Jump to content

சிறுநீரகக் கல் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

அனுபவ பகிர்விற்கு மிக்க நன்றி கு.சா.🙏

எனக்கு ஒரு சம்சயம்..

கேட்டால், பரிமளம் அம்மணி கோவிக்குமே அஞ்சுகிறேன்..! 🤔

அந்த சிவலிங்கத்தாரின் சுகம் தானே?

Link to comment
Share on other sites

  • Replies 84
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

அந்த சிவலிங்கத்தாரின் சுகம் தானே?

அந்தாள் மண்டையை போட்டு ரொம்பகாலமாகிடிச்சே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

அந்த சிவலிங்கத்தாரின் சுகம் தானே?

9 minutes ago, ஈழப்பிரியன் said:

அந்தாள் மண்டையை போட்டு ரொம்பகாலமாகிடிச்சே.

poornam.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2021 at 21:26, goshan_che said:

உதுகளை கொஞ்சம் டிரை பண்ணி பார்க்கலாம்தான் - ஆனால் யாழில் எழுதிற நேரம் குறைஞ்சிடும் எண்டு யோசிக்கிறன்

தனது நலனை பற்றி பொருட்படுத்தாமல் தமிழர்களுடைய நலனுக்காக பாடுபடுவது என்பது தான் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2021 at 01:08, நந்தன் said:

அந்த சிவலிங்கத்தாரின் சுகம் தானே?

On 23/12/2021 at 02:20, ஈழப்பிரியன் said:

அந்தாள் மண்டையை போட்டு ரொம்பகாலமாகிடிச்சே.

 

On 23/12/2021 at 02:31, ராசவன்னியன் said:

poornam.png

சரி.....சரி.....விடுங்க ராசவன்னியர்!  அவிங்க தங்கட கவலையை இங்க கொட்டித் தீர்க்கிறாங்க...🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு நீரகக் கல் பற்றிய பல செய்திகள் பயனுள்ள தகவல்கள் பகிரப் பட்டிருக்கின்றன. இது பற்றிய மேலும் சில தகவல்களைப் பார்க்கலாம்:

1. சிறு நீரகக் கல்லின் அடிப்படை செறிவான சிறுநீர்: கீழேயுள்ள படத்தை முழுவதும் விளக்கும் எண்ணத்தோடு இணைக்கவில்லை. ஆனால், ஒரு முக்கியமான விடயத்தை இந்தச் சிறு நீரகத் தொழிற்பாட்டை விளக்கும் படம் சொல்கிறது: எங்கள் சிறு நீரின் செறிவைத் தீர்மானிக்கும் பிரதானமான காரணிகளாக நீரும் சோடியமும் இருக்கின்றன.

nephron.jpg

Credit: கல்வி/விழிப்புணர்வூட்டல் நோக்கிற்காக மட்டும் நன்றியுடன் பகிரப்பட்டது.

சோடியம் என்பதை நாம் "உப்பு" என்று பயன்பாட்டு நோக்கத்திற்காக அழைத்துக் கொள்ளலாம்! மேல் படத்திலிருப்பது போன்ற மில்லியனுக்கு மேற்பட்ட சிறு அலகுகளால் (nephrons) ஆக்கப் பட்டதே எங்கள் சிறுநீரகம். இந்த அலகு ஒவ்வொன்றும் ஒரு கோப்பை போன்ற வடிகட்டியையும், அதன் தொடர்ச்சியான குழாயையும் இந்த அமைப்புகளோடு பின்னிப் பிணைந்த இரத்தக் குழாய்களையும் கொண்டிருக்கும். சிறுநீர் என்று நாம் அழைப்பது உண்மையில் இந்த சிறுநீரக அலகில் நடக்கும் மூன்று முக்கிய நிகழ்வுகளின் நிகர விளைவு:

1. கிண்ணம் போன்ற அமைப்பினூடான வடிகட்டல் (filtration)- அனேகமாக வடிகட்டக் கூடிய பருமனுடைய எல்லாம்  வடிக்கப் படும்!

