Jump to content

சிறுநீரகக் கல் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறுநீரகக் கல் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

image_ef134f18b6.jpg

அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும் குறித்து டொக்டர் ஐ. பிரபாத் விளக்குகிறார்

பெரிய கற்களைவிட, சிறு கற்கள் அதிக வலியைக் கொடுக்கும்.  வலி, ஊமை வலிபோல இருக்கலாம். அல்லது, திடீரென்று உருவாகி பொறுக்க முடியாத எல்லையைத் தொடலாம். உட்காரும் விதத்தாலும், வாகனங்களில் போகும்போதும் ஏற்படும் அசைவுகளாலும்  வலி ஏற்படலாம். வலி ஒரு சில மணி நேரங்களுக்குத் தொடரும்; அதன் பின் வலி நின்று விடலாம்.

சிறுநீரகத்தில் தோன்றும் கற்கள் முதலில் அதிகமாகவும் பின்பு குறைவாகவுமே வலியைத் தோன்றச் செய்யும். எங்கு கல் உருவாகி நிற்கிறதோ அந்தப் பக்கமே அடிவயிற்று வலி அதிகமாக இருக்கும். இடுப்பைச் சுற்றியும் அந்த வலி இருக்கும்.

சிறுநீர்ப் பையிலிருக்கும் கல் அடிவயிற்றில் வலியைக் கொடுக்கும். சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படும். பெரும்பாலும் இது ஆண்குறியின் நுனியில் ஏற்படும். திடீரென்று மிக அசாதாரண அடி வயிற்று வலியை அனுபவிப்பார்கள் என்று கூறுகிறார்  மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றும் டொக்டர் ஐ. பிரபாத் பத்திரன MBBS, MD, MRCS. சிறுநீரகக் கல் தொடர்பான இவருடனான உரையாலை கேள்வி-பதில் வடிவத்தில் கீழே தருகின்றோம்.

கேள்வி -  சிறுநீரகக் கற்கள் உண்டாகும் சந்தர்ப்பங்கள் எவை?

பதில்: சிறுநீரகக் கற்கள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீர் அருந்தாத தன்மையால் உடலில் ஏற்படுகின்ற வறட்சியின் காரணமாக கல் உருவாகின்றது. நாம் அருந்தும் தண்ணீரைப் பொறுத்தும் கற்கள் உருவாகக் காரணமாக அமைகின்றது. அதாவது, அந்தத் தண்ணீரில் கல்சியம் கூடுதலாக இருப்பதால் கற்கள் உருவாகின்றன. வெப்பம் அதிகமான பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு இந்தக் கற்கள் உருவாகக் காரணமாகிறது.

சிறுநீர் கழித்த பின்னர் சிறுநீர்ப் பையில் தேங்கி நிற்கின்ற சிறுநீராலும்  கற்கள் உருவாகின்றன. சிறுநீர் வருகின்ற பாதையில் ஏற்படுகின்ற தடையால் கற்கள் உருவாகின்றன. சிறுநீரகத்தில் ஏற்படுகின்ற நீண்டகால கிருமித் தொற்றுக்களாலும் கற்கள் உருவாகக்கூடிய தன்மையுள்ளது. விசேடமாக பரம்பரையாக இருப்பவர்களுக்கும் வம்சாவழியாக இது வரலாம்.

மேலும் உணவு, மாமிசத்தில் புரோட்டின் அதிகமாக இருந்தாலோ, சோடியம், ஓக்ஸலேட் அதிகமாக இருந்தாலோ, நார்ச்சத்து மிகக் குறைவாக இருந்தாலோ, பொட்டாசியம் அதிகமுள்ள பழங்களை உண்ணாமல் இருந்தாலோ கற்கள் உருவாகும். ஆண்களுக்கு பொதுவாக 20 வயதிலிருந்து 70 வயது வரையிலும், பருமனாக இருப்பவர்களுக்கும் மிகவும் எளிதாகக் கற்கள் உருவாகலாம். நீண்ட நாள்களுக்கு நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தாலும் கற்கள் உருவாகலாம்.

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, ஒட்டக இறைச்சி, மான் இறைச்சி, மரை இறைச்சி, பன்றி இறைச்சி போன்ற பல இறைச்சி வகைகளை மிக அதிகமாக உண்ணுவதன் மூலம் யூரிக் அசிட்  என்ற கற்கள்  உருவாகின்றன. மேலும், தக்காளிப்பழம் அதிகமாக சாப்பிடுகின்றவர்களுக்கு (ஓக்ஸலேட்) என்ற கற்கள் உருவாகக் காரணமாக அமைந்து விடுகின்றது.

கேள்வி - சிறுநீரகக் கற்கள் எங்கே உருவாகின்றன?

பதில்: கற்களின் உருவம், அளவு, வளரும் இடம் போன்றவற்றைப் பொறுத்தே அதன் அறிகுறிகளும், வலிகளும் காணப்படும். அதாவது, சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள், சிறுநீர்க் குழாயில் உண்டாகும் கற்கள், சிறுநீர்ப் பையில் உண்டாகும் கற்கள், சிறுநீர்ப் பாதையில் உண்டாகும் கற்கள் என நான்கு இடங்களில் இந்தக் கற்கள் உருவாகின்றன.

