைப்பற்றபடமுடியாமல் போன வன்னியின் முகாம்கள் ஆனையிறவு எல்லாம் மிக குறைந்த போராளிகள் இழப்புடன் மீண்டும் கைப்பற்றகூடியதாய் இருந்ததுக்கு பிரதான காரணம் புலிகள் பக்கம் திடீரென அதிகரித்த எறிகணை சூட்டின் வலு.

கைப்பற்றிய இடங்களையெல்லாம் ராணுவம் விட்டுவிட்டு ஓட காரணமே சரமாரியான புலிகளின் எறிகணை தாக்குதல்தான். அதேபோல் புலிகள் கைப்பற்றிய இடங்களை எல்லாம் ராணுவம் மீள கைப்பற்ற காரணம் அவர்கள் பக்கம் அதிகரித்த எறிகணை சூட்டு வலுதான்.

ஆம் என்று மல்ரிபரல் எறிகணை செலுத்திகள் செக்கோவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ராணுவத்தின் கைகளுக்கு வந்து சேர்ந்ததோ அன்றே ராணுவ சமநிலை மாறிபோனது. வெட்டவெளிகளை பின்புலமாக கொண்ட நாகர்கோவில்,முகமாலை பகுதிகளை தவிர்த்து ஏனைய அனைத்து பகுதிகளிலிருந்தும் புலிகள் பின்நோக்கி தள்ளப்பட்டார்கள்.

இறுதிபோரின்போதுகூட பல ஆயிரம்போராளிகள் முன்பு நடந்த போர்களைபோல ராணுவத்தை நெருங்கி போக முடியாமல் , அவர்களை காணாமலே வீமரணம் அடைந்ததற்கு காரணம் மழையென பொழிந்த மல்டி பரல் சூட்டுவலுதான்.

அதன்பின்பு ஓயாத அலைகள் நான்கு தீச்சுவாலையும் முகமாலை பகுதியிலேயே வலுவாக நடந்ததாகவும் ஓயாத அலைகள் மூன்றுபோன்று அவை பாரிய வெற்றியளிக்கவில்லை  என்பதும்தான் சம்பவங்கள்.

நான் சொன்னேன் புலிகள் கேக்கவில்லையென்று ஐயா ஜெயபாலனும் ஓரிடத்தில் அளந்திருந்தார் .போராளிகள் ஆயுதபயிற்சி பெற்ற எல்லைபடைகள் பொதுமக்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வீரர்கள், சில ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட காடுகளில் எப்படி மறைந்திருப்பது கெரில்லா தாக்குதல் செய்வது?

கெரில்லா தாக்குதல் என்றாலே சிறு குழுக்களாய் பிரிந்து செயல்படுவது, பல ஆயிரம் வீரர்கள், பல ஆயிரம் கனரக ஆயுதங்கள் ,விமானங்கள் பெரும் எண்ணிக்கையிலான போராயுதங்கள் கடற்கலங்களை கொண்ட கடல்புலிகள்  இவற்றையெல்லாம் காட்டுக்குள் போய் பதுக்கி வைத்துக்கொண்டு என்ன கெரில்லா தாக்குதல் செய்வது?

அப்படி செய்தாலும் தரை கடல் என எல்லைகளின் கட்டுப்பாட்டை இழந்தால் எங்கிருந்து பல்லாயிரம் போராளிகளுக்கு உணவு மருத்துவம்  உட்பட்ட வளங்கல்களை செய்வது?

முன்னர் சிறிய எண்ணிக்கையில் போராளிகள் இருந்தபோது புலிகள் இயக்கம் கெரில்லா தாக்குதலில் மிரட்டியது அப்போது புலிகளுக்கு இந்தியாவில் தடையிருக்கவில்லை, காயபட்ட போராளிகளை பராமரிக்கவும்,ஆயுதங்கள் வெடிமருந்துகளை கொண்டு வந்து சேர்க்கவும் தமிழகம் பின்புலமாய் இருந்தது. இறுதி போரின்போது அதுவா நிலமை?

ஜெயபாலன் ஐயா கெரில்லா தாக்குதல் செய்ய சொல்லி நான் சொன்னேன் புலிகள் கேட்கவில்லை என்று அளந்துவிட்டைதை பார்த்து நாங்களும் சாத்தியமில்லாத விசயங்களை அலசகூடாது அது எதிர்கால சந்ததிக்கு பகிரப்படும் தவறான தகவலாக போய்விடும்..