2. மீள அகத்துறிஞ்சல் (reabsorption): வடிகட்டியவற்றுள் முக்கியமானவற்றை கிண்ணத்தின் தொடர்ச்சியான குழாயினூடாக செல்லும் வழியில் மீள உடல் உறிஞ்சிக் கொள்ளும். உதாரணமாக, குளூக்கோஸ் முழுவதும் வடிக்கப் பட்டு, சாதாரண நிலையில் முழுவதும் மீள உறிஞ்சப் படும். ஒரு அளவுக்கு மேல் நீரிழிவு நோயில் குழூக்கோஸ் மிகுதியானால், மீள உறிஞ்ச இயலாத பகுதி சிறுநீரோடு வெளியேறும்.

3. சுரத்தல் (secretion): சில பொருட்கள், வடிக்கப் படுவதற்கு மேலதிகமாக, சிறுநீரக அலகுகளின் குழாய்களினுள் இரத்தத்தில் இருந்து வெளியே தள்ளப் படும்.

 எனவே, இறுதியில் உருவாகும் சிறுநீர், இந்த மூன்று செயல்பாடுகளின் விளைவால் உருவாகும் போது, அதில் இருக்கும் நீரின் அளவு சிறு நீரின் செறிவைத் தீர்மானிக்கும்.

எனவே, போதுமானளவு நீர் அருந்துவது சிறு நீரின் செறிவைக் குறைத்து, சிறு நீரகக் கல் உருவாகாமல் காக்கும் எளிய வழி!

ஆனால் அது மட்டும் செறிவு குறைந்த  சிறுநீரை உருவாக்கப் போதுமா என்றால் பதில் "இல்லை" என்பது தான்!

2. "சோடியம் அல்லது உப்பு" சிறுநீரக வடிகட்டலில் முக்கியமானது!

உப்பை நாம் சுவைக்காகச் சேர்த்துக் கொள்கிறோம் உணவில். உப்பில் இருக்கும் சோடியம், குளோரைட் ஆகிய அயனிகளுக்கு எங்கள் உடலில் முக்கியமான தொழில்கள் இருக்கின்றன. ஆனால், உடலின் தேவைக்கதிகமான உப்பை நாம் வாய்வழி எடுத்துக் கொள்ளும் போது, அதனை உடலில் இருந்து அகற்றும் பாரிய பணி சிறுநீரகத்தின் மேல் விழுகிறது.

👆திரும்பவும் மேலே இருக்கும் படத்தை அவதானித்தால், சோடியமும், தண்ணீரும் இராமரும் சீதையும் போல இணைபிரியாமல் இருப்பதைக் காண்பீர்கள்: இதன் விளைவு, சோடியம் அதிகமாக இருக்குமிடத்தில் நீரும் அதிகமாகத் தேவை! எனவே, சிறுநீரக வடிகட்டலில் அதிக சோடியம், குறைந்த நீர் இருக்கும் நிலையில், உடலைக் காப்பதா அல்லது சிறுநீரைச் செறிவாக்குவதா என்ற தெரிவு வரும் போது, உடலுக்கு முன்னுரிமை கிடைக்கும் - சிறு நீர் செறிவாக வெளியே அனுப்பப் படும்!

 எனவே, போதிய நீர் அருந்தும் அதே வேளை, வாய்வழி நாம் எடுத்தும் கொள்ளும் உப்பையும் அளவாகவே எடுத்துக் கொண்டால் மட்டுமே, சிறு நீர் செறிவாதலைத் தடுக்கலாம்! 

அளவாக என்றால் எவ்வளவு உப்பு? மனித உடலுக்கு அன்றாடம் தேவையான உப்பின் அளவு வெறும் 1.5 கிராம்கள் என்று கணித்திருக்கிறார்கள். ஒரு தேக்கரண்டி உப்பில் 5 கிராம் உப்பு இருக்கும் என்று பார்த்தால், இது கிட்டத்தட்ட 1/3 தேக்கரண்டி என்று கொள்ளலாம்! "ஏற்கனவே நான் ஒரு தேக்கரண்டியில் ஒரு நுனி உப்பைத் தான் சமையலில் சேர்த்துக் கொள்கிறேன்" என்று நீங்கள் திருப்திப் பட்டுக் கொள்ளும் முன் கொஞ்சம் பொறுங்கள்:

