Jump to content

ஆப்கானிஸ்தான் அகதிகளை, வரவேற்க தயாராகும் பிரித்தானியா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் அகதிகளை வரவேற்க தயாராகும் பிரித்தானியா!

ஆப்கானிஸ்தான் அகதிகளை, வரவேற்க தயாராகும் பிரித்தானியா!

ஆப்கானிஸ்தான் அகதிகளை வரவேற்க பிரித்தானியா தயாராகி வருவதாக வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மீள்குடியேற்றத் திட்டம், பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மிகவும் தேவைப்படும் மக்கள் பிரித்தானியா வருவதை நோக்கமாகக் கொண்டது.

இதுகுறித்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான சிறந்த ஏற்பாட்டை பிரித்தானியா கவனித்து வருகின்றது. முழு விபரங்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

எத்தனை அகதிகள் வர முடியும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், பிரித்தானியா ஒரு பெரிய மனம் கொண்ட நாடு.

பிரித்தானியா எப்போதும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடுபவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்த நாடு. புகலிடம் மிகவும் முக்கியமானது’ என கூறினார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் தலைநகர் காபூலின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பிறகு இந்த செய்தி வெளிவந்துள்ளது.

https://athavannews.com/2021/1234812

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக சொந்த செலவில் சூனியம் வைக்கினம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நன்றாக சொந்த செலவில் சூனியம் வைக்கினம் 

அரசியல்வாதிகள் தாம் பைடனுடன் சேர்ந்து விசயத்தை சொதப்பியதை மறைக்க இந்த நாடகம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

83 ஆண்டு இனகலவரம் நடக்கும் பொழுது  கொழும்பிலிருந்து சனம் யாழ்ப்பாணத்துக்கு வர....யாழ்ப்பாணத்திலிருந்து சில சனம் கொழும்புக்கு வந்து கனடா போனவையள் தமிழனின்ட தில் .....தில்லோ.. தில்....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

83 ஆண்டு இனகலவரம் நடக்கும் பொழுது  கொழும்பிலிருந்து சனம் யாழ்ப்பாணத்துக்கு வர....யாழ்ப்பாணத்திலிருந்து சில சனம் கொழும்புக்கு வந்து கனடா போனவையள் தமிழனின்ட தில் .....தில்லோ.. தில்....
 

அப்ப அவுஸ்ரேலியாவுக்கும் போனவையள் எண்டு கேள்விப்பட்டனான் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் வெடி சத்தத்திற்கு ஒப‌ன் விசாவில் வந்த தமிழர்களும் உண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அரசியல்வாதிகள் தாம் பைடனுடன் சேர்ந்து விசயத்தை சொதப்பியதை மறைக்க இந்த நாடகம்.

 

ஆப்கானிஸ்தான் படைவிலகல் விசயம்  டொனால்ட் ரம்ப் காலத்திலையே தொடக்கியாச்சு எல்லோ?
அதோடை ஜேர்மனியிலை இருக்கிற படையையும் தூக்கப்போறம் எண்டு வெருட்டினவர். இப்ப அதை கை விட்டாச்சாம்.....அமெரிக்கப்படைகள் போகப் போகுது எண்டவுடனை ஜேர்மனியும் கொஞ்சம் பயப்பிட்டது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆப்கானிஸ்தான் படைவிலகல் விசயம்  டொனால்ட் ரம்ப் காலத்திலையே தொடக்கியாச்சு எல்லோ?
அதோடை ஜேர்மனியிலை இருக்கிற படையையும் தூக்கப்போறம் எண்டு வெருட்டினவர். இப்ப அதை கை விட்டாச்சாம்.....அமெரிக்கப்படைகள் போகப் போகுது எண்டவுடனை ஜேர்மனியும் கொஞ்சம் பயப்பிட்டது 😁

🤣 ஆர் கண்டது வெளிகிட்ட கையோட AfD காரர் Bundestag க்குக பூரவும் கூடும்🤣.

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

 

10 hours ago, தமிழ் சிறி said:

ஆப்கானிஸ்தான் அகதிகளை, வரவேற்க தயாராகும் பிரித்தானியா!

பிரித்தானியா போன்று கனடா பிரதமரும்கூட 20000 ஆப்கான் அகதிகளுக்கு புகலிடம் வழங்க இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

ஒருவகையில் தலிவான்களின் எதிர்கால உலகமயத்தாக்குதல்களுக்கு இவைகூட உறுதுணையாக அமையலாம்.வேலி ஓணான் வேட்டிக்கு உள்ளே.