எனது கருத்து, உங்கள் ஆம் என்று ஆரம்பிக்கும் கருத்து வரை மட்டுமே ஆனது.

அந்த தருணத்தை மட்டுமே நான் சொன்னேன். இந்தியாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் நகர்ந்து இருந்தால் நிலைமையே வேறாக இருந்திருக்கலாம் என்றேன்.

அந்த கணத்தின் பின் ராணுவ சமநிலை மாறியது. 

இந்தகணமே, இன்று நந்தன் அண்ணன் போல, நெஞ்சை நிமிர்த்தி சிங்கள  தேசியவாதம் பேசும் கோத்தா, இராணுவத்தை விட்டு அமெரிக்கா ஓடினதும் நிகழ்ந்தது.

அமெரிக்கா விசா மறுக்கப்பட,அதை வாங்கி கொடுக்கவும் ஒரு தமிழன் தான் கோத்தாவுக்கு தேவைப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

உண்மையில் இதன் முழு விபரமும் தலைவருக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் பொதுமக்கள் மற்றும் முக்கிய தளபதிகள் உட்பட அனைவரது  எதிர்பார்ப்பும் வடபகுதி முழுமையாக விழுந்து விடும் என்பது தான். ஏனெனில் களநிலை கல்லால் எறிந்து முன்னேறும் நிலையில் தான் இருந்தது??

தலைவர் ஒருவர் மட்டுமே நிதானமாக தூரநோக்கோடு உத்தரவு தர மறுத்ததாக தான் சொல்லப்பட்டது. 

என்ன காரணம் என்ன அழுத்தம்?? அவர் மட்டுமே அறிவார்.

இந்தியா தனது கடற்படையை அனுப்பி சிங்கள இராணுவத்தை மீட்க முயற்சிக்கும் என்ற தகவல்  உள்ளூர் பத்திரிகைகளில் வந்திருந்ததே விசுகர்? ஊகமாக அல்ல, இந்திய அரசின் நிலைப்பாடாக வந்திருந்தது.

இந்த இந்திய இராணுவ மீள்வருகையைத் தவிர்க்கத் தான் கைவிடப் பட்டது, இதில் தலைவருக்கு மட்டும் தெரிந்த உண்மையென்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

இந்தியா தனது கடற்படையை அனுப்பி சிங்கள இராணுவத்தை மீட்க முயற்சிக்கும் என்ற தகவல்  உள்ளூர் பத்திரிகைகளில் வந்திருந்ததே விசுகர்? ஊகமாக அல்ல, இந்திய அரசின் நிலைப்பாடாக வந்திருந்தது.

இந்த இந்திய இராணுவ மீள்வருகையைத் தவிர்க்கத் தான் கைவிடப் பட்டது, இதில் தலைவருக்கு மட்டும் தெரிந்த உண்மையென்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை!

அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே களம் புலிகளுக்கு சாதகமாக தான் இருந்தது. சிறீலங்கா பாராளுமன்றத்திலேயே 40ஆயிரம் சவப்பெட்டிகளை தயாராக வைத்திருங்கள் என்று சொல்லும் நிலையில் களம் மட்டும் அல்ல சிறீலங்காவே இருந்தது.

ஆனால் தலைவருக்கு மட்டுமே தெரிந்த நிதானமாக ?? எச்சரிக்கை?? அல்லது வாக்குறுதிகள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே களம் புலிகளுக்கு சாதகமாக தான் இருந்தது. சிறீலங்கா பாராளுமன்றத்திலேயே 40ஆயிரம் சவப்பெட்டிகளை தயாராக வைத்திருங்கள் என்று சொல்லும் நிலையில் களம் மட்டும் அல்ல சிறீலங்காவே இருந்தது.

ஆனால் தலைவருக்கு மட்டுமே தெரிந்த நிதானமாக ?? எச்சரிக்கை?? அல்லது வாக்குறுதிகள்???

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனப் புரியவில்லை! என்ன தான் பலமாக இருந்தாலும், இந்தியாவை திரும்பவும் சீண்டி விட்டு சிங்களவர்கள் பக்கம் தள்ள புலிகள் விரும்பவில்லை!

எனவே கோடு போட்ட இடத்தில் நின்றார்கள், இதில் மாயம்,  மர்மம் என்றெல்லாம் எதுவும் இல்லை! உங்கள் கைரேகை போல தெளிவான விடயம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.