Jump to content

சீனாவிடமிருந்து... 61.5 பில்லியன் கடன் ஒப்பந்தத்தில், இலங்கை கைச்சாத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிடமிருந்து 61.5 பில்லியன் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து

சீனாவிடமிருந்து...  61.5 பில்லியன் கடன் ஒப்பந்தத்தில், இலங்கை கைச்சாத்து

சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கை ரூபாய் மதிப்பில் இது 61.5 பில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1234835

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா  நாட்டின் எந்தப்பகுதியை அடகு வைக்கலாம் என்ற துணிவில் கடன் வாங்கி இருக்கினம் என்று தெரியலையே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்களவர் தமிழர் சோனகர் பறங்கியர் என்று முன்பெல்லாம் இலங்கையில் நான்கு இனங்கள்.

இப்போது சீனர்களையும் சேர்த்து இலங்கையில் ஐந்து இனங்கள்.

தற்போது இலங்கையில் பல ஆயிரம் சீனர்கள் பல்வேறுபட்ட காரணங்களை சொல்லி சரளமாக சிங்களம் பேசியபடி இலங்கையில் நிரந்தரமாக வசிக்கிறார்களாம், அவர்கள் தொகை பறங்கியரைவிட அதிகம் என்று கூறபடுகிறது.

அதாவது நான்காவது பெரிய இனம் சீனர்கள், கடனுக்குமேல் கடன்வாங்கி திரும்ப கட்டவே முடியாமல்போய் நாடு திவாலாகும்போது அந்த சிறுபான்மை சீனர்கள்தான் இலங்கையின் பெரும்பான்மை அதிகாரத்திலிருப்பார்கள், ஒருகாலம் தென்னாப்ரிக்கா சிறுபான்மை வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டதுபோல்.

வெளிநாடுகளிலிருந்தபடி உண்டியல்மூலம் கோடி கோடியாய் இலங்கைக்கு அனுப்பி பின்னர் அங்குள்ளவர்கள் மூலமாக இலங்கையின் வங்கிகளில் வைப்பிலிட்டு பெரும் தொகை வட்டி பார்த்த புலம்பெயர்ந்தவர்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய தருணம் இது.

எந்த நேரம் வேண்டுமென்றாலும் அவர்களின் பணம் வந்த வழிகேட்டு கணக்குகள் முடக்கப்பட்டு ராஜபக்ச அரசினால் அவர்கள் வாங்கிய கடனை கட்டுவதற்காக வங்கியில் முறையான ஆவணம் இன்றி வந்த பணம் என்று அமுக்கப்படலாம்.

அங்குள்ளவர்கள் மத்தியில் அப்படி ஒரு பேச்சு அடிபடுவதாகவும் பலர் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து நகைகள் வாங்கி குவிப்பதாகவும் ஊரில் உள்ளவர்கள் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

வெளிநாடுகளிலிருந்தபடி உண்டியல்மூலம் கோடி கோடியாய் இலங்கைக்கு அனுப்பி பின்னர் அங்குள்ளவர்கள் மூலமாக இலங்கையின் வங்கிகளில் வைப்பிலிட்டு பெரும் தொகை வட்டி பார்த்த புலம்பெயர்ந்தவர்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய தருணம் இது.

இந்த கதையை சொன்னால்  நக்கலாய் பார்க்கினம் உண்டியல் முதலீட்டாளர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

எந்த நேரம் வேண்டுமென்றாலும் அவர்களின் பணம் வந்த வழிகேட்டு கணக்குகள் முடக்கப்பட்டு ராஜபக்ச அரசினால் அவர்கள் வாங்கிய கடனை கட்டுவதற்காக வங்கியில் முறையான ஆவணம் இன்றி வந்த பணம் என்று அமுக்கப்படலாம்.

அங்குள்ளவர்கள் மத்தியில் அப்படி ஒரு பேச்சு அடிபடுவதாகவும் பலர் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து நகைகள் வாங்கி குவிப்பதாகவும் ஊரில் உள்ளவர்கள் சொன்னார்கள்.

பண வீக்கம் சம்பந்தமாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நிலை வரும் என கூறுகின்றார்கள்.

அதனால் தான் வீடுகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளதாம்.

எனது இடத்தில்  கொரோனாவிற்கு முன் 120 ஆயிரம் ஈரோ விற்ற வீடுகள் இன்று 190ஆயிரம் ஈரோ விலை  போகின்றது.

Link to comment
Share on other sites

சீலையை வித்துச் சீலா மீன் வாங்கு என்று ஊரில் சொல்வார்கள். இனிமேல் சிறீலங்காவை வித்து சீனாவை வாங்கு என்று சொல்வார்களோ....🤔.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

பண வீக்கம் சம்பந்தமாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நிலை வரும் என கூறுகின்றார்கள்.

அதனால் தான் வீடுகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளதாம்.

எனது இடத்தில்  கொரோனாவிற்கு முன் 120 ஆயிரம் ஈரோ விற்ற வீடுகள் இன்று 190ஆயிரம் ஈரோ விலை  போகின்றது.

குமாரசாமியண்ணை,ஐரோப்பாவில் நீங்கள் வங்கியில் பெரும்தொகை பணம் வைப்பிலிடவேண்டுமென்றால் கட்டாயம் வரவு செலவு கணக்கு தெளிவாக வங்கிக்கும் அரசாங்கத்திற்கும் காட்டவேண்டும். 2000 டொலர் யூரோ பவுண்டுகள் வைப்பிலிடுவதென்றாலும் ஆயிரம் கேள்விகள் கேப்பான்.

