Jump to content

ஒரு எதிரியோடு போரிடுவது போல வைரசோடு சண்டை போட்டு சுட்டுவீழ்த்த முடியாது – எம்.ஏ சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எதிரியோடு போரிடுவது போல வைரசோடு சண்டை போட்டு சுட்டுவீழ்த்த முடியாது – எம்.ஏ சுமந்திரன்

எங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்பு செய்பவர்கள் பொதுசுகாதார பரிசோதகர்கள் அவர்கள் இதுவரை காலம் வரையில் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காகவும் தடுப்பூசி செலுத்துவதிலும் அனுபவம் மிக்கவர்களாக காணப்படுகின்றனர். அப்படியானவர்களின் கருத்துக்கள் அவர்களின் ஆலோசனைகளை செவிமடுக்காமல் இராணுவத்தினரை வைத்துவைரஸ்பரவலை தடுக்கலாம் என அரசாங்கமும் ஜனாதிபதியும்நினைத்தது பெருந்தவறு. ஒரு எதிரியோடு போரிடுவது போல வைரசோடு சண்டை போட்டு சுட்டுவீழ்த்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த விசேட அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைக்கு நாடு இவ்வளவு மோசமான நிலைக்கு வந்திருக்கின்ற நிலையில் கூட சுகாதார பிரிவினர் நாளுக்குநாள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்,நாட்டை குறிப்பிட்ட ஒரு நீண்டகாலத்திற்கு முடக்கவேண்டும் என்ற கோரிக்கை அவர்களிடமிருந்து வெளியாகின்றது. ஆனால் அரசாங்கம் அதற்கு செவிமடுக்காமல் தங்கள் நலனிற்காக மாறுபட்ட தீர்மானங்களை எடுத்துவருகின்றது,சென்றவருடமே இ;ந்த தொற்று ஆரம்பமானவேளை- இதனை கட்டுப்படுத்தவதற்கு போதிய சட்டங்கள் சரியான சட்டங்களை இயற்றவேண்டும், இதற்காக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என சகல எதிர்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன அதற்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.புதிய நாடாளுமன்றம் உருவாகி ஒரு வருடகாலமாகின்ற போதிலும் இன்னும் அவ்வாறான சட்டங்கள் இயற்றப்படவில்லை.

அரசாங்கம் அதிலே முன்னின்று செயற்பாடாதன் காரணமாக ஒரு தனிநபர் சட்டமூலத்தை நான் நாடாளுமன்றத்திலே கொண்டுவந்தேன்.அதனையாவது நிறைவேற்றுங்கள் என நான் பல தடவை நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம் ஆனால் அரசாங்கம் அதற்கு செவிசாய்க்க மறுகின்றது.ஏனென்றால் அவ்வாறான சட்டமொன்றை இயற்றினால் சட்டத்தின் ஆட்சி நாட்டிலே இருக்கும், இதை குறித்து தீர்மானம் எடுக்கவேண்டியவர்கள் அந்த தீர்மானங்களை எடுப்பார்கள், இராணுவம் அதற்குஉதவலாம் ஆனால் தீர்மானத்தை எடுப்பவர்கள் அதற்கு உரியவர்களாகயிருக்கவேண்டும் அரசாங்கம் அதற்கு உரிய இடத்தை வழங்கவேண்டும்.இன்றைக்கு ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு நாடு முற்றாக முடக்கப்படவேண்டும்,என்ற கருத்து சுகாதார பிரிவினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.அரசாங்கம் அதற்கு செவிசாய்த்து அவ்வாறான நடவடிக்கையை அமுல்படுத்தவேண்டும்.பொதுமக்களிற்கும் ஒரு கோரிக்கை அரசாங்கம் நாட்டை முடக்காவிட்டாலும் உங்களுடைய சொந்த பாதுகாப்பினை கருத்தில்கொண்டு நீங்களாவது வீடுகளிற்கு உள்ளே முடங்கியிருங்கள்.

நாளுக்குநாள் இறக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குகின்றது, தொற்றினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.அரசாங்கம் மக்களிற்கு தெரிவிக்கும் தகவல் தவறானது மிகவும் குறைந்த தொகையையே அரசாங்கம் தெரிவிக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலைக்கு நாங்கள் வருவதற்கு அரசாங்கம் தான் பிரதான காரணமாக காணப்படுகின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.(15)
 

 

http://www.samakalam.com/ஒரு-எதிரியோடு-போரிடுவது/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

இராணுவத்தினரை வைத்துவைரஸ்பரவலை தடுக்கலாம் என அரசாங்கமும் ஜனாதிபதியும்நினைத்தது பெருந்தவறு

இலங்கை இராணுவத்தின் அறிவு, செயற்பாடு எல்லாவற்றிலும் தோல்வி என்பது இரண்டாவது தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பொதுமக்களிற்கும் ஒரு கோரிக்கை அரசாங்கம் நாட்டை முடக்காவிட்டாலும் உங்களுடைய சொந்த பாதுகாப்பினை கருத்தில்கொண்டு நீங்களாவது வீடுகளிற்கு உள்ளே முடங்கியிருங்கள்.

