Jump to content

சிறுநீரகக் கல் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தக்காளி பழத்தை விதையுடன் சேர்த்து சாலட்டில் உபயோகிப்பதாலும், கறிசமைக்க பயன்படுத்துவதாலும்   சிறுநீரகக்கல் வரலாமென்பது உண்மையா!!

Link to comment
Share on other sites

  • Replies 84
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

ஊரில் உங்கள் கிணற்றுத் தண்ணீரையும், உங்கள் சிறு நீரகக் கல்லையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விடை கிடைக்கலாம்..!

எனது ஊர் தண்ணீர் தெளிந்த நீர். நிலம் தெரியும்.
கல்லின் நிறம் கறுப்பு 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2021 at 02:21, குமாரசாமி said:

பியர் ரின் காலியானதால் மிகுதி இன்னொருநாள் தொடரும். :cool:

 அப்போது சிறுநீரக கல்லுக்கும் இன்னொரு வலிக்குமான தொடர்பை சொல்கிறேன். :)

எனக்கு நீண்ட காலமாக இடுப்பு வலி/நாரிப்பிடிப்பு  இருந்தது. இது இளமைக்காலங்களிலிருந்து(20,25) என்று கூட சொல்லலாம். இடுப்பு வலியால் நான் இருக்குமிடத்தில் போகாத வைத்திய நிலையங்களே இல்லை. பல ஸ்கேன் உட்பட MRT வரைக்கும் போய் வந்துள்ளேன். MRTயில் கூட முதுகுதண்டில் கொஞ்ச வளைவு உள்ளதாகவும் அதற்காக சத்திரசிச்சை ஏதும் தேவையில்லை எனவும் கூறினார்கள்.வலி வரும் நேரங்களில் அவ்வப்போது வலி நிவாரண மாத்திரைகளும் மசாஜ்களும் போதுமானது என கூறி விட்டார்கள். சரி இதுதான் என் வாழ்க்கை என என்னை நானே சுதகரித்துக்கொண்டு என் வாழ்க்கையை தொடர்ந்தேன்.அவ்வப்போது நாரிப்பிடிப்பு வர வைத்தியரிடம் சென்று தைலங்களும் மாத்திரைகளும் வாங்குவதே தொடர்கதையாக இருந்தது.

இடுப்பு வலியால் எனது படுக்கையை கூட பலமுறை மாற்றியுள்ளேன். நான் படுக்கும் மெத்தையின் விலை 1500 ஈரோ வரைக்கும் இருந்துள்ளது.எனது இடுப்பு வலியால் வீட்டு சோபா மற்றும் நான் இருக்கும் கதிரைகளை கூட மாற்றியிருக்கின்றேன்.நான் பாவிக்கும் சப்பாத்துக்கள் கூட இடுப்பு வலிகாரர்களுக்கான சாப்பாத்துக்களையே வாங்கி பாவித்தேன். அதிக நேரம் நின்று வேலை செய்வதால் தான் இடுப்பு வலி என நினைத்து நின்று வேலை செய்பவர்களுக்கான சப்பாத்துக்களையே வாங்கி பாவித்தேன்.

இருந்தும் என் அவ்வப்போது வரும் இடுப்பு வலியில் எவ்வித மாற்றமும் இல்லை.

சிறு வயதில் நாவல்பழம் புடுங்க மரத்தின் மேல் ஏறி கொப்பு தாவி ஏறும் போது கீழே இடுப்படி பட விழுந்ததின் காரணம்தான் எனக்கு நானே நினைத்து இனி இதுதான் என் வாழ்க்கை என முடிவுக்கு வந்து விட்டேன்.

 

கண் கூசுவதால் ஒரு சிறிய இடை வேளை....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

கண் கூசுவதால் ஒரு சிறிய இடை வேளை....🤣

பல வருடங்களுக்கு மேலாக இருந்த இடுப்புவலி சிறுநீரக கல் எடுத்தபின் நீங்கி விட்டதாக தெரிகின்றது.நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. இருந்தாலும் இப்போதைய நிலமையில் முன்னர் இருந்த இடுப்பு வலி இல்லை என தோன்றுகின்றது. நாளைய பொழுது எப்படியிருக்கும் என யாரறிவார்.

நான் இங்கே எழுதியது பலருக்குபிரயோசனப்படும் என நினைக்கின்றேன். எனது ஒரு சிறிய அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கின்றேன்.விளாவரியாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக  சொல்லி முடித்திருக்கின்றேன்.