மிகக் கூடுதலாக சிறுநீரகத்தில்தான் கற்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் கற்கள் சிறுநீர்க் குழாயில், சிறுநீர்ப் பையில், சிறுநீர்ப் பாதையில் வருவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.

சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் பெரியளவிலான வலியை ஏற்படுத்துவதில்லை. இந்த வலி கூர்மையான வலி இல்லாமல், ஒரு மழுக்கமான வலியாகக் காணப்படும். இந்த வலி மிக நீண்டகாலமாக இருக்கும். இதை தாங்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றபடியால் அதனை அவர்கள் கணக்கில் எடுக்காமல் உதாசீனப்படுத்தியவர்களாக தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்வார்கள்.

இவ்வாறு உதாசீனப்படுத்திச் செல்லச் செல்ல சிறுநீரகத்தில் இருக்கின்ற கல் வளர்ந்துகொண்டே செல்லும். இதனால் கிருமித் தொற்று ஏற்படத் தொடங்கி, அது சிறுநீரகத்தை பாதிப்படையச் செய்துவிடும்.

இது இரண்டு பக்கமும் உள்ள சிறுநீரகத்தை கல் அடைக்குமாக இருந்தால் இரு சிறுநீரகத்தையும் பாதிப்படையச் செய்துவிடுவது. அது மாத்திரமல்லாமல் நீண்டகால சிறுநீரகப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடும். (சரியான சிகிச்சையை பெற்றுக்கொள்ளாவிட்டால்) சிறுநீரகக் குழாயில் உண்டாகும் கற்கள் தங்களால் தாங்க முடியாதளவு வலியை ஏற்படுத்திவிடும். இதைத் தாங்க முடியாதவர்கள்தான் வைத்தியசாலைக்கு உடனடியாக வருகை தருகின்றார்கள்.

இந்த வலியை யாரும் தாங்க மாட்டார்கள். இந்த வயிற்று வலி ஆணுறுப்பை அல்லது பெண்ணுறுப்பை நோக்கி பரவி வருவதுபோல் காணப்படும். அது மாத்திரமல்லாமல் வாந்தி வருவதுபோல் இருக்கும், சலத்துடன் இரத்தம் வெளியேறும், காய்ச்சல் வரும், காய்ச்சல் வருகின்ற சந்தர்ப்பமாக இருக்குமாக இருந்தால், இது சிறுநீரகத்தை பெரிதும் பாதிப்படையச் செய்துவிடும்.

image_aeb21a2bf3.jpg

சிறுநீர்ப் பையில் உண்டாகும் கற்களால் சிறுநீர் தடைப்பட்டு சிறுநீர் வெளியேற்றுவதைத் தடுக்கும். இதனால் சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியேறும். எமது சிறுநீர்ப் பையின் கீழாக ப்ரெஸ்றேட் என்ற சுரப்பி ஆண்களுக்கு காணப்படும். இது வயது செல்லச் செல்ல விரிவடையத் தொடங்கிவிடும். அதனால் சிறுநீர் வெளியேறும் பாதையை தடைசெய்துவிடுகின்றபோது சிறுநீர் சொட்டுச் சொட்டாகத்தான் வெளியேறும். மீதமானவை தேங்கி நிற்கின்றது. இதனாலும் கற்கள் உருவாகின்றன. இதற்குக் காரணம் ப்ரெஸ்றேட் வீங்குவதேயாகும். இது வயதானவர்களுக்கு மட்டும்தான் உருவாகும்.

ப்ரெஸ்றேட் வீக்கமானவர்கள் வைத்தியர்களை நாடிச் செல்வார்கள் அவர்களின் முறைப்பாடு எவ்வாறு இருக்கும் என்றால், சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியேறுகின்றது, ஒரு எரிவுத்தன்மையும் உருவாகின்றது, இடையிடையே அடைப்பும் ஏற்படுகின்றது என்று கூறுவார்கள்.     

சிறுநீர்ப் பாதையில் உண்டாகும் கற்கள் ஆணுறுப்பின் பாதையிலும், பெண்ணுறுப்பின் பாதையிலும் அடைத்துவிடும். அவ்வாறு அடைத்துவிட்டால் சிறுநீரை வெளியேற்ற முடியாது. யுரீத்ராவில் கற்கள் தடையாக உருவாகி விட்டாலோ அல்லது சிறுநீர் போய்க் கொண்டிருக்கும்பொழுது திடீரென்று நின்று விட்டாலோ சிறுநீர்ப் பையில் கற்கள் இருப்பதற்கான அடையாளங்களாகும்.

இவ்வாறு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் வழக்கமாக உடலைப் பரிசோதிக்கும்போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படலாம் அல்லது வேறு ஏதோ காரணத்திற்காக உடலை பரிசோதிக்கும்போதும் கண்டுபிடிக்கப்படலாம்.

