Jump to content

ஆடி அமாவாசையும் காற்று+ஊட்டியன் காயும்


Recommended Posts

இன்று பிலவ வருடத்தில் வந்த ஆடிமாதத்தின் முடிவுநாள் 32. இந்த ஆடியில் வரும் அமாவாசை விரத நாளில் மிக முக்கியத்துவம் பெறுவது காற்று ஊட்டியன் காய், இந்தக் காயை காத்தோட்டிக்காய் என்றும் பேச்சுவழக்கில் கூறுவார்கள்.  

தாவரங்களுக்கும் உயிருண்டு. ஆகவே அந்தத் தாவரங்களைக் கொன்று தின்பதால் ஏற்படும் பாவங்களைப் போக்குவதற்காக, மிகவும் கசப்பான இந்தக் காயை  வருடத்தில் ஒரு நாள், அதாவது ஆடிமாதத்தில் வரும் அமாவாசை அன்று பொரித்துச் சாப்பிட்டுத் தங்களை வருத்திக்கொள்வார்கள் சைவர்கள் என்ற ஐதீகமும் உண்டு. 

பஞ்ச பூதங்களால் உருவான எங்கள் உடம்பு அவற்றின் தாக்கங்களாலும் அல்லல் படுவதுண்டு, ஆகவே அந்தத் தாங்களிலிருந்து விடுபடுவதற்கு, எம் முன்னோர்கள் கண்டுபிடித்து, எமது ஆரோக்கிய வாழ்விற்கு காட்டிய வழிகள் வியப்பையும், ஆச்சரியத்தையும் அளிக்கின்றன.  

 

 

காத்தூட்டியன் காய்

இன்று சந்தையில் ஒருகாய் 20-50 ரூபாய்களிலும் ஒரு கிலோ 1300-2500 ரூபா வரையிலும் விற்கப்படுகிறது

#ஆடிஅமாவாசை தினம் மற்றும் அவற்றிற்கு முன்னைய தினங்களில் மட்டுமே இவற்றினை சந்தைகளில் காணலாம்

காத்தூட்டியன் காயினை ஆடி அமாவாசை தினத்தன்று இந்துக்கள் பயன்படுத்துவதன் நோக்கம் என்ன என்பதை விளக்கவாரியாக அறிந்து கொள்ளலாம் வாருங்கள் 😃...

#காத்தூட்டியன்காய்
ஆடி அமாவாசை விரத நாளில் மிக முக்கியம் பெறும் பொரியல்.

ஆடி அமாவாசையும் காற்று+ஊட்டியன் காயும்

ஆடி அமாவாசைக்கு எல்லோரும் காத்தூட்டியன் காய் என்று சாம்பிராதாயத்துக்காக வாங்கி சமைப்பார்கள். அதன் முக்கியத்துவமும் சரியான விளக்கமும் இல்லாமையினால் எனது சிறிய விளக்கம்..

ஆடி மாதம் தட்சனாய காலம் ஆரம்பித்து விட்டது அதாவது சூரியன் தெற்கு நோக்கி செல்கிறது /விலத்தி செல்கிறது என்று மற்றவர்களால் குறிப்பிடப் பட்டாலும் சூரியன் அசைவதில்லை பூமியின் சரிவு சற்று வடக்கு நோக்கித் திரும்புவதாக எடுத்து கொள்ளலாம். அத்துடன் 6 பருவகாலங்களில் முதுவேனில் காலம்   கார்காலத்திற்கு மாறும் காலம் ஆகும்.

எனவே இக்காலத்தில் உடலின் மூன்று தாதுகளான வாத, பித்த, கபம் குழப்பமடைந்து இருக்கும். உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். அதனால் தான் ஆடி மாதத்தில் நோய் கிருமி தாக்கம் வழமையை விட அதிகமாக காணப்படும். இதனாலயே இம் மாதம் அம்மனுக்குரிய மாதம் என வேப்பிலை மஞ்சளின் பங்களிப்பு கூடிய மாதமாகவும் உள்ளது.(கிருமி தாக்கம் குறைப்பதற்காக)

காத்தூட்டியன் காய் அதிகளவு கைப்பு சுவை கொண்டிருக்கும் அதன் பஞ்ச பூத உள்ளடக்கம் வளி +ஆகாயம் # இது வளி தோசமான வாத தோசத்தை அதிகரிக்கும் தன்மை உடையது, வாத தோசத்தின் சிறப்பு மற்றைய 2 தோசங்களையும் சமன் செய்ய கூடியது அதனால் பித்த, கப தோசத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.

காத்தூட்டியன் காய் ஆடி மாதத்திலே தான் காய்க்கும் சிறப்புடையது. இந்த மாதம் முழுவதும் இதை சமையலில் பயன்படுத்தலாம் ஒரு முறையாவது பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஆடி அம்மாவாசைக்கு பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

அனைவரும் பயன் படுத்தி இயற்கையுடன் சேர்ந்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

Ist möglicherweise ein Bild von Essen

கரவை வெல்லன் விநாயகர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் ஆடி அமாவாசைக்கு கீரிமலையில் தோய்ந்துவிட்டு கல்லுக்காட்டுக்  கூடாக வீட்டுக்கு வரும்பொழுது பற்றைகளில் இந்தக் காத்தோட்டிக்காய் பறித்துக் கொண்டு வருகிற ஞாபகம் வருகின்றது......!  😇

நன்றி பாஞ்ச்........!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி பாஞ்ச் ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி பாஞ்ச்.

மூன்று தசாப்தத்துக்கு மேலாக இந்த காத்தோட்டிக்காய் சாப்பிடவில்லை.

சிறிய வயதில் அழுதழுது சாப்பிட்டது தான் ஞாபகத்துக்கு வருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.