நான் எழுதியதை விரும்பி வாசித்தவர்களுக்கு நன்றி. ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். நான் எழுத தவறியதை எழுத உதவியாக இருக்கும்.

நன்றியுடன் கலந்த வணக்கங்கள்.🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

பல வருடங்களுக்கு மேலாக இருந்த இடுப்புவலி சிறுநீரக கல் எடுத்தபின் நீங்கி விட்டதாக தெரிகின்றது.நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. இருந்தாலும் இப்போதைய நிலமையில் முன்னர் இருந்த இடுப்பு வலி இல்லை என தோன்றுகின்றது. நாளைய பொழுது எப்படியிருக்கும் என யாரறிவார்.

நான் இங்கே எழுதியது பலருக்குபிரயோசனப்படும் என நினைக்கின்றேன். எனது ஒரு சிறிய அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கின்றேன்.விளாவரியாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக  சொல்லி முடித்திருக்கின்றேன்.

நான் எழுதியதை விரும்பி வாசித்தவர்களுக்கு நன்றி. ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். நான் எழுத தவறியதை எழுத உதவியாக இருக்கும்.

நன்றியுடன் கலந்த வணக்கங்கள்.🙏

இடுப்பு வலி போனது மகிழ்ச்சி தான்..! இருந்தாலும் எங்கயோ தட்டப் பல்லு விழுந்தது மாதிரிக் கிடக்குது..! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எனது ஊர் தண்ணீர் தெளிந்த நீர். நிலம் தெரியும்.
கல்லின் நிறம் கறுப்பு 😀

வவுனியா பக்கம் தண்ணீர் குடித்தால் சிலருக்கு சலகடுப்பு ஏற்படுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.

1 hour ago, குமாரசாமி said:

எனக்கு நீண்ட காலமாக இடுப்பு வலி/நாரிப்பிடிப்பு  இருந்தது. இது இளமைக்காலங்களிலிருந்து(20,25) என்று கூட சொல்லலாம்.

ஓஓஓ அதுவா

விந்து விட்டார்
நொந்து கெட்டார்.

1 hour ago, குமாரசாமி said:

பல வருடங்களுக்கு மேலாக இருந்த இடுப்புவலி சிறுநீரக கல் எடுத்தபின் நீங்கி விட்டதாக தெரிகின்றது.நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. இருந்தாலும் இப்போதைய நிலமையில் முன்னர் இருந்த இடுப்பு வலி இல்லை என தோன்றுகின்றது. நாளைய பொழுது எப்படியிருக்கும் என யாரறிவார்.

நான் இங்கே எழுதியது பலருக்குபிரயோசனப்படும் என நினைக்கின்றேன். எனது ஒரு சிறிய அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கின்றேன்.விளாவரியாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக  சொல்லி முடித்திருக்கின்றேன்.

நான் எழுதியதை விரும்பி வாசித்தவர்களுக்கு நன்றி. ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். நான் எழுத தவறியதை எழுத உதவியாக இருக்கும்.

நன்றியுடன் கலந்த வணக்கங்கள்.🙏

பலருக்கு பேதி கொடுத்திருக்கிறீர்கள்.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

இடுப்பு வலி போனது மகிழ்ச்சி தான்..! இருந்தாலும் எங்கயோ தட்டப் பல்லு விழுந்தது மாதிரிக் கிடக்குது..! 😊

வெர்லி(யால) பாயேக்க விழுந்ததில நாரி நொந்துபோச்செண்டத மாத்தி நாக்கூசாம பொய் சொல்லுறார் குசாமியர்.

🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

வெர்லி(யால) பாயேக்க விழுந்ததில நாரி நொந்துபோச்செண்டத மாத்தி நாக்கூசாம பொய் சொல்லுறார் குசாமியர்.

🤪

இவனுகளோட கூட்டு வைச்சிக்கிட்டு மனிசன் படுற பாடு இருக்கே சொல்லி வேலையில்ல...😁

 

Bild

நான் பவ்வியமாய் வாழ்பவன்:cool:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

பல வருடங்களுக்கு மேலாக இருந்த இடுப்புவலி சிறுநீரக கல் எடுத்தபின் நீங்கி விட்டதாக தெரிகின்றது.நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. இருந்தாலும் இப்போதைய நிலமையில் முன்னர் இருந்த இடுப்பு வலி இல்லை என தோன்றுகின்றது. நாளைய பொழுது எப்படியிருக்கும் என யாரறிவார்.