சிறுநீரகத்தில் சிறிய கற்கள் இருக்குமாக இருந்தால் மருந்துகள் மூலம் அதனை வெளியேற்றக் கூடியதாக இருக்கும். பெரிய கற்களை அகற்றுவதாக இருந்தால் அதற்கு பல வகையான முறைகள் இருக்கின்றன. அதனடிப்படையில் எங்களின் சிகிச்சைகளை முன்னெடுப்போம்.

மருத்துவ உலகுக்கு மிக மிக அண்மையில் அறிமுகமான திறன்மிக்க இன்னும் ஒருமுறை இருக்கின்றது. அதன் மூலம் வெட்டுவதுமில்லை, துளையிடுவதுமில்லை. அது எவ்வாறென்றால், ESWL (Extra Coporeal Shock Wave Lithotripsy) என்ற கருவி மூலமாக கதிர்களை உட்செலுத்தி அதிர்வலைகள் ஊடாக கற்களை உடைத்து சிறுநீருடன் வெளியேற்றச் செய்யும் முறையாகும். இதன் மூலம் மிகப்பெரிய கற்களையோ அல்லது மிகச் சிறிய கற்களையோ உடைக்க முடியாது. ஓரளவான 1.5 சென்றி மீற்றருக்கும் குறைவான அளவுள்ள கற்களை மட்டுமே அகற்றலாம்.

தொழிநுட்பம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் உடலை அறுத்து செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகள் மிக மிகக் குறைந்து விட்டன. இப்போதெல்லாம் மிக அரிதாகவே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. மிகவும் சிக்கலான தருணங்களிலேயே முன்னெடுக்கப்படுகின்றது.

கேள்வி - சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் வழி முறைகள் என்ன?

பதில்: ஒவ்வொரு நாளும் ஆகக் குறைந்தது 3 லீற்றர் தண்ணீரை குடித்து வரவேண்டும், சிறுநீரை அடக்கி வைப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும், உரிய நேரத்துக்கு சிறுநீரை கழித்துவிடவேண்டும். இதை முறையாக நாம் செய்து வருவோமாக இருந்தால் சிறுநீரகத்தில் கற்கள் விளைவதை தடுத்துக்கொள்வதுடன் எமது சிறுநீரகத்தையும் பாதுகாத்து க்கொள்ளலாம்.  
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறுநீரகக்-கல்-அறிகுறிகளும்-தடுக்கும்-வழிகளும்/91-278752

 

Link to comment
Share on other sites

  • Replies 84
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

டெய்லி ஒரு பியராவது குடிச்சுக்கொண்டு வந்தால் உந்த கல்லு மண் எல்லாத்தையும் கிளீன் பண்ணுமெண்டு இவையள் ஜேர்மன்காரர் சொல்லுவினம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

டெய்லி ஒரு பியராவது குடிச்சுக்கொண்டு வந்தால் உந்த கல்லு மண் எல்லாத்தையும் கிளீன் பண்ணுமெண்டு இவையள் ஜேர்மன்காரர் சொல்லுவினம் 😎

எனது உறவினர் ஒருவர், ஊரில் தீராத முதுகு வலியால் அவதிப்படுவார். ஜேர்மன் வந்தார். முதுகு வலியுடன் ஜேர்மன் டாக்டரை பார்த்தார்.

டாக்குத்தர், எழும்பி நிக்கச்சொல்லி, ஒரு பொறுத்த இடத்தில் நாலு குத்து விட்டார்.... அதன் பிறகு வலியே இல்லை என்று சொல்லிக்கொண்டு திரியிறார். அவருக்கு முன்னர் இருந்த வலியும் அதாலை அவர் படுற பாடும் தெரியும் எண்ட படியால், இப்ப இல்லை எண்டு சொல்லுறதால நம்ப வேண்டி இருக்குது.

ஜேர்மன் டாக்குத்தர்மார் பெரும் விண்ணர்கள் போலை கிடக்குது.😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

எனது உறவினர் ஒருவர், ஊரில் தீராத முதுகு வலியால் அவதிப்படுவார். ஜேர்மன் வந்தார். முதுகு வலியுடன் ஜேர்மன் டாக்டரை பார்த்தார்.

டாக்குத்தர், எழும்பி நிக்கச்சொல்லி, ஒரு பொறுத்த இடத்தில் நாலு குத்து விட்டார்.... அதன் பிறகு வலியே இல்லை என்று சொல்லிக்கொண்டு திரியிறார். அவருக்கு முன்னர் இருந்த வலியும் அதாலை அவர் படுற பாடும் தெரியும் எண்ட படியால், இப்ப இல்லை எண்டு சொல்லுறதால நம்ப வேண்டி இருக்குது.

ஜேர்மன் டாக்குத்தர்மார் பெரும் விண்ணர்கள் போலை கிடக்குது.😎

 

நானும் போய் இரண்டு முரட்டுக்குத்து வாங்கத்தான் இருக்கு....