சட்டரீதியாக நீங்கள் வைப்பிலிட்ட பணத்தை எவரும் தொட்டுபார்க்கமுடியாது .

ஆனால் இலங்கையில் போர்கால நெருக்கடியில் எங்கிருந்து பணம் வந்தாலும் ஓகே என்று எதுவும் கேட்காமல் நேரடியாக வங்கிக்கு அனுப்பாமல் உண்டியல்மூலம் பலநூறு கோடிகளை அனுப்பி வங்கியில் வைப்பிலிட்டபோதும், பல கோடிகளில் கொழும்பில் சொத்துக்களை வாங்கி குவித்தபோதும்  கண்டுக்காமல் இருந்துவிட்டான், இப்போ அவனுக்கு காசுவேண்டும் சட்டதிட்டங்களை திடீரெண்டு சரியா கடைபிடிக்கபோறான்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்துக்கு உரியமுறையின்றி பெரும்தொகை பணம் அனுப்பியதாக சொல்லி சிலரின் வங்கி கணக்குகளை முடக்கியதாக செய்தி வந்தது அதை யாழில் படித்ததாகவும் ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

எந்த நேரம் வேண்டுமென்றாலும் அவர்களின் பணம் வந்த வழிகேட்டு கணக்குகள் முடக்கப்பட்டு ராஜபக்ச அரசினால் அவர்கள் வாங்கிய கடனை கட்டுவதற்காக வங்கியில் முறையான ஆவணம் இன்றி வந்த பணம் என்று அமுக்கப்படலாம்.

அங்குள்ளவர்கள் மத்தியில் அப்படி ஒரு பேச்சு அடிபடுவதாகவும் பலர் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து நகைகள் வாங்கி குவிப்பதாகவும் ஊரில் உள்ளவர்கள் சொன்னார்கள்.

பல  முறை இங்கு சொல்லி உள்ளேன், மிகவும் இக்கட்டான நிலைமையில், அசைய கூடிய தனியார்  சொத்துக்களை தேசிய உடமை ஆக்குவது சிங்கள அரசுக்குள்ள ஓர் தெரிவு, .

இதில் எல்லாம் அடங்கும், பணம், நகை, தனியாரிடம் உள்ள பங்குகள்,  கம்பனிகளின் பங்குகள் என்று பல வகை., வருங்கால ஓய்வூதியம் கூட அடங்கும் . 

மற்றது, இலங்கையில் உலா வாங்கி இடம் இருந்து பணத்தை எடுத்து, வேறு  சொத்து வாங்கினால், தடம் வழி  வந்து இலகுவாக தேசிய உரிமை ஆக்குவதற்கு வேண்டிய கட்டுமானமமும், நிதி தொழில் நுட்பமும் சிங்களத்திடம்    உள்ளது.

 

4 hours ago, பெருமாள் said:

ஆகா  நாட்டின் எந்தப்பகுதியை அடகு வைக்கலாம் என்ற துணிவில் கடன் வாங்கி இருக்கினம் என்று தெரியலையே ?

புலம் பெயர் இளித்தவாய், பேராசைக்காரர்களை,  அவர்களின் உறவுகளை நம்பி என்றும் சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

அதாவது நான்காவது பெரிய இனம் சீனர்கள்,

நீங்கள் குடிபெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள சீனர்களை  பார்த்தால் வேறு ஆதாரம் தேவையில்லை. சீனாவில் மட்டுமல்ல அந்தந்த நாடுகளிலும் அவர்களே கூடிய சனத்தொகை.

 

38 minutes ago, Kadancha said:

இதில் எல்லாம் அடங்கும், பணம், நகை, தனியாரிடம் உள்ள பங்குகள்,  கம்பனிகளின் பங்குகள் என்று பல வகை., வருங்கால ஓய்வூதியம் கூட அடங்கும்

உண்மை. போர் முடிவடைந்து, பல மக்கள் புலம் பெயர்ந்தபின் பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து உறுதிப்படுத்தல் கடிதம் கோரியிருந்தது. உரிமை கோராதவர்களின் பணத்தை அரசாங்கம் தனது இராணுவத்துக்கு பயன்படுத்தப்போகிறது என்று எண்ணி புலம்பெயர்ந்த பலர் தங்கள் உறவுகளுக்கு தம் பணத்தை சாட்டுதல் செய்து உறுதிப்படுத்தியிருந்தனர். உரிமை கோர யாருமற்று இறந்தவர்களின் பணத்துக்கு என்ன நடந்திருக்கும்....?

 

1 hour ago, valavan said:

பல கோடிகளில் கொழும்பில் சொத்துக்களை வாங்கி குவித்தபோதும்  கண்டுக்காமல் இருந்துவிட்டான், இப்போ அவனுக்கு காசுவேண்டும் சட்டதிட்டங்களை திடீரெண்டு சரியா கடைபிடிக்கபோறான்.

கண்டுக்காமல் அல்ல, கணக்கோடுதான் விட்டுவைத்திருப்பான், இனி கைவைப்பான். வங்கியிலுள்ள பணத்திற்கெல்லாம் அதிக வரி. முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் சொத்து நல்ல உதாரணம். புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல, உள்நாட்டில் உள்ள பண முதலைகளின் சொத்துக்களும் கேள்விக்குறியே. காணிவேண்டி தீவு செய்து பணம் பார்க்கும்  திட்டத்துக்கும் ஆப்பு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.