உப்பு, நீங்கள் தனியாகச் சேர்க்கும் வழியில் மட்டுமன்றி, எங்கள் ஏனைய உணவுகளின் வழியேயும் உடலுக்குக் கிடைக்கிறது என்பதைக் கவனியுங்கள்:

1. காய்கறிகள்

2. மாமிச உணவுகள்

3. குடிக்கும் தண்ணீர்

 இவை மூலமே, எங்கள் உடலின் அடிப்படைத் தேவையான 1.5 கிராம் உப்பு கிடைத்து விடுகிறது! இதை விட ஆசிய உணவுகளில் சேர்க்கப் படும் மசாலாக்களிலும் போதிய உப்பு இருக்கிறது. எனவே, நாம் தனியாகச் சேர்க்கும் உப்பு இவையெல்லாவற்றையும் விட மேலதிகமான உப்பு என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்!

3. சிறுநீரக் கல்லில் கல்சியம் எங்கே வருகிறது?

கல்சியம் எங்கள் எலும்புகளுக்கும், வேறு சில உடற்றொழில்களுக்கும் அவசியமான ஒரு கனிமம். மேலே பலராலும் (மருத்துவர்கள் உட்பட) குறிப்பிடப் பட்டிருப்பது போல, அதீத கல்சியம் மட்டுமே சிறுநீரகக் கல்லை உருவாக்கும் என்பது தவறான ஒரு புரிதல்! முன்னர் நாம் பார்த்தது போல, நீர் அருந்துவதும் குறைந்து, உப்பும் அதிகரித்தால் , நாம் எடுத்துக் கொள்ளும் கல்சியம் சிறுநீரில் செறிவாகி கல்லை ஏற்படுத்தும். எனவே, அதிகரித்த கல்சியம் மட்டுமே சிறுநீர்க்கல்லை ஏற்படுத்தாது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்!

எனவே, சிறுநீரகக் கற்களைத் தவிர்க்க, பாலுணவுகள் மூலம் கிடைக்கும் கல்சியத்தை நாம் குறைக்க வேண்டுமென்பது ஒரு தவறான ஆலோசனையாக இருக்கிறது. உண்மையில், அமெரிக்க சிறுநீரக ஆய்வு அமைப்பின் (Kidney Foundation) ஆலோசனையின் படி, பாலுணவுகள் மூலம் நாம் எடுத்துக் கொள்ளும் கல்சியம், சில வகையான சிறு நீரகக் கற்களைத் தடுக்கும் என்பதால், பாலுணவுகளை நாம் போதியளவு எடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறார்கள்! இது ஏன் எனப் புரிய நாம் ஒக்சலேற் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்!👇

4. பெரும்பான்மையானவை கல்சியம் ஒக்சலேற் கற்கள்:

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பெரும்பாலான சிறு நீரகக் கற்கள் கல்சியம் ஒக்சலேற் கற்களாகும். இதன் காரணம், எங்கள் சாதாரண உடற்தொழிற்பாடுகளின் பக்க விளைவாகவும், நாம் எடுத்துக் கொள்ளும் உணவின் வழியாகவும் ஒக்சலேற்றுகள் எங்கள் உடலினுள் அதிகரிக்கின்றன. கல்சியம் அயனி அந்த ஒக்சலேற்றோடு சேர்ந்து கொள்ளும் போது, "கல்சியம் ஒக்சலேற்" என்ற நீரில் இலகுவில் கரையாத பளிங்கு உப்பு உருவாகிறது: இந்தப் பளிங்கு உப்பு சிறு நீரில் உருவானால் கல்சியம் ஒக்சலேற் சிறு நீரகக் கல் உருவாகும்!