விலாசம்....விலாசம்......😁

Goundamani sentil mass comedy version 2.O -All in All AlaguRaja - YouTube

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பியரெல்லாம் விலை கூட! இளநி சொல்லி வேலையில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஏராளன் said:

பியரெல்லாம் விலை கூட! இளநி சொல்லி வேலையில்ல.

தேசிக்காய் மிகவும் மலிவு 1 கிலோ 50 ரூபா இங்க இளநீருக்குள் பிளிந்து விட்டு கொஞ்சம் சீனி போட்டு கலக்கி  குடித்தால் வேறு சுவையொன்று  

3 hours ago, குமாரசாமி said:

நானும் போய் இரண்டு முரட்டுக்குத்து வாங்கத்தான் இருக்கு....

விலாசம்....விலாசம்......😁

Goundamani sentil mass comedy version 2.O -All in All AlaguRaja - YouTube

வைத்தியர் ஆணா பெண்ணா என்பதை எங்களிடம் போகும் போது சொல்லவும் 

கேட் க சொன்னாங்கள் பின் வரிசையில் நிற்பவர்கள் 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சென்ற கிழமை இருநாட்கள் வைத்தியசாலையில் இருந்து சிறுநீரக கற்களை அகற்றிவிட்டு வந்தேன். அதன் வலி பிள்ளை பிரசவத்தை போல் இருந்தது.அதன் அனுபவத்தை யாரும் விரும்பினால் இங்கே சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

சென்ற கிழமை இருநாட்கள் வைத்தியசாலையில் இருந்து சிறுநீரக கற்களை அகற்றிவிட்டு வந்தேன். அதன் வலி பிள்ளை பிரசவத்தை போல் இருந்தது.அதன் அனுபவத்தை யாரும் விரும்பினால் இங்கே சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

சொல்லுங்கள் - ஏனையோருக்கு உதவும்! (தண்ணி - ஐ மீன் பச்சைத் தண்ணி😎- குடிக்கிறேல்லையோ?)

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2021 at 02:31, Justin said:

சொல்லுங்கள் - ஏனையோருக்கு உதவும்! (தண்ணி - ஐ மீன் பச்சைத் தண்ணி😎- குடிக்கிறேல்லையோ?)

சொன்னால் நம்ப மாட்டியள் கடந்த 25 வருடங்களாக தினசரி நான் குடிக்கும் தண்ணீர் அளவு இரண்டரை லீட்டர் தண்ணீர். காரணம் நான் எடுக்கும் மாத்திரைகளும் செய்யும் தொழிலுமாகும்.

இருந்தும் சிறு நீரகத்தில் கல்லு!

எனது கதையை சொல்கிறேன் கேளுங்கள்...

ஒரு நாள் மதிய வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு சோபாவில் சாய்ந்திருந்து யாழ்களைத்தை நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் போது கண்கள் அயர்ந்து தூங்கி விட்டேன். தூங்கி சிறிது நேரத்தில் அடி வயிற்றுப்பக்கம் இனம்புரியாத வலி லேசாக இருந்தது. சாப்பிட்ட பருப்பும் சோறும் வேலையை காட்டுது என இருந்து விட்டேன். இருந்தாலும் பின்னேர வேலைக்கு போக வேண்டி இருப்பதால் வலியையும் பொருட்படுத்தாமல் வேலைக்கு போய் விட்டேன்.  ஒரு ஏழு மணியளவில் வலி அதிகமாகிக்கொண்டுவருவதை உணர்ந்தேன்.அந்த நேரத்தில் என்னை அறியாமல் ஒரு பதட்டமும் வந்து விட்டது. சாதாரணமாக நான் பதட்டப்படுபவன் இல்லை. ஆனால் அப்படியொரு  வித்தியாசமான தன்னையறியாத பதட்டம் வரும் போது இரத்த அழுத்தமும் கூடிவிட்டது. ஒரு முறடு தண்ணீர் குடித்து விட்டு என் முதலாளியிடம் சென்று எனக்கு ஒரு மாதிரி இருக்கின்றது என சொல்லிவிட்டு கதிரையில் இருக்க முயற்சித்த போது இருக்க முடியவில்லை. அதன் வேர்த்து விறு விறுக்கை தரையிலேயே சாய்ந்து விட்டேன். மூச்சு எடுக்க முடியாத அளவிற்கு வேதனை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
 

உடனே முதலாளி அவசரசேவைக்கு தொடர்பு கொள்ள.....ஐந்து நிமிடத்தில் வந்து விட்டார்கள்.வந்த வுடன் அவர்கள் விசாரித்தது எங்கே வலி? கடைசியாக என்ன சாப்பிட்டீர்கள் என. நான் பருப்பும் சோறும் என்றவுடன் நக்கல் கலந்த சத்த சிரிப்புடன்..... மேலதிக சிகிச்சையை ஆரம்பித்தார்கள். வாயுபிரச்சனை என நினைத்து விட்டார்கள் போலும்...நானும் முதலில் அதைத்தான் நினைத்தேன்....

