Jump to content

`துர்காவதி என்னும் சிம்ம சொப்பனம்!' - அறியப்படாத இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`துர்காவதி என்னும் சிம்ம சொப்பனம்!' - அறியப்படாத இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் கதை

துர்காவதி

இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தபோது எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது இந்தப் பெண் சிங்கம்தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் அதிகம் பேசப்படாத ஒரு பெண், துர்காவதி தேவி. குறிப்பாக இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தபோது எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது இந்தப் பெண் சிங்கம்தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இவரது அதிரடித் தாக்குதல்களால் ஆட்டம்கண்ட ஆங்கிலேயர்கள் இவரை `தி அக்னி ஆப் இந்தியா’ (The Agni of India) என்றே அழைத்தனர்.

உத்தரப்பிரதேசத்திலுள்ள அலகாபாத் மாவட்டத்தில் 1907-ம் ஆண்டு ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் துர்காவதி தேவி. இவரின் தந்தை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்தவர். துர்காவதியின் தாத்தாவும் பிரிட்டிஷ் அரசில் காவல் அதிகாரியாகப் பணிபுரிந்தார். தந்தையும், தாத்தாவும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்தாலும் அவர்களது வழித்தோன்றலான துர்காவதி அப்படி இருக்கவில்லை. சிறுவயதிலிருந்தே விடுதலை தாகம் உள்ளவராக இவர் வளர்ந்தார்.

இவருக்கு 11 வயது ஆகும்போது செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்த பக்வதி சரண் வோக்ரா என்கிற 15 வயது இளைஞருடன் திருமணம் நடந்தது. துர்காவதியைப் போல பக்வதி சரண் வோக்ராவும் தேச விடுதலை குறித்த பெருங்கனவுடன் இருந்ததைக் கண்டு அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

பகத்சிங்
 
பகத்சிங்

குறிப்பாக பக்வதி வோக்ரா, மாவீரர் பகத்சிங்கை அடிக்கடி சந்தித்தார். ஆனால் ஒரு பணக்கார வீட்டுப் பையன் இப்படி சுதந்திர தாகம் கொண்டு திரிவதை பலரும் சந்தேகக் கண்கொண்டே பார்த்தனர். `ஒருவேளை இவன் பிரிட்டிஷ் அரசின் கைக்கூலியோ’ என்றும் எண்ணினர். ஒருகட்டத்தில் இவரின் உண்மையான சுதந்திரப் பற்று புரியவர, அதன் பின்னரே பகத்சிங், சந்திரசேகர் ஆஸாத் போன்ற வீரர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஹிந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேஷன் (Hindustan Socialist Republican Association) என்கிற புரட்சி அமைப்பில் இவர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

காலங்கள் மெள்ள நகர்ந்தன. துர்காவதி ஒரு குழந்தைக்குத் தாயானார். துர்காவதிக்கும் பக்வதி சரண் வோக்ராவுக்கும் இடையில் கணவன் - மனைவி என்கிற உறவையும் தாண்டி அற்புதமான ஒரு நட்பு வளர ஆரம்பித்தது. குறிப்பாக கணவரின் சுதந்திரப் போராட்ட முன்னெடுப்புகளை அருகிலிருந்து பார்த்துப் பார்த்து தாமாகவே அந்தப் புரட்சிக் குழுவில் தன்னையும் இணைந்துகொண்டார் துர்காவதி. கணவனும் மனைவியுமாக இணைந்து துப்பாக்கியைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்தனர். முதற்கட்டமாக போராட்டக்காரர்களுக்குத் தேவையான உதவிகளையும், ஒத்துழைப்பையும் கொடுக்க ஆரம்பித்தார் துர்காவதி.

இதன் காரணமாக, ஹிந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேஷன் குழுவில் இருந்த மற்ற உறுப்பினர்கள் துர்காவதியை `துர்கா பாபி', அதாவது துர்கா அண்ணி என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் போராட்டங்களில் துர்காவதியின் பங்கு, நம்மை மெய்சிலிர்க்க வைப்பது. அது பற்றி பார்ப்போம்...

அச்சமின்றி மாறுவேடத்தில் பயணம்!

பிரிட்டிஷ் காவல் அதிகாரி ஜான் சாண்டர்ஸ் என்பவரை கொன்ற பிறகு 1928-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் நாள் பகத்சிங்கும், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரும் துர்காவதியின் வீட்டிற்குச் சென்றனர். நடந்ததை அறிந்துகொண்ட துர்காவதி பகத்சிங்கை கல்கத்தாவிற்குச் செல்லுமாறு ஆலோசனை வழங்கினார். இதன்படி பகத்சிங் ரயிலில் கல்கத்தாவிற்குப் பயணித்தார். கூடவே அவரின் மனைவி வேடத்தில் துர்காவதியும் அந்த ரயிலில் பயணம் செய்தார். மற்றுமொரு சுதந்திரப் போராட்ட வீரரான ராஜ்குரு இவர்கள் இருவரது சேவகனாகப் பயணப்பட்டார். இதில் வியப்பான செய்தி என்னவென்றால், இவர்கள் பயணித்த அதே ரயிலில் சுமார் 500 காவலர்களும் பயணித்தனர். இத்தனை பேரின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு பகத்சிங்கை கல்கத்தாவிற்கு பத்திரமாகக் கொண்டுசேர்த்த துர்காவதியின் நெஞ்சுரம் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது.