நிற்க: நீரில் இலகுவில் கரையாத கல்சியம் ஒக்சலேற் எங்கள் குடலில் உருவானால், அது உடலினுள் உறிஞ்சப் படுவது குறையும். அதே போல நீரில் இலகுவில் கரையாத கல்சியம் ஒக்சலேற் எங்கள் உடலினுள் உருவானால், அது எலும்புகளினுள் உள்ளீர்க்கப் பட்டு, சிறு நீரகத்தினால் அகற்றப் படாமல் தங்கும்! இதனால் தான், நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் கல்சியத்தை எடுத்துக் கொள்ளும் போது, குடலிலும், எலும்பிலும் ஒக்சலேற்றினைச் சிறைப்பிடித்து, சிறு நீரகக் கல் உருவாவவதைத் தடுப்பதாக பெரும்பாலான மருத்துவர்கள் வாதிக்கின்றனர்.

5. எனவே, கல்சியம் ஒக்சலேற் கல் உருவாகாமல் தடுக்க, ஒக்சலேற்றைக் குறைக்க வேண்டும்!

ஒக்சலேற் உடலினுள் சாதாரணமாக உருவாகும் ஒரு பக்க விளைவுப் பொருள். அது கல்சியம் ஒக்சலேற் கற்களை அதிகரிக்காமல் இருக்க, தண்ணீர் போதியளவு அருந்துதல், உப்பைக் குறைத்தல், போதியளவு கல்சியம் உணவு மூலம் எடுத்துக் கொள்ளல் என்பன முக்கியமான செயல்பாடுகள்!

குடலில் இருந்து உணவு மூலம் உள்ளே வரும் ஒக்சலேற்றைக் குறைக்க வேறென்ன செய்யலாம்? இரண்டு வழிகள் இருக்கின்றன:

1. ஒக்சலேற் அதிகம் கொண்ட உணவுகளை மிதமாக உள்ளெடுத்தல் (தவிர்க்க வேண்டிய அவசியம் அனேகமானோரில் ஏற்படாது தக்காளி, எள்ளுணவுகள், "முந்தானை முடிச்சு" புகழ் முருங்கைக்காய்😉 , முருங்கைக் கீரை ஆகியன ஒக்சலேற் அதிகம் கொண்ட தாவர உணவுகள். இவற்றை தினசரி உட் கொள்வதைத் தவிர்க்கலாம்.

2. ஒரு புதிய ஒக்சலேற் தடுப்பு முறை: எங்கள் குடலில் இருக்கும் பற்றீரிய வகை நுண்ணங்கிகளால் எங்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய அனுகூலங்கள் பல. ஒக்சலோபக்ரர் fபோர்மிஜனேஸ் (Oxalobacter formigenesஎனப்படும் ஒரு  குடல் பற்றீரியா, உணவில் இருக்கும் ஒக்சலேற்றை உள்வாங்கி அதை அழித்து விடும் வல்லமை மிக்கது. சிறுவயதினரின் குடலில் அதிகம் காணப்படும் இந்த பற்றீரியா, வளர்ந்தோரில் அதிகம் இல்லாமல் ஒழிந்து போவதற்கு நவீன உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக இருக்கலாமென நம்புகிறார்கள். ஒரு ஆய்வின் முடிவின் படி, அமேசன் காடுகளை அண்டிய பகுதிகளில் தாவர உணவுகளை அதிகம் உண்டு வாழும் ஆதிவாசி மக்களின் குடலில், இந்த ஒக்சலோபக்ரர் பற்றீரியாக்கள் அமெரிக்க மக்களின் குடலில் இருப்பதை விட அதிகம் காணப்படுவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். இதனால் அமேசன் ஆதிவாசிகளில் சிறு நீரகக் கல் உருவாகும் ஆபத்தும் சிறிதளவு குறைந்ததாகத் தெரிகிறது.

ஒக்சலோபக்ரர் பற்றீரியாவின் அளவை எங்கள் குடலில் அதிகரிக்க இலகுவாக நாம் செய்யக் கூடியது, உணவில் நார்ச்சத்தை அதிகரிப்பதாகும்.

அதிக மரக்கறிகள், பழங்களை எடுத்துக் கொள்ளும் போது இரு நன்மைகள் சிறு நீரகக் கல் சார்ந்து எமக்கு ஏற்படலாம்:

1. ஒக்சலோபக்ரர் உட்பட்ட குடல் பற்றீரியாக்களின் அளவு அதிகரிப்பதால் உணவின் மூலம் வரும் ஒக்சலேற்றின் அளவு குறைக்கப் படும்.