வேறு எதுவுமே கேட்காமல் என்னை அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி விட்டு கையில் ஊசி ஏற்றி அதன் மூலம் வலிக்கான மருந்தை ஏதோ இலக்கங்களை தங்களுக்குள் சொல்லி ஏற்றினார்கள்.அது சரி வராமல் போக அரை மயக்கத்திற்கு உங்களை கொண்டு செல்கிறோம்  என சொல்லி விட்டு வேறு ஒரு மருந்தை ஏற்றிய வண்ணம் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றார்கள்.

அங்கே போனதும் பிரசர் பார்த்தார்கள் நோர்மலாக இருந்தது.வலியும் குறைந்து விட்டது அல்லது தெரியவில்லை. சிறிது நேரத்தில் கங்காணி ஒருத்தர் வந்து வயித்திலை அங்கை இஞ்சை அமத்தி பார்த்தார்.அவருக்கும் விசயம் விளங்கேல்லை.மெயின் டாக்குத்தர் வெரி பிசி எண்ட படியாலை வாறவை போறவை எல்லாரும் அடிவயித்தை அமத்தி நோகுதோ...நோகுதோ எண்டு ஒரே அலுப்பு. முக்கியமாக கவனிக்கவும் ஒரு சிஸ்டர் கூட என்ரை அடி வயித்தை அமத்தி பாக்கேல்லை.....எல்லாம் முரட்டு சிங்கங்கள்...😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நேரத்தாலை மெயின் டாக்குத்தர் வந்தார் வயித்தை அமத்தி அமத்தி பாத்தார் ஒரு உடமும் நோவும் இல்லை குத்து வலியும் இல்லை...ultrasonic. மூலம் பார்த்தார்கள் ஒரு அறிகுறியும் அவர்களுக்கு தெரியவில்லை....அதன் பின் என்னை நோர்மல் வார்ட்டுக்கு அனுப்பி விட்டு இன்னும் பெரிய டாக்குத்தரிடம் பாரத்தை போட்டு விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சொன்னால் நம்ப மாட்டியள் கடந்த 25 வருடங்களாக தினசரி நான் குடிக்கும் தண்ணீர் அளவு இரண்டரை லீட்டர் தண்ணீர். காரணம் நான் எடுக்கும் மாத்திரைகளும் செய்யும் தொழிலுமாகும்.

இருந்தும் சிறு நீரகத்தில் கல்லு!

எனது கதையை சொல்கிறேன் கேளுங்கள்...

ஒரு நாள் மதிய வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு சோபாவில் சாய்ந்திருந்து யாழ்களைத்தை நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் போது கண்கள் அயர்ந்து தூங்கி விட்டேன். தூங்கி சிறிது நேரத்தில் அடி வயிற்றுப்பக்கம் இனம்புரியாத வலி லேசாக இருந்தது. சாப்பிட்ட பருப்பும் சோறும் வேலையை காட்டுது என இருந்து விட்டேன். இருந்தாலும் பின்னேர வேலைக்கு போக வேண்டி இருப்பதால் வலியையும் பொருட்படுத்தாமல் வேலைக்கு போய் விட்டேன்.  ஒரு ஏழு மணியளவில் வலி அதிகமாகிக்கொண்டுவருவதை உணர்ந்தேன்.அந்த நேரத்தில் என்னை அறியாமல் ஒரு பதட்டமும் வந்து விட்டது. சாதாரணமாக நான் பதட்டப்படுபவன் இல்லை. ஆனால் அப்படியொரு  வித்தியாசமான தன்னையறியாத பதட்டம் வரும் போது இரத்த அழுத்தமும் கூடிவிட்டது. ஒரு முறடு தண்ணீர் குடித்து விட்டு என் முதலாளியிடம் சென்று எனக்கு ஒரு மாதிரி இருக்கின்றது என சொல்லிவிட்டு கதிரையில் இருக்க முயற்சித்த போது இருக்க முடியவில்லை. அதன் வேர்த்து விறு விறுக்கை தரையிலேயே சாய்ந்து விட்டேன். மூச்சு எடுக்க முடியாத அளவிற்கு வேதனை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
 

உடனே முதலாளி அவசரசேவைக்கு தொடர்பு கொள்ள.....ஐந்து நிமிடத்தில் வந்து விட்டார்கள்.வந்த வுடன் அவர்கள் விசாரித்தது எங்கே வலி? கடைசியாக என்ன சாப்பிட்டீர்கள் என. நான் பருப்பும் சோறும் என்றவுடன் நக்கல் கலந்த சத்த சிரிப்புடன்..... மேலதிக சிகிச்சையை ஆரம்பித்தார்கள். வாயுபிரச்சனை என நினைத்து விட்டார்கள் போலும்...நானும் முதலில் அதைத்தான் நினைத்தேன்....