கோவில் திருவிழாக்களும் திருமண நிகழ்வுகளும் அரசாங்க ஏற்பாட்டில் தானே நடக்கினறன். அங்கே கூடும் பக்தர்களையும்
மக்களையும் அரச செலவில் தானே அழைத்து வருகின்றார்கள் .😞

 

1 hour ago, கிருபன் said:

இவ்வாறானதொரு சூழ்நிலைக்கு நாங்கள் வருவதற்கு அரசாங்கம் தான் பிரதான காரணமாக காணப்படுகின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.


 

கோவிட் தொடர்பாக  விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டில் உங்கள் பங்கு எந்த நிலைமையில் இருந்தது... இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

இலங்கை இராணுவத்தின் அறிவு, செயற்பாடு எல்லாவற்றிலும் தோல்வி என்பது இரண்டாவது தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

முதல் தடவை எப்ப நிரூபிக்கப் பட்டது? (வடிவாக யோசித்துச் சொல்லுங்கோ!)😉

Link to comment
Share on other sites

9 hours ago, satan said:

இலங்கை இராணுவத்தின் அறிவு, செயற்பாடு எல்லாவற்றிலும் தோல்வி என்பது இரண்டாவது தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

56 minutes ago, Justin said:

முதல் தடவை எப்ப நிரூபிக்கப் பட்டது? (வடிவாக யோசித்துச் சொல்லுங்கோ!)😉

இலங்கையில் இராணுவமே இல்லையாம், யோசிப்பதற்கு என்ன உள்ளது.? 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

இலங்கை இராணுவத்தின் அறிவு, செயற்பாடு எல்லாவற்றிலும் தோல்வி என்பது இரண்டாவது தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் சொல்லவது உண்மை தான். அதுவும் வெகு குறுகிய காலத்தில்.

1. கொரோனா விடயம்.

2. ஆப்கானிஸ்தானில் தலிபான்களை புலிகள் பாணியில் வீழ்த்துவோம் விடயம்.. ஆப்கானிஸ்தானுக்கு கோத்தா வழங்கிய ஆலோசனையின் உச்சம்.. ஆப்கானிஸ்தான் சனாதிபதி.. உப சனாதிபதி எல்லாம் நாட்டை விட்டு ஓட்டம். ஆப்கானிஸ்தான்.. முழுவதும் தலிபான்களின் கைகளுக்குள் வரும் நிலை சமர் தொடங்கி சில வாரங்களுக்குள்.

சோவியத் வெளியேறிய போது கூட இந்த வேகம் இருக்கவில்லை.. அமெரிக்கா வெளியேறி சில வாரங்களுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசம். மேற்குலகின் இராணுவ கொள்கைகளுக்கு மிக மோசமான தோல்வியை தலிபான்கள் கொடுத்திருக்கினம்..!  விடுதலைப் புலிகளை வீழ்த்தியதில்.. புலிகளாய் போய் வீழ்ந்தது தான் நடந்திருக்குது என்பது வெளிப்படையாகிவிட்டது. அதில் சொறீலங்கா இராணுவம்.. வெற்றிக் கோசம்.. காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதை தான்.. ஆனால் ஒரு இன அழிப்பை செய்துவிட்டு.. கூட்டு பயிற்சி செய்தவர்களின் கொட்டத்தை தலிபான்கள் தனியா அடக்கிவிட்டார்கள் என்பதில்.. ஆச்சரியம் தான். 

இப்ப பைடனும் நெருக்கடியில்.. பொரிஸும் நெருக்கடியில். இதுக்குத்தானா எங்கள் பிள்ளைகளை கணவன்மாரை ஆப்கானிஸ்தான் அனுப்பி கொன்றீர்கள் என்று மக்கள் கேக்க ஆரம்பித்து விட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் மக்காள்! நமக்குக் காண்டு இருக்கிற அமெரிக்காக் காரனைச் சுத்தி விட்டார்கள் என்ற புழுகத்தில் மனிதகுலத்திற்கே எதிரிகளான தலிபான்களை ஆதர்ச புருஷர்களாக ஏற்றுக் கொண்டு விடாதீர்கள்! பிறகு நா.க.த வைக் கூட நாட்டை விட்டுக் கலைத்து விடுவார்கள்! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