நான் இங்கே எழுதியது பலருக்குபிரயோசனப்படும் என நினைக்கின்றேன். எனது ஒரு சிறிய அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கின்றேன்.விளாவரியாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக  சொல்லி முடித்திருக்கின்றேன்.

நான் எழுதியதை விரும்பி வாசித்தவர்களுக்கு நன்றி. ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். நான் எழுத தவறியதை எழுத உதவியாக இருக்கும்.

நன்றியுடன் கலந்த வணக்கங்கள்.🙏

ஐ ஹாவ் எ கொஸ்டீன் யுவர் ஆனர்,

இந்த இடுப்பு வலி எண்டு நீங்கள் சொல்வது சயாடிக்காவையா? (முன்னர் ஒரு தரம் அக்குபங்சர் திரியில் இதனால் அவதிபடுவதாக சொன்ன நியாபகம்).

எனக்கும் சயாடிக்கா போல் வலிக்கும் (self diagnosis தான்) - இடைகிடை பேக் சைடில் இருந்து, தொடை முழங்கால் வரை நோகும். அநேகமா பெயின் கில்லர் தேவைப்படாது. சிலசமயம் தாங்க முடியாது போனால் எடுப்பேன். ஒரு பக்கம் மாறி, மறு பக்கம் வரும். பிறகு தானாக நிற்கும்.

Manual காரில் அடிக்கடி கியர் மாத்தி ஓடினால் சுகம் ஆகுவது போல் ஒரு பீலிங்.

இதைத்தான் நீங்களும் சொல்கிறீர்களா? அல்லது வேற வகை நோவா?

 

On 21/12/2021 at 14:57, Justin said:

சரி, உங்களுக்கு மருந்துகளால் தான் கல் வந்தது என்ற சந்தேகம் தலை தூக்கி விட்டது என நினைக்கிறேன்.

மருத்துவர் சொன்னது போல, அப்படி கல் உருவாக்கும் சில மருந்துகள் உண்டு, ஆனால் இரத்த அழுத்த மாத்திரை, கொழுப்புக் குறைக்கும்/நீரிழிவு மருந்துகளில் அந்தப் பக்க விளைவு இல்லை, அவர் சொன்னது சரியானதே! 

பின் வரும் நான்கு வகையான கற்களில் எந்த வகை என்று உங்கள் அறிக்கையில் இருக்கிறதா என்று ஒரு தடவை பார்த்துச் சொல்ல முடியுமா? (கல் வகையை வைத்து என்ன நடந்திருக்கிறது என ஓரளவு புரிந்து கொள்ளலாம்):

1. ஒக்சலேற் -oxalate (மிக அதிகமானோருக்கு வருவது)
2. யூறேற் -Urate (இரண்டாவது மிக அதிகமாக வரும் கல்)
3. ஸ்ருவைற்-Struvite  (மிக அரிது)
4. சிஸ்ரின் - Cystine (மிக அரிது)

அண்ணா,

பொதுவாக எந்த வகை மருந்துகள் இந்த கல்லை உருவாக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

 

அண்ணா,

பொதுவாக எந்த வகை மருந்துகள் இந்த கல்லை உருவாக்கும்?

கோசான், பொதுவாக எங்கள் சிறு நீரகத்தில் வடிகட்டலைப் பாதிக்கும் மருந்துகள் சிறு நீரைச் செறிவாக்கி ( கற்களை உருவாக்கும் ஆபத்தைக் கூட்டும் (ஆனால், தண்ணீரை போதியளவு குடித்து hydration ஐப் பேணினால் இந்த ஆபத்தையும் குறைக்கலாம்). இப்படிக் கல் தரும் மருந்து வகைகள் சில:

 1. சிறுநீர் கழிப்பூக்கிகள்(diuretics): இவை சிறு நீர் கழிவதை அதிகரிக்கும் மருந்துகள்.

