Jump to content

மனித முத்தத்துக்குப் பின் இப்படி ஒரு காரணமா? இமை முடிகளைக் கடிப்பது கூட முத்தமா என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனித முத்தத்துக்குப் பின் இப்படி ஒரு காரணமா? இமை முடிகளைக் கடிப்பது கூட முத்தமா என்ன?

  • வில்லியம் பார்க்
  • பிபிசி ஃப்யூச்சர்
8 மணி நேரங்களுக்கு முன்னர்
முத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முத்தம்

உலகம் முழுக்க உள்ள 168 கலாச்சாரங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பாதிக்கும் குறைவானவர்களே உதடுகளால் முத்தமிடுகிறார்கள்.

46 சதவீதம் பேர் மட்டுமே காதல் உணர்வில் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கிறார்கள் என்கிறார் நெவாடா லாஸ் வேகாஸ் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் வில்லியம் ஜான்கோவியாக். இதில் பெற்றோர் குழந்தைக்கு கொடுக்கும் முத்தம் அல்லது வாழ்த்துக்களுக்கு கொடுக்கும் முத்தம் எலாம் கணக்கில் கிடையாது.

மனிதர்கள் ஏன் முத்தமிட வேண்டும் என்பதற்கு இரண்டு கோட்பாடுகள் கூறப்படுகின்றன.

குழந்தைகளாக இருக்கும் போதே நமக்கு உதட்டைத் தொடுவதில் இயல்பான விருப்பம் இருக்கிறது என்ற எண்ணத்திலிருந்து முத்தம் கொடுப்பது வருகிறது.

 

நாம் உதட்டை தொடுவதை தாய்ப்பால் குடிப்பதோடு தொடர்புபடுத்தலாம், அந்த தன்னிச்சையான செயல் நம் அனைவருக்கும் இயல்பாகவே இருக்கிறது.

தாய்ப்பால் குடிப்பது ஒரு பக்கம் இருக்க, குழந்தைகளுக்கான உணவை தாய் தன் வாயில் மென்று குழந்தைக்கு கொடுக்கும் வழக்கத்தை "premastication food transfer" என்கிறார்கள்.

முத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முத்தம்

உணவு தாயின் வாயிலிருந்து குழந்தையின் வாய்க்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இதனால் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கப்படுகிறது. தாய் மற்றும் சேய்க்கு மத்தியிலான உறவு வலுக்கிறது.

இப்படி வாயிலிருந்து நேரடியாக உணவு கொடுக்கப்படும் வழக்கம் சிம்பன்ஸி போன்ற மனிதர்களின் மூதாதையர்களிடம் காண முடிகிறது.

முத்தம் கொடுப்பதற்கும், அணிந்திருக்கும் ஆடைகள் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம் என்கிற ஒரு யோசனையும் கூறப்படுகிறது.

பொதுவாக அதிகம் ஆடை உடுத்தாத வேட்டையாடும் சமூகத்தில் அதிகம் முத்தம் கொடுப்பதை காண முடியவில்லை. காரணம் அவர்களால் ஒருவரின் எந்த ஒரு உடல் பாகத்தோடும் தங்கள் உணர்வை வெளிப்படுத்த முடியும்.

ஆனால் ஆர்டிக் பகுதியில் இருக்கும் இன்யூட் வேட்டைச் சமூகங்கள் மத்தியில் இதழோடு இதழ் பதித்து மூக்கோடு மூக்கு உரசும் முத்தத்தைக் காண முடிந்தது. காரணம் அவர்கள் குளிர் காரணமாக அதிக ஆடை அணிந்து கொள்கிறார்கள். அப்போது அவர்கள் முகத்தில் உணர்வை வெளிப்படுத்தும் ஒரே பகுதியாகிறது உதடு.

முத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முத்தம்

ஆக ஆடைகள் குறைவாக அணிய அணிய முத்தம் கொடுப்பது குறைகிறது. ஆடைகளை அதிகம் அணிந்து கொண்டால் முத்தம் கொடுப்பது அதிகரிக்கிறது என்கிறார் வில்லியம் ஜான்கோவியாக்.

"மனிதர்களின் உணர்வு முத்தத்தைத் தாண்டி பல வழிகளில் பூர்த்தி செய்யப்படுவதால் மனிதர்கள் முத்தம் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்" என்கிறார் வில்லியம் ஜான்கோவியாக்.

இதழோடு இதழ் வைத்து முத்தமிடாத கலாச்சாரங்களில் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக இருக்க பிற வழிகளைக் கண்டிருக்கின்றனர் என ஷெரில் கிர்ஷன்பாம் கூறுகிறார்.