Link to comment
Share on other sites

பிரான்சும் தன் பங்குக்கு அகதிகளை உள்வாங்கப் போகிறது.

இந்த நாடுகள் அகதிகளை உள்வாங்குவது ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களுக்குள் ஒருநாள் தாம் தலையிடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் என்பதாலாக இருக்கலாம். ஐநாவில் தீர்மானங்கள், பொருளாதாரத்தடை, மனித உரிமை அழுத்தங்கள், இராணுவ நடவடிக்கை போன்றவற்றைப் பிரயோகிப்பதற்கான உரிமையை இவ்வாறான அகதிகள் வருகை உருவாக்கிக் கொடுக்கும்.

Link to comment
Share on other sites

ஐரோப்பாவில் கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாம் மத்த்துக்குமான புனித போர் இன்னும் ஒரு ஐம்பது வருடத்தில் எதிர்பார்க்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 ஆயிரத்தை உத்தியோகபூர்வமா எடுப்பினம்.. எனி பிரான்ஸ் கடலால கடத்தி விடுறது.. காரில வாறது.. கென்ரயினரில வாறது.. எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சுப் பார்த்தால்.. ஆப்கானிஸ்தானும்.. சிரியா லெவலுக்கு காய வாய்ப்புள்ளது. சிரியாவுக்கு மில்லியன் கணக்கில் திறந்துவிட்ட ஜேர்மனி.. ஆப்கானிஸ்தான் விசயத்தில் அடக்கி வாசிக்கிறது. காரணம்.. ஏலவே அங்க மில்லியனுக்கு கிட்ட வந்திட்டுதுகள். 

Link to comment
Share on other sites

15 hours ago, தமிழ் சிறி said:

ஆப்கானிஸ்தான் அகதிகளை வரவேற்க பிரித்தானியா தயாராகி வருவதாக வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

அகதிகளை வரவேற்று பாதுகாக்கும் அதேவேளை, அகதியாக ஆக்குபவர்களுக்கு ஆயுதங்களும் வழங்கிப் பொருளையும் தேடும் பலே கில்லாடி அரசுகளில் பிரித்தானியாவும் ஒன்று.😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

🤣 ஆர் கண்டது வெளிகிட்ட கையோட AfD காரர் Bundestag க்குக பூரவும் கூடும்🤣.

இப்ப பெரிய லெக்சன் வருதெல்லோ.....அதுதான் ஆப்கானிஸ்தான் விசயத்திலை ஜேர்மனி  அடக்கி வாசிக்குது.சிரியாக்காரரை அள்ளி அள்ளி ஆப்கானிஸ்தான்காரரையும் எடுப்பினமாய் இருந்தால் வாற லெக்சனிலை Afd  பெரும்பான்மை ஆட்சி அமைக்கும் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, இணையவன் said:

பிரான்சும் தன் பங்குக்கு அகதிகளை உள்வாங்கப் போகிறது.

இந்த நாடுகள் அகதிகளை உள்வாங்குவது ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களுக்குள் ஒருநாள் தாம் தலையிடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் என்பதாலாக இருக்கலாம். ஐநாவில் தீர்மானங்கள், பொருளாதாரத்தடை, மனித உரிமை அழுத்தங்கள், இராணுவ நடவடிக்கை போன்றவற்றைப் பிரயோகிப்பதற்கான உரிமையை இவ்வாறான அகதிகள் வருகை உருவாக்கிக் கொடுக்கும்.

இப்ப எங்களை (புலம்பெயர்ந்த தமிழர்களை) வைத்து சிறிலங்காவுக்கு வெறுட்டுவது மாதிரியோ ஐ.நா சபை மனித உரிமை மீறல் ....ஆப்கான் டயஸ்பரா...வைத்து சீன் போடுவாங்கள் என்று சொல்லுறீயள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/8/2021 at 13:07, colomban said:

முதல் வெடி சத்தத்திற்கு ஒப‌ன் விசாவில் வந்த தமிழர்களும் உண்டு

தேசபக்தி உள்ள தாங்கள் கட்டாரில் இருந்து ஊருக்கு சென்று காத்தான்குடியில் ஆப்கானிஸ்தான் அகதிகளை குடியேற்றலாமே? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தேசபக்தி உள்ள தாங்கள் கட்டாரில் இருந்து ஊருக்கு சென்று காத்தான்குடியில் ஆப்கானிஸ்தான் அகதிகளை குடியேற்றலாமே? 😎