வேறு எதுவுமே கேட்காமல் என்னை அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி விட்டு கையில் ஊசி ஏற்றி அதன் மூலம் வலிக்கான மருந்தை ஏதோ இலக்கங்களை தங்களுக்குள் சொல்லி ஏற்றினார்கள்.அது சரி வராமல் போக அரை மயக்கத்திற்கு உங்களை கொண்டு செல்கிறோம்  என சொல்லி விட்டு வேறு ஒரு மருந்தை ஏற்றிய வண்ணம் வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றார்கள்.

அங்கே போனதும் பிரசர் பார்த்தார்கள் நோர்மலாக இருந்தது.வலியும் குறைந்து விட்டது அல்லது தெரியவில்லை. சிறிது நேரத்தில் கங்காணி ஒருத்தர் வந்து வயித்திலை அங்கை இஞ்சை அமத்தி பார்த்தார்.அவருக்கும் விசயம் விளங்கேல்லை.மெயின் டாக்குத்தர் வெரி பிசி எண்ட படியாலை வாறவை போறவை எல்லாரும் அடிவயித்தை அமத்தி நோகுதோ...நோகுதோ எண்டு ஒரே அலுப்பு. முக்கியமாக கவனிக்கவும் ஒரு சிஸ்டர் கூட என்ரை அடி வயித்தை அமத்தி பாக்கேல்லை.....எல்லாம் முரட்டு சிங்கங்கள்...😡

நோ (யை) எழுதுவதிலும் இவ்வளவு நகைச்சுவை கலந்து எழுதுவது 👌.

ஆஸ்பத்திரி போய் வந்தாலும் உந்த பிரச்சனை தொடரும் என நினைக்கிறேன். கவனமாக இருங்கள். தொடர்ந்து எழுதவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் காலமை சாப்பாடும் இல்லை தண்ணியும் இல்லை.வழமையா எடுக்கிற மருந்து மாத்திரையும் இல்லை பிரசரும் இல்லை...ஒரு ஒன்பது மணி போல பெரிய டாக்குத்தர் தன்ரை படை பரிவாரங்கள் சகிதம் என்னட்டை வந்தார்.எங்கை நோகுது வலிக்குது எண்டு கேட்டுட்டு சிறிலங்கா நிலவரம் விசாரிச்சார். எனக்கு ஒரே ஆச்சரியம் என்னெண்டு பக்கண நான் சிறிலங்கன் எண்டு கண்டு பிடிச்சார் எண்டு........கன கதையளுக்கு பிறகு சொன்னார் தன்னோடை படிச்ச இரண்டு பேர் தமிழ் ஆக்களாம்......👍
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி நாங்கள் எதுக்கும்  MRT எடுத்து பாப்பம் அதுக்கு பிறகு மிச்சத்தை யோசிப்பம் எண்ட மீனிங்கிலை சொல்லிப்போட்டு அவரும் போயிட்டார்.... நேரம் பதினொரு மணியாச்சு இவன் குமாரசாமிக்கு சாப்பாடுமில்லை தண்ணியுமில்லை.....ரெலிபோனிலை சார்ச்சும் மட்டு மட்டு...:(

இதுக்குள்ளை  நான் இருந்த செக்சனிலை ஒரு தமிழ் சிஸ்டரின்ரை எடுப்பு சொல்லி வேலையில்லை. அவவின்ரை புருசனும் நானும் ஒரே அசூல் காம்பிலை கியூவிலை நிண்ட ஆக்களெண்டது அவவின்ரை கதையிலை பக்கெண்டு பிடிச்சிட்டன்...நீங்கள் இன்னார்ரை மனிசிதானே எண்டவுடனை ஆள் கப்சிப்..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12 மணி போலை ஒரு பிரதர் வந்து என்னை கட்டிலோடை தள்ளிக்கொண்டு போய் வேறை ஒரு அறையிலை விட்டார். அங்கை MRT  எடுத்தினம். ஒரு கொஞ்ச நேரத்தாலை ஏதோ சீரியஸ் எண்டமாதிரி கிட்னியிலையும் கிட்னி குழாயிலையும் கல்லு புடிச்சிருக்கு உடனடியாய் வேறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறம்....இப்பிடியே விட்டால் கிட்னியை பழுதாக்கி போடும் உடனை ஏதாவது செய்யவேணும்.எனவே வேறை ஸ்பெசல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறம் எண்டு முடிவெடுத்தாச்சு.....கவனிக்கவும் மணி இரண்டாச்சு சோறுமில்லை தண்ணியுமில்லை...வாயெல்லாம் வரண்டு போச்சு😶

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே அம்புலன்ஸ்லை ஏத்தி பெரியாஸ்பத்திரிக்கு போக மணி 4 ஆச்சுது.....அதுக்கு பிறகு சட்டப்படி பேர் ஊர் விலாசம் எல்லாம் பதிஞ்சு முடிய  பெரிய டாக்குத்தர் வந்தார். இப்பவும் வலி ஏதும் இருக்கோ எண்டார்.....இருக்காது எண்டது அவர்ரை மன நிலைய நான் புரிஞ்சு கொண்டன். ஏனெண்டால் எனக்கு ஏத்தின மருந்தின்ரை பவர் அப்படி....சொன்னால் நம்ப மாட்டியள் எனக்கு 16வயது பீலிங்.....உடம்பு காத்து மாதிரி இருந்துது.