முதல் தடவை எப்ப நிரூபிக்கப் பட்டது? (வடிவாக யோசித்துச் சொல்லுங்கோ!)😉

ம்கும் இப்ப்டி திடீர் என்று கேட்டால் என்னத்த மனுசன் சொல்லுவார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் பாத்து பாத்து ஓடியவர்களை இந்தியாவும், மற்றைய நாடுகளும் அழைத்து நடத்திய போரை தாங்கள் செய்ததாக வீராப்பு காட்டிவிட்டு, பின் உண்மையை ஒத்துக்கொண்டு அந்தந்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்து, உங்களின் உதவி இல்லாமல் இந்த போரை நாம் வென்றிருக்க முடியாது என்று இப்போதும் கூறுகிறார்கள். அந்த கணக்கில தான் கொரோனாவுக்கும் சவால் விட்டார்கள். இப்போ யாரும் கைகொடுக்க வரவில்லை தடுமாறுகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

கவனம் மக்காள்! நமக்குக் காண்டு இருக்கிற அமெரிக்காக் காரனைச் சுத்தி விட்டார்கள் என்ற புழுகத்தில் மனிதகுலத்திற்கே எதிரிகளான தலிபான்களை ஆதர்ச புருஷர்களாக ஏற்றுக் கொண்டு விடாதீர்கள்! பிறகு நா.க.த வைக் கூட நாட்டை விட்டுக் கலைத்து விடுவார்கள்! 😂

அது மட்டுமல்ல தமிழிச்சிகள் பாடசாலை வேலைக்கு போகாமல் புர்க்காவுடனும் வீட்டிற்குள் இருக்க வேண்டியும் தமிழன்கள் நீண்ட தாடியுடன் திரிய வேண்டிவரும் 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Justin said:

கவனம் மக்காள்! நமக்குக் காண்டு இருக்கிற அமெரிக்காக் காரனைச் சுத்தி விட்டார்கள் என்ற புழுகத்தில் மனிதகுலத்திற்கே எதிரிகளான தலிபான்களை ஆதர்ச புருஷர்களாக ஏற்றுக் கொண்டு விடாதீர்கள்! பிறகு நா.க.த வைக் கூட நாட்டை விட்டுக் கலைத்து விடுவார்கள்! 😂

நீங்கள் யாழ்வாசிகளை ஒருவிதமான மாயைக்குள் வைத்திருக்க விரும்புகிறீர்கள் ஆனால்  உங்களையும் உங்கள் கருத்துக்களுக்கும் மாறாகவும் உலகம் வெகு வேகமாக ஓடதொடங்கிவிட்டது அங்கு தலிபானுடன் உறவு வைத்துக்கொள்ள சைனாவும் ரஸ்யாவும் ஒத்தைக்காலில் நிக்கினம் என்ற வியப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன நீங்க என்னடானா பழைய உரலை இடித்து கொண்டு இருக்கிறீர்கள் .

https://www.trtworld.com/asia/china-open-to-deepening-taliban-ties-as-russia-keeps-diplomatic-comms-open-49219

இதற்க்கு பிறகும் வந்து பெற்றோமாக்ஸ் வேணுமெண்டால் ஒன்றும் செய்ய இயலாது .🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2021 at 05:23, Paanch said:

இலங்கையில் இராணுவமே இல்லையாம், யோசிப்பதற்கு என்ன உள்ளது.? 

 

 

சிவாஜிலிங்கம் எங்கை விளக்கேத்துகிறார்? பாதிரிமார் எங்கை நினைவுக்கல் வைக்கினம்? என்று திரிந்து விளக்கேத்துகிற கையை தட்டிவிடவும், கற்களை களவெடுக்கவும், நினைவுத்தூபிகளை உடைக்கவும் அலையினமே அன்றி கொரோனாவை கட்டுப்படுத்தவல்ல. வெளிநாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த என்று இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன. இவர்களோ சிறுபான்மையினரை அடக்கவும், அடிமைப்படுத்தவும் கொரோனவை பயன்படுத்துகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2021 at 04:17, Justin said:

முதல் தடவை எப்ப நிரூபிக்கப் பட்டது? (வடிவாக யோசித்துச் சொல்லுங்கோ!)😉

இன அழிப்பு இலங்கை இராணுவத்தை நான் சொன்னால் தங்களுக்கு ஏன் இவ்வளவு கோவம் பொத்துக்கொண்டு வருகுது? ஏதோ அவர்கள் செய்யாததை நான் சொன்னதுபோல் விளக்கம் கேட்டு, வியாக்கியானம் செய்து கொண்டு பலபேர்....... ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.