 ஒரு சின்ன திருத்தம் காத்தான் குடியில் உள்ள ஆட் களை ஏன் ஆப்கானில் குடியேற்றவும்   செய்யலாம் தானே தலிபான் ஆட்சி நல்ல ஆட்சி , பெண்கள் அப்போதுதான் நாகரீகமாக திரிவார்களாம் , சமுதாயத்தில் சீர் கேடுகள் நடக்காதாம் என இங்கினைக்கு உருட்டுறானுகள் சாமி என்ன செய்ய லாம் ஆனா அங்க போங்கடா என்றால் போமாட்டானுகள் பிடறியில் அது அடிபட ஓடுவானுகள் 

On 18/8/2021 at 20:49, இணையவன் said:

பிரான்சும் தன் பங்குக்கு அகதிகளை உள்வாங்கப் போகிறது.

இந்த நாடுகள் அகதிகளை உள்வாங்குவது ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களுக்குள் ஒருநாள் தாம் தலையிடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் என்பதாலாக இருக்கலாம். ஐநாவில் தீர்மானங்கள், பொருளாதாரத்தடை, மனித உரிமை அழுத்தங்கள், இராணுவ நடவடிக்கை போன்றவற்றைப் பிரயோகிப்பதற்கான உரிமையை இவ்வாறான அகதிகள் வருகை உருவாக்கிக் கொடுக்கும்.

அப்படியானால் உலக நாடுகள் முழுவதும் நம்மவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களுக்கும் , பேரணிகளுக்கும் என்ன நடந்தது இணையவன் எல்லாம் வெற்றி ஒன்றே தீர்மானிக்கிறது அங்கரிப்பதா அல்லது அடி(ழி)த்து  ஒளிப்பதா என 

Link to comment
Share on other sites

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியானால் உலக நாடுகள் முழுவதும் நம்மவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களுக்கும் , பேரணிகளுக்கும் என்ன நடந்தது இணையவன் எல்லாம் வெற்றி ஒன்றே தீர்மானிக்கிறது அங்கரிப்பதா அல்லது அடி(ழி)த்து  ஒளிப்பதா என 

பேரணிகள் இலங்கை அரசின் செயற்பாடுகளை வெளிக்கொண்டு வர மட்டுமே உதவும். வேறு பயன் இல்லை.

அகதிகளை அனுப்பிய எல்லா நாடுகளின் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும் ? தமது அரசியல் பொருளாதார நோக்கங்களைக் கொண்ட நாடுகள் மீது மட்டும்தான் அகதிகளைக் காரணம் காட்டி அழுத்தம் கொடுக்கலாம். இலங்கையில் தற்போது தமிழர்களிடம் என்ன உள்ளது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, இணையவன் said:

பேரணிகள் இலங்கை அரசின் செயற்பாடுகளை வெளிக்கொண்டு வர மட்டுமே உதவும். வேறு பயன் இல்லை.

அகதிகளை அனுப்பிய எல்லா நாடுகளின் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும் ? தமது அரசியல் பொருளாதார நோக்கங்களைக் கொண்ட நாடுகள் மீது மட்டும்தான் அகதிகளைக் காரணம் காட்டி அழுத்தம் கொடுக்கலாம். இலங்கையில் தற்போது தமிழர்களிடம் என்ன உள்ளது ?

இலங்கையில் தமிழர்களிடம் இனி இழக்க ஒன்றும் இல்லை உயிரை தவிர 

இனி வரும் காலங்கள் எமக்கு மிகவும் சோதனையாக இருக்கப்ப்போகிறது காரணம் பொருட் கள் இல்லை , பொருட் கள் தட்டுப்பாடு , பணம் இல்லை , பொருட் கள் அதிக விலை இதை தமிழ்மக்கள் முதல் சிங்கள மக்களும் அனுபவிக்கப்போகிறார்கள் என தோன்றுகிறது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/8/2021 at 17:19, இணையவன் said:

பிரான்சும் தன் பங்குக்கு அகதிகளை உள்வாங்கப் போகிறது.

இந்த நாடுகள் அகதிகளை உள்வாங்குவது ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களுக்குள் ஒருநாள் தாம் தலையிடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் என்பதாலாக இருக்கலாம். ஐநாவில் தீர்மானங்கள், பொருளாதாரத்தடை, மனித உரிமை அழுத்தங்கள், இராணுவ நடவடிக்கை போன்றவற்றைப் பிரயோகிப்பதற்கான உரிமையை இவ்வாறான அகதிகள் வருகை உருவாக்கிக் கொடுக்கும்.