சரி விசயத்துக்கு வருவம்....

நான் நினைச்சன் இவையள் இப்பவே ஒப்பிரேசன் செய்யப்போயினம் எண்டு....அதுதான் இல்லை . இப்ப என்ன செய்யப்போறம் எண்டதை சொல்ல இன்னொரு டாக்குத்தர் வந்தார். ஒரு சிறிய கணணி திரையில் படங்கள் மூலம் அனைத்தையும் விளக்கப்படுத்தினார்....

அதாவது சுருக்கமாக சொல்லப்போனால் கிட்னி கல் எடுப்பற்கான அனைத்து செயல்களும் எம் பெருமான் சிவலிங்கத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்போகின்றார்கள்....அதன் ஆரம்ப கட்டமாக DJ எனப்படும் பொருளை உள்ளே செலுத்தி....

 

இதுதான் உள்ளுக்குள் செலுத்தப்பட்ட DJ

X-ray (AP view) showing the DJ stent marked as S and the stone is shown...  | Download Scientific Diagram

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கங்கள் முடிய மயக்க மருந்து ஏற்றும் டாக்குத்தர் வந்தார். அவரும் தன் பங்குக்கிற்கு பல விளக்கங்களை தந்தார்.. எல்லாம் முடிய மாலை ஆறு மணியளவில் எனது கிட்னியை நோக்கி DJ செலுத்தப்பட்டது.அது கிட்டத்தட்ட நான்கு கிழமைகள் உடலுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமாம். அது தரும் அவதி கொஞ்ச நஞ்சமல்ல.....இயற்கையாக இருப்பதை விட ஏதோ இனம்புரியாத இடைஞ்சல் இருந்து கொண்டேயிருக்கும்.தினசரி 3  வலி மாத்திரைகள் எடுத்தாலும் ஒரு வித உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருக்கும்.போனால் வாறமாதிரி இருக்கும் ஆனால் வராது.பெலிட்டை களட்டி ரவுசரை கீழை இறக்கினதுதான் மிச்சம்.    இதுக்கை வேறை ஒண்டுக்கு போகோணும் எண்டால் இருந்துதான் போகோணும் எண்ட அறிவுரை வேறை.....ஒவ்வொருக்காலும் யூறின் போகும் போது சகல கடவுள்களும் கண்முன்னே  வந்து செல்வார்கள்.சில நேரம் வலி சொல்ல முடியாத வலி.சுவரில் தலையை இடிக்க வேண்டும் போலிருக்கும்.

இது கிட்னி கல்லின் வேதனையை அனுபவித்த பெண் சொன்னது......கிட்னி கல்லின் வேதனை ஒரு பிரசவ வலியை விட மேலானதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பியர் ரின் காலியானதால் மிகுதி இன்னொருநாள் தொடரும். :cool:

 அப்போது சிறுநீரக கல்லுக்கும் இன்னொரு வலிக்குமான தொடர்பை சொல்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது.. ஒரே குடிகார திரியா இருக்கு..? 🤣

அதிகாலையில எழுந்தவுடன் பார்த்த திரியே இப்படியென்றால்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

விளக்கங்கள் முடிய மயக்க மருந்து ஏற்றும் டாக்குத்தர் வந்தார். அவரும் தன் பங்குக்கிற்கு பல விளக்கங்களை தந்தார்.. எல்லாம் முடிய மாலை ஆறு மணியளவில் எனது கிட்னியை நோக்கி DJ செலுத்தப்பட்டது.அது கிட்டத்தட்ட நான்கு கிழமைகள் உடலுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமாம். அது தரும் அவதி கொஞ்ச நஞ்சமல்ல.....இயற்கையாக இருப்பதை விட ஏதோ இனம்புரியாத இடைஞ்சல் இருந்து கொண்டேயிருக்கும்.தினசரி 3  வலி மாத்திரைகள் எடுத்தாலும் ஒரு வித உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருக்கும்.போனால் வாறமாதிரி இருக்கும் ஆனால் வராது.பெலிட்டை களட்டி ரவுசரை கீழை இறக்கினதுதான் மிச்சம்.    இதுக்கை வேறை ஒண்டுக்கு போகோணும் எண்டால் இருந்துதான் போகோணும் எண்ட அறிவுரை வேறை.....ஒவ்வொருக்காலும் யூறின் போகும் போது சகல கடவுள்களும் கண்முன்னே  வந்து செல்வார்கள்.சில நேரம் வலி சொல்ல முடியாத வலி.சுவரில் தலையை இடிக்க வேண்டும் போலிருக்கும்.

இது கிட்னி கல்லின் வேதனையை அனுபவித்த பெண் சொன்னது......கிட்னி கல்லின் வேதனை ஒரு பிரசவ வலியை விட மேலானதாம்.

அண்ணை நல்லா பயப்பிடுத்தி போட்டியள் என்னை. 