  உதாரணம்: furosemide 

2. வேறு சில மருந்துகள், சிறு நீரின் அமில காரத்தன்மையை (pH) மாற்றுவதால் கல் உருவாகும் நிலைமையை அதிகரிப்பவை: 

உதாரணம்: சில வலிப்பு எதிர்ப்பான் மருந்துகள் (anti-epileptics): Topiramate, acetazolamide, Zonisamide

3.  சில மருந்துகள் , எங்கள் ஈரலினால் சுத்திகரிக்கப் படும்போது உருவாகும் பக்க விளைவுப் பொருட்கள் சிறு நீரில் செறிவானால், அந்தப் பக்க விளைவுப் பொருட்களே கற்களை உருவாக்கும்:

சில உதாரணங்கள்:

சிப்றோ வகை நுண்ணுயிர் கொல்லிகள் (ciprofloxacin) 

சல்பா வகை நுண்ணுயிர் கொல்லிகள் (sulfamethoxazole) 

இந்தினாவிர் (Indinavir) என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து (எச்.ஐ.வி நோயாளிகளில் பாவிப்பது)

ஆனால், இந்த மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளாக சிறுநீரகக் கல் இருப்பதால், மருந்தைத் தரும் போதே உங்களுக்கு இது பற்றிய எச்சரிக்கையையும் தருவார்கள்: தண்ணீர் நன்கு குடிக்க வேண்டும், வேறு சிறு நீரக வடிகட்டலைப் பாதிக்கும் மருந்துகளோடு சேர்த்து எடுக்கக் கூடாது, போன்ற ஆலோசனைகள் தரப்படும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

எனது ஊர் தண்ணீர் தெளிந்த நீர். நிலம் தெரியும்.
கல்லின் நிறம் கறுப்பு 😀

எல்லாம் சரி, சுடுதண்ணி வைச்சால் கேற்றிலில் கல்சியம் படியிறதா? இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Justin said:

கோசான், பொதுவாக எங்கள் சிறு நீரகத்தில் வடிகட்டலைப் பாதிக்கும் மருந்துகள் சிறு நீரைச் செறிவாக்கி ( கற்களை உருவாக்கும் ஆபத்தைக் கூட்டும் (ஆனால், தண்ணீரை போதியளவு குடித்து hydration ஐப் பேணினால் இந்த ஆபத்தையும் குறைக்கலாம்). இப்படிக் கல் தரும் மருந்து வகைகள் சில:

 1. சிறுநீர் கழிப்பூக்கிகள்(diuretics): இவை சிறு நீர் கழிவதை அதிகரிக்கும் மருந்துகள்.

  உதாரணம்: furosemide 

2. வேறு சில மருந்துகள், சிறு நீரின் அமில காரத்தன்மையை (pH) மாற்றுவதால் கல் உருவாகும் நிலைமையை அதிகரிப்பவை: 

உதாரணம்: சில வலிப்பு எதிர்ப்பான் மருந்துகள் (anti-epileptics): Topiramate, acetazolamide, Zonisamide

3.  சில மருந்துகள் , எங்கள் ஈரலினால் சுத்திகரிக்கப் படும்போது உருவாகும் பக்க விளைவுப் பொருட்கள் சிறு நீரில் செறிவானால், அந்தப் பக்க விளைவுப் பொருட்களே கற்களை உருவாக்கும்:

சில உதாரணங்கள்:

சிப்றோ வகை நுண்ணுயிர் கொல்லிகள் (ciprofloxacin) 

சல்பா வகை நுண்ணுயிர் கொல்லிகள் (sulfamethoxazole) 

இந்தினாவிர் (Indinavir) என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து (எச்.ஐ.வி நோயாளிகளில் பாவிப்பது)

ஆனால், இந்த மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளாக சிறுநீரகக் கல் இருப்பதால், மருந்தைத் தரும் போதே உங்களுக்கு இது பற்றிய எச்சரிக்கையையும் தருவார்கள்: தண்ணீர் நன்கு குடிக்க வேண்டும், வேறு சிறு நீரக வடிகட்டலைப் பாதிக்கும் மருந்துகளோடு சேர்த்து எடுக்கக் கூடாது, போன்ற ஆலோசனைகள் தரப்படும்!

நன்றி அண்ணா🙏🏾🙏🏾🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

நான் இங்கே எழுதியது பலருக்குபிரயோசனப்படும் என நினைக்கின்றேன். எனது ஒரு சிறிய அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கின்றேன்.விளாவரியாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக  சொல்லி முடித்திருக்கின்றேன்.

 

நன்றி கு.சா. ஐயா! மிகவும் பிரயோசனமான பதிவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எனக்கும் சயாடிக்கா போல் வலிக்கும் (self diagnosis தான்) - இடைகிடை பேக் சைடில் இருந்து, தொடை முழங்கால் வரை நோகும்.

எனக்கு sciatica மூன்று வருடங்களுக்கு முன்னர் மோசமாக இருந்தது. தினமும் 3 மணி நேரம் காரில் பயணிப்பதும், வேலையில் தொடர்ந்து இருப்பதும் வரக் காரணமானது என்று நினைக்கின்றேன். இடுப்புவலி பெரிதாக இருக்கவில்லை. ஆனால் ஒரு பக்கக் காலில், தொடையில் விறைப்பு வந்தது.