உண்மை. எதிர்காலத் தலையீட்டுக்கான நகர்வேயன்றி இது மக்கள் மீதான அக்கறையல்ல. 

Link to comment
Share on other sites

48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் தமிழர்களிடம் இனி இழக்க ஒன்றும் இல்லை உயிரை தவிர 

இனி வரும் காலங்கள் எமக்கு மிகவும் சோதனையாக இருக்கப்ப்போகிறது காரணம் பொருட் கள் இல்லை , பொருட் கள் தட்டுப்பாடு , பணம் இல்லை , பொருட் கள் அதிக விலை இதை தமிழ்மக்கள் முதல் சிங்கள மக்களும் அனுபவிக்கப்போகிறார்கள் என தோன்றுகிறது .

புலம்பெயர்ந்த தமிழர்கள் பொருளாதார ரீதியாக வடகிழக்கை முன்னேற்றம் செய்வதன் மூலமும் பாதுகாப்பான முறையில் முதலீடுகளைச் செய்வதன் மூலமும் மீண்டும் தமிழர்களுக்கான சம பலத்தை மீண்டும் உருவாக்க முடியும். ஆனால் அதற்கான அரசியல் பலம் வடகிழக்கில் உருவாக வேண்டும். அதுவரை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த ஏதாவது செய்யலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, இணையவன் said:

புலம்பெயர்ந்த தமிழர்கள் பொருளாதார ரீதியாக வடகிழக்கை முன்னேற்றம் செய்வதன் மூலமும் பாதுகாப்பான முறையில் முதலீடுகளைச் செய்வதன் மூலமும் மீண்டும் தமிழர்களுக்கான சம பலத்தை மீண்டும் உருவாக்க முடியும். ஆனால் அதற்கான அரசியல் பலம் வடகிழக்கில் உருவாக வேண்டும். அதுவரை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த ஏதாவது செய்யலாம். 

ம் சாத்தியம் தான் ஆனால் போர் முடிந்து 11 வருடங்கள் பேசி பேசியே நகர்கிறது இணையவன்  அரசு மிகப்பெரிய தடை  என உணர முடிகிறது இருந்தாலும் நமது மக்கள் போராடியே வாழ்கிறார்கள் இன்னும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீள்குடியேற்றும் திட்டத்தில் எதிர்வரும் ஆண்டுகளில் 20,000 ஆப்கான் அகதிகளுக்கு வீடுகள்!

மீள்குடியேற்றும் திட்டத்தில்... எதிர்வரும் ஆண்டுகளில், 20,000 ஆப்கான் அகதிகளுக்கு வீடுகள்!

காபூலின் கட்டுப்பாட்டை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் பிரித்தானியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என்று பிரித்தானியா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் குடிமக்களை மீள்குடியேற்றும் திட்டத்தில் எதிர்வரும் ஆண்டுகளில் 20,000 பேருக்கு வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

பெண்கள், சிறுமிகள், மத மற்றும் பிற சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வேல்ஸ் உள்ளூர் அரசாங்க சங்கத்தின் தலைவர் ஆண்ட்ரூ மோர்கன், ‘வேல்ஸில் உள்ள உள்ளூர் சபைகள் தங்கள் பங்கை வகிக்க வேண்டும்’ என கூறினார்.

சமூக நீதி அமைச்சர் ஜேன் ஹட், ‘வேல்ஸ் அரசாங்கம் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிரித்தானிய அமைச்சர்களுடன் இணைந்து வீடுகளை வழங்குவதற்கு மிகவும் கடினமாக உழைக்கிறது’

ஆனால், ஏற்பாடுகளைச் செய்வதற்கு பிரித்தானியா அரசாங்கத்திடமிருந்து கூடுதல் நிதி தேவைப்படும்’ என கூறினார்.

https://athavannews.com/2021/1235371

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருடைய வரிப்பணத்தில் அவர்களுக்கு வீடுகள் கொடுப்பார்கள் ?...வருபவர்கள் வேலைக்கு போவார்களா ?...நேர்மையாய் உழைப்பவர்களுக்கு ஒன்றும் மிஞ்சாது ...இப்படி வருபவர்கள் அதிஷ்டசாலிகள்😉 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.