ஆம்பிளையா பிறந்ததால உந்த பிரசவலியில இருந்து எஸ்கேப் என நினைத்திருந்தேன். 

இது வராமல் தடுக்க வழியுண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ கு.சா அங்கிள்/தாத்தா/ப்ரோ, 🌹

இளவயதில் இந்த குடி, சிகரெட் போன்ற பழக்ககங்களால் எப்படி ஈர்க்கப்படுகிறார்கள்..? அல்லது இவற்றை நாட எவை தூண்டுகின்றன..? என அனுபவத்தில் அறிந்ததை சொன்னால், இளம் தலைமுறையினர் அவற்றை தவிர்க்க ஏதுவாக இருக்கும். பின்னாளில் உடல் வருத்தங்கள் இல்லாமல் வாழ வழி சமைக்கும்..

செய்வீர்களா...? செய்வீர்களா..?? 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அடுத்த நாள் காலமை சாப்பாடும் இல்லை தண்ணியும் இல்லை.வழமையா எடுக்கிற மருந்து மாத்திரையும் இல்லை பிரசரும் இல்லை...ஒரு ஒன்பது மணி போல பெரிய டாக்குத்தர் தன்ரை படை பரிவாரங்கள் சகிதம் என்னட்டை வந்தார்.எங்கை நோகுது வலிக்குது எண்டு கேட்டுட்டு சிறிலங்கா நிலவரம் விசாரிச்சார். எனக்கு ஒரே ஆச்சரியம் என்னெண்டு பக்கண நான் சிறிலங்கன் எண்டு கண்டு பிடிச்சார் எண்டு........கன கதையளுக்கு பிறகு சொன்னார் தன்னோடை படிச்ச இரண்டு பேர் தமிழ் ஆக்களாம்......👍
 

பருப்பும் சோறும் தான் சிறிலங்கன் என்றதை காட்டிக் கொடுத்திருக்கு.

2 hours ago, குமாரசாமி said:

அப்பிடியே அம்புலன்ஸ்லை ஏத்தி பெரியாஸ்பத்திரிக்கு போக மணி 4 ஆச்சுது.....அதுக்கு பிறகு சட்டப்படி பேர் ஊர் விலாசம் எல்லாம் பதிஞ்சு முடிய  பெரிய டாக்குத்தர் வந்தார். இப்பவும் வலி ஏதும் இருக்கோ எண்டார்.....இருக்காது எண்டது அவர்ரை மன நிலைய நான் புரிஞ்சு கொண்டன். ஏனெண்டால் எனக்கு ஏத்தின மருந்தின்ரை பவர் அப்படி....சொன்னால் நம்ப மாட்டியள் எனக்கு 16வயது பீலிங்.....உடம்பு காத்து மாதிரி இருந்துது.

சரி விசயத்துக்கு வருவம்....

நான் நினைச்சன் இவையள் இப்பவே ஒப்பிரேசன் செய்யப்போயினம் எண்டு....அதுதான் இல்லை . இப்ப என்ன செய்யப்போறம் எண்டதை சொல்ல இன்னொரு டாக்குத்தர் வந்தார். ஒரு சிறிய கணணி திரையில் படங்கள் மூலம் அனைத்தையும் விளக்கப்படுத்தினார்....

அதாவது சுருக்கமாக சொல்லப்போனால் கிட்னி கல் எடுப்பற்கான அனைத்து செயல்களும் எம் பெருமான் சிவலிங்கத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்போகின்றார்கள்....அதன் ஆரம்ப கட்டமாக DJ எனப்படும் பொருளை உள்ளே செலுத்தி....

 

இதுதான் உள்ளுக்குள் செலுத்தப்பட்ட DJ

X-ray (AP view) showing the DJ stent marked as S and the stone is shown...  | Download Scientific Diagram

எங்க வெறும் கம்பி தான் தெரியுது.
சிவலிங்கத்தைக் காணேல.
ஒருவேளை இனி தேவையில்லை என்று வெட்டிப் போட்டாங்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பருப்பும் சோறும் தான் சிறிலங்கன் என்றதை காட்டிக் கொடுத்திருக்கு.

எங்க வெறும் கம்பி தான் தெரியுது.
சிவலிங்கத்தைக் காணேல.
ஒருவேளை இனி தேவையில்லை என்று வெட்டிப் போட்டாங்களோ?

சிவலிங்கம் பத்திரமா மூலஸ்தானத்தில இருக்குது…!

கல்லு எங்க உருவாகி….எந்தப் பாதை வழியாகப் பயணித்திருக்கிறது எஅண்டு கோடு காட்டுது….!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புங்கையூரன் said:

சிவலிங்கம் பத்திரமா மூலஸ்தானத்தில இருக்குது…!

கல்லு எங்க உருவாகி….எந்தப் பாதை வழியாகப் பயணித்திருக்கிறது எஅண்டு கோடு காட்டுது….!

ஓ சரி சரி

நான் நினைச்சன் இனி தேவையில்லை என்று எடுத்துட்டாங்கள் என்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.