சுதந்திரப் போராட்டம்
 
சுதந்திரப் போராட்டம்இந்திய தேசியக்கொடி எத்தனைமுறை மாற்றியமைக்கப்பட்டது என்று தெரியுமா?

வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயிற்சி!

கல்கத்தாவை அடைந்த பகத்சிங், அதுல் கங்குலி, ஜி.என்.தாஸ், பினிந்தர் கோஷ் ஆகிய தனது வங்காள சகாக்களை துர்காவதியுடன் சென்று சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பகத்சிங் உள்ளிட்ட தனது சகாக்களுடன் சேர்ந்து துர்காவதியும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் பயிற்சியைப் பெற்றார்.

சகாக்களைக் காப்பற்றப் போராட்டம்!

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவருக்கும் ஆங்கிலேய அரசு தூக்குத் தண்டனை விதித்ததும் அதிர்ச்சியடைந்த துர்காவதி தன்னிடமிருந்த நகைகள் அனைத்தையும் மூவாயிரம் ரூபாய்க்கு விற்று அப்பணத்தின் உதவியோடு அவர்களை தூக்குத் தண்டனையிலிருந்து வெளியே கொண்டுவர முயற்சித்தார். பிற விடுதலைப் போராட்ட வீரர்களைச் சந்தித்து உதவி கேட்டும் மன்றாடினார். ஆனால் இவை எதற்கும் செவிசாய்க்காத ஆங்கில அரசு அவர்கள் மூவரையும் தூக்கிலிட்டது.

இச்சம்பவத்தின் ஊடே மற்றுமொரு வேதனையான சம்பவமும் நிகழ்ந்தது. அதாவது தூக்குத் தண்டனை பெற்று பகத்சிங் சிறையில் இருந்தபோது சிறைச்சாலையில் வெடிகுண்டு வீசி பகத்சிங்கை தப்பிக்க வைக்கும் முயற்சியில் துர்காவதியின் கணவர் பக்வதி வோக்ரா இறங்கினார். அதற்காக மாதிரி வெடிகுண்டைத் தயாரித்து அதை லாகூர் நகருக்கு அருகிலிருந்த ராவி நதிக்கரையில் வைத்துச் சோதித்துப் பார்த்தபோது ஏற்பட்ட விபத்தில் பக்வதி வோக்ரா தனது உயிரை இழந்தார்.

 

இது துர்கா பாபிக்குப் பேரிழப்பு என்றாலும் அவர் கலங்கிவிடவில்லை. ஆங்கிலேயரின் வஞ்சத்தால் வீழ்ந்த தனது சகாக்களுக்காவும், வீரர்களைக் காப்பற்றுவதற்காக தனது இன்னுயிரையும் இழந்த கணவருக்காவும் இன்னும் தீவிரமாகப் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டார்.

குறிப்பாக பகத் சிங் மற்றும் சகாக்களைத் தூக்கில் போடக் காரணமாக இருந்த பஞ்சாபின் முன்னாள் கவர்னரான லார்ட் ஹெய்லி என்பவரை பழிவாங்கத் துடித்தார் துர்காவதி. இதற்கான முயற்சியில் இவர் இறங்கியபோது அந்த கவர்னர், தப்பிவிட கவர்னரின் உதவியாளர்கள் துர்காவதியின் தாக்குதலால் காயமடைந்தனர். இதற்காகக் கைது செய்யப்பட்ட துர்காவிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைத்தது.

இப்படி இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையே அர்ப்பணித்த துர்காவதி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் நகரில் ஒரு சாதாரணப் பிரஜை போல இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தார். லக்னோவில் உள்ள புரானா கிலா என்கிற பகுதியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்காக பள்ளி ஒன்றையும் நடத்தினார். இவர் நடத்திவந்த பள்ளி தற்போது `சிட்டி மான்டிசோரி ஸ்கூல்’ (City Montessori School) என்று அழைக்கப்படுகிறது. இவைதவிர தன்னிடமிருந்த நிலத்தையும் சமூகப் பணிகளுக்காகத் தானமளித்துவிட்ட இவர் 1999-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி தனது 92-ம் வயதில் மறைந்தார்.

Indian Flag
 
Indian Flag Image by Pexels from Pixabay

ஆனால் தேச விடுதலைக்காக தனது ஒட்டுமொத்த வாழ்வையே அர்ப்பணித்த இவரது மறைவு குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளிலோ, அல்லது மற்ற செய்தி ஊடகங்களிலோ தனிச்சிறப்புடன் இடம்பெறவில்லை. இவை குறித்து விரிவாகப் பேசப்படவுமில்லை. இவ்வளவு ஏன்? லக்னோ, மும்பை, காசியாபாத் போன்ற நகரங்களில் இவரது நினைவைப் போற்றும் எந்த ஒரு செயலும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயமே.

சமையலறை மட்டுமே உலகமாக, கணவனுக்குப் பின்னால் செல்வதை மட்டுமே பாக்கியமாகக் கருதி இந்தியப் பெண்கள் வாழ்ந்த அந்தக் காலகட்டத்தில் கணவரின் சகாவாகப் பயணப்பட்டு, தனது துணிச்சலான, புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் ஆங்கிலேயரை நிலைகுலையவைத்த துர்காவதியின் உத்வேகமூட்டும் வரலாற்றை, இந்தியர்கள் ஒவ்வொருவரும் அறியவேண்டியது அவசியம். இதன் முதற்கட்டமாக இவரது வாழ்க்கையைத் திரைப்படமாக ஆவணப்படுத்தினால் அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சென்று சேரும் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.

எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.