"டார்வின் விவரித்த மலாய் முத்தம் உள்ளது. பெண்கள் தரையில் ஸ்குவாட் முறையில் அமர்ந்து கொள்வார்கள், தங்கள் கூட்டாளியை ஒருவருக்கொருவர் விரைவாக முகர்ந்து கொள்வார்கள் - அவர்களின் கூட்டாளியின் வாசத்தை உணர்ந்து கொள்வர்."

பப்புவா நியூ கினியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ட்ரோப்ரியாண்ட் தீவுகளில், காதலர்கள் நேருக்கு நேர் அமர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் கண் இமைகளை கடித்து முத்தமிடுகிறார்கள்.

முத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

முத்தம்

"நம்மில் பலருக்கு இது காதலின் உச்சம் போல் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அப்படிப்பட்ட முத்தம் வேலை செய்கிறது" என்கிறார் கிர்ஷன்பாம்.

உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது மற்றும் பிற வகையான முத்தங்களில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த தருணத்தில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்து அந்தரங்க தகவல்களைப் பகிர்ந்து கொள்வது தான்.

உதடுகளை ஒன்றாகக் குவித்து அழுத்துவதன் மூலம் முத்தமிடுவது கிட்டத்தட்ட தனித்துவமான மனித நடத்தை. முத்தம் என்கிற விஷயத்துக்கு ஒரு பரிணாம நோக்கம் இருக்கிறது என்றால், ஏன் விலங்குகள் முத்தமிடுவதை நாம் அதிகம் பார்க்க முடிவதில்லை?

மெலிசா ஹோகன்பூம் என்பவர் 2015 ஆம் ஆண்டில் பிபிசி எர்த்திடம் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். ஒரு கூட்டாளியின் முகத்தை நெருங்க நாம் கட்டாயப்படுத்தப்பட்டதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்களை நன்றாக முகர்வதற்குத் தான்.

ஒருவரின் வாசனை அனைத்து வகையான பயனுள்ள தகவல்களையும் வெளிப்படுத்த முடியும்: உணவு, நோய் இருப்பது, மனநிலை என பல தொடர்புடைய விஷயங்களை முத்தம் வெளிக்காட்டும்.

பல விலங்குகள் மனிதர்களை விட மிக நுட்பமான வாசனை உணர்வைக் கொண்டுள்ளன, எனவே அவை கிட்டத்தட்ட தன் கூட்டாளிக்கு நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவது இல்லை.

https://www.bbc.com/tamil/science-58237277

Link to comment
Share on other sites

காலையிலேயே இதை வாசிச்சு தொலைச்சுட்டன்...

ஆடைகள் அதிகம் உடுத்துகின்றவர்கள் தான் அதிகமாக இதழோடு இதழ் வைத்து முத்தம் கொடுப்பார்கள் என்றால் முழுக்க ஆடை அணிந்து இருக்கும் அரேபியர் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தான் அதிகம் முத்தம் கொடுப்பவர்களாக இருப்பர். தமிழர்கள் நாங்களும், இந்தியர்களும் வெப்பம் அதிகமான தென்னாசியாவில் வசிப்பதால் இதழோடு இதழ் சேர்த்து முத்தம் கொடுப்பவர்களில் முன்னனியில் இருக்க வேண்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

காலையிலேயே இதை வாசிச்சு தொலைச்சுட்டன்...

ஆடைகள் அதிகம் உடுத்துகின்றவர்கள் தான் அதிகமாக இதழோடு இதழ் வைத்து முத்தம் கொடுப்பார்கள் என்றால் முழுக்க ஆடை அணிந்து இருக்கும் அரேபியர் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தான் அதிகம் முத்தம் கொடுப்பவர்களாக இருப்பர். தமிழர்கள் நாங்களும், இந்தியர்களும் வெப்பம் அதிகமான தென்னாசியாவில் வசிப்பதால் இதழோடு இதழ் சேர்த்து முத்தம் கொடுப்பவர்களில் முன்னனியில் இருக்க வேண்டுமே. 

அதில் என்ன சந்தேகம் தம்பிக்கு??😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

காலையிலேயே இதை வாசிச்சு தொலைச்சுட்டன்...

ஆடைகள் அதிகம் உடுத்துகின்றவர்கள் தான் அதிகமாக இதழோடு இதழ் வைத்து முத்தம் கொடுப்பார்கள் என்றால் முழுக்க ஆடை அணிந்து இருக்கும் அரேபியர் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தான் அதிகம் முத்தம் கொடுப்பவர்களாக இருப்பர். தமிழர்கள் நாங்களும், இந்தியர்களும் வெப்பம் அதிகமான தென்னாசியாவில் வசிப்பதால் இதழோடு இதழ் சேர்த்து முத்தம் கொடுப்பவர்களில் முன்னனியில் இருக்க வேண்டுமே. 