பிஸியோவிடம் போனால் சில பயிற்சிகளைச் செய்யச் சொன்னார். 24 kg kettlebell (நோமலாக டெட்வெயிற் தூக்கப் பாவிப்பது) ஐ வாங்கி இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு முன்னும் பின்னுமாக (கால்களுக்கிடையாக) ஸ்விங் பண்ணச் சொன்னார்.  ஒற்றைக் கையால் மாறி மாறி உயர்த்தச் சொன்னார். 24kg ஐ 30 தரம் தூக்கிச் சுழற்ற சாப்பிட்டதெல்லாம் செமிச்சுவிடும்!

அது உதவியதோ அல்லது எனது வேகநடை உதவியதோ, அல்லது வீக்கெண்ட் ஸூமில் செய்யும் ஃபிற்னெஸ் + யோகா (மாஸ்ரர் பின்னி பெடல் எடுத்த்துவிடுவார்)உதவியதோ, அல்லது கார்ப்பயணம் இல்லாமல் வீட்டில் இருந்து வேலை செய்வது உதவியதோ, அல்லது எல்லாம் சேர்ந்து உதவியதோ தெரியாது. இப்போது சியாட்டிகா இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரயோசனமான பதிவு கு.சா......மிகவும் நன்றி, கவனமாக இருங்கள்......!   👍

பல ஆலோசனைகள் தந்த ஜஸ்டினுக்கும் மிகவும் நன்றி .....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஐ ஹாவ் எ கொஸ்டீன் யுவர் ஆனர்,

கோடு, கச்சேரி பொலிஸ் ஸ்ரேசன் எண்டு அலைஞ்சால் உந்த வசனம் பக்கெண்டு வரும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

 ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். நான் எழுத தவறியதை எழுத உதவியாக இருக்கும்.

நன்றியுடன் கலந்த வணக்கங்கள்.🙏

போதும்..போதும்.. இதுக்கு மேல வேணாம் சாமி..🙏... மரணபயத்த காட்டிட்டீங்க..😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இந்த இடுப்பு வலி எண்டு நீங்கள் சொல்வது சயாடிக்காவையா? (முன்னர் ஒரு தரம் அக்குபங்சர் திரியில் இதனால் அவதிபடுவதாக சொன்ன நியாபகம்).

எனக்கும் சயாடிக்கா போல் வலிக்கும் (self diagnosis தான்) - இடைகிடை பேக் சைடில் இருந்து, தொடை முழங்கால் வரை நோகும். அநேகமா பெயின் கில்லர் தேவைப்படாது. சிலசமயம் தாங்க முடியாது போனால் எடுப்பேன். ஒரு பக்கம் மாறி, மறு பக்கம் வரும். பிறகு தானாக நிற்கும்.

Manual காரில் அடிக்கடி கியர் மாத்தி ஓடினால் சுகம் ஆகுவது போல் ஒரு பீலிங்.

இதைத்தான் நீங்களும் சொல்கிறீர்களா? அல்லது வேற வகை நோவா?

எனக்கு முழங்கால் பிரச்சனையால் தான் கால் முழுவதும் பிரச்சனை இருக்கின்றது.

ஆனால் எனக்கு நிரந்தர இடுப்புவலி ஒன்று இருந்தது.....அது தற்போது இல்லை. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2021 at 14:27, பாலபத்ர ஓணாண்டி said:

வேணாம் சாமி.. இதுக்கு மேல வேணாம்..🙏... மரணபயத்த காட்டிட்டீங்க..😂😂

என்னட்டை இன்னும் கேஸ் இருக்கு அவுட்டு விடட்டா? ஒண்டு இருதயம் மற்றது இரண்டு முழங்கால் சில்லு....😎 வசதி எப்பிடி?

எல்லாம் இந்த பாழாய்ப்போன வேலையாலை வந்தது.🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எனக்கு sciatica மூன்று வருடங்களுக்கு முன்னர் மோசமாக இருந்தது. தினமும் 3 மணி நேரம் காரில் பயணிப்பதும், வேலையில் தொடர்ந்து இருப்பதும் வரக் காரணமானது என்று நினைக்கின்றேன். இடுப்புவலி பெரிதாக இருக்கவில்லை. ஆனால் ஒரு பக்கக் காலில், தொடையில் விறைப்பு வந்தது.