2. தாவர உணவின் காரணமாக எங்கள் சிறுநீரின் காரத்தன்மை அதிகரிக்கும் போது, அதனாலும் கல்சியம் ஒக்சலேற் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் குறையும்.  

எனவே, சுருக்கமாக பிரதான வகை சிறுநீரகக் கல்லான கல்சியம் ஒக்சலேற் கற்கள் உருவாகாமல் குறைக்க எமக்குள்ள வழிகள் இவை:

1. போதியளவு தண்ணீர்.

2. உணவில் குறைந்த உப்பு

3. போதியளவு கல்சியம் - பாலுணவுகள் மூலம்.

4. குறைந்த ஒக்சலேற் கொண்ட உணவுகள்.

5. அதிக நார்த்தன்மை கொண்ட உணவுகள். 

தொகுப்பு: ஜஸ்ரின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொரோனாக்  காலத்திலும் கு.சாவின் லொள்ளென்டா பேய் உச்சம் கண்டியளோ... . உடம்புக்குள்ள ஏகப்பட்ட கோதாரி இதுக்குள்ள விடுப்புக்கும் சிவலிங்கத்தாற்ர வீரப்பிரதாபங்களுக்கும் வக்கணையா கதைக்கிறதுக்கும் குறைவில்லை 🤣

வேதனையைக்கூட இதழ்கடையில் முறுவலிக்க எழுதுவதற்கு கு.சா, இலையான் கில்லர் போன்றோரிடம் கற்கவேண்டும்.  அநுபவபகிர்வுக்கு நன்றி கு.சா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலதரப்பட்ட விடயங்களை  படத்தினூடு விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு மிகவும்  நன்றி ஜஸ்டின் ..........!   🌹

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுபவ பார்வையில் சிறுநீரக கல்  உருவாகியதற்கான காரணங்களை என்னால் நிறு திட்டமாக கூற முடியவில்லை. ஏனெனில் நான் தங்கியிருந்த வைத்தியசாலை வைத்தியர்களின் ஆலோசனையும் சரி ஜஸ்டின் சொன்ன காரணங்களும் சரி கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றது. இதில் எனக்குள்ளேயே பல முரண்பாடுகள் உள்ளது.

வைத்தியசாலையில் எனக்கு சிறுநீரக கல் மீண்டும் வரலாம் என எச்சரித்தே வெளியில் விட்டார்கள். என்ன பிழை விட்டேன் அல்லது விடுகின்றேன் என்பதை இனிவரும் காலங்கள் தான் தீர்மானிக்கும்.

 20,25 வருடங்களாக தினசரி இரண்டரை லீட்டருக்கு மேல் தண்ணீர் அருந்துகின்றேன்.அருந்த வேண்டும். இல்லையேல் சிறுநீர் கழிக்கும் போது பயங்கர எரிச்சல் இருக்கும். காரணம் நான் எடுக்கும் மாத்திரைகளின் விக்கனம்.
நார்ச்சத்து உணவுகள் என்று பார்த்தால் நான் ஒரு மரக்கறி பிரியன். அதிலும் கீரை வகைகள் அதிகம் உண்பவன். பாலுணவு வகைகள் அதிகம்.அதிலும் சீஸ் என்றால் அலாதி பிரியம்.ஆனால் பால் சம்பந்தப்பட்ட உணவுகளை குறைக்கும் படி வைத்தியசாலையில் அறிவுறுத்தினார்கள்.

நிற்க...

நான் செய்யும் தவறு உப்பு கூடிய உணவு வகைகளை உண்பதாகவாகவும் இருக்கலாம். நேரம் வரும்போது   நாக்குக்கு வக்கணையாய் உருட்டி பிரட்டி உண்ட உணவுகளை யோசித்து சொல்கின்றேன்..

நெத்தலி கருவாடு  கட்டாப்பாரை கருவாடு எல்லாம் வரிசையிலை வரும் போல கிடக்கு...😟


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.