முத்தத்தில் பிரான்ஸ் நாட்டவரை முறியடிக்க இயலாது என்று சொல்வார்கள்.

இதை பிரான்ஸ் நாட்டு உறவுகள் தான் உறுதிப்படுத்த வேண்டும்.

1 hour ago, விசுகு said:

அதில் என்ன சந்தேகம் தம்பிக்கு??😋

தம்பி உங்க நாட்டவரை முறியடிக்க இயலாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக சனதொகை 800 கோடியை தாண்டி எகிற போகுது, பிபிசி இப்போதான் முத்தம் பற்றி கிளாஸ் எடுக்குது.

முத்தத்துக்கும் ஆடைக்கும் என்ன சம்பந்தம்?

எந்தவகையான ஆடை அணிந்தவர்களாகட்டும் ஆரோக்கியமான ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் சேர்ந்துகொண்டால் ஆடை சம்பந்தமாய் எவன் யோசிக்கிறான், பூனை பிராண்டினமாதிரி பொளந்து கட்டிட்டு போயிடுவான்.

ஆடைகட்டினா என்ன கட்டாவிட்டால் என்ன புதிதாக ஜோடி சேர்பவர்கள் ஒரே முத்தம் முத்தமா பொழிந்து தள்ளுவார்கள், காலம் போக போக போக முத்தமிடுவது எல்லாம் குறைந்து  குறைந்து ஒரு கட்டத்தில் சண்டை வரும்போது அதே பெண்ணை நீ எல்லாம் வைச்சிருக்கிறதுக்கு பேரு வாயாடி என்று சண்டை போடுவார்கள்.

 

இது சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு முத்த விசயத்தில்   அலுமினிய பானை கடைக்குள்ள யானை பூந்தமாதிரி அந்த காலத்தில் அடிச்சு நொருக்கின யாழ்கள பெரியவர்களின் தகவல்களையும் பிபிசி கேட்டு பெறலாம்.

வெள்ளைக்காரர்கள் அவர்கள் உணவு பழக்கம் அதிக வாசனை எழுப்பாததால் உதட்டோடு உதடு முத்தம் எப்போ வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் பரிமாறிக்கொள்கிறார்கள் .

நம்மாளுங்க எல்லாம், கணவாய்க்கறி மீன் ரின் சம்பல் எல்லாம் திண்டுபோட்டு இதழோடு இதழ் முத்தம் பரிமாறினால் முடிஞ்சுது கதை,அப்புறம்  மூணு மாசத்துக்கு முத்தம் கேக்காது ...என்னா ஒரு  கப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

காலையிலேயே இதை வாசிச்சு தொலைச்சுட்டன்...

ஆடைகள் அதிகம் உடுத்துகின்றவர்கள் தான் அதிகமாக இதழோடு இதழ் வைத்து முத்தம் கொடுப்பார்கள் என்றால் முழுக்க ஆடை அணிந்து இருக்கும் அரேபியர் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தான் அதிகம் முத்தம் கொடுப்பவர்களாக இருப்பர். தமிழர்கள் நாங்களும், இந்தியர்களும் வெப்பம் அதிகமான தென்னாசியாவில் வசிப்பதால் இதழோடு இதழ் சேர்த்து முத்தம் கொடுப்பவர்களில் முன்னனியில் இருக்க வேண்டுமே. 

யாருக்கு தெரியும் அவங்களும் எங்கடயளும் அமசடக்கமானவை.

Link to comment
Share on other sites

33 minutes ago, valavan said:

 

நம்மாளுங்க எல்லாம், கணவாய்க்கறி மீன் ரின் சம்பல் எல்லாம் திண்டுபோட்டு இதழோடு இதழ் முத்தம் பரிமாறினால் முடிஞ்சுது கதை,அப்புறம்  மூணு மாசத்துக்கு முத்தம் கேக்காது ...என்னா ஒரு  கப்பு.

இதெல்லாம் கூட கொஞ்சம் ஒகே... ஆனால் வெங்காயம், அதுவும் சின்ன வெங்காயம் என்றால் "கூறாமல் சன்னியாசம் கொள்' என்று ஆகிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இவளவு விசையம் இருக்கா😉  நாங்கள் விளக்குமாறு எடுத்து கூட்டவதுடன் சரி.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

வெள்ளைக்காரர்கள் அவர்கள் உணவு பழக்கம் அதிக வாசனை எழுப்பாததால் உதட்டோடு உதடு முத்தம் எப்போ வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் பரிமாறிக்கொள்கிறார்கள் .