பிஸியோவிடம் போனால் சில பயிற்சிகளைச் செய்யச் சொன்னார். 24 kg kettlebell (நோமலாக டெட்வெயிற் தூக்கப் பாவிப்பது) ஐ வாங்கி இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு முன்னும் பின்னுமாக (கால்களுக்கிடையாக) ஸ்விங் பண்ணச் சொன்னார்.  ஒற்றைக் கையால் மாறி மாறி உயர்த்தச் சொன்னார். 24kg ஐ 30 தரம் தூக்கிச் சுழற்ற சாப்பிட்டதெல்லாம் செமிச்சுவிடும்!

அது உதவியதோ அல்லது எனது வேகநடை உதவியதோ, அல்லது வீக்கெண்ட் ஸூமில் செய்யும் ஃபிற்னெஸ் + யோகா (மாஸ்ரர் பின்னி பெடல் எடுத்த்துவிடுவார்)உதவியதோ, அல்லது கார்ப்பயணம் இல்லாமல் வீட்டில் இருந்து வேலை செய்வது உதவியதோ, அல்லது எல்லாம் சேர்ந்து உதவியதோ தெரியாது. இப்போது சியாட்டிகா இல்லை. 

நன்றி ஜி. 

உதுகளை கொஞ்சம் டிரை பண்ணி பார்க்கலாம்தான் - ஆனால் யாழில் எழுதிற நேரம் குறைஞ்சிடும் எண்டு யோசிக்கிறன்😜.

45 minutes ago, குமாரசாமி said:

எனக்கு முழங்கால் பிரச்சனையால் தான் கால் முழுவதும் பிரச்சனை இருக்கின்றது.

ஆனால் எனக்கு நிரந்தர இடுப்புவலி ஒன்று இருந்தது.....அது தற்போது இல்லை. 😁

நன்றி அண்ணை,

எப்படியோ இரெண்டு நோய்கள் ஒரே நேரத்தில் மாறீட்டு - சந்தோசம்தானே.

1 hour ago, குமாரசாமி said:

கோடு, கச்சேரி பொலிஸ் ஸ்ரேசன் எண்டு அலைஞ்சால் உந்த வசனம் பக்கெண்டு வரும் 🤣

ஐயோ அண்ணை,

இது கெளரவம், விதி, சட்டம் ஓர் இருட்டறை, கனம் கோட்டார் அவர்களே இப்படியான படங்களை பார்த்ததால் வந்த பாதிப்பு🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

எல்லாம் சரி, சுடுதண்ணி வைச்சால் கேற்றிலில் கல்சியம் படியிறதா? இல்லையா?

நான் பிறந்த இடத்திலும் தண்ணியில் கல்சியம் இல்லை.....கேத்திலில் கல்சியம் படியாது.அதே போல் யேர்மனியில் நான் வாழும் இடத்தில் குழாய் தண்ணீர் நேரடியாக கொதிக்க வைக்காமலே குடிக்கலாம்.மலையூற்று தண்ணீர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

... ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். நான் எழுத தவறியதை எழுத உதவியாக இருக்கும்.

நன்றியுடன் கலந்த வணக்கங்கள்.🙏

அனுபவ பகிர்விற்கு மிக்க நன்றி கு.சா.🙏

எனக்கு ஒரு சம்சயம்..

கேட்டால், பரிமளம் அம்மணி கோவிக்குமே அஞ்சுகிறேன்..! 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

அனுபவ பகிர்விற்கு மிக்க நன்றி கு.சா.🙏

எனக்கு ஒரு சம்சயம்..

கேட்டால், பரிமளம் அம்மணி கோவிக்குமே அஞ்சுகிறேன்..! 🤔

அஞ்சாமல்/வெட்கப்படாமல் கேளுங்கள். கேளுங்கள் தரப்படும்.:cool:
கவனிக்க...
பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அஞ்சாமல்/வெட்கப்படாமல் கேளுங்கள். கேளுங்கள் தரப்படும்.:cool:
கவனிக்க...
பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும். 😁

வெட்கப்பட ஒன்னுமே இல்லை..

சில நாட்கள் போகட்டும், அம்மணியிடமே கேட்டு தெரிந்து கொள்கிறேன்..! 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கோடு, கச்சேரி பொலிஸ் ஸ்ரேசன் எண்டு அலைஞ்சால் உந்த வசனம் பக்கெண்டு வரும் 🤣

கோசான் கோட்டில தான் வேலை என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.