நம்மாளுங்க எல்லாம், கணவாய்க்கறி மீன் ரின் சம்பல் எல்லாம் திண்டுபோட்டு இதழோடு இதழ் முத்தம் பரிமாறினால் முடிஞ்சுது கதை,அப்புறம்  மூணு மாசத்துக்கு முத்தம் கேக்காது ...என்னா ஒரு  கப்பு.

மனித வாழ்க்கையில் முத்தம் 80 வீதம் காமத்துடன் இணைந்தது. எனவே காமம் மலரும் போது கருவாட்டு வாசனையும் சொர்க்கமாகத்தான் தெரியும்.

உள்ளி வாசனையெல்லாம் ஜுசுப்பி..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மனித வாழ்க்கையில் முத்தம் 80 வீதம் காமத்துடன் இணைந்தது. எனவே காமம் மலரும் போது கருவாட்டு வாசனையும் சொர்க்கமாகத்தான் தெரியும்.

உள்ளி வாசனையெல்லாம் ஜுசுப்பி..😎

இவர்கள் இதில் குழந்தைகள் அண்ணா 😋

சொல்லி தெரிவதில்லை

மன்மதக்கலை😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் முத்த களமாகி நிற்பது,  லொக் டவுன் நீலங்களை மேவிச் செல்ல உதவக் கூடும்.

காமமற்ற முத்தமே என்று நின்றாலும் நியூ யோர்க் கவர்னர் வீட்டுக்கு போக வேண்டியதாயிற்று..

தலிபான்கள் முத்தமிடுவார்களா..  ஏனோ ஒரு சந்தேகம் !!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, valavan said:

உலக சனதொகை 800 கோடியை தாண்டி எகிற போகுது, பிபிசி இப்போதான் முத்தம் பற்றி கிளாஸ் எடுக்குது.

முத்தத்துக்கும் ஆடைக்கும் என்ன சம்பந்தம்?

எந்தவகையான ஆடை அணிந்தவர்களாகட்டும் ஆரோக்கியமான ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் சேர்ந்துகொண்டால் ஆடை சம்பந்தமாய் எவன் யோசிக்கிறான், பூனை பிராண்டினமாதிரி பொளந்து கட்டிட்டு போயிடுவான்.

ஆடைகட்டினா என்ன கட்டாவிட்டால் என்ன புதிதாக ஜோடி சேர்பவர்கள் ஒரே முத்தம் முத்தமா பொழிந்து தள்ளுவார்கள், காலம் போக போக போக முத்தமிடுவது எல்லாம் குறைந்து  குறைந்து ஒரு கட்டத்தில் சண்டை வரும்போது அதே பெண்ணை நீ எல்லாம் வைச்சிருக்கிறதுக்கு பேரு வாயாடி என்று சண்டை போடுவார்கள்.

 

இது சம்பந்தமான மேலதிக தகவல்களுக்கு முத்த விசயத்தில்   அலுமினிய பானை கடைக்குள்ள யானை பூந்தமாதிரி அந்த காலத்தில் அடிச்சு நொருக்கின யாழ்கள பெரியவர்களின் தகவல்களையும் பிபிசி கேட்டு பெறலாம்.

வெள்ளைக்காரர்கள் அவர்கள் உணவு பழக்கம் அதிக வாசனை எழுப்பாததால் உதட்டோடு உதடு முத்தம் எப்போ வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் பரிமாறிக்கொள்கிறார்கள் .

நம்மாளுங்க எல்லாம், கணவாய்க்கறி மீன் ரின் சம்பல் எல்லாம் திண்டுபோட்டு இதழோடு இதழ் முத்தம் பரிமாறினால் முடிஞ்சுது கதை,அப்புறம்  மூணு மாசத்துக்கு முத்தம் கேக்காது ...என்னா ஒரு  கப்பு.

நல்லகாலம் நீங்க இதை எழுதினது

இல்லாவிட்டால் நிழலி ஒன்றுக்கு மேல ஒன்றாக போட்டுக் கொண்டு நாயாய் போயாய் அலைந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நல்லகாலம் நீங்க இதை எழுதினது

இல்லாவிட்டால் நிழலி ஒன்றுக்கு மேல ஒன்றாக போட்டுக் கொண்டு நாயாய் போயாய் அலைந்திருக்கும்.

நாங்கள் அங்கை ஊரிலை காயப்போட்ட துணியளை மழைவரேக்கை அவசரமாய் தூக்கி தோள்லை போட்ட மாதிரி போட்டுக்கொண்டு திரியிறவைக்கு என்னமாதிரி இருக்கும்? 😎

Bild

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.